Page 23 of 401 FirstFirst ... 1321222324253373123 ... LastLast
Results 221 to 230 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #221
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    உத்தம புத்திரன்

    நடிகர்திலகத்தின் பாடல், நடிப்பு என்று பல பரிமாணங்களை நச்சென்ற கமென்ட்டோடு, இணைப்புகளாக, அருமையாக தொகுத்தளித்தமைக்கு நன்றி. அப்பப்பா! என்ன Variety..
    Thanks for your understanding and appreciation KCS sir !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #222
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by sankara1970 View Post
    Dear NT fans.

    Bharat Ratna for Sivaji----signature campaign may be initiated in internet/
    kenji kettu vaangum endha virudhukkum madhippu illai, mariyaadhaiyum illai. adhu kittaththatta pichai eduppadarku samam.

    kaalam kadandhu kodukkappatta 'Dada Saheb Palke' awardai NT accept panniyadhe niraiya perukku pidikkalai theriyumaa?.

    avar reject pannuvaarnu aavaludan edhirpaarththanar niraiya fans.

  4. #223
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Chevalier award faunctionil Manirathnam sonnadhu innamum ninaivil irukkiradhu. Rasigarkalaip paarththu "innum balamaaga kaithattungal. Delhiyilirukkum sevidargal kaadhil vizhattum" endraar.

  5. #224
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    தியாகம்

    தியாகம்

    நேக்குப் புடிச்ச இன்னோர் படம்.நேத்து வூட்டுல டெக்குல போட்டுப் பாத்தோம்.சிவாஜி ஒரு ஜமீன்தாரு.அவுரு கூட இருக்குற கணக்குபுள்ள வி.கே ராமசாமி.அவரு புள்ள எம்.ஆரு.வாசு ரெண்டு பேரு சதியாலவும் சிவாஜி ஜெயிலுக்குப் போயி திரும்பி சொத்தெல்லாம் பறிகுடுத்துட்டு நடுத்தெருக்கு வந்துடறாரு.ஒரு பொண்ணக் கெடுத்ததா வேற அவுரு மேல வீணா பழி போட்டுடறாங்க.சிவாஜி காதலிச்ச டீச்சரு லஷ்மி பொண்ணு சிவாஜியவ குடிகாரன் பொம்பள பித்தன்னு தப்பா நெனச்சி வெறுக்குது.சிவாஜி கடல்ல போட்டு ஓட்டி மீன் புடிச்சி புழைக்கிறாரு.ஏழைகளுக்கு ஒதவி செய்யிறாரு.காதலி நெனப்புல நெறைய குடிக்கிறாரு, சிவாஜியவ ஏமாத்தி சொத்தப் புடுங்கிகிட்ட ராமசாமியும் வாசுவும் சிவாஜிக்கு எதிரா எதனாச்சும் பண்ணிகினே கெடக்கறாங்க.சிவாஜி அவுங்கள நல்லா சமாளிக்கிறாரு.அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டரா வர பாலாஜிக்கும் சிவாஜிக்கும் முதல்ல வில்லப் பயலுவளால மோதல் வருது.அப்புறம் சிவாஜி நல்லவருன்னு சுந்தரராசன் மூலியமா பாலாஜி உணருராறு.ரெண்டு பேரும் சேர்ந்து பிரண்டாயி ஊருக்கு அணை கட்றாங்க.லஷ்மி புள்ளையும் சிவாஜி நல்லவருன்னு தெரிஞ்சிக்குது.ஊர் சனங்க அல்லாம் சிவாஜிக்கு சப்போர்ட் பண்ணுது.அல்லாத்துக்கும் ராமசாமியும் வாசுவும்தான் காரணும்னு புரிஞ்சுக்குது.அப்புறம் சிவாஜி குடிக்கறத விட்டுடுராறு.அல்லாம் நல்லபடியா முடியுது.ஜோடி ஒன்னாயிடுது.படம் பாத்தவன் சிரிச்சுகினே வெளிய வரான்.நல்லா துட்ட கரந்துகினு பாலாஜி சிரிச்சுகினான்.

    சிவாஜியை பத்தி சொல்லனும்னா சூபரப்பு சூபரப்பு சூபரப்பு.மீன் சந்தைய்லே அவரு அழகா நடந்துகின்னு என்ட்ரி குடுப்பாரு.சாராய பட்டைய அடிக்கடி ஊத்திகினு குடுக்குற நடிப்பு இருக்கே.ஜோரான ஜோரு.கோவில்ல சிவாஜி சாமி கும்பிட்டுகினு வர போவும்போது அங்க கோயில் குருக்கள் தேங்கா சிறிநிவாசன் கோவிலுக்குள்ள நொழய வேணாம்னு தடுக்க சொல்ல மனோரமாவோடு ஹோலி பண்டிக கொண்டாட்ற மாறி சிவாஜி ஆடுறபோடற ஆட்டம் இன்னைய இளசுங்க கூட ஆடமுடியாதுயோவ்.அப்புறம் எம்ஜியார்ஆளு ஜஸ்டினு லஷ்மி பொண்ணான்ட மீனுசந்தையில கைபுடிச்சி இழுத்து ராவடி பண்ணுறப்போ சிவாஜி வந்து ஒரு பைட்டு குடுப்பாரு. அம்மாடியோவ்.இன்னா கண்ணு பைட்டு அது.உருட்டுகட்ட எடுத்துகிட்டு ஜஸ்டின தர்ம சாத்து சாத்துவாரு.பட்டாக்கத்திய வச்சுகினு பெருசுபெருசா கடையில தொங்கற மீனையெல்லாம் வெட்டுவாரு ஜஸ்டினு.சிவாஜி அவருக்கு செம்ம ஆட்டம் காட்டுவாரு.உட்டாலக்கடி பைட்டு.யாராச்சும் அந்த பைட்ட போடுங்கலேன்பா.

    தேன்மல்லி பூவுன்னு ஒரு டூயட்டு சாங்கு.சிவாஜி அறியாபுள்ள கணக்கா கலரு கலரா சட்டைங்க போட்டுகினுவருவாரு.அவுருக்கு இன்ன வயசு அப்போ.ஜோராக்கீறாரே.அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல சிவாஜிய இழுதுகினு வரசொல்லி பாலாஜி ஆள் அனுப்புவாரு.சிவாஜி குடிச்சி இருப்பாரு.ஸ்டேஷனுக்கு வந்து பாலாஜிக்கு சரிக்குசரியா சேர் இழுத்துபோட்டுகினு ஒக்காந்து முடியை ஒதுக்கிகினே பேசுற கட்டம் தூக்கிடும் தல.பயபுள்ள இன்னாம்மா நடிச்சிக்குராறு இந்தக் கட்டத்துல.பாலாஜி வேற சாட்டையால சிவாஜியவ கோவத்துல பொரட்டி எடுத்துடுவாரா பாவம்மா பூடுதுப்பா.அப்புறம் சரக்க கையில வச்சுகினு குடிக்காமளியே குடிச்சா மாறி ஆக்ட்டு குட்த்து ஒலகம் வெரும் இருட்டு ன்னு ஒரு குத்துப்பாட்டு போடுவாரு சிவாஜி. ங்கொக்கா மக்கா டக்கரு ஆட்டம் மச்சி.கப்பல்ல ஸ்டைலா நின்னுகினு நல்லவர்க்கெல்லாம் சாச்சிக ரெண்டு அப்படின்னு ரொம்ப பாப்புலாரானா பாட்டு ஒன்னு இருக்கு.அதிலேயும் சிவாஜி செம்ம ஸ்டைலு காட்டுவாருப்பா.நீங்க அல்லாரும் சொல்றது கரெக்ட்டுபா.ஸ்டைலு காட்டுறதுல சிவாஜிதான்யா டாப்பு. ஒத்துகினேன்.ஆமாப்பு

    லஷ்மி புள்ளகூட சிவாஜி லவ்வுல கலாய்க்குற கட்டம் நல்லா இருக்கும்பா.மாடுவெரட்டு பாக்கும்போது லஷ்மிபொண்ண ஷோக்கா பாதுகாப்பா இன்னா ஜாக்கிரதையா சிவாஜி பின்னால இழுத்துக்குவாறு தெரியுமா.கில்லாடியா சிவாஜி கணேசன்.லஷ்மிபொன்னாண்ட இளநீ குடுத்து குடிக்க சொல்லக்கூட குஜிலியா இருக்கும்பா.லஷ்மி குளிக்க சொல்ல சிவாஜி பார்வ அங்கிட்டு இங்கிட்டு சவட்டு மேனிக்கு லஷ்மி மேல மேயுதே.எனக்கு ரொம்ப கூச்சமா போச்சுப்பா. நாகேஷ் பொண்ண காப்பாத்துனம்னா பிரைஸ் பணம் வாங்குறதுக்கு விடாம மூணுநாலு சைக்கிளு ஓட்டனும் சிவாஜி ஓட்டுவாரு.மொத நாலு ஒரு மாறியும்,ரெண்டாம் நாலு வேற மாறியும்,மூணாம் நாலு ரொம்ப களைச்சி போயும் ஓட்டி கடைசியில பிளட்வாமிட் எடுத்துடுவாரு.பொம்பளைங்கல்லாம் இந்த சீனு வரகாட்டி அழுதுடுச்சிபா.எனக்கே கண்ணுல தண்ணி வந்துடுச்சின்னா பாத்துக்கோயேன். இம்மாங் கஷ்டப்பட்டு இந்த ஆளு ஏன் இப்பிடி ஆக்ட்டு குடுக்கணும்.ஆனா கொஞ்சம் பயபுள்ளைவ இந்த சீன பாக்காம டீ குடிக்க ஓடிட்டானுங்கயா. வெவஸ்தையே இல்லாதவனுக என்னமோ டீயே குடிக்காதவனுக மாறி

    சிவாஜிகூட ரெண்டு புள்ளைங்க தோனியான்டையே தொணைக்கு சுத்துகினி கிடக்குங்களே.ஒன்னு பாலையாபுள்ளன்னு தெரியுது.இன்னொரு புள்ளாண்டம் யாருப்பா.தெரிஞ்சா சொல்லேன்.மியுசிக் ராசாவா.ராசா ராசாதான்யா.பாலாஜி இன்ஸ்பெக்டரு அல்வா கணக்கா பண்ணிகின்னு போயிடறாரு.ராமசாமி வாசு ஒரே தமாஷுப்பா.லஷ்மிகண்ணு அழகா இருக்குப்பா.தேங்கா சிறினிவாசன் இந்தப் படத்துல கூட வாத்தியார் வாத்தயார்னு உயிரை எடுத்துகிரான்பா.இந்த ஆளு இல்லன்னு எவன் அழுதான்.இந்த ஆளைஎல்லாம் ஏன் சிவாஜி சேத்துகினு கெடந்தார்ன்னு புரியல்லியே.கொழந்த மனசுபா.அதான் ஏமாளி கணக்கா பூட்டாரு.

    படம் செம்ம ஜாலியா இருக்கும்பா.இன்னொன்னு தெரியுமா சிவாஜிக்கு மீசை சம்முன்னு இருக்கு.மனோரம்மா என்னாமா குச்சி சுத்தி சண்ட போடுது.ஆமாம் மொதப்பாட்டுல சிவாஜி ஏன் காலை தாங்கி தாங்கி நடக்குறாரு.அடிகிடி பட்டுடுச்சா.பீச்சு ஓரமா படம் முச்சூடும் புடிச்சி இருக்காங்கப்பா.கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.பாலாஜி வாயிலவச்ச சிகரெட்ட வாங்கி சிவாஜி ஊதுராறு நடிப்ப ஊதுற மாறியே. பிரண்டுஷிப்புனா அதான்யா பிரண்டுஷிப்பு. இங்கயும் இருக்கே பிரண்டுஷிப்பு. கலீஜி. கடைசியில பாலாஜி மாத்தலாகி வேற ஊருக்கு கிளம்பரச்ச சிவாஜியோட சேர்த்து நமக்கும் என்னவோ மாரி பேஜாரா பூடுது.

    அப்புறம் ஜானகி யக்கா வசந்தகாலகோலம்ன்னு ஒரு பாட்டு பாடியிருக்கே.இன்னைக்கு முச்சூட கேக்கலாம்யா.சுந்தர்ராச மாமா வயக்கம் போல ராஜாராதான்னு சொல்லிகின்னு கம்பவுண்டரா மருந்து தடவிக்கினு போறாரு.நாகேசு இருக்குறாரு சிரிக்கலாம்னு போனா சீரிஸா நடிக்கிறாரு.பொண்ணுக்கு ஒடம்பு சரியில்லாம போயி வாசுகிட்ட தோணி கடன் வாங்கியாந்து ஓட்டுறாரு.கடன் குடுக்கமுடியாம போனாங்காட்டி வாசு அடிக்கசொள்ள அப்படியே சேத்துல போயி வழுக்கிகினே வுழுவாரு.நேச்சுரா இருக்கும்பா.படம் புடிச்சவரு மீனு மார்க்கெட்டு சந்த கடலு ஆறு போட்டு தென்ன மரம்னு கண்ணுக்கு கூலா புடிசிக்கிறாருபா.சிவாஜி ஏழைங்களுக்கு பண உதவி செய்வாரு.அவுங்க துக்கத்துல பங்கு எடுத்துக்குவாரு.கீழ்சாதி ஜனங்களோட சரிக்குசரியா பழகுவாரு.அப்ப இருந்தே இந்த மனுஷன் இந்த பார்முலாவ பாலோ பண்ணியி ருந்தாருன்னா எப்பவோ ஆட்சியப் புடிச்சிருப்பாரு.வெவரம் புரியாத அப்பாவி மனுஷன்.மொத்தமா பாத்தா செம்ம ஜாலியான படம்பா.புதுப் பயலுவ படம் மாறி அவ்ளோ பிரெஷா சிவாஜி பூந்து விளயாடுவாருப்பா.இன்னைக்கு முச்சூட பார்த்துகினே இருக்கலாம் கண்ணு.

    ஒரு ரெக்வெஸ்ட்டு.யாராச்சும் நான் எழுதுனதுக்கு இந்தப் படத்துல இருந்து போட்டா போட முடியுமா ராகவேந்திரன் சாரு,சந்திர சேகரன் சாரு வாசு சாரு ப்ளீஸ்.

    ஆனாக்கா ஒன்னு.மொரளி சாரு நான் கிறுக்குனதப்பத்தி எதாச்சும் சொல்லியே ஆவணும்.அவரு பெரிய ஆளு.வெவரஞ் தெரிஞ்சவரு அவுரு.எழுதுடான்னா எழுதுறேன்பா.எழுத வேணாம்னு என்னாண்ட சொல்லிகினா அப்பால எழுதாம உட்டுட்டு துண்ட தூக்கி தோள்ல போட்டுகினு போய்கினே கெடக்கிறேன் இன்னா

    என்னாமோ எழுதிபூட்டேன்.இஷ்டம்னா படி.இல்லேன்னா தூக்கி தூர போடு.நாம சிங்கம் மாரி.கவலப்படறது பயப்படுறது நம்ம சாதகத்திலேயே இல்ல.அதான் அவுதாருலியே தெரியுதில்ல

    வர்றேன் கண்ணு

  6. #225
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    dear parthasarathy sir

    best wishes . This thread was opened on 16th now on 18th already nearly 20 pages were filled up with lot of new messages/new members
    That is NT.
    All the best

    Regards

    Gkrishna
    gkrishna

  7. #226
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    dear kruba sir

    excellant write up for thiyagam movie.
    the two co artistes one is junior balaiah another one is panjabagesan (whether the name is correct)
    (who acted as elder brother for sridevi in meendum gokila, recently in some 5 years back parthiban kanavu (new) as srikanth's (new) grand father)
    while reading the write up just remembring the 100th day function held at tirunelveli parvathi talkies (evening show was celebrated as congress function
    night show by sivaji fans association)
    keep it up

    regards

    Gk
    gkrishna

  8. #227
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    one more thing in thiyagam
    excellant pair of v.k.ramasamy and m.r.r. vasu (father and son)
    "appan varuvan athan pinne magan varuvan thappendru ninekathe thangame"

    regards

    gk
    gkrishna

  9. #228
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிருபா சார்,
    பட்டையை கிளப்புறீங்க. ஜாலியான நடை. சொல்ல வேண்டியதையும் சொல்லி விடுகிறது. வாழ்த்துக்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #229
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by kiruba View Post
    தியாகம்
    ஏம்பா கிருபா,
    நோக்கு மட்டும் இல்லேடா அம்பி, நேக்கும்தான் அது புடிச்ச படம்.
    Quote Originally Posted by kiruba View Post
    எழுதுடான்னா எழுதுறேன்பா.எழுத வேணாம்னு என்னாண்ட சொல்லிகினா அப்பால எழுதாம உட்டுட்டு துண்ட தூக்கி தோள்ல போட்டுகினு போய்கினே கெடக்கிறேன் இன்னா
    சோக்காதாம்பா எளுதியிருக்க கண்ணு. அப்புறம் போய்கினே எல்லாம் இருக்கமுடியாதுபா.
    கிருபா...
    எளுது, எளுதிகினே இருபா...
    Last edited by KCSHEKAR; 18th November 2013 at 08:20 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #230
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தை சேர்ந்த, சுதந்திர தியாகிகளில், வ.உ.சிதம்பரனார் மிகவும் முக்கியமானவர். அவர் வாழ்க்கை போராட்டம் தான், சிவாஜி நடித்த, கப்பலோட்டிய தமிழன் படம். என்னை மாதிரி ஆங்கில பள்ளிகளில் படித்தவர்களுக்கு, வ.உ.சி., பற்றி அதிகம் தெரியாது.

    என் தந்தை, அப்போது, பம்பாயில், மத்திய அரசு பணியில் இருந்தார். கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக, கப்பல்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்க, சிவாஜியும், இயக்குனர் பி.ஆர்.பந்துலுவும், அவரது குழுவினரும், அப்போது, பம்பாய் வந்திருந்தனர்.

    அப்படக்குழுவினருக்கு, பம்பாய் துறைமுகத்தில் படப்பிடிப்பு நடத்த, அரசு அனுமதி பெற, உதவினார் என் தந்தை.
    ஒய்.ஜி.பி., பம்பாயில் இருந்த போது, நாடகத் துறையில் உள்ள தமிழர் களை ஒன்று திரட்டி, நாடக குழு ஆரம்பித்து, அங்கு, தமிழ் நாடகங்களை மேடையேற்றினார்.

    ஒருமுறை ஷூட்டிங்குங்காக, பம்பாய் வந்திருந்த சிவாஜியிடம், அன்றைய நாடகத்திற்கு தலைமை வகிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

    சாதாரணமாக நூறு, இருநுாறு பேர் தான் பார்வையாளர்களாக வருவர். ஆனால், சிவாஜி வருகிறார் என்றவுடன், அன்று, ஆயிரக்கணக்கான பேர் திரண்டு வந்திருந்தனர். சிவாஜி அன்று வர ஒப்புக் கொண்டதே நாடக கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணம். பொதுவாக அந்த கால கட்டத்தில், எல்லா பெரிய நடிகர்களுமே, நாடக கலைஞர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பர்.

    அன்று மாலை, நாடகத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்து ரசித்த சிவாஜி, நாடகத்தின் முடிவில் பேசிய போது, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் விளக்கி, அதில் நடித்திருந்த கலைஞர்களையும் பாராட்டினார். கதாநாயகியாக ஒரு ஆண் நடிகர் நடித்திருந்ததை குறிப்பிட்டு, 'என் கடந்த கால நினைவுகள் எல்லாம், அலை மோதுகின்றன. நானும், நாடகத்தில் போட்ட முதல் வேடம் பெண் வேடம் தான்யா...' என்று அவர் பேசிய போது, பயங்கர ஆரவாரம், கை தட்டல் எழுந்தது.

    மருத நாட்டு வீரன் படத்தின் படப்பிடிப் பிற்காக, புனே வந்திருந்த சிவாஜி, அங்கிருந்து, கப்பலோட்டிய தமிழன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள, பம்பாய் வந்திருந்தார்.

    சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பற்றி, பலருக்கு தெரியாது என்பது, வருத்தமான உண்மை. கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி மட்டும் நடிக்கவில்லை என்றால், பி.ஆர்.பந்துலு இதை படமாக தயாரிக்கவில்லை என்றால், லட்சக்கணக்கானவர்களுக்கும், ஒரு தலைமுறையினருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,யைப் பற்றி தெரிந்திருக்காது.

    கப்பலோட்டிய தமிழன் படத்தில், வீர வசனங்கள், போர், சண்டை காட்சிகள் கிடையாது. நடிப்பில் சாதனை புரிய பெரிய வாய்ப்பும் இல்லை. இருந்தும் தேச பக்தி மற்றும் தன் நடிப்புத் திறமை மீது அவருக்கு இருந்த தன்னம்பிக்கை காரணமாக தான், சிவாஜி அப்படத்தில் நடித்தார். சிதம்பரனார் குடும்பத்தினர், இந்தப்படத்தை பார்த்து, கதறி அழுதனராம்.

    1972ல், சிவாஜி ரசிகர்களின் மாநாட்டில், வ.உ.சிதம்பரனார் மகன் பேசும் போது, 'சுதந்திரப் போராட்டத்தில், எங்க அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை, சிவாஜியின் நடிப்பை பார்த்து, தெரிந்து கொண்டோம்...' என்று, மனம் உருகி குறிப்பிட்டார். சிவாஜியின் சிறந்த நடிப்புக்கு, இந்த பாராட்டு, ஒரு அங்கீகாரம்.

    ஒரே மேடை நிகழ்ச்சியில், சிவாஜி, ஒரு லட்சம் ரசிகர்களை தன் நடிப்பால், மெய் மறக்க வைத்த சுவையான நிகழ்ச்சியை பற்றி, இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    நவம்பர் மாதம், 1977ல், தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக, அப்போதைய, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமா நடிகர்கள், கலைஞர்களின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். 'அண்ணன் கேட்கிறாரு. நாம் அனைவரும் அதிகமாக வசூல் செய்து, வெள்ள நிவாரண நிதிக்கு தரணும். அது நம் கடமை...' என்ற சிவாஜி, நட்சத்திரங்கள், இசை கலைஞர்கள் அனைவரையும், ஒருங்கிணைக்கும் பணியை, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் வி.கே.ராமசாமியிடம் கொடுத்தார். நடிகர் சங்கத்திற்கு, அப்போது, சிவாஜி தலைவராகவும், மேஜர் சுந்தர்ராஜன் காரியதரிசியாகவும் இருந்தனர்.

    வெள்ள நிவாரண நிதிக்காக, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை நகரங்களிலும், மாபெரும் நட்சத்திர கலைவிழா நடத்துவ தென்று முடிவு செய்தனர்.

    யாரெல்லாம் முதல் வகுப்பு, 'ஏசி' இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் செல்லலாம் என்று, பட்டியல் தயார் செய்தார் மேஜர்.

    மேஜர் கொண்டு வந்த பட்டியலை பார்த்த சிவாஜி, 'முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, 'ஏசி' எல்லாம் வேண்டாம். வெள்ள நிவாரண நிதிக்காக வசூலிக்க செல்கிறோம். செலவு குறைவாக தான் இருக்கணும். நாம் எல்லாரும், நான்கு நாட்களுக்கு, நம்முடைய சவுகர்யம், பழக்கம் எல்லாவற்றையும் மறந்து, மரக்கட்டை கம்பார்ட்மென்ட்டில், மூன்றாம் வகுப்பில், குறைந்த செலவில் தான் பயணம் செய்யப் போகிறோம். சில இடங்களில், நாம் தங்குவதற்கு, ஓட்டல்காரர்கள், இலவசமாக, அறைகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

    ஆண்களுக்கு தனி ஓட்டல், பெண்களுக்கு தனி ஓட்டல்; சாப்பாடு செலவு மட்டும் தான், நாம் அரசிடமிருந்து வாங்க வேண்டும். அதற்கு மேல், இத்யாதி செலவு அனைத்தும், அவரவரே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் அரசு பொறுப்பு இல்லை.

    நான்கு நாட்கள், முழுமையாக மக்களை மகிழ்வித்து, அதற்கு அவர்கள் தருகிற பணத்தை வசூல் செய்து, அரசுக்கு தர வேண்டும்...' என்றார்.

    சிவாஜி மற்றும் முத்துராமன், மேஜர், மனோரமா, சுமித்ரா, விஜயகுமாரி, லதா, மஞ்சுளா, நாகேஷ், வி.கே.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.வி., மற்றும் இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் மற்றும் பலர் வந்திருந்தனர். நானும், இக்குழுவில் இடம் பெற்றிருந்தேன்.

    முத்துராமன், தேங்காய் சீனிவாசன், சுமித்ரா மற்றும் நானும் சேர்ந்து ஒரு காமெடி நாடகத்தில் நடித்தோம்.

    சிவாஜி, அன்னையின் ஆணை படத்தில் வரும், சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகத்தில் நடித்தார். மாலை, 7:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, ஆடல், பாடல், நாடகம் என, கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.

    சிவாஜி நடிக்க வேண்டிய ஓரங்க நாடகம், இரவு 10:00 மணிக்கு வரும். இரவு 8:00 மணிக்கே முழு, 'மேக் -- அப்' போட்டு, கவசம், கத்தி, கிரீடம் அணிந்து, மேடையில் தயாராக இருந்தார் சிவாஜி.

    சரியாக இரவு, 10:00 மணிக்கு, மேடையில் நுழைந்து, 'எங்கே கலிங்கம்?' என்று, சிவாஜி கர்ஜித்த காட்சியில், அந்த திறந்த வெளி அரங்கில் உட்கார்ந்திருந்த, ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்ட அனைவரும், ஒரே நொடியில் அமைதியாகி விட்டனர். எங்கும் நிசப்தம்.

    அடுத்த முறை, 'எங்கே கலிங்கம்?' என்பதை, ரகசிய குரலில் சொல்வார். நடிகர், நடிகைகள், நாங்கள் என அனைவரும், மேடையின் பக்கவாட்டிலிருந்து, அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். பதினைந்து நிமிடங்கள், அப்படியே, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப் பட்டவர்கள் போல, மெய் மறந்து உட்கார்ந் திருந்தனர் ரசிகர்கள்.

    நாகேஷ் என்னிடம்,'டே, சலசலன்னு பேசிக் கொண்டிருக்கும் இவ்வளவு பெரிய ஆடியன்சை, 'டக்'கென்று அடக்குவதற்காக, 'எங்கே கலிங்கம்?' என்று இரைந்து, கர்ஜனை செய்து, ஆடியன்ஸ் அமைதியாகி, அடுத்த முறை, மெதுவான குரலில், அவர் சொன்னாலும், அவர்களுக்கு கேட்கும். சிவாஜி ஒரு மந்திரக்காரன்...' என்று ரசித்து, அனுபவித்தவாறே கூறினார்.

    கடந்த, 1975ம் ஆண்டு, சென்னை ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் பிரத்யேக, 'செட்' போட்டு, சிவாஜியின், ஓரங்க நாடகமான, 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தை, 45 நிமிடங்களில் சிவாஜி நடித்து, படமாக்கினர்.

    45 நிமிடங்களும் சிவாஜி, 'மோனோ ஆக்டிங்' செய்திருப்பார்.

    நடிப்புக் கலையிலே, 'மோனோ ஆக்டிங்' மிகவும் கஷ்டமான வடிவம். ஒரே நடிகர் எல்லா வசனங்களும் பேசி, இல்லாத பல பாத்திரங்களை இருப்பதாக பாவித்து, நடிக்க வேண்டும்.

    இந்தியா முழுவதும் ஒளிபரப்பான, இந்த ஓரங்க நாடகத்தை, தூர்தர்ஷனுக்கு பணமே வாங்காமல், இலவசமாக நடித்துக் கொடுத்தார். இந்தியாவே, சிவாஜியின் நடிப்பை கண்டு, வியந்து பாராட்டியது.

    - தொடரும்.
    Last edited by Uthamaputhiran; 18th November 2013 at 09:38 PM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •