-
15th November 2013, 09:56 AM
#71
Junior Member
Newbie Hubber
நான் அவனில்லை கதை களம், சம்மந்த பட்டவர்களின் பங்களிப்பு இவற்றை ஆராயு முன்----
தமிழிலேயே எனக்கு மிக மிக பிடித்த படங்களில் ஒன்றாக நான் கருதுவது நான் அவனில்லை.
ஜெமினிக்கு ,இந்த படத்துக்காக தேசிய விருது கிடைக்காதது நமக்கெல்லாம் பெருத்த அவமானம்.என்ன ஒரு performance ? சும்மா புகுந்து விளையாடி பெடலெடுத்திருப்பார். அவரின் 9 சொச்ச வேடங்களும் தனித்தனியாக நில்லாமல் கதையுடன் பிணைந்து பயணிக்கும். காதல் மன்னனுடன் ,காதல் இளவரசனும் (அன்றைய வளரும் நடிகர்)ஒரு சிறு சுவையான வேடத்தில் மலையாளம் பறைவார்.
பாலச்சந்தரின் மருமகன் குறிப்பிட்டதில் இருந்து நான் அறிந்தது, ஜெமினிக்கும் (சொந்த படம்),கே.பிக்கும் பிணக்கு ஏற்பட்டு ,இடைவேளைக்கு பின்பு கே.பீ நினைத்த மாதிரி அமையாமல் கே.பீக்கு முழு திருப்தி இல்லையாம். ஆனால் புத்திசாலி ரசிகர்களுக்கு ,இது என்றுமே முழு திருப்தி தந்த படமே.
ஒரு சாதாரண கோர்ட் ரூம் டிராமா , எப்படி சுவையான பாத்திரங்களால்,nerrative surprise நிறைந்த திரைக்கதையால்,கூர்மையான இயல்பான வசனங்களால் ,ஒரு வித்தியாச சிந்தனை கொண்ட இயக்குனரால் பரிமளித்தது என்று பார்ப்போம்.வந்த போது பெரிய வெற்றி படமல்ல.புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காணாத காலம்.
இந்த படத்தில் விறுவிறுப்பு,திருப்பங்கள்,நகைச்சுவை(டயலாக்,situati on-linked) ,அங்கங்கே மிளீரிடும் மனிதம்,கட்டி போடும் வசனம்(ஒரு நிமிடம் நாம் கவனத்தை நகர்த்தினால் முக்கியமான லிங்க் போய் விடும்)என்று ,அருமையான ஒரு படைப்பு. இந்த அளவு wholesome என்று சொல்லத்தக்க படங்கள் இந்திய அளவில் மிக குறைவே.
நான் எஸ்.எஸ்.எல்.சி முடித்த கையோடு, பீ.யு.சீயில் படிக்கும் போது இந்த படம் பார்த்த போது தீவிர கே.பீ.ரசிகன். ஜெமினியை பிடிக்கும்.(தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாவிட்டாலும்)
அடுத்தடுத்த நாட்களில் ஐந்து முறை பார்த்து என் பெரியப்பா ,அப்பாவிற்கு போஸ்ட் கார்டு எழுதி உன் பையனுக்கு எதிர்காலமே இல்லை என்று தெரிவிக்கும் அளவு தீவிரமாகி, இந்த படம் என்னை பாதித்தது.
இன்று பார்க்கும் போதும் அதே உணர்வையே அடைகிறேன். இதை பற்றி விலாவரியாக எழுதும் துடிப்பை என் கைகள்,இதயம்,அறிவு மூன்றும் பரபரக்கிறது.
இனி முகவுரை முடிந்து படத்தினுள்.....
Last edited by Gopal.s; 15th November 2013 at 10:29 AM.
-
15th November 2013 09:56 AM
# ADS
Circuit advertisement
-
17th November 2013, 02:56 PM
#72

Originally Posted by
Gopal,S.
நான் அவனில்லை
ஜெமினிக்கு ,இந்த படத்துக்காக தேசிய விருது கிடைக்காதது நமக்கெல்லாம் பெருத்த அவமானம்.என்ன ஒரு performance ? சும்மா புகுந்து விளையாடி பெடலெடுத்திருப்பார்.
Mr. S.Gopal,
Now it is 2013, any Vikrams, Dhanus-s, Prakash Raj's can get 'National Best Actor' award.
But Naan Avanillai was released in 1974, the then situation was entirely different.
Gemini Ganesh did not have any MPs in Parliment at that time to support Indira Gandhi government. Then how can National Award possible?.
-
17th November 2013, 08:38 PM
#73
Junior Member
Newbie Hubber
நான் அவனில்லை.
கதையை நேரிடையாக சொல்லி, மற்ற அலசல்களை தொடர்கிறேன்.(பார்த்தவர்களுக்கு தேவை படாது)
போலிஸ் ஒரு நடுத்தர வயது ஆங்கிலோ இந்தியன் ஒருவனை துரத்துவதில் ஆரம்பிக்கும் டைட்டில் , ஒரு கிராமத்து மனிதன் விபத்தில் மாட்டி சந்தேகத்தில் பிடி படுவதில் படம் துவங்கும். பின் நேரடியாக கோர்ட் ரூம்தான்.சாட்சிகள் ஒவ்வொருவராக வர, குற்றம் சாட்டப்பட்ட வடசேரியில் நெய்சு வேலை செய்து வருவதாக சொல்லும் நாஞ்சில் நம்பி ,தன்னுடைய டிபென்ஸ் வக்கீலை இன்சல்ட் செய்து துரத்தி தனக்காக தானே வாதாடி கொள்வதாக சொல்கிறான்.முதல் சாட்சியாய் சவப்பெட்டி தொழில் செய்யும் ஆல்பர்ட் ஆசீர்வாதம் எதிரில் நிற்பது தன்னுடைய B .A படித்த புத்தி கூர்மை ,பன்மொழி திறமை கொண்ட தன்னுடைய தம்பி டேவிட் ஆசிர்வாதமே, மனைவி(ஊமை),இரு குழந்தைகளை தவிக்க விட்டு 15 வருடம் முன்பு ஓடி விட்டவனே என்று சொல்கிறான். நாஞ்சில் நம்பியோ,நான் அவனில்லை என்று நிறுவ பார்க்கிறான்.
அடுத்த சாட்சி மாதவ ராவ் என்ற அரசாங்க ஊழியன் ,சி.என்.எ .சாரி என்ற பெயரில் தனக்கு நல்ல வேலை வாங்கி தருவதாக சொல்லி 15000 ரூபாய் ஏமாற்றியது குற்றம் சாட்ட பட்டு கூண்டில் நிற்பவரே என்று சொல்கிறான்.
இடையில் இந்த வழக்கின் நீதிபதி ஜலால் ஹுசேன் மகள் சலீமா ஹுசேன் ,இந்த வழக்கில் தனக்கு ஒரு உண்மை தெரியும் என்று சொல்கிறாள்.அக்பர் அலி என்ற பெயரில் ரயிலில் வரும் தன்னுடன் அழகான உருது பேசி ,தன் அப்பாவிடம் 1000 ரூபாய் தந்தி மணி ஆர்டர் சலீமா என்ற பெயரை உபயோகித்து ஏமாற்றியவன் அவனே என்றுணர்ந்து ஒரு ஹீரோ வொர்ஷிப் கொண்டு,கோர்ட்டுக்கு வர ஆரம்பிக்கிறாள்.
அடுத்தடுத்து விஜயஸ்ரீ என்கிற தெலுங்கு பெண்,தன்னிடம் லட்சுமண சர்மா என்ற பெயரில் தன்னை மணந்து (இதில் சித்தப்பா சகாதேவ சாஸ்திரிகள் என்று வேறு )பணம்,நகைகளை ஏமாற்றியவன் என்றும்,அம்மு குட்டி என்ற கேரளா பெண் ,சத்ருகன மேனன் என்ற பெயரில் தன்னை மணந்து ,75000 ரூபாய் பணம்,30000 ரூபாய் நகைகளுடன் ஓடியவன் என்று அடுத்தடுத்து சாட்சி சொல்ல ,குற்றவாளியின் பதில் நான் அவனில்லை.இந்த பெண்கள் சொல்லும் ஒரு பெயர் ஜானி வாக்கர் என்ற நண்பன் அடிக்கடி கொடுக்கும் வாழ்த்து தந்திகள்,இறப்பு செய்திகள்.தேன் மொழி என்ற கல்யாண புரோக்கர். என்று சாட்சிகள்.
நாஞ்சில் நம்பி ஆங்கிலம்,தெலுங்கு,மலையாளம்,உருது என அனைத்து மொழிகளும் பேசுவதால்,அவன் தாய் மொழி அறிய ,எதிர்பாராமல் போலிஸ் கன்னத்தில் அறைய முஷே என்று கத்துகிறான்.அனைவரும் குடைந்து முஷே என்பது சீன மொழியில் அம்மாவை குறிப்பது என்று அங்கலாய்கிறார்கள்
.அடுத்து கிருஷ்ணா பாய் ,தங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்து ,தன்னுடைய பெண் ராணியை சர்வாலங்கார பூஷிதையாய் பழனிக்கு அழைத்து சென்று ஏமாற்றிய ஹரி ஹர தாஸ் ஸ்வாமிகள் ,நாஞ்சில் நம்பியை நிற்பவனே என்று சாட்சி கூற,அடுத்து violet solomon என்ற ஆங்கிலோ இந்திய பணக்கார மாது, தன் கணவன் ஜாக் சாலமன் அவனே என்றும் ,தான் அவனை இன்னும் விரும்புவதை கூற,நாஞ்சில் நம்பியில் விழி கடையோரத்தில் துளிர்க்கும் நீர்.அவளை குறுக்கு விசாரணையும் செய்யாமல் அனுப்புகிறான்.(மற்றவர்களை போட்டு கிழி கிழிதான்)அடுத்த சாட்சி ராணி.தன்னை ஏமாற்றி தன் நகைகளை எடுத்து கொண்டு ஓடிய ஹரிஹரதாஸ் ஸ்வாமிகள் அவனே என்றும்,தன்னை பலர் கற்பழித்து,ஒரு நடன விடுதியில் நடன மாதாக இருக்கும் பொது,ஒரு இளைஞன் வாழ்வு கொடுத்ததாக கூறுகிறாள்.(அம்மு குட்டியின் தம்பியே).
தன் சாட்சியாக நாஞ்சில் விசாரிப்பது தானம்மாள் என்கிற தன் மனைவியை மட்டுமே.(3 ஆண் 2 பெண் குழந்தை 10 வருட வாழ்க்கை)
அடுத்து ஜானி வாக்கர் என்ற பெயரில் தந்தி கொடுத்த தம்பிதுரை மாட்ட, ஜாக் சாலமனாய் கொடைக்கானலில் உலவிய டேவிட் என்கிற,நாஞ்சில் நம்பி என்கிற,சாரி என்கிற,அக்பர் அலி என்கிற,சத்ருகன மேனன் என்கிற,லட்சுமன் சர்மா என்கிற,ஹரிஹரதாஸ் ஸ்வாமிகள் என்கிற நான் அவனில்லை ,அம்முகுட்டியின் தம்பி,விஜயஸ்ரீ,அம்முகுட்டி,வயலெட் எல்லோரிடமும் ஒரு சேர மாட்ட தப்பித்து ஓடும் போது……
இறுதியில் 14 வருடம் கடுங்காவல் பெறும் அவனிடம் அண்ணன் ஆல்பர்ட் ,இப்போதாவது ஜீசஸ் இடம் பாவமன்னிப்பு கோர சொல்ல திமிராக சாதிக்கும் அவனிடம் கோபம் கொண்டு கத்தியால் குத்தி விட கடைசியில் ,ஜீசஸ் என்று தன்னை வெளிக்காட்டி மரணமடையும் டேவிட் என்கிற perverted genius deviant .genius .
----To be Continued.
-
18th November 2013, 07:21 AM
#74
Junior Member
Newbie Hubber
Naan Avanillai.
The High light of Naan Avanillai lies in its Novel Theme, Structuring of the movie soaked well in Layered Nuances, Well rounded Multi Dimensional Characters, its narrative surprises,Intelligent Pauses, and the space given to all minor characters.Infact protagonist cum Antagonist of the movie is built on minor blocks of different Hues&shades.
Unfortunately ,Tamil audiences used to bonding with the character who is our Emotional Proxy or substituting our wishes on the characters and the characters are usually the collection of traits necessary for the nerrative and their decision,choices ,Traits cause something which shapes the flow or outcome of nerrative soaked in exaggerated melodrama.
Nan Avanillai broke this jinx and not far from reality as it is based on a true story of a deviant individual .It can even be classified under Classic Film Noir which is strange,Erotic and Ambivalent with Black Humour.The deconstruction of the nerrative with elusive phenomena lies in its non-chronological progression but coherent in logic and aesthetic consistency.
The central dynamic of the story uses coincidences to worsen the characters' plight. The inherent Form&contents offer Anticipation and surprises and Finger pointing devices are implanted intelligently in the Film.The pacing out of the dramatic elements with confrontation and squaring off between characters of conflicting interests with intelligent sub-plots and Minor characters etched properly with different spaces.The Film slowly gain in knowledge search,investigate with time indication intensify the expectation with unique tone,Style and Atmosphere.
The screen play has plenty to offer in reversals,surprises and revelations,A problem to solve,New Experiences,Clearly defining the premise, starting with a situation ,Win attention by involving the Audience thru minor characters (Saleemaa,Spectator achacho chitra). But Audience are primarily engrossed and enthralled by the main character .The cognitive process happens thru constant testing and revising previous conclusions.
One anticipates,curious&Surprised,feels cheated at times , amazed with the deviant theme from normal life.Proper emphasis given at times with strong painful emotions,empathy with underdogs enhances audience kinesthetic response.
The story gains momentum with new and constant sensation with scene constructions thru odds and obstacles enhanced with dramatic tension, the process of problem,obstacle,choice,pressure ,tension,challenge,imbalance,conflicting values,clash,disharmony,discord with dramatic progression in crises,tension. The sequence of events one leads to another escalate in intensity and plant many questions with appropriate anger at social issues.
It arranges cues with something introduced new always ,withholding something,to intrigue and tantalise the audience.
What else ,as a sensation, is required in a Film?Kudos to K.Balachandar.
---To be Continued.
Last edited by Gopal.s; 19th November 2013 at 05:57 PM.
-
19th November 2013, 08:04 AM
#75
Junior Member
Junior Hubber

Originally Posted by
Gopal,S.
வெறியர்கள் அற்று,நிம்மதியாக தனியாக இயங்குவதில் ஒரு திருப்திதான்
இன்னாபா சொல்ல வர்ற.யார வெறியணுவன்னு சொல்ற.பிரியல கண்ணு

Originally Posted by
Gopal,S.
அவரின் 9 சொச்ச வேடங்களும் தனித்தனியாக நில்லாமல் கதையுடன் பிணைந்து பயணிக்கும்.
அப்ப வேற ரெண்டு ஆளுக 9 வேஷம் கட்டிகினாங்களே நவத்தை நஹீன்னும் தசத்த சோதான்னும் சொல்றியா

Originally Posted by
Gopal,S.
ஒரு நல்ல சினிமாவிற்கு ,கதாநாயகன் மிக சிறப்பான நடிகனாய் இருக்க அவசியம் இல்லை
அப்ப நாயகனுக்கு கமலு தேவைய்ல்லன்னு ஆயிபூடுச்சே
-
19th November 2013, 09:05 AM
#76
Junior Member
Junior Hubber
எனக்கு செமினி படத்துலேயே புட்ச்சது கொறத்தி மவன்தான்.அசலு கொறவன் கெட்டான்.
-
20th November 2013, 09:16 AM
#77
Junior Member
Newbie Hubber
நான் அவனில்லை.
பாலச்சந்தரின் சாதனையை ஆங்கிலத்தில் அலசியாகி விட்டது.l இன்னும் அலச போகிறோம். அதற்கு முன் ஜெமினியை பார்த்து விடுவோம்.
உண்மையாக சொன்னால் ஜெமினி ஒரு நடிகர் என்ற ரீதியில் மட்டும் வைத்து பார்க்க பட்டால்(தமிழகத்தில் உயரமான நடிப்பின் இமயம் இருந்ததால் ,நடிகர்திலகத்தை உலகத்தின் உச்சிக்கு விட்டு விட்டே மற்றவரை எடை போட இயலும்),அன்றைய தமிழகத்தில் இருந்த ஏனைய எல்லோரையும் விட உயர்ந்து,கிட்டத்தட்ட ஹிந்தி நடிகர்களின் தரத்தில் இருந்தவர்.
இத்தனைக்கும் கைகளை உபயோகிக்க தெரியாது,multi tasking acting ability ,coordination அறவே கிடையாது. ஸ்டைல்,ஈர்ப்புள்ள signature actions ஊஹூம். நடனம்,action ஹே ஹே ஹே. கொஞ்சம் பெண்மை தன்மையுள்ள soft நடிகர்.
ஆனால்,பல அற்புதமான தனி தன்மை கொண்டு இயங்கிய இயக்குனர்களின், டார்லிங்.
கீழ்கண்ட விஷயங்களை காரணமாக கூறலாம்.
1)அவரிடம் அதிக பிரசங்கி தனம்,பார் பார் நான் நடிக்கிறேன் என்று உரத்து கூவும் கேமரா பிரக்ஞை கிடையாது.பாத்திரத்தோடு உறுத்தலில்லாமல் ஒன்றுவார்.
2)ஒன்றாம் கிளாஸ் தாண்டாத நமது பாமர ஹீரோக்கள், கிராம படங்களில் "நடிக்க"முயன்ற போது,பட்டதாரி professor கிராம பாத்திரங்களில் ஒன்றினார்.
3)காமெடி,செண்டிமெண்ட்,tragedy ,கிராமத்தான்,நடுத்தரன்,பணக்காரர் எல்லா பாத்திரங்களுக்கும் பாந்தம்.(Action ,ஸ்டைல் விட்டு விடலாம்)
4)நாடக பயிற்சி இல்லாதது blessing in disguise . அதனால் சினிமாவிற்கு வேண்டிய சினிமா நடிப்பை மட்டுமே தந்தார்.
5)Acting is not about Acting and reacting but behaving as the character என்பதற்கு அற்புத உதாரணம்.
நான் அவனில்லையில் அவர் நடிப்பு விசேஷமாய் அலச பட வேண்டியது. வெளி பார்வைக்கு நகைச்சுவையாய் தோன்றும் ஆழ்ந்த கதையமைப்பில் அவர் பங்கு மிக மிக delicate ஆனது. exemplarily executed &Near perfect .
பல வேடங்கள் புனையும் ஜெமினியின்,படம் முழுக்க பிரதான இணைப்பாக வரும் வேடம் நெய்சு வேலை செய்யும் நாஞ்சில் நம்பி.இந்த வேடத்திலேயே பிடி படுவதாலும்,கோர்ட் விசாரணை முழுக்க இந்த பாத்திரமே கையாளுவதாலும் ,இதுவே முக்கிய பாத்திரமாகும்.
இது கொஞ்சம் சிக்கலான பாத்திரம்.
நகைச்சுவையும் காட்ட வேண்டும்,seriousness இழக்க படகூடாது. நாஞ்சில் slang பேசும் பாமரனாக காட்ட வேண்டும்.தன் வழக்கில் தானே வக்கீலாகவும் வாதாட வேண்டும்.சாட்சிகளை, குறுக்கு விசாரணை செய்யவும் வேண்டும்,அதே நேரம் மித மிஞ்சிய புத்திசாலித்தனம் வெளியாகவும் கூடாது.சாட்சிகளின் பலவீனத்தை வைத்து மடக்க வேண்டும்.அதே நேரம் தெரிந்ததாக காட்டி கொள்ள கூடாது. குற்ற சாட்டுகளால் பாதிக்க பட வேண்டும்.அதே சமயம் அந்த குற்றங்கள் தன்னை சேராதவை என்று குறிப்புணர்த்த வேண்டும்.இந்த கத்தி மேல் நடக்கும் பாத்திரத்தில் ஜெமினி தவிர வேறொரு நடிகனை கற்பனை கூட செய்ய முடியாது.(என் நெஞ்சில் நிறைந்த இதய தெய்வத்தையும் சேர்த்தே).வெகுளி தனத்தில்,அவ்வப்போது எட்டி பார்க்கும் குரூர புத்திசாலித்தனத்தை அவர் உணர்த்தும் பாங்கு.ஆனாலும் என்னதான் perverted crook என்றாலும் violet unconditional love காட்டும் போது(பாவம் ,இவளுடன் செட்டில் ஆகவே விழைவார்),கண்களின் ஓரத்தின் துளிர்க்கும் துளியே துளி நீர்,அவளை குறுக்கு விசாரணை செய்யாமல் காட்டும் மெல்லிய பரிவு. காதல் மன்னன் ஜால வித்தை காட்டுவார்.
சாரியாக ஒரு வினோத நடை,(சவடால் வைத்தியை ஒத்த பாத்திரம்),வித்தியாச பேச்சு,அக்பர் அலியாக உருதுவில் கிளப்புவது,முக்கியமாக ஸ்டேஷன் மாஸ்டர் இடம் சலீமா தான்தான் என்று விளக்கும் அடாவடி. சித்தப்பா சகாதேவ சாஸ்திரி யாக (வினோத பொடி டப்பா)பேராசை கொண்ட வேத வித்துவாக,லக்ஷ்மண சர்மா,சத்ருகன மேனன் என்று கன்னட ,மலையாள slang பேசி மாட்டி கொள்ளும் கட்டத்தில் மாறி மாறி சமாளிப்பு, ஹரிஹர தாஸ் சுவாமிகளாக அண்ணாவுடன்,நேருவுடன்,மகாத்மாவுடன் கற்பனை உரையாடல்,கைவீக்கம்,கால்வீக்கத்திற்கேல்லாம் முற்பிறவி ரீல் ,ஜாக் சாலமன் என்ற தும்மல் பார்டி ஆங்கிலோ இந்தியராக படத்தையே இமாலய உயரத்திற்கு தூக்கி விடுவார்.ஒரு black humour ,situational humour இழையோடும் காட்சிகளில் எந்த முக சேட்டையும் இல்லாது நம்மை நகைச்சுவை புன்னகை பூக்க வைப்பார்.
இந்திய அரசின் பாரபட்சம் சிவாஜியை பல வருடங்கள் பாதித்தது.ஆனால் ஜெமினிக்கு ஒரே வாய்ப்பான இந்த படத்திற்கு கிடைக்காதது எனக்கு வருத்தமே.உலக தரத்தில் அமைந்த இயல்பான அற்புத method Acting .
---To be continued .
Last edited by Gopal.s; 20th November 2013 at 01:08 PM.
-
23rd November 2013, 01:32 PM
#78
Senior Member
Seasoned Hubber
Great writing Mr. Gopal. A very nice film which was different in many aspects for that time. Wonderfully performed by GG
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
24th November 2013, 07:22 AM
#79
Junior Member
Newbie Hubber
நான் அவனில்லை.
நான் அவனில்லை ஒரு மனோரஞ்சித மலர். முழு யானையை பார்க்க வழியில்லாத குருடர்களான தமிழர்கள், அதன் ஏதாவது ஒரு பாகத்தை தொட்டு உணர்ந்திருந்தாலே போதும்.இந்த படம் மிக உயரங்களை அடைந்திருக்கும்.
இந்த படத்தை ஒரு ஜாலியான பொழுது போக்கு படமாக பார்க்கலாம். ஈர்ப்பான காட்சிகள்,நிறைய heroine கள். சிறப்பான பாடல்கள்.
மிக சுவையான நகைச்சுவை படமாக பார்க்கலாம்.
சமுதாய கருத்துக்கள் விரும்புவோர்க்கும் நிறைய.(இந்த மாதிரி ஜென்மங்கள் இன்றும் உண்டு.)படத்தில் தீனி உண்டு.
புதுமை விரும்பிகளுக்கு buffet டின்னெர்.
ஆனால் ஒன்று. ஒரு நொடி கூட கண்ணையோ,காதையோ,மூளையையோ மூடி casual ஆக பார்க்க முடியாமல்,நம் நேரத்தை இந்த படம் மட்டுமே தக்க வைத்து விடும்.
ஒரு ஸ்டாம்ப் பின் பக்கம் எழுதி விட வேண்டிய oneliner இவ்வளவு சுவையாக நம் கருத்தை கவனத்தை ஈர்த்தது கே.பாலசந்தர் என்ற ஒரு மேதையால்தான்.சம்பவ நகைச்சுவை மற்றோர் ஏமாறும்,மற்றோரை ஏமாற்றும்,கதாநாயகனின் இயல்பு சார்ந்ததே. சாட்சிகளின் குறுக்கு விசாரணையில் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப plasticity கொண்ட நாஞ்சில் நம்பியின் இயல்பான நகைச்சுவை,ராணி போன்ற புத்திசாலியாக்க பட்ட பாத்திரங்களின் திருப்பும் நேர்த்தி,ஜட்ஜ்-மகள் இடையேயான புத்திசாலித்தனம் நிறைந்த,நேர்த்தியான கதையை நகர்த்தும் அன்னியோன்யம்,நாயகனின் ஒரே சாட்சியான தானம்மாள் போன்றோரின் கதையுடன் ஒட்டிய crude (கோவை சரளா type )நகைச்சுவை,கடைசியில் முத்தாய்ப்பாக நாஞ்சில் நம்பியின் பார்வை வீச்சில் அச்சச்சோ படும் அச்சச்சோ என்று படம் முழுதும் தெறிக்கும் நகைச்சுவை பொறிகள், எண்ணி மாளாது.
அதையெல்லாம் மீறிய பாலச்சந்தரின் லாஜிக் மீறாத தற்செயல் சம்பவங்களின் சுவையான இணைப்பு கோர்ப்பு,ஒரு சம்பவம் இன்னொன்றுக்கு துணையாகி வேறொரு அபத்தத்தில் முடியும் சுவையான linked situations ,ஒவ்வொரு சம்பவத்துக்கும் சுவையான leads என்று இக்கால திரை கதை,வசனகர்த்தாக்கள்,இயக்குனர்கள் படிக்க வேண்டிய பாடம்.
இன்றைய டொராண்டினோ,நோலன் போன்று பரிமளித்திருக்க கூடிய உலக இயக்குனர் தமிழில் பிறந்து தொலைத்தது....(நடிகர்திலகத்துக்கு நேர்ந்த அதே விபத்து.தமிழனாய் பிறந்து தொலைத்த தமிழின் இரு பால்கேக்கள்)
இந்த படத்தின் சுவையான காட்சிகளை விஸ்தாரமாக விவரிக்க ஆசையிருந்தாலும்,இது கண்டு,கேட்டு,களித்து,சுவைக்க வேண்டிய, நான் மிக மிக strong ஆக prescribe செய்யும் ஒரு படம்.
மெல்லிசை மன்னரின் நான் சின்னஞ்சிறு பிள்ளை ,மந்தார மலரே,ராதா காதல் வராதா அந்த கால popular numbers
எனக்கு பிடித்த பாலுவின் மற்றொரு பாணி.சினிமாடிக் லைசென்ஸ் உபயோகித்து அவர் கொடுக்கும் எதிர்பாரா அதிர்ச்சிகள்.புன்னகையில் கற்பழிப்பு காட்சிக்கு பாடல் உபயோகிப்பு.இதில் பக்தர்கள் அனைவரும் ராணியை பண்ணும் மாஸ் rape .
மற்றபடி அனந்து,சர்மா,கிட்டு,லோகநாதன்,என்று இயக்குனர் சிகரத்தின் வழக்க கூட்டணி.
பாலசந்தர் படங்களில் என் 10விருப்பங்கள்.
1)பாமா விஜயம்.
2)மன்மத லீலை.
3)நான் அவனில்லை.
4)அவள் ஒரு தொடர்கதை.
5)அரங்கேற்றம்.
6)இரு கோடுகள்.
7)அவர்கள்.
8)தண்ணீர் தண்ணீர்.
9)அபூர்வ ராகங்கள்.
10)நூற்றுக்கு நூறு.
ஜெமினியின் பிடித்த 10 படங்கள்.
1)நான் அவனில்லை.
2)மிஸ்ஸியம்மா.
3)வஞ்சி கோட்டை வாலிபன்.
4)காத்திருந்த கண்கள்.
5)ஹல்லோ ,மிஸ்டர் ஜமிந்தார்.
6)இரு கோடுகள்.
7)கற்பகம்.
8)ராமு.
9)சுமைதாங்கி.
10)காவிய தலைவி.
(முற்றும்)
Last edited by Gopal.s; 24th November 2013 at 10:35 AM.
-
24th November 2013, 12:56 PM
#80

Originally Posted by
Gopal,S.
நான் அவனில்லை.
நான் அவனில்லை ஒரு மனோரஞ்சித மலர். முழு யானையை பார்க்க வழியில்லாத குருடர்களான தமிழர்கள், அதன் ஏதாவது ஒரு பாகத்தை தொட்டு உணர்ந்திருந்தாலே போதும்.இந்த படம் மிக உயரங்களை அடைந்திருக்கும்.
andha vayeththrichalai yen sir ketkireenga. Indha padaththai paarkkaamal, oru nalla paambu oru ponnai kaapaaththura Vellikkizhamai Viradham padaththula poi vizhundhavanunga indha thamizhnaattu ragigar mandhai.

Originally Posted by
Gopal,S.
பாலசந்தர் படங்களில் என் 10விருப்பங்கள்.
1)பாமா விஜயம்.
2)மன்மத லீலை.
3)நான் அவனில்லை.
4)அவள் ஒரு தொடர்கதை.
5)அரங்கேற்றம்.
6)இரு கோடுகள்.
7)அவர்கள்.
8)தண்ணீர் தண்ணீர்.
9)அபூர்வ ராகங்கள்.
10)நூற்றுக்கு நூறு.
ஜெமினியின் பிடித்த 10 படங்கள்.
1)நான் அவனில்லை.
2)மிஸ்ஸியம்மா.
3)வஞ்சி கோட்டை வாலிபன்.
4)காத்திருந்த கண்கள்.
5)ஹல்லோ ,மிஸ்டர் ஜமிந்தார்.
6)இரு கோடுகள்.
7)கற்பகம்.
8)ராமு.
9)சுமைதாங்கி.
10)காவிய தலைவி.
more or less ennudaiya taste thaan ungalukkum. But ennudaiya rendu listlaiyum 'Punnagai' undu.
nalla velai KB listla Sindhu Bairaviyai serththiduveengalonnu payandhen. illai, nimmadhi.
KB yin ulagamagaa aruvai SB.
'Naan Avanillai' alasal attakaasam.
Bookmarks