Page 334 of 399 FirstFirst ... 234284324332333334335336344384 ... LastLast
Results 3,331 to 3,340 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #3331
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அருணோதயா தீபாவளி' நடிகர் திலகத்தின் அரிய பேப்பர் கட்டிங்கிற்கு ரொம்ப ரொம்ப நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3332
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ravi sir,your article,NASA,old-scriptures,NT was fine.Our people don't realize the value of the thing they have.The day is not far ,when people accept NT as the DOYEN of film-world globally.

  4. #3333
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்,

    தங்கள் அன்பிற்கு நன்றி! ஐட்டம் நடிகையர் வரிசையில் தாங்கள் அளித்துள்ள சிநேகலதா பற்றிய பதிவு சிம்ப்ளி சூப்பர். ரசித்துப் படித்தேன்.



    இன்னொன்று தெரியுமா! பாலாஜியின் இறக்குமதிகளிலேயே என்னை மிகவும் கவர்ந்தவர் சிநேகலதா. கொள்ளை அழகு. கவர்ச்சி கூட ஆபாசமாய் தெரியாது. நானும் கோபால் சாரும் பல தடவை இந்த அழகுப் புயலைப் பற்றி செல்லில் பேசுவோம். கிட்டத்தட்ட பிரபல இந்தி நடிகை ஆஷா பரேக் சாயலில் இருப்பார் சிநேகலதா.

    கவர்ச்சிப் பாவையாக மட்டுமல்லாமல் இறுதியில் பாலாஜியின் குகையில் கயிற்றால் கட்டிப் போடப் பட்டிருக்கும் நடிகர் திலகத்திடம் "என்னால் பிடிபட்ட நீங்க என்னாலேயே விடுதலையாகப் போறீங்க"...என்று கயிற்றை அறுத்து விடுவிப்பது அவருடைய இரக்க மனத்தைக் காட்டும் காட்சி. அதுவரை அவர் மேலிருந்த சின்ன வெறுப்பும் (வெறுப்பா! அது ஏது என்கிறீர்களா?) நம்மிடையே அப்போது அடிபட்டுப் போய் விடும்.

    மாடர்ன் டிரெஸ்களில் கலக்கிய இந்த நவநாகரீக மங்கையை தங்கள் பதிவின் மூலம் நிரந்தரமாக மறக்க முடியாமல் செய்து விட்டீர்கள்.

    அருமை.(வாலிபம் திரும்பி வந்து விட்டதோ!)...

    இதோ உங்கள் ஸாரி நம் சினேகலதா. (சி.க.சார் ரொம்ப சந்தோஷப்படுவார்.)









    இனி சிநேகலதாவின் 'சிக்'கென்ற ஆடையில் 'சில்' என்ற "சொல்லாதே... சொல்லாதே"....பாடல் சூப்பர் கிளியர் பிரமிட் கம்பனி டிவிடி வீடியோவில்.

    Last edited by vasudevan31355; 22nd October 2013 at 03:55 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3334
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ரவி (g94127302) சார்,

    தங்கள் உயரிய பாராட்டிற்கு மிக்க நன்றி!

    தங்களின் அசாதராணமான ஆங்கிலப் பதிவுகள் தூள் கிளப்புகின்றன. அருமையான விஷயங்களை கொண்டு வந்து அலசி இறுதியில் அதை தலைவருடன் அழகாக கோர்த்து, இணைத்து முடிச்சுப் போடும் தங்கள் பாணி முற்றிலும் புதிது. அதிலும் நாசா பதிவு அற்புதம். (ஹனுமான்ஜியின் பழத் தாவல் அட்டகாசம்). அழகான உவமை. வித்தியாசமான சிந்தனை. தங்கள் பதிவுகளில் நுண்ணிய அறிவு புலப்படுகிறது. தங்கள் மனித நேயமும் விளங்குகிறது. வித்தியாசமான தங்கள் சிந்தனைக் களத்திற்கு என் மனமகிழ்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கும்

    அன்பன்
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 22nd October 2013 at 07:34 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #3335
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியின் காதல்கள்-4

    புதையல்-1957

    சின்ன சின்ன இழை பின்னி விண்ணோடும் முகிலோடும் விளையாடிய தங்க மோகன தாமரை பரிமளா ----உனக்காக எல்லாம் உனக்காக.

    முதல் காட்சி -தபால் கொண்டு வருபவர், தபால் படிக்காமலே கிழிக்க படுவதை கண்டு ஆச்சர்யமுற்று கேட்க,நீங்களே படித்து பாருங்கள் என்று தபால் காரரை அந்த பருவ மங்கை வேண்ட,தபால் காரர் ,இப்படி கசமுசான்னு கிழிச்சிட்டியே ,ஒட்டுமா என்று ஓட்ட வைத்து(சத்தமாவா,மனசுக்குள்ளா,உங்க இஷ்டம்) ,அவர் படிக்கும் அழகிலே ,மயங்கி மனதை பறி கொடுத்து கிழிக்க பட்ட கடிதத்தையும் போற்றி வைக்கும் பரிமளா-துரை காதல் முதல் காட்சியிலேயே களை கட்டி விடும்.(படிக்கும் நடிகர் யாரென்று சொல்லவும் வேண்டுமோ)

    குதிரை வண்டியில் வரும் துரையை தோழிகள் கேலி செய்ய ,நிபந்தனையற்ற ஆதரவை துரைக்கு நல்கி,கடையாணி கழற்றிய வண்டியை துரத்தி சென்று ,அம்மா அப்பாவை பற்றி பரிமளா விசாரிக்க,(இருக்காங்களா,அவங்க இதுக்கு சம்மதிப்பாங்களா ,துரையின் கிண்டல்),தன் கதையை சொல்ல இரவு தனியாக கடற்கரை பக்க மண்டபத்துக்கு வர சொல்ல, அட...பரிமளாவும் சரிதான் சொல்லி விடுகிறாள்.என்ன கதை...

    ஒரு காதல் காட்சி படு சுவாரஸ்யமாகவும் ,கதைக்கே திருப்பு முனையாகவும் அமையும் அதிசயம் இந்த மண்டப சந்திப்பு காட்சி....

    இரவிலே தாமரையாய்,பகலில் நிலவாய் ,குறுந்தொகை படிக்கும் காதலர்கள்...முகத்தையும்,இதழையும் வருடும் துரையின் கரங்கள்,நாணத்தோடு ரசிக்கும் பரிமளா,கோடி கதைகள் பேசி ,பார்ப்போர் காதல் உணர்வையும் தூண்டி துடித்தெழ செய்யும்.தன்னுடைய கதையை சொல்லி இதுதான் தங்கம் புதைத்த இடம் (தங்கை தங்கம்)என்று காட்ட,தங்க புதையலை தேடி அலையும் வெள்ளியம்பலம் கோஷ்டி காதில் பட,துரத்த பட்டு மதகடியில் காதலர்கள் ஒளியும் காட்சி...அந்த கால சொல்லி அடித்த கில்லி.....

    விண்ணோடும் முகிலோடும் காட்சி-சுருங்க சொன்னால் தமிழில் வந்த முதல் முதல் அசல் காதல் காட்சி. இன்ப லாகிரியில் உன்மத்தம் கொண்ட காதல் பித்தோடு காதலர்கள் களி நடம் ஆடும் ,நடிப்பின் சாதனை.Silhoutte என்று சொல்ல படும் நிழல் படத்தில் தொடங்கி,துரத்தி விளையாடி,கை கோர்த்து கடலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து களித்து, ஜடையை இழுத்து,விளையாடி,குட்டி கரணம் அடித்து இன்ப பித்து உணர்த்தி,விளையாட்டாய் மடியில் கை போட செல்லமாய் தட்டி விடும் அழகி. காதலி கையை பிடித்து முட்டி போட்டே நடை பழகும் கடற்கரையோர காதல்....பார்த்து களியுங்கள் அய்யாமார்களே....

    இந்த காதல் இப்படியென்றால், துர்பார்க்கிய ,வயதானவனுக்கு சூழ்ச்சியினால் வாழ்க்கை பட்டு ,பாதாள அறையில் அடை படும் துரையின் மேல் ஒருதலை காதல் கொள்ளும் மேனகா...சகதியில் விழுந்து விட்ட சந்தனத்தை உதாசீனம் செய்வதா,என்னும் மேனகாவிடம்,பின்னே அதை மேலே எடுத்து பூசி கொள்வதா என்னும் துரையிடம்,இல்லையில்லை குப்பையில் கோமேதகம் இருந்தால் என்னும் உதாரணத்திற்கு,நமக்கு சொந்தமில்லாதது என்று பதிலுக்கு, தனியுடமை என்கிறீர்களா என்னும் மேனகாவிடம்,இந்த மாதிரி விஷயங்களில் பொதுவுடைமை கூடாதம்மா என்னும் குறும்பு...
    வந்திருப்பது மாறுவேட பரிமளா என்று அறியாமல் ,குடு குடுப்பை காரனிடமே துரையை வசிய படுத்த வேண்ட ...(குடுகுடுப்பை காரர் பாவம் துரையின் பிடியில்,தட்டலில் திணறினாலும்,இரவு உருண்டு புரண்டு அருகில் படுப்பார்.அது என்னாடா படியில் மேல் நோக்கி உருண்டு என்ற துரை கிண்டல்),தப்பி போக மேனகாவை ஏமாற்ற ,சத்தியமா உன்னை பிரிய மாட்டேன் என்று மாறுவேட பரிமளா கையால் அடித்த சத்தியம் செய்து,ஓடும் போது என் கதி என்று கேட்கும் மேனகாவிடம் நீ வேறா என்று அடிதடி சண்டை வேறு...(துரை ரசிக்க வேறு செய்வார்)புதையல் சுவடியை காதலர்களை பலி கொடுக்க மாற்றியெழுதும் மேனகாவே இறுதியில் பலியாகும் சோகம்....

    பரிமளாவை ஒரு தலையாய் காதலிக்கும் துக்கா ராம் (சந்திர பாபுவின் மிக சிறந்த பாத்திரம்)...நூற்று கணக்காய் தினம் கடிதம் எழுதி குவிப்பதும்,(முதல் காட்சி கடித உபயம் இவரே),பரிமளா சீயக்காய் தூள் ஆர்டர் வரும் போது அதகளம் செய்வதும்,பரிமளா இவரை வெள்ளியம்பலத்திடம் மாட்டி வைக்க,புதையலை தேடி அலைய கட்டாய படுத்த படுவதும் (தின அட்டவணை வேறு குளித்தல்,சாப்பிடுதல்,தூங்குதல்,உலா போதல் என்று!!!),கடைசியில் பரிமளா தன்னை காதலிக்கவில்லையென்றாலும் தான் மாட்டுவதை விரும்பவில்லை என்று அவள் நல்லுள்ளத்தை புரிந்து தானே போலீசிடம் செய்யாத குற்றத்திற்கு சரணடையும் தியாகி காதலர்...

    புதையல்...விறுவிறுப்பான தங்க காதல் புதையல்.
    Last edited by Gopal.s; 22nd October 2013 at 04:31 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #3336
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கார்த்திக் சார்,

    என் மகனின் மூலமான 'பே-இமான்' பற்றி மறக்காமல் குறிப்பிட்டிருந்ததற்கு நன்றி! பொதுவாக இத்தகைய மூலங்களை யாரும் அதிகமாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் இதில் எனக்கு மிக மிக ஆர்வமும், விருப்பமும் உண்டு. தங்கள் ஞாபக சக்திக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    'பே-இமான்' படத்தில் தந்தை போலீஸ் ராமையாப் பிள்ளை வேடத்தில் வில்லன் நடிகர் பிரான் அவர்களும், மகன் திருடன் ராஜா வேடத்தில் மனோஜ் குமாரும் நடித்திருந்தனர். தமிழில் இரண்டு பாத்திரங்களையும் நடிகர் திலகமே ஏற்றார். கதாநாயகி ராக்கி. இந்தி, தமிழ் இரண்டிலும் சிநேகலதாதான். பிரேம்சோப்ரா பிரதான வில்லன். (பாலாஜி வேடம்)

    இதோ 'பே-இமான்' (1972) இந்திப் படத்திலிருந்து சில நிழற்படங்கள்.

    பிரான்



    மனோஜ் குமார்



    ராக்கி



    சிநேகலதாவும் பிரேம்சோப்ராவும்



    சிநேகலதாவும் பிரேம்சோப்ராவும். (சிநேகலதா இரண்டு வருடங்களுக்கு முன்னர் இன்னும் சின்னப் பெண்ணாகத் தெரிவதைப் பாருங்கள்)



    இந்தியில் 'சொல்லாதே... சொல்லாதே'...(Dekho Ji Raat Ko Gulam Ho Gaya)

    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3337
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //இன்ப லாகிரியில் உன்மத்தம் கொண்ட காதல் பித்தோடு காதலர்கள் களி நடம் ஆடும் ,நடிப்பின் சாதனை.Silhoutte என்று சொல்ல படும் நிழல் படத்தில் தொடங்கி,துரத்தி விளையாடி,கை கோர்த்து கடலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து களித்து, ஜடையை இழுத்து,விளையாடி,குட்டி கரணம் அடித்து இன்ப பித்து உணர்த்தி,விளையாட்டாய் மடியில் கை போட செல்லமாய் தட்டி விடும் அழகி. காதலி கையை பிடித்து முட்டி போட்டே நடை பழகும் கடற்கரையோர காதல்.// ஹலோவ்..ஜி.எஸ் (கோபால் சார்) இது என்ன படக் காட்சியா மனதில் பதிந்திருந்த அனுபவக் காட்சியா..ம்ம் கலக்குங்க..

    அது சரீ ஈ.. நான் புதையல் முழுக்கப் பார்த்ததில்லை (அதுக்காக மெம்பர்ஷிப் கான்ஸல் செஞ்சுடாதீங்க) பரிமளா பத்மினி தானே.. யாரந்த மேனகா

    என்.வி.எஸ்(நெய்வேலி வாசுதேவன் சார்), மிக்க நன்றிங்க..நன்னாத்தான் இருக்கா கொயந்தை..இப்போ தள்ளாத வ்யதாயிருப்பாங்க..ஆமா இவங்க தான் ப்ரசண்ட் சினேகாவோட பாட்டியா

  9. #3338
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    வாசுதேவன் சார், கோபால் சார், சின்னக்கண்ணன் சார் தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

    டியர் வாசுதேவன் சார்,

    ஒவ்வொருமுறையும் நான் ஐட்டம் நடிகையர் பற்றி பதிவிடும்போது எழுத்துக்களால் மட்டுமே அமைந்த என் பதிவுகளை மேலும் அழகு படுத்தும் விதமாக மேற்கொண்ட தகவல்களையும், நிழற்படங்களையும், வீடியோ பதிவுகளையும் தந்து முழுமையாக்குவது தாங்கள்தான். இம்முறையும் அதே போல ஸ்டில்களையும், வீடியோவையும், மேலதிக விவரங்களையும் தந்து ஸ்னேகலதா பதிவை சுவையூட்டி இருப்பதுடன், என்மகன் படத்தின் இந்தி பதிப்பான பே-இமான் படத்தின் பதிவுகளையும் தந்து அசத்தி விட்டீர்கள். மனமார்ந்த நன்றி.

    வழக்கமாக இதுபோன்ற வில்லன் கூட்டத்து அழகிகள் இறுதியில் மனம் மாறி கதாநாயகனுக்கு உதவி செய்வதோடு அந்த வில்லனின் துப்பாக்கி குண்டுக்கே இறையாவதாக நமது கதாசிரியர்கள், இயக்குனர்கள் கதையமைப்பார்கள். (பட்டணத்தில் பூதம், மீண்டும் வாழ்வேன் படங்களில் 'சாக்லேட்', வைரநெஞ்சம் படத்தில் 'ஒன்பது', ராஜாவில் 'குழந்தை' உள்பட பல அழகிகளுக்கு இந்த முடிவுதான். ஆனால் ஐஸ்கிரீமுக்கு இப்படத்தில் அப்படியில்லை என்பது ஆறுதல்).

    தங்கள் சிறந்த சப்போர்ட்டுக்கு மீண்டும் மீண்டும் நன்றி....

  10. #3339
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,

    கார்த்திக் சாரோடு சேர்த்து நானும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டவன். உங்கள் முனைவு இல்லையென்றால் பல பதிவுகளுக்கு visual சப்போர்ட் கிடைத்திருக்காது. தங்கள் உழைப்பினால் பலர் பதிவுகள் மேலும் மெருகேறி விளங்கின என்றால் மிகை அல்ல. உங்கள் சிநேகத்திற்கு நன்றி.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #3340
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    புதையலைத் தோண்டி காதல் முத்துக்கள் எடுத்துத் தந்த கோபால் துரைக்கு பாராட்டுக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •