-
12th June 2014, 09:17 PM
#141
Senior Member
Senior Hubber
oh மிக்க மகிழ்ச்சி கிருஷ்ணா சார்..இப்போதும் பேசுவாராயிருக்கும்..
எந்த இடம்..
ஆயிரம் ஜென்மங்கள் விஜி-லதா டூயட்டா இல்லை விஜி-பத்துவா..

Originally Posted by
gkrishna
டியர் சின்ன கண்ணன் சார்
நீங்கள் muscat இல் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி
என்னுடைய உடன் பிறந்த தம்பி ஒருவரும் அங்கு தான் உள்ளார்
செம knowledge on சினி industry .
ஜகன் மோகினி ஜெயமாலினி பற்றி பேச சொன்னால் இரவு முழுவதும் பேசுவர் . நான் சொல்வது 1978-79 கால கட்டத்தில்.
இப்போது எப்படியோ தெரியவில்லை.
1000 ஜன்மங்கள் திரைபடத்தில்
ஜெயச்சந்திரன் வாணி கம்போவில் "கண்ணன் முகம் காண காத்து இருந்தாள் ஒரு மாது மன்னன் வந்த பின்னே தன நினவு என்பது ஏது"
விசுவின் தபேல பேசும்
-
12th June 2014 09:17 PM
# ADS
Circuit advertisement
-
13th June 2014, 03:45 AM
#142
Junior Member
Newbie Hubber
அடடா,ராக்ஷசியின் நான் ரோமாபுரி ராணி,புது ரோஜா மலர் மேனி....
-
13th June 2014, 07:01 AM
#143
Senior Member
Diamond Hubber
-
13th June 2014, 07:08 AM
#144
Senior Member
Diamond Hubber
-
13th June 2014, 07:34 AM
#145
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (2)

'கௌரி கல்யாணம்' படத்தில் வரும்"வரணும் வரணும் மகராணி" பாடல்.
11.11.1966- இல் வெளி வந்த சரவணா கம்பைன்ஸ் 'கௌரி கல்யாணம்' திரைப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் பாடுவதாக வரும் "வரணும் வரணும் மகராணி" என்ற அதியற்புத உற்சாகமான டூயட் பாடல். T.M.S அவர்களின் கம்பீரமான குரலும், 'கண்ணியப் பாடகி' பி.சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலும் இந்தப் பாடலை சிகரத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. 'கவிஞர்' கண்ணதாசனின் கல்கண்டு வரிகள் இப்பாடலுக்கு மேலும் சுவையூட்டுகின்றன. இசை எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள். இனிமைக்குக் கேக்கணுமா....கே.சங்கர் அவர்கள் இயக்கிய இப்படத்தில் ஜெய்சங்கர்,ஷீலா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். ரவியும், ஜெய்யும் சேர்ந்து நடித்த படங்களில் இதுவும் ஒன்று.
இனி பாடல்.
கணீரென்று உற்சாகத் துள்ளலாய் ஆரம்பிக்கும் பல்லவி.
"வரணும் வரணும் மகராணி...
வஞ்சியர் சங்கமம் இதே இடம்...
சரணம் சரணம்...இந்த நேரம்...
சண்டை முடிந்தது சமாதானம்"...
(இந்தப்பாடல் சென்சாருக்கு செல்வதற்கு முன் "வரணும் வரணும் மகராணி...வஞ்சியர் சங்கமம் இதே இடம்.."சரணம் சரணம் சந்நிதானம்... சண்டை முடிந்தது சமாதானம்" என்ற பல்லவியோடு டி..எம்.எஸ் குரலில் தொடங்கி சுசீலாவின் குரலில் முடியும். சென்சாருக்குப் பிறகு "சரணம் சரணம் சந்நிதானம்" என்ற வார்த்தைகள் "சரணம் சரணம் இந்த நேரம்" என்று மாற்றப்பட்டது).
இப்பாடலின் சரணத்திற்கும், பல்லவிக்கும் இடையில்
"தந்தன தந்தன தன்ன... ஹோஹோ...பம்பர பம்பர பப்ப "... ஹோஹோ...
என்ற டி.எம்.எஸ்ஸின் ஆனந்த வெள்ளம் பொங்கும் குரலும் பின் தொடரும் "ஹோஹோ"..என்ற சுசீலாவின் இனிமை குரலும் காலம் முழுதும் நம்மை கட்டிப் போட வைக்கும் சக்தி படைத்தது.
சரணத்தில் வரும்
"பள்ளியில் கோபம் உண்டானது...
பருவத்தினால் அது பெண்ணானது...
கல்லான நெஞ்சம் கனியானது...
கைகளில் ஊற்றிய தேனானது...
தேனானது...
தேனானது...
தேனானது"...
வரிகள் டி..எம்.எஸ் குரலில் காதுகளில் தேன் பாய்ச்ச,
தொடர்ந்து சுசீலாவின் குயில் குரலில் ஒலிக்கும்
"அஞ்சாதது...பெண் என்பது...
ஆண்மையின் முன்னே என்னானது...
பொன்னானது... பூவானது...
போதையில் ஆடும் கண்ணானது...
கண்ணானது...
கண்ணானது...
கண்ணானது"...(வரணும் வரணும்)
என்ற வரிகள் உண்மையிலேயே இசைபோதையை நமக்கு உண்டாக்கி விடுவது நிஜம்.
அதே போல இரண்டாவது சரணம்.
"விழி ஒரு பக்கம் பந்தாடுதே...
இடை ஒரு பக்கம் தள்ளாடுதே...
நடையோடு வாழை தண்டானதே...
நடனம் இதில் தான் உண்டானதே....
உண்டானதே...
உண்டானதே...
உண்டானதே"
என்று ஆண்குரல் முடிக்க...
ஆண்குரல் முடித்த அதே "உண்டானதே"என்ற வார்த்தையிலேயே பெண்குரல் அடுத்த வரியைத் தொடங்குவது அற்புதம்.
"உண்டானதே...
கொண்டாடுதே...
ஓடிய கால்கள் மன்றாடுதே...
"உண்டானதே...
கொண்டாடுதே...
ஓடிய கால்கள் மன்றாடுதே...
(இரண்டாவது முறை வரும் இந்த வரியில் "கொண்டாடுதே" என்ற வார்த்தையை முதல் வரியிலிருந்து மிக வித்தியாசப்படுத்தி மிக அழகாக உச்சரித்து பாடியிருப்பார் சுசீலா).
எல்லாம் இங்கே நீ தந்ததோ...
இதுதான் சொர்க்கம் நான் கண்டதே...
நான் கண்டதே...
நான் கண்டதே...
நான் கண்டதே"
(இந்தப் பாடல் தான் சொர்க்கம் நான் கண்டதே...இது என்னுடைய வரிகள்)
(வரணும் வரணும்)
எனச் சரணம் முடிந்து மறுபடி பல்லவி தொடங்கி பாடல் முடிவடைய, ஏன்தான் பாடல் முடிந்ததோ என்று நினைக்கவைத்து மறுபடி மறுபடி கேட்கத் தூண்டும் பாடலாகி விட்டது இந்தப் பாடல்.
டிரம்பெட்டும், ஷெனாயும் இழையும் இந்தப் பாடல் காலத்திற்கும் மறக்க முடியாத பாடல். மெல்லிசை மன்னர்களின் அற்புதங்களில் ஒன்று இந்தப்பாடல் என்று கூடச் சொல்லலாம்.
இந்தப் பாடலில் ரவி மிக அழகாகக் காட்சி அளிப்பதோடு, டி.எம்.எஸ் குரல் அதியற்புதமாய் தனக்குப் பொருந்த, அழகான நடன நெளிவுகளை class-ஆக செய்திருப்பார். ஜெயலலிதாவும் ரவிக்கு ஈடு கொடுத்திருப்பார். அழகான அவுட்டோரில் பார்க்கில் படமாக்கப் பட்டிருக்கும் விதமும் ரம்மியமாக இருக்கும்.
அந்த அருமையான பாடலை இப்போது கண்டு களிக்கலாம்.
Last edited by vasudevan31355; 16th June 2014 at 08:34 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
13th June 2014, 07:35 AM
#146
Senior Member
Seasoned Hubber
ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் வித்தியாசமான இசையமைப்பில் இப்பாடலைப் பற்றியும் சொல்ல வேண்டும். மந்திரி குமாரியில் வாராய் பாடலை நினைவூட்டும் காட்சியமைப்பு. ஆவி வந்து விஜயகுமாரை சாகடிக்க அழைத்துச் செல்லும் சூழலில் பாடல். வரிகள் அப்படியே பிரதிபலிக்கும். எஸ்.ஜானகியின் குரலில் இப்பாடல் உயிர் பெற்று எழந்து வருவது பாராட்டிற்குரியது.
இப்பாடலை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் உங்களையெல்லாம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th June 2014, 08:19 AM
#147
Senior Member
Diamond Hubber
'யக்ஷ கானம்' மூலம் கொண்டு எங்களை லதா மூலம் அழைத்த ராகவேந்திரன் சாருக்கு என் நன்றி!

ஷீலாவின் முகத்தையொத்த லதா
நல்ல செலெக்ஷன்
-
13th June 2014, 09:42 AM
#148
Senior Member
Senior Hubber
வாசு சார்.. வகைவகையாய் இட்டுவிட்ட வஞ்சிலதா தோன்றும்
புகைப்படங்கள் கொள்ளை அழகு..
நன்றி..
கெளரி கல்யாணம் பாட்டும்.. இனி தான் பார்க்க வேண்டும்..
ராகவேந்தர்.. நைஸாக நாங்கள் சொல்லாத அழைக்கின்றேன் பாட்டைப் போட்டு அழைத்துச் சென்று விட்டீர்கள் அந்தக் காலத்திற்கு.. நன்றி.. லதாவின் சிரிப்பைப் போலவே அந்தக் கூந்தலில் இருக்கும் பூவும் சிரிப்பதாய் பிரமை.. நன்றி அகெய்ன்..
யட்ச கானம்..அதுவும் பார்த்திருக்கிறேன்..என்ன தான் இருந்தாலும் கறுப்பு வெள்ளை என்பதால் கொஞ்சம் கம்மி தான்.. அதுவும் ஆ.ஜெயின் சுவாரஸ்யம் கூட்ட வைத்ததில் வித்யாச ரஜினிக்கும் பங்கு உண்டு..
-
13th June 2014, 10:00 AM
#149
yaksha ganam
வேந்தர் சார்
யக்ஷகானம் ஷீலாவின் மாஸ்டர் பீஸ்
சொன்னது போல் ஷீலா மற்றும் லதாவின் face resemblance கவனிக்கப்பட வேண்டிய ஒன்று
1000 ஜன்மங்கள் direction நம்ம மதி ஒளி சண்முகம் சார் தானே
NVR pictures
வாசு சார்
லதாவின் various snap shots சான்சே இல்லை
லாலா கடை லட்டு
ck சார் "கண்ணன் முகம் காண காத்து இருந்தாள் ஒரு மாது" விஜி பத்து டூயட்
லதாவோட டூயட் பாட எல்லோருமே பயந்த நேரம் அது
பெரிய இடத்து விஷயம்
-
13th June 2014, 10:05 AM
#150
சங்கர் சலீம் சைமன் படத்தில் கோவை சௌந்தரராஜன் குரலில்
"கோபுரத்திலே இரண்டு பச்சை கிளிகள் " ரஜினி லதா டூயட்
அந்த பாடலில் ஒரு வரி வரும்
"அவனுக்கும் ஆசை வந்து அவளுக்கும் காதல் வந்தால் அரசாங்கம் கூட அதை தடுக்க் முடியாது " ரஜினி க்ளோஸ் up சாட் இல் ஒரு மேட்டில் இருந்து பாடுவார்
theatre இல் விசில் பறக்கும்
செத்தது 31 (அப்போ நாங்கள் எல்லாம் தரை டிக்கெட் தான்.)
Bookmarks