-
23rd October 2013, 01:11 AM
#3351
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
நானும் இதை வழி மொழிகிறேன்...

எனக்கு சினேக லதாவைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்காது வாசு சார் நீங்கள் இல்லை எனில்..!
அட ராமசந்திரா .. சி.க நீங்களும் சேந்துனுட்டேளா.. பேஷ்
கார்த்திக் சார் இதுவரைக்கும் நிறைய எழுதாம தலைவரோட ஐட்டம் கேர்ள்ஸ் பற்றி மட்டும் பக்கம் பக்கமா எழுதறார் நீங்களும் அதை பார்த்து ஹும் ஹும். சரியில்லை...
jokes apart, MR Karthik very nice writeup so far .. Kudos
-
23rd October 2013 01:11 AM
# ADS
Circuit advertisement
-
23rd October 2013, 06:25 AM
#3352
Junior Member
Newbie Hubber

Originally Posted by
chinnakkannan
// நன்றி..ஆனால் எனக்கு உங்களோட முன் அவதார் தான்பிடிச்சுருந்தது..ஜி.எஸ் ஸோட வாக்வாதம் பண்ணிட்டு அடுத்து என்ன பதில் சொல்லலாம்னு யோசிக்கறா மாதிரி

கண்ணா எஸ்கேப்
ஆஹா, சங்கராபரணம் கிளைமாக்ஸ் மாதிரி,நாரதர் பட்டத்தை கை மாற்றி விட்டு விட்டேன். அப்பாடா.....
-
23rd October 2013, 06:36 AM
#3353
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
ஆஹா, சங்கராபரணம் கிளைமாக்ஸ் மாதிரி,நாரதர் பட்டத்தை கை மாற்றி விட்டு விட்டேன். அப்பாடா.....
Confession.... இது வரைக்கும் நாரதர் இருந்த இடம் exposed....
வாசு சார்.... take over ... ஐயா ... விடு ஜூட்....
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd October 2013, 06:36 AM
#3354
Junior Member
Newbie Hubber
பன்மொழி புலவர் வாசுதேவனார் பாணியில் (வீடியோ இல்லாமல்)ஒன்றை முயன்று பாப்போம்.
புதையல் படம் கீழ்கண்ட மொழிகளில் டப்(அ)மொழிமாற்றம் கண்டது.
மலையாளம்- என்ட இஷ்ட குஞ்சுமோன் துரையோட ராவுகள்.
கன்னடம்- ஹுதேயலு
தெலுங்கு-ரக்த அடாவல்லு மேடாலு ரஹச்யம்
ஹிந்தி-ராத் பரிவார் ஔலட் வாரிஸ்.
-
23rd October 2013, 06:57 AM
#3355
Senior Member
Diamond Hubber
அடப்பாவி! நினக்கு ஹிர்தயம் லேது? நினக்கு மாத்திரம் வேண்டி யான் படமிட்டது கண்டோ! எந்தா! வல்லிய ஒரு மனுஷனாயி! பாவம் கொடூரன்!
-
23rd October 2013, 07:20 AM
#3356
Junior Member
Newbie Hubber

Originally Posted by
rajeshkrv
நீங்களும் அதை பார்த்து ஹும் ஹும். சரியில்லை...

அட அபிஷ்டு அம்பி,
சி.க இதிலே சேராமல் எதிலேயாக்கும் சேருவார்?
-
23rd October 2013, 10:28 AM
#3357
Senior Member
Veteran Hubber

Originally Posted by
rajeshkrv
கார்த்திக் சார் இதுவரைக்கும் நிறைய எழுதாம தலைவரோட ஐட்டம் கேர்ள்ஸ் பற்றி மட்டும் பக்கம் பக்கமா எழுதறார்
ஸாரி, ராஜேஷ் சார்,
மறுக்கிறேன்.
என்னுடைய 2100+ பதிவுகளில் வெறும் 6 பதிவுகள் மட்டுமே ஐட்டம் நடிகையர் பற்றியது. அதுவும்கூட ராஜா படத்தின் பதிவுகள் திரியில் இடம்பெற்றபோது, அதில் நடித்திருந்த பத்மகன்னா பற்றி (அப்படத்தில் அவரது ரோல் மிகவும் பிடிக்கும் என்பதால்) தனிப்பதிவு இடப்போய் சில நண்பர்களின் உந்துதலால் இத்தொடரைத் துவங்கினேன். இத்தனைக்கும் இது அவ்வளவு சுவாரஸ்யமான தொடர் அல்ல.
என்னுடைய மற்ற பதிவுகளை நீங்கள் படித்ததில்லைஎன நினைக்கிறேன். நான் பதித்தவற்றுள் எனக்கே மிகவும் பிடித்தவை / பிடிப்பவை நடிகர்திலகத்தின் படங்கள் வெளியான நாளில் எனது தியேட்டர் அனுபவப் பதிவுகளே. மிக விரைவில் அவற்றை மீண்டும் தொடர்வேன்.

Originally Posted by
rajeshkrv
jokes apart, MR Karthik very nice writeup so far .. Kudos

நன்றியுடன்
mister_k....
-
23rd October 2013, 11:06 AM
#3358
Senior Member
Senior Hubber
//என்னுடைய 2100+ பதிவுகளில் வெறும் 6 பதிவுகள் மட்டுமே ஐட்டம் நடிகையர் பற்றியது. // பாருங்க எல்லாத்துக்குமே ஒரு கவர்ச்சி தேவைப் படுது கே.எஸ் (கார்த்திக் சார்)
//இத்தனைக்கும் இது அவ்வளவு சுவாரஸ்யமான தொடர் அல்ல. // உங்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம்
-
23rd October 2013, 11:21 AM
#3359
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 12
Don't Miss It
படம்: விளையாட்டுப் பிள்ளை

வெளிவந்த ஆண்டு: 20.02.1970
தயாரிப்பு: ஜெமினி நிறுவனம்
சண்டைப்பயிற்சி : சுவாமிநாதன்

நடிகர் திலகம் மோதும் வில்ல விலங்குகள் : யானை, காளை
இயக்கம்: A.P. நாகராஜன்
இதயத்தைப் படபடக்க வைக்கும், வீறு கொண்ட வேங்கையென நடிகர் திலகம் யானை, காளையுடன் மோதும் சண்டைக்காட்சிகள்.
இதுவரை நடிகர் திலகம் பல வில்லன்களுடன் மோதிய தொடர்களைக் கண்டு களித்தீர்கள். இப்போது மாறுதலுக்கு வித்தியாசமாக 'விளையாட்டுப் பிள்ளை' படத்தில் யானை, மற்றும் காளையுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சியைக் காணப் போகிறீர்கள். சற்று அபூர்வப் படமான இப்படத்தின் இந்த சண்டைக்காட்சியை பலரும் மறந்திருக்கலாம். இப்போது ஞாபகப்படுத்திக் கொண்டு கண்டு மகிழலாம்.
இப்படம் முழுக்க பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடும் அற்புதமான வேடம் தலைவருக்கு. கபடி, சிலம்பம், ரேக்ளா வண்டி பந்தயம் என்று தூள் கிளப்புபவருக்கு மிக சிரமமான, உயிரைப் பணயம் வைத்து யானை, மற்றும் காளையுடன் துணிச்சலாக மோதும் வீரமான வேடம்.
முதலில் யானையுடன் மோதும் காட்சி

மகன் சிவக்குமார் படிக்கும் காலேஜில் புதுக் கட்டிட திறப்பு விழாவிற்கு கலந்து கொள்ள சென்று இருக்கிறார் கிராமத்து வீரன் முத்தையா. அங்கு சிறப்பு விருந்தினராக மாகாராஜா (எஸ்.வி.ராமதாஸ்) மற்றும் அவரது தங்கை இளைய ராணி (காஞ்சனா) வருகை தருகின்றனர். மகாராஜாவுக்கு மாலை போட்டு வரவேற்க யானை ஒன்று மகாராஜாவை நோக்கி செல்ல, விழாவின் அதிர்வேட்டுச் சத்தத்தில் யானை மிரண்டு யானைக்கு மதம் பிடித்து அங்கிருக்கும் பொருள்களை துவம்சம் செய்கிறது. கீழே தடுமாறி விழும் மகாராஜாவை மிதிக்கவும் வருகிறது. இதை கவனித்துக் கொண்டிருக்கும் முத்தையா வீரத்துடன் யானையுடன் போராடி மகாராஜாவின் உயிரைக் காப்பாற்றுகிறார்
கிராமத்து வீரன் முத்தையாவாக அளவெடுத்து தைத்தாற் போன்று அத்தனை பொருத்தம் இந்த வேடம் நடிகர் திலகத்திற்கு. சும்மா புகுந்து விளையாடுவார். வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு தடாலெனப் பாய்ந்து மகாராஜாவைக் காப்பாற்றி பின் யானையுடன் மோதுவார். யானையின் தந்தங்களைப் பிடித்து வலது பக்கமும், இடது பக்கமும் ஓடுவது படு துணிச்சல். அதே போல் யானை இவரை தூக்கிக் கிடாசும் போது அங்கு போடப் பட்டிருக்கும் நாற்காலிகளின் மேல் அப்படியே ஓடி விழுவது திக்...திக்....ஒவ்வொரு தரமும் யானை தூக்கி இவரைப் போடும் போது விழுகையில் இவர் கண்களில் தெரியும் மிரட்சியைப் பாருங்கள். யானை கீழே விழுந்து கிடக்கும் தன்னருகே வந்தவுடன் புயல் போல அந்த இடத்தை விட்டு தாவி உருள்வது டாப். மறுபடி நாற்காலிகள் மீது தூக்கி வீசப்பட்டவுடன் ஒரு நாற்காலியைத் தூக்கி வீசியபடி விருட்டென எழுந்திருப்பார். பின் யானையின் துதிக்கையை பிடித்தபடி சுற்றும்போது பந்தல் காலில் மோதிக் கொள்வார். பின் யானை மீதேறி அதன் தலைப் பகுத்தியைக் கைகளால் குத்தியபடியே யானையை அடக்கி படுக்க வைப்பார்.
நிஜமாகவே மெய் சிலிர்க்கும் காட்சி. அசாத்திய துணிச்சலுடன் மிக தத்ரூபமாக நடிகர் திலகம் உயிரைப் பணயம் வைத்து செய்திருப்பார்.
அடுத்து காளையுடன் மோதும் காட்சி

மிருகங்களை வைத்து ஷோ நடத்துபவர்கள் வைக்கும் காளை அடக்கும் போட்டியில் முத்தையன் இளையராணியுடன் கலந்து கொள்கிறார். அடங்காத முரட்டுக் காளையையும் அடக்கிக் காட்டுவதாக ஷோ நடத்துபவர்களிடம் சவால் விட்டு காளையுடன் மோதத் தயாராகிறார். முத்தையனைக் கொல்ல காளையின் கொம்பிலே வில்லனால் விஷம் தடவப் படுகிறது. இதைக் கேள்விப்பட்ட முத்தையன் மனைவியும், மகன் மாணிக்கமும் பதறி அடித்து ஓடி வருகிறார்கள். தந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்ற மகன் முதலில் காளையுடன் மோதித் தோற்கிறான். பின் முத்தையன் களத்தில் இறங்கி அந்த முரட்டுக் காளையை அடக்கி வெற்றி கொள்கிறான்.
மகன் சிவக்குமார் காளையுடன் மோதி அடிபட்டுக் கிடக்கையில் பதறி ஓடி வந்து நடிகர் திலகம் திமிர்ப் பிடித்த காளையுடன் மோதுவார். (சிவக்குமார் மோதுவதற்கு முன்னால் காளையுடன் மோத தயார் நிலையில் இவர் ரெடியாகும் அழகே அழகு!) மாட்டின் இரு கொம்புகளையும் பிடித்து சுற்றி ஓடி வருவது, மாடு முட்டியவுடன் தூரப் போய் விழுந்து அதே வேகத்தில் எழுந்திருப்பது என்று இதிலும் நிறைய வீர சாகசங்கள் புரிவார் நடிகர் திலகம்.
ஒருமுறை காளை இவரை முட்டி மோதியவுடன் சுற்றியிருக்கும் தகரத் தடுப்புகளின் மீது போய் விழுந்து அப்படியே சுவற்றில் அடித்த பந்து போலத் திரும்புவார். உண்மையாலுமே நெஞ்சை உறைய வைக்கும் காட்சி இது.
உச்சக்கட்ட காட்சி ஒன்று. டூப்பே இல்லாமல் மாட்டின் கொம்புகளைப் பிடித்துத் தொங்கியவாறு யாரும் எதிர்பாராவகையில் சட்டென ஜம்ப் செய்து தன் இரு கால்களாலும் மாட்டின் முகப் பகுதியை இறுக்கிப் பிடித்தபடி செய்யும் ரத்தத்தை உறைய வைக்கும் ஆக்ஷன். (மேலே உள்ள ஸ்டில்லைப் பாருங்கள்). அப்பப்பா! என்ன ஒரு துணிச்சல்! வேகம்! பார்ப்பவர்களின் சப்த நாடியும் ஒடுங்கிப் போகும். நீங்களே பாருங்கள். நம் விளையாட்டுப் பிள்ளையின் வீர தீரச் செயல்களை.
நன்றி!
முதன்முறையாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
Last edited by vasudevan31355; 23rd October 2013 at 11:35 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
23rd October 2013, 11:52 AM
#3360
Junior Member
Newbie Hubber
கார்த்திக் சார் ,
தங்கள் அத்தனை பதிவுகளும் சுவாரஸ்யம்தான். என்னை இந்த மையத்திற்கு இழுத்து ஈர்த்தவை.
Bookmarks