-
8th October 2013, 10:17 AM
#1101
Senior Member
Senior Hubber
சேவையிலே மோர்க்குழம்பு
ஊற்றி சாப்பிட்டால் நல்லா இருக்கும்டா
அது என்ன பிடிக்கலைங்கற..
திட்டிக் கொண்டே உண்டது அந்த்க் காலம்..
இன்று
ஹார்லிக்ஸ் நூடுல்ஸாம் நல்லதாம்
சாப்பிடு என்கிறாள் மனைவி
ம்ஹீம்
பேசவில்லையே மறுபேச்சு!
-
8th October 2013 10:17 AM
# ADS
Circuit advertisement
-
8th October 2013, 02:08 PM
#1102
Senior Member
Platinum Hubber
மறுபேச்சு பேசாமல்
தரக்குறைவைத் தாங்கி
மக்கள் மாக்களாய்
மாறுகின்ற கொடுமை
நெஞ்சு பொறுக்குதில்லையே
காடழிக்க காத்திருக்கு
அக்னி குஞ்சொன்று
ரௌத்திரம் பழகியே
என்னென்று சொல்ல
எப்படி விவரிக்க
பொங்கும் ஆத்திரம்
வார்த்தை தின்றதோ
வாய் செத்ததோ
பித்தாகி திகைக்க
அனலாய் மூச்சு
துருத்தியாய் வீச
அக்கிரமத்தை சொல்ல
அமைதியை தேட
தவிக்கிறேன் நழுவும்
நிதானத்தைப் பற்ற
முயல்கிறேன் நானும்
முடியலையே இன்னும்
குலக்கொழுந்தொன்று
பசுந்தளிரொன்று எங்கள்
பால்வடியும் முக செல்வன்
ஒன்பது வயது பாலகன்
பாட்டியுடன் கொஞ்ச வந்த
அழகிய விடுமுறையில்
பத்து நாளுக்கு முந்தைய
வயிற்றுபாதை திரும்பவே
கூர்மதி கொண்டவளாம்
அனுபவமுள்ளவளாம்
என் பின்னே பிறந்தவளாம்
மருத்துவம் பயின்றவளாம்
எதற்கும் ரத்த பரிசோதனை
பார்த்திடலாமென பரிந்துரைக்க
கையில் கொடுக்கப்பட்ட
சோதனை முடிவுத்தாள்
அணுகுண்டை போட்டது
கிட்டதட்ட நான்கு பங்கு
வெள்ளை அணுக்கள்
சொல்ல நா கூசும்
பொல்லாத நோயின்
காலனின் கைப்பிடியை
கொடிய வேதனையை
சுட்டிக் காட்ட அதிர்ந்தோம்
சிதைந்தோம் மொட்டையாய்
எச்சரிக்கை முறையாய்
சுமக்காத சீட்டினை கண்டு
சீறிய என் தங்கையும்
வேறிடத்தில் மறுபரிசோதனை
செய்திட பணிக்க இரவும்
துவங்கிட காத்திருந்தோம்
மறு நாள் மறு சோதனை
முடிவை கையில் வாங்க
வார்த்தது பாலை வயிற்றில்
அந்த இரண்டாம் சோதனை
ஒரு கோளாறுமில்லையென
கண்ணகியாய் எரிக்கக்
கிளம்பியவளை நிறுத்தி
பொறுமை புகட்டினர்
நகரின் உச்ச தரம் கொண்ட
சோதனை கூடத்தில்
மறுநாள் மூன்றாம் முறை
சோதனை முடித்து அதிலும்
இருக்கவில்லை பிழையேதும்
சிறந்த குழந்தை நிபுணரையும்
கண்டு தெளிந்த பின்னும்
ஆறவேயில்லை எனக்கு
நுகர்வோர் நீதிமன்றத்தில்
தண்டனை பெற்றுத் தராது
குடும்பம் அடைந்த துயர்
கொஞ்சமும் ஆறாது
என்றே ஒற்றைக்காலில்
நின்றவள் முதல் சோதனை
மையத்தின் தலைமையை
தொலைபேசியில் அழைத்து
நடந்ததை விவரித்தேன்
இது நீதியா நியாயமா
நெஞ்சு பொறுக்குமா
அடுக்குமா இக்கொடுமை
பத்திரிகையில் கிழிக்கட்டுமா
கோர்ட்டில் வழக்காடட்டுமா
தொழில் தர்மம் இதுதானா
குமுறினேன் கொதித்தேன்
மழை இன்னும் பெய்திட
காரணனாய் ஒரு நல்லவன்
மறுமுனையில் இருந்து
என் எரிமலையை
அப்படியே உணர்ந்து
கண்ணியமும் கொள்கையும்
கொண்ட கனவானாய்
கொள்ளை பணிவாய்
மன்னிக்கக் கோரி
எளிதில் மன்னிக்கும்
சாமானிய குற்றம்
இதுவல்லதான் என்றும்
உடனடியாய் விசாரித்து
நடவடிக்கையாய் அக்கொடிய
தவறு செய்த அலுவலரை
பத்து நாள் பணிநீக்கம் செய்து
பழிவாங்கும் திட்டத்தை என்
மனதிலிருந்து துடைத்தானே
நொந்த மனமும் உடலும்
என்று முழுதாய் தேறுமோ
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
11th October 2013, 11:55 PM
#1103
Senior Member
Senior Hubber
தேறுமோ இல்லை என்றால்
..தெளிவுடன் சொல்க ஐயா
ஆருடம் சொலலக் கையில்
..அரைமணி பார்க்க லாமா
மாறுதல் வருமா தந்தை
..மருந்தினில் குணமாய் போமா
ஊரிடம் கேட்ட போது
..உள்ளதைச் சொல்வீர் என்றார்...
காரிருள் படர்ந்த கண்கள்
..கலங்கவெ வைக்கு தய்யா
மீறியே வந்த அழுகை
..மென்மையாய்ப் பீற ஜோஸ்யர்
பாரிலே உனது தந்தை
..பலதினம் இருப்ப ரென்றார்
வாரியே மகனும் தந்து
..வசந்தமாய்த் தாவிச் சென்றான்..
சொன்னது பொய்தான் என்றே
..சிந்தையில் படுது என்றே
வண்ணமாய் மனைவி கேட்க
..வருத்தமாய் அவரும் சொன்னார்
என்னதான் சொல்ல இவளே
..இவனது ஜாத கத்தில்
திண்ணமாய் இவனின் முடிவு
..தெரிவதை என்று சொன்னார்..
Last edited by chinnakkannan; 12th October 2013 at 12:00 AM.
-
12th October 2013, 08:27 AM
#1104
Senior Member
Platinum Hubber
சொன்னார் சிந்தனை சிற்பி சாக்ரடிஸ் அன்றே
சமூகம் கெட்டதே சீரிய கலாசாரம் அழிந்ததே
அதர்மமும் அக்கிரமமும் தலைவிரித்தாடுதே
இன்று வாழ்வது போல் கணக்காய் சொன்னாரே
ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முன்னும் கலிகாலம்
சுற்றி உருளுது மாற்றமின்றி இக்காலச்சக்கரம்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
20th October 2013, 10:42 PM
#1105
Senior Member
Senior Hubber
சக்கரம் சுற்றச் சுற்ற
..சடக்கெனப் பானை அங்கே
பக்குவம் கொண்ட வாறே
..பாங்குடன் எழவும் அங்கே
சக்கையைத் துடைத்து மெல்ல
..சங்கடம் கொளாத வாறு
வெக்கையில் வைக்க பானை
..விம்மியே மிளிரு மன்றோ..
சொக்கிடும் அழகு கொண்ட
..சுந்தரப் பானை எல்லாம்
தக்கன வாக வைத்து
..தகுந்ததாய்ப் பணமுங் கேட்டால்
பக்கெனச் சிரிக்கும் ஆட்கள்
..பார்த்திடேன் இவனை இங்கே
சொக்கிடும் தங்கம் போன்று
..சொல்கிறான் விலையை என்றே
திக்கெனச் சோல்லும் போதில்
..தேகமும் சோர்ந்து போக
மிக்கவும் துக்கம் வந்து
...மென்மையாய் மனதில் ஏற
சிக்கலை நீக்கப் பானை
..சிரிப்பது போலத் தோன்றி
பக்குவம் கொள்வான் நெஞ்சை
..பாவமக் கலைஞன் தானே..
Last edited by chinnakkannan; 20th October 2013 at 10:45 PM.
-
21st October 2013, 08:25 AM
#1106
Senior Member
Platinum Hubber
கவிஞன் தானே
காண்கிறானே
கலைக்கண்ணாலே
ஒளிந்திருக்கும் அழகை
கலைந்திருக்கும் ஒழுங்கை
அத்திறமையும் கண்ணும்
வடிக்கும் நேர்த்தியும்
வாய்க்குமோ எல்லோர்க்கும்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
22nd October 2013, 10:40 AM
#1107
Senior Member
Senior Hubber
எல்லோர்க்கும் நமஸ்காரா
ஐ யாம் ரியல்லி ப்ரெளட் டு
மீட் யூ டாமில் பீப்பிள்..
இஃப் யூ ஆர் நாட் தேர் ஐயாம் ஆல்ஸோ நாட் தேர்.
டாமில் குட் மொழி லாங்க்வேஜ்
என்னை இந்த டாமில் கான்ஃபெரன்ஸிக்கு
கூப்பிட்டு ஹானர் பண்ணியமைக்கு தாங்க்ஸ்
ஐ லவ் யூ ஆல்
ஜெய் ஹிந்த்
-
22nd October 2013, 02:02 PM
#1108
Senior Member
Platinum Hubber
ஜெய் ஹிந்த் என சொன்னால்
தேகம் முழுதும் சிலிர்க்கும்
ஜவான்களின் அணிவகுப்பு
அவர் நடையின் மிடுக்கு
அணிந்த உடையின் எடுப்பு
காதர் சட்டைகள் குல்லாக்கள்
அந்நியனைத் துரத்திய
ஆண்டுக்கணக்கில் நடத்திய
செக்கடியிலும் குண்டடியிலும்
தூக்கு மரத்திலும் செத்து
பல வழியில் போராடிய
மாவீரர்களும் அவர்கள்
பெற்றுத் தந்த சுதந்திரமும்
நினைவுக்கு வருகுதே
Last edited by pavalamani pragasam; 22nd October 2013 at 02:06 PM.
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
23rd October 2013, 02:25 PM
#1109
Senior Member
Senior Hubber
வருகுதே மன்னர் தேர்தான்
..வாசலில் நிற்கா தேடா
உருக்கிடும் வெய்யில் அங்கே
...உளமுடன் உடலை வாட்ட்
பருவமோ விளையாட் டென்றால்
..பற்பல அடிகள் எல்லாம்
பருகுவாய் எந்தன் பிடியில்
..பாங்குடன் சிக்கி விட்டால்..
சொல்லச் சொல்லக் கேட்காமல்
..சிறுவா நீயும் நின்றாயே
வில்லில் சென்ற அம்பைப்போல்
..வேகங் கொண்ட தேரதுவும்
கொள்ளை கொண்ட துன்னுயிரை..
..கொவ்வை ஆனது என்விழிகள்
கல்லாய்ப் போன நெஞ்சம்தான்
..காலன் கொண்டான் என்மகனே..
எத்தனை பணந்தந் தாலும்
..என்னுயிர் சென்ற தய்யா
சத்தமும் சந்தங் கொண்டு
..சலங்கையின் ஒலிகள் போல
முத்தெனப் பிறந்த அந்த
..மூத்தவன் மரித்து விட்டான்
பித்தென ஆன தய்யா
..பாவியென் மனமும் இன்று..
குறுக்கிலே வந்த எந்தன்
..குறுகுறு மைந்தன் காலன்
விரித்தவவ் வலையில் நன்றாய்
..விழுந்ததை என்ன சொல்ல
மறுகுதே எந்தன் நெஞ்சம்
..மன்னவர் நீரும் இதற்கு
பொறுப்பெனச் சொல்லு கின்றீர்
..பொறுப்பெலாம் விதிதான் ஐயா...
-
24th October 2013, 03:17 PM
#1110
Senior Member
Platinum Hubber
ஐயா புது யுகமிதில்
படித்தவன் பாமரன்
யார் அறிவாளியென
அறிந்தேன் கதையிதில்
குறுக்கு சந்தொன்றில்
ஒருநாள் ஷோக்கான
குட்டிப்பூனையொன்று
தன வாலை உயர்த்தி
சுற்றி சுழன்று நெடுநேரம்
ஆடக் கண்டது ஓர்
பெரிய பூனையுந்தான்
என்ன செய்கிறாய் என்றது
மிடுக்குடன் குட்டிப்பூனை
பெரிய படிப்பு படித்தேன்
வாலில் உள்ளது சந்தோசம்
என்றே கற்றதையொட்டி
பிடிக்க முயல்கிறேன் அதை
என்றவுடன் சொன்னது
பெரிய பூனை எளிமையாய்
நான் பெரிய படிப்பேதும்
படித்தேனில்லை ஆயினும்
அறிவேன் சந்தோசம் என்
வாலில் உள்ளதென என்
வேலைகளை நான்பாட்டுக்கு
செய்து வர வால்பாட்டுக்கு
என் பின் வருகிறதாக்கும்
அதனுடன் சந்தோசமும்
சாதாரணமாய் சொல்லிவிட்டு
கிளம்பியது சோலியைப் பார்க்க
Last edited by pavalamani pragasam; 24th October 2013 at 03:20 PM.
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks