Page 37 of 400 FirstFirst ... 2735363738394787137 ... LastLast
Results 361 to 370 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #361
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாருங்கள் பார்த்தசாரதி சார்.

    மொட்டை என்று கிருஷ்ணாஜி இளையராஜாவை உரிமையில் செல்லமாகச் சொல்லுகிறார்.

    நீங்கள் சொன்ன அற்புத 'ஓடம்...கடலோடும்...அது சொல்லும் பொருளென்ன'? பாடலைப் பற்றி என்னவென்று புகழ்வது?

    (லட்சுமி அசத்தலோ அசத்தல். நாணத்தை அந்த முகம் எப்படி பிரதிபலிக்கிறது! சிவக்குமாரோ பாவம். இதற்கெல்லாம் அவர் அவ்வளவு சரிப்பட்டு வர மாட்டார்)

    இரவு எபெக்ட்டில் கடற்கரையில், கடல் அலையில் காலை நனைத்தும் நனைக்காமலும்
    காதல் ஜோடிகள் கைகோர்த்தபடி நடக்கும் யதார்த்தம்.

    நடுவில் வரும் விசில் சப்தத்தோடு இணைந்து குழையும் சுசீலாவின் சுகமான ஹம்மிங்.

    சொர்க்கத்தை 'இந்தா... அனுபவிடா' என்று நமக்கு எடுத்துத் தரும் பாடல்.

    இந்த மயக்கும் மாலை வேளையில் அப்படியே பாப்கார்ன் கொறித்துக் கொண்டு இப்பாடலைப் பார்ப்போம்.

    Last edited by vasudevan31355; 16th June 2014 at 06:25 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #362
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by parthasarathy View Post
    வாசு சார்,

    எனக்கும், முரளி மற்றும் கோபால் மற்றும் உங்கள் எல்லோருடைய ரசிப்புத்தன்மையும் பெரிய அளவில் ஒத்துப் போகின்றன - இசையையும் சேர்த்தே!

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி
    நன்றி பார்த்தசாரதி சார். நிரம்ப சந்தோஷமாய் இருக்கிறது.

    அந்த சந்தோஷத்தை எனக்குப் பிடித்த பாடல் வடிவிலேயே தருகிறேன். ராஜாவின் ராஜாங்கம் இப்பாடலில் கொடி நாட்டும். நிச்சயம் தங்களுக்கும் பிடிக்கும்.

    நடிகர் திலகமே தெய்வம்

  4. #363
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நன்றி பார்த்தசாரதி சார். நிரம்ப சந்தோஷமாய் இருக்கிறது.

    அந்த சந்தோஷத்தை எனக்குப் பிடித்த பாடல் வடிவிலேயே தருகிறேன். ராஜாவின் ராஜாங்கம் இப்பாடலில் கொடி நாட்டும். நிச்சயம் தங்களுக்கும் பிடிக்கும்.

    வாசு சார்,

    எனக்கும் பிடித்த பாடல்.

    இந்த சிவகுமார் கூடிய மட்டும் குள்ள நடிகைகளோடு தான் நடிப்பார் - சுமித்ரா, ஜெயசித்ரா, இப்படி. எப்போதாவது அம்பிகா, ராதாவோடு நடிக்கும்போது - அவர் என்றும் இளமையாக இருந்தவர் அல்லவா - சமாளித்து விடுவார் - டூயட் இல்லாத போது மட்டும் - பாவமாக இருக்கும் பெரிய ஸ்டூல் மீது ஏறிக் கொண்டு (ஹை ஹில் ஷூ தான்!) அவர்கள் ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இலேசாக காலை அடி மேல் மடியாக எடுத்து வைப்பாரே பார்க்கலாம் - குறிப்பாக - நான் பாடும் பாடல் - டூயட்டில் - வள்ளுவர் கோட்டத்தில் எடுத்திருப்பார்கள் - மொசைக் தரை வழுக்கும் என்பதால் - மனிதர் கூழ், மீசை இரண்டுக்கும் ஆசைப்பட்டுத் தவிப்பார் - நம்மையும் தவிக்க (சிரிக்க) விடுவார்.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  5. #364
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    அங்கே தான் நிற்கிறான் தர்மலிங்கம்

    வாசு சார்
    எல்லாம் அவளே (வாசுவே )
    இன்னொரு பாட்டு உண்டே உண்டே என்று இவ்வளுவு நேரம்
    மண்டையை உடைத்து கொண்டு இருந்தேன்
    பிடிச்சிங்க பாருங்க tms வித் ஜானகி
    இதுவும் சிலோன் ரேடியோ உபயம் தான்
    "நல்ல வாழ்வு வந்தது செல்வம் வாரி தந்தது "
    எங்களுக்கும் இந்த திரியினால் வாசுவின் கருணையினால்
    நல்ல வாழ்வு வந்தது

    பார்த்த சாரதி சார்
    சிவா பெருமானை நாராயணனை அன்பு மிகுதியினால் குழந்தையாக நினைத்து கூட பாடுவார்கள் அல்லவே
    அது போலவே இசை ஞானியை மொட்டை என்று செல்லமாக விளிக்கிறேன். இசை ஞானி ரசிகர்கள் மன்னிக்கவும்
    gkrishna

  6. #365
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    கண்மணி ராஜா படம் இலங்கையில் ஓடிக்கொண்டிருந்தபோது, இலங்கை வானொலியில் அந்தப்படத்தின் 'திரை விருந்து' நிகழ்ச்சியில் அப்படத்தை மறைந்த கே.எஸ்.ராஜா வர்ணிக்கும் அழகைக் கேட்க காதுகள் கோடி வேண்டும். உண்மையில் எதையும் ரசனையோடு செய்பவர்கள் அவர்கள்தான். (இத்தனைக்கும் சென்னையில் இலங்கை வானொலி ரொம்ப கஷ்ட்டப்பட்டுத்தான் எடுக்கும். ஆயிரத்தெட்டு குறுக்கீடுகள்).

    குறிப்பாக "காதல் விளையாட கட்டிலிடு கண்ணே, தூய மகனாட தொட்டிலிடு கண்ணே" பாடலுக்கும் "ஓடம் கடலோடும் அது சொல்லும் கதையென்ன" பாடலுக்கும் அவர் கொடுத்த விளக்கங்களும், வர்ணனைகளும் இன்றும் காதுகளில் ரீங்கரிக்கின்றது. அவர்களோடு ஒப்பிடுகையில் சென்னை வானொலி படு தண்டம். அப்போது தொலைக்காட்சி சேனல்களும் கிடையாது. இசை விரும்பிகளுக்கு ஒரே புகலிடம் இலங்கை வானொலி, குறிப்பாக தென் தமிழ் மாவட்டங்களுக்கு.

  7. #366
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    k.s.raja

    Quote Originally Posted by mr_karthik View Post
    கண்மணி ராஜா படம் இலங்கையில் ஓடிக்கொண்டிருந்தபோது, இலங்கை வானொலியில் அந்தப்படத்தின் 'திரை விருந்து' நிகழ்ச்சியில் அப்படத்தை மறைந்த கே.எஸ்.ராஜா வர்ணிக்கும் அழகைக் கேட்க காதுகள் கோடி வேண்டும். உண்மையில் எதையும் ரசனையோடு செய்பவர்கள் அவர்கள்தான். (இத்தனைக்கும் சென்னையில் இலங்கை வானொலி ரொம்ப கஷ்ட்டப்பட்டுத்தான் எடுக்கும். ஆயிரத்தெட்டு குறுக்கீடுகள்).

    குறிப்பாக "காதல் விளையாட கட்டிலிடு கண்ணே, தூய மகனாட தொட்டிலிடு கண்ணே" பாடலுக்கும் "ஓடம் கடலோடும் அது சொல்லும் கதையென்ன" பாடலுக்கும் அவர் கொடுத்த விளக்கங்களும், வர்ணனைகளும் இன்றும் காதுகளில் ரீங்கரிக்கின்றது. அவர்களோடு ஒப்பிடுகையில் சென்னை வானொலி படு தண்டம். அப்போது தொலைக்காட்சி சேனல்களும் கிடையாது. இசை விரும்பிகளுக்கு ஒரே புகலிடம் இலங்கை வானொலி, குறிப்பாக தென் தமிழ் மாவட்டங்களுக்கு.
    டியர் கார்த்திக் சார்
    சிலோன் ரேடியோ வாஸ் வெரி வெரி innovative
    உயிர்கலப்பு என்று ஒரு வார்த்தை அடிகடி சில பெரியவர்கள் கூறுவார்கள்
    அதற்கு உண்மையான எடுத்து காட்டு சிலோன் ரேடியோ
    "எங்கள் தங்க ராஜ 1973" இலங்கையில் ரிலீஸ் ஆன போது அதன்
    திரை விருந்து நிகழ்ச்சியில் கே எஸ் ராஜா அவர்கள் "வீட்டுக்கு வீடு வானொலி பெட்டி அருகில் குழுமி இருக்கும் " என்று ஆரம்பித்து
    இறுதியில் திரைபடத்தில் உள்ள நடிகை மஞ்சுளாவின் ஒரு வசனத்தோடு முடிப்பார்
    "பெண்களை கண்டால் பிடிக்காத மாதிரி நடிக்கறது அப்புறம் பார்த்தல்
    இடிக்கிறது " என்று மஞ்சுளா கூறவும் உடனே ராஜா அவர்கள்
    "அம்மா மஞ்சுலம்மா என்னமா சொன்னிங்க" என்று கூறுவர்
    உடனே திரைபடத்தில் உள்ள "ஒ i am வெரி சாரி ..ராஜா " என்ற மஞ்சுளாவின் வசனத்தை ஒலிபரப்பிவிட்டு ராஜா அவர்கள்
    "என்று கூறி உங்களிடம் இருந்து விடை பெறுவது கே எஸ் ராஜா "
    என்று கூறுவர்
    கார்த்திக் சார் நினவு அலைகளை மீட்டுகீறீர்கள்
    gkrishna

  8. #367
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    தங்களுக்கு ஒரு pm அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #368
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நட பைரவி.

    ஓங்காரத்துடன் முழக்கம் போல அப்படியே positive energy level கூடிய நிறைய பாடல்கள் வந்து கொண்டிருந்த காலம்.டி.எம்.எஸ். கொடி நாட்டி ,கோலோச்சி கொண்டிருந்த வசந்த காலம்.அப்போது ஒரு நடிகர் கை காலை ஒரே மாதிரி அசைத்து (ஆனால் கொஞ்சம் நடன பாங்கு கெடாமல்),cliched என்றாலும் ,விசையுறு பந்தினை போல அந்த முழக்கத்தின் வீறு கெடாமல்,பாமர மக்களின் நாயகனாக high energy உடன் அந்த பாடல்களுக்கு பரிமாணம் கொடுத்து கொண்டிருந்தார்.எனக்கு பிடித்த பாடல்களேயாயினும் எல்லாம் ஒரே பாணியாக தெரியும்.

    பிறகுதான் அதோ அந்த பறவை போல,நான் ஆணையிட்டால், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்று எம்.எஸ்.வீ.,டி.கே.ஆர் இணைவுக்கு தோதாக கை கொடுத்த ராகம் நட பைரவி என்ற மேளகர்த்தா ராகமே என்று புரிந்தது.

    open voice இல் பாடும்போது எழுச்சியையும்,ஹஸ்கி குரலில் பாடும் போது காம கிளர்ச்சியையும் மீட்ட கூடிய படு ஜனரஞ்சக ராகம் இது..இப்படி வீர எழுச்சியுடன் கூடிய நம்பிக்கையையும், erotic காதலின் மலர்ச்சியையும் ஒரு ராகம் கொண்டு வர முடியுமானால் தமிழர்களின் காதல்,மானம்,வீரம் என்ற அடிப்படைக்கு தோதான தமிழர்களின் ராகம்தானே?

    எனக்கு பிடித்த நட பைரவியின் மற்ற பாடல்கள்.

    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் -அன்பே வா.
    ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து- நினைத்ததை முடிப்பவன்.
    நினைக்க தெரிந்த மனமே- ஆனந்த ஜோதி.
    கொடியிலே மல்லிகை பூ - கடலோர கவிதைகள்.
    வெண்ணிலாவின் தேரிலேறி - டூயட்.
    வசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே.
    மடை திறந்து ஆடும் நதியலை நான்- நிழல்கள்.
    புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை.
    ஒ பட்டர் பிளை - மீரா.
    என் இனிய பொன்னிலாவே -மூடுபனி
    கடவுள் அமைத்து வைத்த மேடை -அவள் ஒரு தொடர்கதை.
    ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு -கிராமத்து அத்தியாயம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Likes chinnakkannan liked this post
  11. #369
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் திரியின் ஜாம்பவான்களான வாசு சார், கோபால் சார், கிருஷ்ணாஜி, பார்த்தசாரதி, முரளி என அனைவரும் இங்கு வந்து தூள் கிளப்புவதைப் பார்த்தால் இந்தத் திரி நடிகர் திலகம் திரியின் அடுத்த பாகமாக அறிவித்து விடலாம் போலுள்ளது. என்ன வேகம்.. என்ன ஞானம்... என்ன நினைவு... என்ன எழுத்தாற்றல்... ஆஹா... சபாஷ் சரியான போட்டி...

    இசைக்கு பேதமில்லையே... அனைவரின் திரைப்படங்களும் இடம் பெறவேண்டுமே...

    இந்த கடலுக்குள் ஒரு துளியாக அடியேனின் பங்கு..

    புகுந்த வீடு திரைப்படத்தில் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் குழுவினருடன் ரவி தோன்றி நடிக்கும் மாடி வீட்டுப் பொண்ணு மீனா ... பாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #370
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கார்த்திக் சார், கிருஷ்ணா சார்,



    சிலோன் ரேடியோவை யார் மறக்க இயலும்?



    கே.எஸ்.ராஜா
    மயில்வாகனம் சர்வானந்தா
    ராஜேஸ்வரி சண்முகம்
    பி.எச். அப்துல் ஹமீத்

    என்று எப்படிப்பட்ட அறிவிப்பாளர்கள்!

    பொங்கும் பூம்புனல்,

    பிறந்தநாள்,

    திரை விருந்து (நடைபெற்றது திரை....விருந்து)

    கீதாஞ்சலி, புது வெள்ளம்,

    என் விருப்பம்,

    நீங்கள் கேட்டவை,

    ஒரு படப்பாடல்கள்,

    கவி உள்ளம்,

    இசையும் கதையும்,

    அன்றும் இன்றும்,

    நெஞ்சில் நிறைந்தவை

    என்று எண்ணிலடங்கா நிகழ்ச்சிகள்..

    மதிய வேளைகளில் 'இசையும் கதையும்' என்று ஒரு நிகழ்ச்சி . ஒரு கதையை அப்படியே பாத்திரங்களாகவே மாறி அழகாக அறிவிப்பாளர்கள் பிரசெண்ட் செய்வார்கள். அந்தக் கதையின் சூழலுக்கு ஏற்ற பாட்டை அழகாகப் போடுவார்கள்.

    'மனோரமா! பாம்பு எப்படி வரும்?' என்று கே.எஸ்.ராஜா கேட்டுவிட்டு

    'தலை முன்னால வரும்... வால் பின்னாலே வரும்' என்று படத்தில் ஆச்சி பேசிய வசனந்த்தைப் போட்டுவிட்டு நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கும் சாதுர்யமும் சாமர்த்தியமும் படு சுவாரஸ்யம்தானே!

    விளம்பரங்களையே கேட்டுக் கொண்டிருக்கலாம். சுத்த தமிழ் விளையாடும்.

    'வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டியின் அருகே'....

    இப்போது நம்முடைய பழைய ஞாபகங்களை நினைவூட்டும் கே.எஸ்.ராஜாவின் குரலைக் கேட்டு மகிழ்வோம்



    அரிய இந்தப் பதிவை அளித்த நண்பருக்கு நம் நன்றிகள்.

    நிஜமாகவே அந்தக் காலத்திற்கு போய்விட்ட உணர்வைத் தருகிறது இந்த சூப்பர் பதிவு.

    கார்த்திக் சார்!

    இந்தப் பதிவில் நம் தலைவர் படம் 'சங்கிலி' பற்றிய ஒரு விளம்பரம் தங்களை குஷிப்படுத்தும்.

    Last edited by vasudevan31355; 17th June 2014 at 08:43 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •