-
20th October 2013, 03:10 PM
#1241
Senior Member
Seasoned Hubber
காலத்தால் அழிக்க முடியாத நடிகர் திலகம் - பீம்சிங் - கண்ணதாசன் - விஸ்வநாதன் - ராம மூர்த்தி வெற்றிக் கூட்டணியில் டி.எம்.எஸ். பி.சுசீலா அவர்களின் ஈடு இணையற்று குரல்களில் பாலும் பழமும் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. நம் பார்வைக்கு இப்போது..
பாலும் பழமும் கைகளில் ஏந்தி...
நெஞ்சை உருக வைக்கும் .... என்னை யாரென்று எண்ணி எண்ணி
சுசிலாவின் குரல் நம்மை உருக வைத்து விடும் இப்பாடலில்
தாவி வரும் மேகமே என் தாய்நாடு செல்லாயோ
ஊருலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ
இன்று மணமுடித்த ஏந்திழை போல் நானிங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விடமாட்டாயோ
பின்னால் வந்த பல சோலோ சோகப் பாடல்களுக்கு முன்னோடி எனலாம்....
என்ன நடையப்பா.... சின்னக் கண்ணன் சார்.... சீக்கிரம் வாங்களேன் ...
உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழும் இடத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 100 இடங்களிலாவது ஒலிக்கும் பாடல்
நான் பேச நினைப்பதெல்லாம்
அந்நாளைய இளைஞர்கள் பலரது தூக்கத்தைக் கெடுத்த பாடல் ...
அபிநய சரஸ்வதியின் PROFILE POSE ஒரு கையை அந்த சுவற்றின் மீது வைத்து பக்கவாட்டில் நின்று கொண்டு தரும் போஸ் .... வர்ணிக்க வார்த்தைகளில்லா ஓவியம் ...
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
நான் பேச நினைப்பதெல்லாம் ... சோகம் ...
இதயத்தைப் பிழிய வைக்கும் பாடல் ... சுசீலா ஒருவரால் தான் இந்த அளவிற்கு உணர்வினைக் கொண்டு வர முடியும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th October 2013 03:10 PM
# ADS
Circuit advertisement
-
23rd October 2013, 01:30 AM
#1242
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
காலத்தால் அழிக்க முடியாத நடிகர் திலகம் - பீம்சிங் - கண்ணதாசன் - விஸ்வநாதன் - ராம மூர்த்தி வெற்றிக் கூட்டணியில் டி.எம்.எஸ். பி.சுசீலா அவர்களின் ஈடு இணையற்று குரல்களில் பாலும் பழமும் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. நம் பார்வைக்கு இப்போது..
பாலும் பழமும் கைகளில் ஏந்தி...
நெஞ்சை உருக வைக்கும் .... என்னை யாரென்று எண்ணி எண்ணி
சுசிலாவின் குரல் நம்மை உருக வைத்து விடும் இப்பாடலில்
தாவி வரும் மேகமே என் தாய்நாடு செல்லாயோ
ஊருலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ
இன்று மணமுடித்த ஏந்திழை போல் நானிங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விடமாட்டாயோ
பின்னால் வந்த பல சோலோ சோகப் பாடல்களுக்கு முன்னோடி எனலாம்....
என்ன நடையப்பா.... சின்னக் கண்ணன் சார்.... சீக்கிரம் வாங்களேன் ...
உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழும் இடத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 100 இடங்களிலாவது ஒலிக்கும் பாடல்
நான் பேச நினைப்பதெல்லாம்
அந்நாளைய இளைஞர்கள் பலரது தூக்கத்தைக் கெடுத்த பாடல் ...
அபிநய சரஸ்வதியின் PROFILE POSE ஒரு கையை அந்த சுவற்றின் மீது வைத்து பக்கவாட்டில் நின்று கொண்டு தரும் போஸ் .... வர்ணிக்க வார்த்தைகளில்லா ஓவியம் ...
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
நான் பேச நினைப்பதெல்லாம் ... சோகம் ...
இதயத்தைப் பிழிய வைக்கும் பாடல் ... சுசீலா ஒருவரால் தான் இந்த அளவிற்கு உணர்வினைக் கொண்டு வர முடியும்
arumai ... arumai ..
-
23rd October 2013, 07:48 AM
#1243
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd October 2013, 07:49 AM
#1244
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
74. KAPPALOTTIYA THAMIZHAN

img courtesy: pammalar
வெளியீடு – 07.11.1961
தயாரிப்பு – பத்மினி பிக்சர்ஸ்
கதை – சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய நூலையும் சரித்திரத்தையும் தழுவியது
திரைக்கதை – சித்ரா கிருஷ்ணஸ்வாமி
வசனம் – எஸ்.டி.சுந்தரம்
பாடல்கள் – அமரகவி சுப்பிரமணிய பாரதியார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – வ.உ.சிதம்பரம் பிள்ளை
ஜெமினி கணேசன் – மாடசாமி
சாவித்திரி – கண்ணம்மா
டி.கே. சண்முகம் – சுப்பிரமணிய சிவா
எஸ்.வி.சுப்பையா – பாரதியார்
பாலாஜி – வாஞ்சிநாதன்
நாகய்யா – உலகநாதம் பிள்ளை
டி.எஸ்.துரைராஜ் – சங்கன்
கருணாநிதி – மன்னார்சாமி
எம்.என்.கண்ணப்பா – மீனாட்சிசுந்தரம்
எம்.ஆர்.சந்தானம் – ஏட் ஏகாம்பரம்
டி.என்.சிவதாணு – வாஞ்சியின் மாமனார்
வீராச்சாமி – வக்கீல்
ஈஸ்வரன் – நீலகண்ட பிரம்மச்சாரி
கே.வி.சீனிவாசன் – சங்கர கிருஷ்ணய்யர்
பார்த்திபன் – ஜட்ஜ் பின்ஹே
நடராஜன் – பாண்டித்துரைத் தேவர்
எஸ்.ஏ.கண்ணன் – சேலம் விஜயராகவாச்சாரியார்
நன்னு – பக்கீர் முகம்மது சேட்
குமாரி ருக்மணி – வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாள்
ஜெமினி சந்திரா – வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள்
டி.பி.முத்துலட்சுமி – சுதந்திரா தேவி சிங்கம்மா
எஸ்.ஆர்.ஜானகி – மாடசாமியின் தாயார்
சரஸ்வதி – அய்யங்காரின் மனைவி
ச்சிகலா – பாரதியார் மனைவி செல்லம்மாள்
ராதாபாய் – பரமாயி அம்மாள்
மாஸ்டர் தியாகராஜன், குட்டி பத்மினி மற்றும் பலர்
கௌரவ நடிகர்கள்
எஸ்.வி.ரங்காராவ் – விஞ்ச்
அசோகன் – ஆஷ்
கே.சாரங்கபாணி – ராயர்
ஓ.ஏ.கே.தேவர் – வடுகுராமன்
ஸ்டண்ட் சோமு – சுடலை
ஒளிப்பதிவு டைரக்டர் – டபிள்யு.ஆர்.சுப்பாராவ்
காமிரா இயக்குனர் – கர்ணன்
ஒலிப்பதிவு டைரக்டர் – பி.வி. கோடீஸ்வர ராவ்
வசனம் ஒலிப்பதிவு – டி.வி. நாதன், எம்.சிவராவ் (பத்மினி பிக்சர்ஸ்)
கலை – ஏ.கே. சேகர்
இசை அமைப்பு – ஜி.ராமநாதன்
இசைக்குழு – ஜி.ராமநாதன் குழுவினர்
பின்னணி பாடியவர்கள்
சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி.பி.சீனிவாஸ், வி.டி.ராஜகோபால், சுசீலா, ஜமுனா ராணி, ஆர்.ஈஸ்வரி, ரோஹிணி
நடன அமைப்பு – ஜெயராமன்
தொகுப்பாளர் – ஆர்.தேவராஜன்
ஒப்பனை – ஹரிபாபு, ஆர்.ரங்கசாமி, பீதாம்பரம், எம்.கே.சீனிவாசன், ராமசாமி, வி.பார்த்தசாரதி
ஆடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன், எம்.ராதா, ஆர்.பாலு
அரங்க ஓவியம் – ஆர்.முத்து, ஆர்.ராதா
ரசாயனக் கூடம் – விஜயா லேபரட்டரி, பொறுப்பாளர் – வி.டி.எஸ்.சுந்தரம்
வண்ணப்பட ரசாயனம் – பிலிம் சென்டர், பம்பாய்
தயாரிப்பு நிர்வாகம் – டி.ஆர்.சீனிவாசன், எஸ்.சீதாபதி
புகைப்படம் – ஆர்.வெங்கடாச்சாரி
விளம்பர ஓவியங்கள் – எ.கே. கோபால்
விளம்பர நிர்வாகம் – அருணா அண்ட் கோ
அரங்க அலங்காரப் பொருட்கள் – சினி கிராப்ட்ஸ், டாக்டர் கிரி மியூஸியம், பிலிமோ கிராப்ட்ஸ்
ஸ்டூடியோ – பரணி, நிர்வாகம்- ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ்
வெஸ்ட்ரெக்ஸ் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா. சண்முகம், எம்.ஆர்.கணேசன்
தயாரிப்பு டைரக்ஷன் – பி.ஆர்.பந்துலு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd October 2013, 07:51 AM
#1245
Senior Member
Seasoned Hubber
-
23rd October 2013, 07:52 AM
#1246
Senior Member
Seasoned Hubber
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து விளம்பர நிழற்படங்கள்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
காவிய விளம்பரம் : The Hindu : 14.1.1960
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : நவம்பர் 1961
'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.11.1961
'வெற்றிகரமாக நாடெங்கும் நடைபெறுகிறது' விளம்பரம் : சுதேசமித்ரன் : 14.11.1961
முதல் வெளியீட்டு சாதனை விளம்பரம் : The Hindu : 2.12.1961
காவிய விமர்சனம் : கலை : 1961
காவிய விமர்சனம் : தென்றல் : 11.11.1961
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd October 2013, 07:53 AM
#1247
Senior Member
Seasoned Hubber
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷங்களிலிருந்து...
தொடர்ச்சி....
'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.'யாக நடித்தது பற்றி விளக்குகிறார் நமது தேசிய திலகம்
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஜனவரி 1975
['எனக்கு பிடித்த பாத்திரம்' என்கின்ற தலைப்பில் "கப்பலோட்டிய தமிழன்" கதாபாத்திரம் குறித்து நமது நடிகர் திலகம் அளித்த விரிவான கருத்துரை 'பேசும் படம்' மாத இதழில் ஐந்து பக்கங்களில் வெளிவந்தது]
Pammalar images
http://www.freewebs.com/pammalar/VOC1.jpg
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd October 2013, 07:56 AM
#1248
Senior Member
Seasoned Hubber
Reviews / quotes
Films on patriotism are many. But Panthulu's ‘Kappalottiya Tamizhan' stands apart for the natural portrayal of Sivaji Ganesan as VOC, and S.V. Subbiah who came up with a brilliant performance as Bharatiar. The film remains a perfect showcase of the Independence Movement in the South! “
… Malathi Rangarajan in a write up in The Hindu
“``Kappalottiya Thamizhan''. ``Enacting a doctor, an engineer and others are not very difficult. But to portray a person, a revered freedom fighter, whom people had met, seen and moved with, is a different proposition. So when the late Panthulu asked me to enact the role, I first hesitated. Then I decided to meet the challenge. I got all the material on V. O. Chidambaram Pillai and studied it.
``On seeing the film, I cried, not because my performance was moving but because it hit me with new impact - the sacrifice VOC and others had made for the country. When VOC's son Subramaniam said that he saw his father come alive on the screen, I considered it the highest award.''
From The Hindu write up in its tribute to Nadigar Thilagam …
http://www.hindu.com/2001/07/27/stories/09270226.htm
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd October 2013, 07:57 AM
#1249
Junior Member
Newbie Hubber
கப்பலோட்டிய தமிழன்
இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.
இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.
நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.
இவ்வளவு அற்புதமான advantage இருக்கும் போது ,உண்மைக்கு மிக மிக அருகில் வந்த அற்புதமான திரைக்கதையும் தயாரான போது ,ஒரு கலைஞனின் அறிவும்,மனமும் ,உணர்வும் அதில் தோயும் பொது ,அதில் தோய்பவன் உலகத்திலேயே மிக சிறந்த நடிகனாக இருக்கும் போது, அந்த magic நிகழத் தானே வேண்டும்?
நிகழ்ந்ததா?
கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .
இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.
இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).
அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.
இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.
மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase
படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.
ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.
சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.
ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .
முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.
இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?
-
23rd October 2013, 08:00 AM
#1250
Senior Member
Seasoned Hubber
கோபால் சார்,
மிக்க நன்றி.
கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். இப்படத்தைப் பற்றிய நம் ஒவ்வொருவருடைய கருத்தும் இங்கே பதியப் பட வேண்டும். ஒருவர் விடாமல் பங்களித்து இப்படத்தின் மேன்மையை பறை சாற்றுவோம். கோபால் மிகச் சிறப்பாக இதனைத் தொடங்கி வைத்துள்ளார். அனைவரும் இதனைப் பின் தொடர வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks