எல்லோருக்கும் காலை வணக்கம்
இந்த நாள் இனிய நாளாக தொடங்கி இனிதே முடிய எல்லாம் வல்ல அந்த "அன்னை விநாயக பெருமானை" வேண்டி ஒரு சிறிய தகவல்
நேற்று இரவு சூரிய காந்தி திரை படம் இரவு சன் லைப் தொலை கட்சியில்
முத்துராமன் மற்றும் ஜெயா ஜோடி
நேற்று தான் அதை பற்றி வாசு சார் எழுதி இருந்தார்
எக்ஸ்செல்லன்ட் அண்டர் ப்ளே by நவரச திலகம்
இறுதி காட்சியில் தன் மேல் உள்ள தவறை ஒப்பு கொள்ளும் போது மிக அருமையான பாடி language . அதே போல் ஜெயாவிடம் ஸ்ரீ ராம ஜெயம் எழுத சொல்லும் போது இருக்கும் பணிவு இப்போது எல்லாம் இதே போல் நடிக்க யாராவது இருக்கிறர்களா
கண்ணம்மா பட பதிவுக்கு அழகிய பின்னூட்டம் இட்டது மட்டுமல்லாது, கண்ணம்மா முழுப் படத்தின் வீடியோவையும் தந்து அசத்தி விட்டீர்கள். மிக மிக நன்றி. இதுவரை பார்த்திராதவர்கள் (நிச்சயம் நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள்) பார்த்து இன்புறச் செய்து விட்டீர்கள்.
இப்பதிவுக்கு தங்கள் பின்னூட்டமும் தாங்கள் பார்த்த அனுபவமும் நிச்சயம் வருமென்று எதிர்பார்த்தேன். ஆனால் முழுப் படத்தின் வீடியோவையும் தந்து அசத்துவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
பெரிய மனிதர் என்றைக்கும் பெரிய மனிதர்தான் என்று நிரூபித்து விட்டீர்கள்.
மூன்று வருடங்களுக்கு மேலாகத் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனைக் கண்ணம்மாவைக் காட்டி எழுப்பி விட்டீர்கள். நவரசத் திலகம் திரி மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டது தங்களால்.
நான் இப்படத்தை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. அவ்வப்போது தொலைக்காட்சியில் சில காட்சிகள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
ஆனால் பாடல்கள் அனைத்தையும் ஒலி,ஒளி வடிவில் வைத்திருக்கிறேன்.
எங்கெங்கும் உன் வண்ணம், தென்ன மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம், செல்வங்கள் இங்கே, செல்வர்கள் இங்கே, அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு என்று மனதிற்கு இதமான பாடல்கள்.
'மனதை மயக்கும் மதுர கானங்கள்' திரியில் இப்படத்தின் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் தனியாக அலசலாம்.
தங்கள் பதிவைப் பார்த்தவுடன் ஒருமணி நேரம் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்கினேன். இதிலிருந்தே தங்கள் பதவின் சிறப்பை உணரலாம்.
அருமையான ஒரு முழு கவரேஜ் ஒரு படத்தைப் பற்றித் தர தங்களாலும், முரளி சாராலும் மட்டுமே முடியும்.
அதுவும் ஜனரஞ்சகமான தங்கள் எழுத்துக்களுக்கு எக்காலமும் நான் அடிமை.
நவரச திலகம் என்ற பட்டம் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு ,நவராத்திரி படம் வந்த போது ,ஒரு பிரபல அரசியல் தலைவரால் வழங்க பட்டது.முத்துராமனுக்கு அந்த பட்டம் ,அவரது குடும்ப நண்பரால் பிரஸ்தாபிக்க பட்ட போது ஒருவர் இதை சுட்டி காட்ட ,முத்துராமன் ,நடிகர்திலகத்துடன் கலந்து பேசியுள்ளார்.உங்களுக்கு தந்த பட்டமாச்சே என்று.நடிகர்த்திலகமோ,சிரித்து கொண்டே,ஆமா,நாளுக்கு ஒரு பட்டம் கொடுப்பாங்க,நாமெல்லாம் அதை உபயோக படுத்தவே இல்லையே,நீ போட்டுக்கப்பா என்றதும் ,முத்துராமன் அதை போட்டு கொண்டதாக கேள்வி.
ஆனால் ,அவன்தான் மனிதனுக்கு பிறகு நன்றி கேட்டு போனார் முத்துராமன்.பிறகு தனக்கு கே.ஆர்.விஜயா தயவில் கிடைத்த புண்ணியத்தை 1976 இல் இழந்து, மார்கெட் இல்லாமல் தவித்தார்.
ஆனால் ,அவன்தான் மனிதனுக்கு பிறகு நன்றி கேட்டு போனார் முத்துராமன்.பிறகு தனக்கு கே.ஆர்.விஜயா தயவில் கிடைத்த புண்ணியத்தை 1976 இல் இழந்து, மார்கெட் இல்லாமல் தவித்தார்.
டியர் கார்த்திக் சார்
உங்களின் கண்ணம்மா படித்தவுடன் நினைவிற்கு வந்தது "அமுதம் pictures " சொந்தம் திரைப்படம் தான் A .C T இன் direction
விச்சுவின் ஆரம்ப வரிகள் உடன் வரும் "நல்ல தான் யோசிகீரீங்க நமக்கு என்ன குறைஞ்சு போச்சு "
வாட் எ lovely family டிராமா முத்துராமன் விஜயா prameela pair
Bookmarks