-
20th October 2013, 03:10 PM
#11
Senior Member
Seasoned Hubber
காலத்தால் அழிக்க முடியாத நடிகர் திலகம் - பீம்சிங் - கண்ணதாசன் - விஸ்வநாதன் - ராம மூர்த்தி வெற்றிக் கூட்டணியில் டி.எம்.எஸ். பி.சுசீலா அவர்களின் ஈடு இணையற்று குரல்களில் பாலும் பழமும் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. நம் பார்வைக்கு இப்போது..
பாலும் பழமும் கைகளில் ஏந்தி...
நெஞ்சை உருக வைக்கும் .... என்னை யாரென்று எண்ணி எண்ணி
சுசிலாவின் குரல் நம்மை உருக வைத்து விடும் இப்பாடலில்
தாவி வரும் மேகமே என் தாய்நாடு செல்லாயோ
ஊருலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ
இன்று மணமுடித்த ஏந்திழை போல் நானிங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விடமாட்டாயோ
பின்னால் வந்த பல சோலோ சோகப் பாடல்களுக்கு முன்னோடி எனலாம்....
என்ன நடையப்பா.... சின்னக் கண்ணன் சார்.... சீக்கிரம் வாங்களேன் ...
உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழும் இடத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 100 இடங்களிலாவது ஒலிக்கும் பாடல்
நான் பேச நினைப்பதெல்லாம்
அந்நாளைய இளைஞர்கள் பலரது தூக்கத்தைக் கெடுத்த பாடல் ...
அபிநய சரஸ்வதியின் PROFILE POSE ஒரு கையை அந்த சுவற்றின் மீது வைத்து பக்கவாட்டில் நின்று கொண்டு தரும் போஸ் .... வர்ணிக்க வார்த்தைகளில்லா ஓவியம் ...
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
நான் பேச நினைப்பதெல்லாம் ... சோகம் ...
இதயத்தைப் பிழிய வைக்கும் பாடல் ... சுசீலா ஒருவரால் தான் இந்த அளவிற்கு உணர்வினைக் கொண்டு வர முடியும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th October 2013 03:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks