Page 318 of 399 FirstFirst ... 218268308316317318319320328368 ... LastLast
Results 3,171 to 3,180 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #3171
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=vasudevan31355;1082110]காவேரி படத்தின் போஸ்டர் டிசைனில் நடிகர் திலகத்தின் ஆடை வடிவமைப்பு.

    Dear Vasudevan Sir

    Thanks for Varieties of poses of Great Nadigar thilagam.

    Each and every still really looks Wonderful. Sivaji is the man of Handsome

    C.Ramachandran

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3172
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால் சாரின் காதல் தொடர் தொடரும் வரை...

    ஒரு அறை கொடுத்தால் தெரியும்...

    சம்பத் வேலையில்லா பட்டதாரி. இருந்தாலும் நற்குணங்கள் நிறைந்தவன். அவனிடம் காதல் கொள்கிறாள். நாயகி. அவனோ தன் பொருளாதார நிலைமை சீரடைய வேண்டும் தன் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு சூழல்களிலும் கவலைகளிலும் உழல்பவன். அவனுக்கும் அவளிடம் உள்ளுக்குள் காதல் இருந்தாலும் தன்னுடைய நிலைமையை அவளிடம் சொல்கிறான். நாயகியோ அதனைப் பொருட்படுத்தாமல், அவனுக்காகக் காத்திருந்தாலும் பரவாயில்லை, அவனைக் காதலிக்க வேண்டும், மணம் புரிய வேண்டும் என்கிற குறிக்கோளுடன் அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் நேருக்கு நேராய் அவனிடம் கேட்பதோடு அவனுடைய உணர்வுகளையும் சீண்டி கோபத்தை வரவழைக்கிறாள். அவனுக்குள் இருக்கும் நல்ல மனம் அந்தக் கோபத்தை மறைத்து அவளிடம் காதலைத் தூண்டி விட்டு விடும் என்று அவள் சரியாக கணித்து அதற்கேற்ப அவனை கோபத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறாள். அவனுடைய ஆண்மையின் மீதே ஐயம் எழுப்பி அவனை உசுப்பேத்தி விடுவதால் அவனும் கோபத்துடன் அவளை அறைந்து விடுகிறான். இதற்காகத் தானே ஆசைப் பட்டாய் பால குமாரா என்பது போல் அவளும் இதற்காகவே காத்திருந்தது போல் தன் காதலை வெளிப்படுத்தி மெல்ல மெல்ல அவன் மனதை கரைத்து விடுகிறாள்.

    இது தான் சூழ்நிலை. காதல் பாடல்களிலும் சக்கரவர்த்தியான கண்ணதாசனுக்கு இப்படி ஒரு situation கிடைத்தால் விடுவாரா. புகுந்து விளையாடி விட்டார். ஒவ்வொரு வரியும் இரு கதா பாத்திரங்களையும் சரியான அளவில் அலசி ஆராய்ந்து எழுதப் பட்ட வரிகள். மெல்லிசை மன்னர் மட்டும் என்ன லேசுப்பட்டவரா. பாடகர்களை சக்கையாகப் பிழிந்து முழுமையான உணர்வுகளை பாடலில் கொண்டு வந்து விட்டார். அதுவும் "அந்த அறை பள்ளியறையாக இருந்தால்" என்ற வரிகளை நாயகி பாடும் போது ஒரு பொருளாகவும், "அந்த அறை பள்ளியறை ஆக இருந்தால் " என்று நாயகன் பாடும் போது வேறு ஒரு பொருளாகவும் இலக்கிய நயத்தோடு காதலைப் பிழிந்து தந்திருப்பார்கள்.

    இவ்வளவு அருமையான பாடலை படம் பிடிப்பதை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டு விட்டார் போலும் ஒளிப்பதிவாளர் எஸ்.மாருதி ராவ் [இப்படத்தை முதலில் இயக்கியது கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் இடையில் அவர்கள் தொடராமல் மாருதி ராவ் அவர்களே இயக்கி முடித்து விட்டதாகவும் ஒரு செய்தி அக்காலத்தில் உண்டு. அதற்கேற்றார் போல் நெடுந்தகட்டில் படத்தின் டைட்டில் கார்டில் ஒளிப்பதிவு & இயக்கம் மாருதி ராவ் என்று தான் காட்டப் படுகிறது ]. இப்பாடல் காட்சியில் இரண்டாவது சரணத்தின் போது ஒரு ஊடல் உண்டு என்ற வரிகளின் போது காமிரா பாடலின் தாளத்திற்கேற்ப ஜூம் இன் அவுட் என மாறி மாறி வருவது பாடலுக்கு உயிர் தருகிறது.

    இது அத்தனையும் ஒரு சேர உயிர் பெற வைக்கிறது நடிகர் திலகம்-வாணிஸ்ரீ இணை. இந்த ஜோடி ரசிகர்களின் கனவு ஜோடியாக ஏன் விளங்குகிறது என்பதற்கு இப்பாடல் காட்சி ஓர் உதாரணம். கோபால் மட்டுமல்ல பெரும்பாலான சிவாஜி ரசிகர்கள், தேவிகாவிற்குப் பிறகு வாணிஸ்ரீ யைத்தான் நடிகர் திலகத்தின் சிறந்த ஜோடி நடிகையாக கருதுவதில் முழு நியாயமும் உள்ளது. அது ஏதோ கெமிஸ்ட்ரி, என்பார்களே, அதையெல்லாம் இந்தப் பாடலில் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

    இந்தக் காட்சியை முழுமையாகப் பார்த்தால் தான் இப்பாடலின் பொருள் விளங்கும் என்கிற எண்ணத்தில் பாடலுக்கு முன் வரும் காட்சியும் பின் வரும் காட்சியும் சேர்த்தே தொகுக்கப் பட்டுள்ளன.

    அதெல்லாம் சரி... அதென்ன பாட்டு எனச் சொல்லவே யில்லையே ... என்கிறீர்களா...

    படம் - இளைய தலைமுறை
    பாடல் - ஒரு அறை கொடுத்தால் தெரியும்
    குரல்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், வாணி ஜெயராம்
    இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    வரிகள் - கண்ணதாசன்


    Last edited by RAGHAVENDRA; 15th October 2013 at 08:15 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3173
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்தப் பாடல் காட்சியை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் நிச்சயம் எல்லோருக்கும் வரும்.

    அதுவும் நான் சொல்லவோ என்கிற வார்த்தையை நடிகர் திலகம் சூப்பர் ஸ்டைலாக பாடிக் கொண்டே நடந்து வந்து கண் சிமிட்டும் போது..

    ஆஹா... Flat ... நமக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்து விடுகிறது.. இதற்கு மேல் என்ன வேண்டும் என்பது போல் ஸ்டைல் சக்கரவர்த்தியாக திகழ்வதற்கு இதுவும் ஒரு சான்றாகி விடுகிறது.

    நானே எழுதிக் கொண்டிருந்தால் எப்படி ...

    இது வரை இணையத்தில் இக்காட்சி விரிவாக வந்திருக்காது என எண்ணுகிறேன்... இது பற்றி ஒவ்வொருவரும் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் ... ஏனென்றால் சிலர் இப்படத்தையே பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இப்படமே ஒரு Pleasant Surprise
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3174
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    அத்தனை பேரையும் பிளாட் ஆக்கி, கிளீன் போல்ட் ஆக்கி விட்டீர்கள். காதல் ரசம் சொட்ட சொட்ட அமர்க்களமான ஜில் பதிவு. அதுவும் வீடியோவுடன். அடேயப்பா! என்ன ஒரு வர்ணனை!

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    தன்னை ஆண்மகனா என்று நாயகி வெறுப்பேற்றியவுடன் கோபம் வந்து 'பளார்' என ஒரு அறை விட்டு அவள் எதிர்பார்க்கும் மோகத்தைக் காண்பிக்கும் வேகம்.

    'இளமையில் சந்திரன்
    வலிமையில் அர்ச்சுனன்'

    என்று 'நான் ஒன்னும் போக்கத்தப் பயல் இல்லை' என்பதை 'வாலிபம் என்பது கேள்வியில் மாத்திரம் புரியாதம்மா' என்று அறிவுறுத்தும் நாசூக்கு.

    'நான் அல்லி மகள் போல் இருக்க ஆசைகள் கொண்டேன்
    அதனாலே அர்ச்சுனருக்கு கோபம் கொடுத்தேன்'

    என்று நாயகி சிங்கத்தை சீண்டிய உண்மையை ஒப்புக் கொள்ள

    'இதுவரை போதுமா?
    மணவறை வேண்டுமா?
    இன்னொரு அறைக்கு என்னது என்பதை நான் சொல்லவா!'

    என்று நாயகி எதிர்பார்த்ததற்கும் மேல் அவளே மிரண்டு போகும் அளவிற்கு பள்ளியறை பற்றி விளக்கம் கொடுக்கும் வீறு கொண்ட ஆண்சிங்கம். ('நான் சொல்லவா?' என்று தலைவர் மூன்று முறை கேட்டவுடன் மூன்றாவது முறைக்கு வாணி குரலில் வாணிஸ்ரீ 'ம்' என்று சம்மதம் தரும் அழகு அருமையோ அருமை!)

    "அந்த அறை பள்ளியறை ஆக இருந்தால் "

    என்று பதிலுக்கு எசப்பாட்டுப் பாடி

    'வந்தவரை இன்பம் என்று வாங்கிக் கொள்ளுவேன்'

    என்று அணைத்துக் கொள்ளும் விவேகம்.

    'ஒரு ஊடல் உண்டு காவியத்தில் நீ அதைக் கொண்டாய்
    இது கூடலுக்கு வாசல் என்று நான் அதைக் கண்டேன்'

    என்று நாயகியின் ஊடலை காவியத்துக்கு இணையான காவியமாக்கி, 'அது நியாயம்தானே' என்று இப்போது அவளைப் பாராட்டி, அன்பு உறவாடலுக்கு வாசல்படி அமைத்துக் கொடுத்தவள் என்று தான் அதை எடுத்துக் கொண்டதாக அவளை பெருமை கொள்ள வைக்கும் பெருந்தன்மை.

    கலக்கலோ கலக்கல். கோபதாப உணர்ச்சிகளில் ஆரம்பிக்கத் தொடங்கும் பாடல் கொஞ்சம் கொஞ்சமாக விரக தாபத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து காதலர்களின் ஒருமித்த சங்கமத்தில் முடியும் வித்தியாசமான சூப்பர் டூப்பர் பாடல்.

    தரவேற்றி வெறுப்பேற்றிய தங்களுக்கு தங்கமான பாராட்டுக்கள்.

    ('சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது இப்பாடலில் நடிகர் திலகத்தைக் காணும் போதும், தங்கள் ரகளையான பதிவைக் காணும் போதும்)
    Last edited by vasudevan31355; 15th October 2013 at 09:41 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #3175
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by raghavendra View Post
    ஒரு அறை கொடுத்தால் தெரியும்...
    டியர் ராகவேந்திரன் சார்,

    இளைய தலைமுறை பாடல் காட்சி வர்ணணை பிரமாதம்.

    Quote Originally Posted by raghavendra View Post
    இந்தக் காட்சியை முழுமையாகப் பார்த்தால் தான் இப்பாடலின் பொருள் விளங்கும் என்கிற எண்ணத்தில் பாடலுக்கு முன் வரும் காட்சியும் பின் வரும் காட்சியும் சேர்த்தே தொகுக்கப் பட்டுள்ளன.
    பாடலுக்கு முன்னும் பின்னும் உள்ள காட்சிகளையும் இணைத்து, ஒரு முழுமையான தொகுப்பாக அளித்துள்ளீர்கள்.

    வழக்கம்போல நடிகர்திலகம் - வாணிஸ்ரீ இணை, டி.எம்.எஸ்-ன் குரல், கண்ணதாசனின் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, மாருதி ராவின் ஒளிப்பதிவு இவற்றைத் தாண்டி, வாணி ஜெயராமின் மயக்கும் குரலும் இப்பாடலுக்கு வலுவூட்டுகிறது என்றால் மிகையில்லை.

    நன்றி.
    Last edited by KCSHEKAR; 15th October 2013 at 10:45 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #3176
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    தங்களுடைய பதிவு இப்பாடல் காட்சிக்கு மேலும் வலிமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'இளமையில் சந்திரன்
    வலிமையில் அர்ச்சுனன்'
    'நான் அல்லி மகள் போல் இருக்க ஆசைகள் கொண்டேன்
    அதனாலே அர்ச்சுனருக்கு கோபம் கொடுத்தேன்'
    "அந்த அறை பள்ளியறை ஆக இருந்தால் "
    ஒவ்வொரு பாடல் வரிக்கும் காதல் ரசத்தை இனிமையாக எடுத்தியம்பும் விதத்தில் அர்த்தங்களை அருமையாக அளித்திருக்கும் தங்களுக்கு பாராட்டுக்கள்
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. #3177
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சந்திரசேகர் சார்,
    தங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #3178
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தங்கள் பதிவின் மூலம் தங்களுடைய எழுத்தாளுமையை அற்புதமாக நிரூபித்து விட்டீர்கள். தங்கள் பதிவைப் படித்த பிறகு பாடலைப் பார்த்தால் இன்னும் அருமையாக இருக்கிறது. தொடருங்கள் தங்கள் எழுத்துப் புலமையை.

    நாணமுண்டு வெட்கமுண்டு பாவை எனக்கு
    நாணமின்றிக் கேட்பதொரு காதல் கிறுக்கு ...
    நான் அல்லி மகள் போலிருக்க ஆசைகள் கொண்டேன்
    அதனாலே அர்ச்சுனர்க்குக் கோபம் கொடுத்தேன் ..

    இந்த வரிகளில் வாணிஸ்ரீயின் அபிநயம் ... ஆஹா... வேறு யாரையும் இந்த இடத்தில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது ...
    ரீவைண்ட் செய்து மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் ....

    நான் சொல்லவா என்று மூன்று முறை நடிகர் திலகம் சொல்வதும்...

    ஹா...ஹா...ஹா.. என்று வாணிஸ்ரீ சிணுங்குவதும் ... பார்க்கப் பார்க்கத் திகட்டாத தெள்ளமுது...

    அதுவும் நடிகர் திலகம் அந்த அறை பள்ளி அறை ஆக இருந்தால் எனச் சொல்லும் போது அந்த உணர்வை மெல்லிசை மன்னர் மெல்லிய கிடாரில் அப்படியே வரவழைத்து விடுவார்.

    இப்பாடலில் அவருடைய இசை சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கிறது.

    நடிகர் திலகத்திற்கென்று தனியாக, வாணிஸ்ரீக்கென்று தனியாக, கண்ணதாசன் வரிகளுக்கென்று தனியாக, மாருதி ராவின் ஒளிப்பதிவிற்கென்று தனியாக, டி.எம்.எஸ். குரலுக்கென்று தனியாக, வாணி ஜெயராம் குரலுக்கென்று தனியாக, மெல்லிசை மன்னரின் இசையில் ஒலிக்கும் ஒவ்வொரு இசைக் கருவிக்கும் தனித் தனியாக, லொகேஷனுக்கென்று தனியாக,

    இப்படி ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியாக பார்த்துப் பார்த்து ரசிக்க வேண்டிய காலத்தால் அழியாத அற்புத கானம் இது.
    Last edited by RAGHAVENDRA; 15th October 2013 at 11:05 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3179
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ragavender sir

    excellant write up about ilaya thalaimurai

    ராகவேந்தர் சார்
    கோப பட மாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்லலாமா
    வயது ஆனலும் வாலிப நடை மிளர்கிறது
    "ஒரு அறை கொடுத்தல் தெரியும்" பாட்டிற்கு நடிகர் திலகத்தின் பிரவுன் கலர் புல் ஹண்ட் ஷர்ட் முக்கால் கை மடித்து விட்டு பாடும் அழகு சூப்பர்
    இளைய தலைமுறைக்கு இரண்டு சூப்பர் பாடல் "பொம்பளையா லட்சணமா புடைவையை கட்டு " மற்றும் "கேட்டாளே ஒரு கேள்வி நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாமல் "
    ரெகார்டிங் செய்து அதற்கு பதில் ஆகத்தான் "சிங்கார தேர் கூட திரை போட்டு செல்லும் அது கூட உனக்கு இல்லையே "
    மற்றும் "ஒரு அறை கொடுத்தால் தெரியும்" பாடல் சூட் ஆனது என்று ஒரு செய்தி படித்த நினவு
    அது பற்றி உங்களுக்கு தெரிந்தால் பகிர்ந்து கொள்ளலாம்
    நன்றி
    கிருஷ்ணா
    gkrishna

  11. #3180
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் ராகவேந்தர் சார் & டியர் வாசுதேவன் சார்,

    இளையதலைமுறையில் இடம்பெற்ற 'ஒரு அறை கொடுத்தால் தெரியும்' பாடலைப்பற்றிய காணொளியும் அதற்கான விளக்கப்பதிவுகளும் மிக அருமை. மிகப்பெரும்பாலோருக்குத் தெரியாத இப்படம் மற்றும் பாடல் பற்றி எழுதியிருப்பதன்மூலம் நிழலில் மறைந்திருப்பவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் தங்கள் தொடர் முயற்சியில் இன்னுமொரு வெற்றி.

    இளைய தலைமுறை மிக அருமையானதோர் படம். மாணவர் சமுதாயத்துக்கு தேவையான நல்ல பல கருத்துக்களைச்சொன்ன படம். அதற்காக டாக்குமெண்டரி படம் போலில்லாமல் மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருந்த படம். ஏனோ தெரியவில்லை, இந்தப்படமும் சரி அதில் இடம்பெற்றிருந்த அருமையான பாடல்களும் சரி, மக்கள் மனதில் சென்றடையவில்லை. அத்தனையும் முத்து முத்தான நல்ல பாடல்கள்.......
    'இளைய தலைமுறை இனிய தலைமுறை'
    'சிங்காரத்தேர் கூட திரைமூடிப் போகும்' (முந்தைய வெர்ஷன்: 'பொம்பளையா லட்சணமா'. இந்த வரிகளின்போது நமது சக ஹப்பர் ஒருவர் நினைவுக்கு வருகிறார்).
    'யார் என்னசொன்னார், ஏனிந்த கோபம்'
    'ஒரு அறை கொடுத்தால் தெரியும்'
    'ஒருநாள் இரவு தனிமையில் இருந்தேன்'.

    இப்படம் மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு நான்காவது அறிவிப்பில்தான் வெளியானது. இத்தனைக்கும் தீபம் வெளியாகி போதிய இடைவெளி விட்டுத்தான் இப்படம் வந்தது. இளைய தலைமுறைக்கும் போதுமான இடைவெளி விட்டுத்தான் நாம் பிறந்த மண் ரிலீசானது. படமும் நல்ல தரமான படமாக இருந்தது. இருந்தும் ரசிகர்களைத்தவிர பொதுமக்கள் அவ்வளவாகக் கொண்டாடவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம். அப்போது வேறெதுவும் புதிய படங்கள் இல்லாததால் ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலைக்காட்சிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்படி ஆறு முறை பார்த்ததில் படம் எனக்கு அத்துப்படியாயிற்று. நடிகர்திலகம் வார்டனாக இருக்கும் ஹாஸ்டல் காட்சிகள் ரொம்பவே சுவாரஸ்யம். அதிலும் மெஸ் இன்சார்ஜ் நாயராக வரும் நாகேஷும் அவரது அசிஸ்டன்ட் பையனும் அடிக்கும் தமாஷ் ஒரு புதிய வகை. எமர்ஜென்ஸி காலத்தில் சென்சார் செய்யப்பட்டதால் சண்டைக்காட்சிகள் கொஞ்சம் அடிபட்டிருக்கும். ஒரு பக்கம் வாசுவின் வில்லத்தனம் , இன்னொருபக்கம் ஸ்ரீகாந்தின் வில்லத்தனம் நன்றாக இருக்கும்.

    படத்தின் டைட்டிலில் இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு என்றுதான் போடுவார்கள். கதை வசனம் மல்லியம் ராஜகோபால். இதுவரை பார்க்காதவர்கள் இளைய தலைமுறையை கண்டிப்பாக பார்க்க வேண்டும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •