-
9th November 2013, 12:58 PM
#3821
// டியர் கோபால் சார்,
தங்களது சிவந்த மண் நினைவுகள் அருமை. நான் ஏற்கனவே இத்திரியில் வந்த சிவந்த மண் நினைவுகள் பற்றிய ஒரு பதிவை சேமித்து வைத்திருந்தேன். சாரதா மேடத்தின் பதிவு என்று நினைக்கிறேன். (மன்னிக்கவும்) //
No doubt Chandrasekar sir, that is Saradha mam's post. I read it several times.
// தாதா மிராஸி யாராக வருவார்?//
Mr. Chinnakannan,
Dadamirasi is the one who come as Portugese representative in two occations, who is talking with Nambiar with the help of a translator.
-
9th November 2013 12:58 PM
# ADS
Circuit advertisement
-
9th November 2013, 02:59 PM
#3822
Junior Member
Devoted Hubber
வருடமிருமுறை இத்திரியில் நடந்தேறும் நண்பர்கள் 'ராகோ' நடத்தும் 'நீயா நானா' நிகழ்ச்சியை நான் தவிர்த்துவிடுவது வழக்கம்,இதற்கு முக்கிய காரணம் நான் "கோ"வின் குழாமை சேர்த்தவன் என இங்கு சிலரால் கருதப்படுவதால்.(இதில் எனக்கு சந்தோஷமே)ஆனால் கிட்டதட்ட உச்ச கட்டம் வந்துவிட்ட நிலையில் என் கருத்தையும் ஒரு ஓரமாக வைக்க விரும்புகிறேன்.
கடவுளில் வேறுபாடு இல்லை எல்லாகடவுளும் ஒன்றுதான் ..அதேபோல அவரை உபாசிக்கும் கோவில்களிலும் எந்த வித்தியாசமும் கிடையாது என்பதை நாம் கருத்தளவில் ஒப்புக்கொண்டாலும் திருப்பதி,மதுரை,பழனி,குருவாயூர் சிதம்பரம் சமயபுரம் சபரிமலை போன்ற கோவில்களுக்கு விசேஷ புகழ் இருப்பதையும் மறுப்பதில்லை.அதே போல நடிப்பின் கடவுளாகிய தலைவர் நடித்தபடங்கள் அனைத்தும் அவரை நாம் உபாசிக்கும் கோவில்களே என்றாலும் அவற்றிலும் சில கோவில்கள் விசேஷமானவை என்பதை மறுக்கமுடியாது.
இப்படியும் சொல்லலாம்..
தலைவர் ....
உலக நடிகர்களுக்கு சவால் விட்டு நடித்தவை ஒரு அறுபது படங்கள்
மற்ற இந்திய நடிகர்களுக்கு சவால் விட்டு நடித்தவை ஒரு இருநூறு படங்கள்
மற்ற தமிழ் நடிகர்கள் போல நடித்தவை மீதி படங்கள்.
மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு திரி தேவைப்படும்
ஒன்றோடு ஒன்றினைக்கலப்பது... குங்குமப்பூவை, குருமாவில் போடுவதற்கொப்பாகும்
எனக்கு இரண்டும் பிடிக்கும்; ஆனால் கலந்தால் பிடிக்காது.
அம்புட்டுத்தேன்!!
Last edited by Ganpat; 9th November 2013 at 03:07 PM.
-
9th November 2013, 03:30 PM
#3823
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Ganpat
உலக நடிகர்களுக்கு சவால் விட்டு நடித்தவை ஒரு அறுபது படங்கள்
மற்ற இந்திய நடிகர்களுக்கு சவால் விட்டு நடித்தவை ஒரு இருநூறு படங்கள்
மற்ற தமிழ் நடிகர்கள் போல நடித்தவை மீதி படங்கள்.
???
-
9th November 2013, 07:53 PM
#3824
Junior Member
Newbie Hubber

Originally Posted by
adiram
//
// தாதா மிராஸி யாராக வருவார்?//
Mr. Chinnakannan,
Dadamirasi is the one who come as Portugese representative in two occations, who is talking with Nambiar with the help of a translator.
தவறு தலைவரே. புரட்சிக்காரர் நால்வரில் ஒருவர் தாதாமிராசி. (விஜயன்,தாதாமிராசி,செஞ்சி கிருஷ்ணன்,மாலி).
-
9th November 2013, 08:45 PM
#3825
Junior Member
Regular Hubber
-
9th November 2013, 10:48 PM
#3826
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
தவறு தலைவரே. புரட்சிக்காரர் நால்வரில் ஒருவர் தாதாமிராசி. (விஜயன்,தாதாமிராசி,செஞ்சி கிருஷ்ணன்,மாலி).
நீங்கள் தான் சறுக்கி விட்டீர்கள் தலைவரே!
ஆதிராம் சார் சொன்னதுதான் சரி. போர்த்துக்கீசிய அரசாங்கத்தின் தூதுவராக நம்பியாரிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் சம்பாஷணை செய்பவர்தான் தாதாமிராசி. யா.அ.ச
Last edited by vasudevan31355; 10th November 2013 at 09:57 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th November 2013, 09:57 AM
#3827
Senior Member
Diamond Hubber
'புதிய பறவை' உருவாக்கம் பற்றி ஆரூர்தாஸ் அவர்கள் 'தினத்தந்தி' (8-11-13) நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை.

Last edited by vasudevan31355; 10th November 2013 at 10:00 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th November 2013, 10:09 AM
#3828
Junior Member
Regular Hubber

Originally Posted by
Gopal,S.
நடிகர்திலகத்தை தெய்வமாக தொழுபவன் நான். அவருக்கு மீறி ஒரு நடிகன் பிறந்ததும் இல்லை,பிறக்கவும் இல்லை,பிறக்க போவதும் இல்லை. ஆனால் எல்லா படங்களிலும் அவர் பங்களிப்பு சூப்பர் என்பதை, அவர் பக்தர்களே ஒப்ப மாட்டார்கள். தர்மராஜா படத்தில் நடிக்க ,அவர் என்ன கராத்தே கற்று பாத்திரத்தை justify பண்ணினாரா?அமர காவியம் போன்ற படங்களில் ஏனோதானோ என்று வந்து போகவில்லையா?சிரஞ்சீவி போன்ற படங்களை பார்த்து நொந்து போனது எத்தனை ரசிகர்கள்? ஓங்கி சொல்கிறேன். 81 க்கு பிறகு வந்த 90% படங்கள் தரமற்ற குப்பைகளே. அவற்றில் நடித்ததற்கு ,நடிகர்திலகத்தை மன்னிக்கவே முடியாது. அவர் நடிப்பும் பெரிய imaginative ஆக,அவர் திறமைக்கேற்ப அமையவில்லை. அதை பற்றி ராகவேந்தர் எங்கு,எப்போது எழுதினாலும் என் எதிர் கருத்து வரத்தான் வரும்.
கோபால் சார்
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
தர்மராஜா திரைப்படத்தை பற்றி மற்றும் 80கலிர்க்கு அப்புறம் வந்த திரைப்படங்களை பற்றிய தங்கள் கருத்து, தங்களுடைய வாதம் சரியல்ல, ஏற்க்கமுடியாதது என்வரையில் ! !
கராத்தே முறையாக கற்றுக்கொண்டு நடிக்க அது ஒன்றும் ஒரு கராத்தே வீரரை பற்றிய கதையல்ல ! ஆகவே நீங்கள் அதில் நடிகர் திலகம் முறையாக கராத்தே கற்றுக்கொண்டு நடித்திருந்தால் அதை ஒத்துகொண்டிருப்பீர்கள் என்ற ரீதியில் உள்ள பதில் ஏற்புடையதாக இல்லை !
மேலும் காலங்கள் மாறும்போது கதைகளம் மாறும்போது அதற்கேற்றார்போல மாறும் தன்மை கொண்டவன்தான் நடிகன் !
நடிகர் திலகம் திரைப்படத்தில் நடித்திருக்க கூடாது என்பது விதண்டாவாதம்.
காரணம் அதை கூற உங்களுக்கும் சரி, எனக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி எந்த உரிமையும் கிடையாது.
நடிப்பு நீங்கள் கூறியது போல imaginativaaga இருபதற்கு அவரிடம் கூறப்பட்ட கதைகள் ஒத்துழைத்ததா என்பதை நீங்கள் நினைத்துபாருங்கள் ? அப்படி அமைந்த சில கதைகளில் 80உக்கு பிறகும் கூட அவர் கொலோச்சியிருப்பர் என்பதும் தாங்கள் உணரவேண்டிய ஒன்று உதாரணம் : மிருதங்க சக்ரவர்த்தி, துணை, வா கண்ணா வா, மருமகள் மற்று பல !
ரசிகர்களின் ரசிப்புத்தன்மை மாறும்போது அதற்கேற்றார்போல கதைகள் உருவாக்கபடுகின்றன ! அப்படி உருவாக்கப்பட்ட கதைகளுக்கும் நடிகர் திலகத்தின் appearance ஒரு பலமாக இருந்ததால்தான் தயாரிப்பாளர்கள் அப்போதும் இனிப்பை மொய்க்கும் ஈக்களைபோல மொய்த்தார்கள் !
அவர் என்றுமே கதையை இப்படி மாத்து...அப்படி மாத்து...என் கதாபாத்திரம் இப்படி இருக்கவேண்டும்...அப்படி இருக்கவேண்டும்...என்று தேவையில்லாத தொந்தரவை கதாசிரியர்களுக்கு, வசனகர்த்தாக்களுக்கு, இயக்குனர்களுக்கு ஒருபோதும் கொடுத்ததில்லை என்பதையும் நீங்கள் நினைவில்கொள்ளவேண்டும் ! HE IS A 100% PROFESSIONAL !
புது நடிகர்கள் பலர் வந்தும் இந்த நிலை என்றால் நடிகர் திலகத்தின் MARKET VALUE ஒரு EVER GREEN MARKET VALUE என்பதை நீங்கள் உணரவேண்டும்.
அப்படியிருந்தும் மிருதங்க சக்ரவர்த்தி, துணை, வா கண்ணா வா மற்றும் பல தரம் வாய்ந்த படங்களையும் நடித்து கொடுத்தவர் நடிகர் திலகம்.
மேலும் நடிகர் திலகம் RIGHT FROM DAY ONE ஒரு தயாரிப்பாளரின், விநியோகஸ்தர்களின், இயக்குனரின் நடிகராக மட்டுமே இருந்துள்ளார் என்பது உலகறிந்த விஷயம்.
பிடிக்கவில்லைஎன்றால் நீங்களோ நானோ மற்றவர்களோ பார்க்காமல் போகவேண்டியதுதானே ! அதை விடுத்து உங்கள் கருத்தை மற்றவர்களுக்குள் இப்படி திணிப்பது ஞாயமே இல்லை.
Last edited by Saraswathi Lakshmi; 10th November 2013 at 10:17 AM.
-
10th November 2013, 10:21 AM
#3829
Junior Member
Platinum Hubber
-
10th November 2013, 10:23 AM
#3830
Junior Member
Regular Hubber

Originally Posted by
vasudevan31355
'புதிய பறவை' உருவாக்கம் பற்றி ஆரூர்தாஸ் அவர்கள் 'தினத்தந்தி' (8-11-13) நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை.

வர வர இந்த அரூர்தாஸ் எழுதுவது படிக்கவே கடுப்பாக இருக்கிறது !
சரியான ஜால்ரா பேர்வழியாக இருந்திருப்பார் போல !
என்ன ஒரு தலைகனம் !
தனக்கு தானே மானியம் விட்டுகொள்வது போல ஒரு எழுத்து ! தேவையில்லாத வாக்கியங்கள் ..!
அவர் தொலைபேசி இருந்தால் கொடுங்களேன் யாராவது ! Noziating megalomania ! Just wanted to give a piece of my mind !
Bookmarks