Page 49 of 400 FirstFirst ... 3947484950515999149 ... LastLast
Results 481 to 490 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #481
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கார்த்திக் சார்

    சொன்னால் நம்ப மாட்டீர்கள். நேற்று இரவு படுக்கப் போவதற்கு முன் இன்றைக்கு நீங்கள் எழுதிய 'கண்ணா நலமா'? படத்தின் 'நான் கேட்டேன்... அவன் (ஜெமினி) தந்தான்' பாடலைப் பார்த்துவிட்டு படுத்தேன்.

    இன்று பார்த்தால் நீங்கள் அதுபற்றி பதிவிட்டிருக்கிறீர்கள்.

    ம்...என்ன செய்யலாம்?

    எல்லாவற்றிலும் இப்படியா ஒத்துப் போக வேண்டும்?

    ஒன்று செய்வோமா? நாம் ரெண்டு பெரும் சும்மனாச்சுங்காட்டியும் சண்ட போட்டுக்கலாமா? (இதுக்கு ஒரு பஞ்ச் பதிலை கண்டிப்பாக வைப்பீர்கள் சுவையாக என்று தெரியும்)

    இல்லன்னா திருஷ்டி பட்டுடும் சார்.

    'சங்கமம்' பதிவு உங்கள் கைவண்ணத்தில் அட்டகாசம்.

    நான் சங்கமம் பாடல்களில் சங்கமம் ஆனது என்பது என்றோ நடந்து விட்டது,

    சார்! அந்த ஹம்மிங்... அதான் சார் 'ஒரு பாட்டுக்குப் பலராகம்' பாட்டில் பாடகர் திலகத்துடன் சேர்ந்து ஹம்மிங் அளிப்பது (அஹாஹஹா) ராட்சஸி சார் ராட்சஸி.

    Last edited by vasudevan31355; 18th June 2014 at 04:43 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #482
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கார்த்திக் சார்,

    'புன்னகை'யின் 'ஆணையிட்டேன் நெருங்காதே!' பாடலைப் பற்றி நானும் கோபால் சாரும் பலமுறை நேரம் போவது தெரியாமல் பேசியிருக்கிறோம்.

    கோபால் சார்

    ப்ளீஸ்.

    இப்பாடலைப் பற்றியும், பாலச்சந்தர் இப்பாடலைப் படமாக்கிய விதம் பற்றியும் இங்கு எங்களுக்காக எழுதி அசத்த வேண்டுகோள் வைக்கிறேன்.
    Last edited by vasudevan31355; 18th June 2014 at 05:32 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #483
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    என்னுடைய இசை நண்பன்

    வேறு யார்?. என்னுடைய பிலிப்ஸ் பாக்கெட்சைஸ் டிரான்சிஸ்டர்தான். என்னுடைய பள்ளிப்பருவத்தில் என்னுடைய கனவு நான் விரும்பும் விஷயங்களை (பாடல்கள் / கிரிக்கெட் கமென்ட்ரி) கேட்டு மகிழ எனக்கென்று ஒரு ரேடியோ வேண்டும். இது பள்ளிப்பருவத்தில் அரைக்கால் டிரௌசரோடு அலைந்த காலத்தில் என் கனவு.

    எங்கள் வீட்டில் ஒரு பெரிய வால்வு ரேடியோ இருந்தது, ஒரு மேஜை முழுவதையும் அடைத்துக்கொண்டு. வேலைக்குப்போன நேரம் போக மற்ற நேரங்களில் அப்பா அதன் அருகிலேயே அமர்ந்துகொண்டு, “திரைப்பட பாடல்கள் தவிர” மற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டுக்கொண்டிருப்பார். அவர் வேலைக்குப்போகும் நேரமும் நான் பள்ளிக்குப்போகும் நேரமும் ஒன்றாக இருந்ததால், என் வீட்டு ரேடியோ எனக்கு உதவாத அந்நியமாகிப்போனது. (டெலிவிஷன் அப்போது வரவில்லை).

    ரேடியோவுக்கே இந்த நிலை. டேப் ரெகார்டரெல்லாம் எங்காவது அதிசயமாகப் பார்ப்பது. பழைய திரைப்படங்களில் கட்டிலுக்குக் கீழே ஒளித்துவைத்து மற்றவர்கள் பேசுவதை ரிக்கார்ட் செய்வதைப் பார்த்திருக்கிறோம். கிராமபோன் பெட்டிபோல பெரிதாக இருக்கும். அதன் மூடியைக் கழற்றினால், இரண்டு பெரிய சக்கரங்கள். டேப் ஒன்றிலிருந்து இழுத்து இன்னொன்றில் மாட்டப்பட்டிருக்கும். அதைக்கையால்தான் மாட்ட வேண்டும். அதைப்பார்ப்பதற்கு ரொம்ப அபூர்வம். பெரிய பணக்கார வீடுகளில் இருக்கும். நாம் பார்க்க ஆசைப்பட்டால் கைக்கெட்டாத தூரத்தில் நின்று அவர்கள் ஒலிக்கவிடுவதைக் கேட்டுவிட்டு வந்துவிட வேண்டும்.

    இப்போதுள்ள பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள். பள்ளியில் சேருவதற்கு முன்பே இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் கையில் வந்துவிடுகிறது. எங்கள் பள்ளிப்பருவத்தில் பாட்டுக்களைக் கேட்க ஆவலாய் அலைவோம். டீக்கடைகளில் வெளியே பாக்ஸ் ஸ்பீக்கர் வைத்து, சென்னை வானொலியில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பும்போது சென்னை அலைவரிசையிலும், மற்ற நேரங்களில் சிலோன் ரேடியோ அலைவரிசையிலும் மாற்றுவார்கள். சென்னையில் காலை அரைமணி நேரம், மாலை கால்மணி நேரம் அவ்வளவுதான். சிலோன் அலைவரிசை ஏகப்பட்ட குறுக்கிடுகளுடன் அரையும் காலுமாக கேட்கும்.

    என்ன இருந்தாலும் நமக்கென்று ஒரு சின்ன ரேடியோ வேண்டும், நம் இஷ்டப்பட்ட நேரத்தில் பாட்டுக்கேட்க வேண்டும், என்ற ஆவலில், பல விஷயங்களை தியாகம் செய்து சிறுகச்சிறுக பணம் சேர்க்கத்துவங்கினேன். எனக்குப்பிடித்த பிலிப்ஸ் பாக்கெட்சைஸ் ரேடியோ (சோப்பு டப்பாவை விட கொஞ்சம் சிறியது) 95 ரூபாய் என்பதையெல்லாம் விசாரித்து வைத்து அதே நோக்கமாக பணம் சேர்த்து, குறைந்த பத்து ரூபாயை அம்மாவிடம் வாங்கிப்போட்டு அந்த ரேடியோவை வாங்கிய அன்று இருந்த சந்தோஷம் அதற்க்கு முன்னும் பின்னும் வரவில்லை. அப்படி ஒரு சந்தோஷம். ரேடியோ வாங்கும்போதே, சிலோன் எடுக்குமா என்று கேட்டு, அங்கேயே சிலோன் அலைவரிசையை வைக்கச்சொல்லி அதைக் கேட்டபிறகுதான் திருப்தியாக வாங்கினேன்.

    நான்கு போர்ஷன்கள் இருந்த வீட்டில் பொதுவான மொட்டைமாடி. அங்கே வைத்துதான் 'என்னுடைய' ரேடியோவில் பாட்டுக்கேட்பது வழக்கம். அடேயப்பா அப்போது வந்த பாடல்கள் அனைத்தையும் அதில்தான் கேட்டேன். இன்றைக்கு எல்.சி.டி. டிவியிலும், லாப்டாப்பிலும் பார்த்து மகிழும் பாடல்கள் எல்லாம் அந்தக் காலத்தில் இந்த பாக்கெட் ரேடியோவில் கேட்டு மகிழ்ந்தவைதான். ஏதோ அதிசயப்பொருள் போல வெல்வெட் துணியில் பத்திரமாக சுற்றிவைத்து பாதுகாப்பாக வைத்திருந்தேன். வாங்கி கொஞ்சகாலம் கழித்துதான் அப்பாவுக்கு தெரியும். அவர் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை, நான் படிப்பில் புலியாக இருந்ததால்.

    இரண்டு சந்தோஷமான செய்திகள். ஒன்று, நான் அவ்வளவு பத்திரமாக வைத்திருந்ததால் ஒருமுறைகூட ரிப்பேர் ஆனதில்லை. இன்னொன்று, அந்த பாக்கெட் ரேடியோ இன்னும் நினைவுப்பொருளாக என்னிடம் இருக்கிறது...

  5. Likes chinnakkannan liked this post
  6. #484
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (7)

    இன்றைய ஸ்பெஷலாக வருவது 1973-இல் வெளிவந்த 'மணிப்பயல்' படத்திலிருந்து ஒரு அருமையான பாடல்.



    'தங்கச் சிமிழ் போல் இதழோ
    அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ'


    ஏ.ஜகந்நாதன் இயக்கிய இப்படத்தில் மாஸ்டர் சேகர் பிரதான பாத்திரம் ஏற்று இருந்தார். அவர்தான் மணிப்பயல். ஆர்.எம்.வீரப்பன் திரைக்கதை அமைத்து தயாரித்த இப்படம் செல்வி எண்டர்பிரைசஸ் தயாரிப்பு என்று வெளிவந்தது.

    ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பு என்பதால் அண்ணாதுரை, எம்ஜியார், திராவிட முன்னேற்ற கொள்கைகள் என்று படம் அரசியல் நெடி அடிக்கும்.

    ஜெயச்சந்திரன் குரலில் இப்பாடல் இனிமையோ இனிமை! ஏ.வி.எம்.ராஜனும் ஜெயந்தியும் காதல் களியாட்டம் புரிவார்கள். ஜெயந்தி படுகிளாமர் இந்தப் பாடலில். (இந்த மாதிரி வேறொரு தமிழ்ப் படத்தில் ஜெயந்தி நடித்ததில்லை என்று நினைக்கிறேன்) விதவிதமான மாடர்ன் டிரெஸ்சில் இன்றைய பெருசுகளின் தூக்கத்தைத் தொலைப்பார். ஏ.வி.எம்.ராஜனோ கேட்கவே வேண்டாம். (கூலிங் கிளாஸ் எல்லாம் வேற) மனசுக்குள் நடிகர் திலகமாகவே தன்னை நினைத்துக் கொள்வார்.


    தங்கச் சிமிழ் போல் இதழோ
    அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ
    தந்தச் சிலைபோல் உடலோ
    அது தலைவனின் இன்பக் கடலோ

    தங்கச் சிமிழ் போல் இதழோ
    அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

    லா லா லா லா லால்லா
    லா லா லா லா லால்லா

    கட்டுக்குழல் தொடும் காற்று
    அது காதில் சொல்லும் ஒரு பாட்டு
    கன்னம் எனும் மது ஊற்று
    அதில் என்னை நிதம் நீராட்டு

    தங்கச் சிமிழ் போல் இதழோ
    அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

    கண்ணன் துணை ஒரு ராதை
    அந்த ராமன் துணை ஒரு சீதை
    மன்னன் துணை இந்தத் தோகை
    என்றும் மங்கை இனம் ஒரு போதை

    தங்கச் சிமிழ் போல் இதழோ
    அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

    லா லா லா லா லால்லா
    லா லா லா லா லால்லா

    கட்டில் வரை திரை போட்டு
    அதில் காதல் கதை அரங்கேற்று
    தொட்டில் என்னும் மடி சேர்த்து
    சிறுபிள்ளை எனைத் தாலாட்டு

    ராரிரோ ராரிரோ... ராரிரோ ராரிரோ

    தங்கச் சிமிழ் போல் இதழோ
    அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ
    தந்தச் சிலைபோல் உடலோ
    அது தலைவனின் இன்பக் கடலோ


    'மெல்லிசை மன்னர்' தான் என்றும் மெல்லிசை மன்னர்தான் என்று ஆணித்தரமாக இப்பாடலில் நிரூபித்திருப்பார்.

    இது ஜெயச்சந்திரனின் முதல் பாடல் என்போர் உண்டு. இல்லை இல்லை 'அலைகள்' படத்தின் 'பொன்னென்ன பூவென்ன கண்ணே' பாடல்தான் அவருக்கு முதல் பாடல் என்பார்கள் பலர். இரண்டு படங்களுமே 1973இல் வந்தவை. ஆனால் மணிப்பயல்தானே முதலில் வந்தான்? எந்தப் பாடலுக்கு முதலில் மைக் பிடித்தார் ஜெயச்சந்திரன் என்று தெரிந்தவர்கள் கூறவும். இப்பாடலில் வரும் பெண் பின்னணிக்குரல் லதா என்று எங்கோ படித்த ஞாபகம். இதையும் தெரிந்தவர்கள் கூறவும்.


    Last edited by vasudevan31355; 18th June 2014 at 06:05 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #485
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    [QUOTE=vasudevan31355;1140008]இன்றைய ஸ்பெஷல் (7)

    [B][COLOR="blue"][SIZE=3]இன்றைய ஸ்பெஷலாக வருவது 1973-இல் வெளிவந்த 'மணிப்பயல்' படத்திலிருந்து ஒரு அருமையான பாடல். ஏ.வி.எம்.ராஜனோ கேட்கவே வேண்டாம். (கூலிங் கிளாஸ் எல்லாம் வேற) மனசுக்குள் நடிகர் திலகமாகவே தன்னை நினைத்துக் கொள்வார்.

    தங்கச் சிமிழ் போல் இதழோ
    அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

    திரு. வாசு,

    இந்த ஏ.வி.எம். ராஜன் அவர்களை நாங்கள் ஐயாயிரம் சிவாஜி என்று தான் சொல்வோம். ஷண்முக சுந்தரம், விஜய குமார், ஹெரான் ராமசாமி கணக்கு ஆண்டவன் தன் சொல்லணும்!

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  8. #486
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஐயாயிரம் சிவாஜி!?
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #487
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கார்த்திக் சார்,

    'புன்னகை'யின் 'ஆணையிட்டேன் நெருங்காதே!' பாடலைப் பற்றி நானும் கோபால் சாரும் பலமுறை நேரம் போவது தெரியாமல் பேசியிருக்கிறோம்.

    கோபால் சார்

    ப்ளீஸ்.

    இப்பாடலைப் பற்றியும், பாலச்சந்தர் இப்பாடலைப் படமாக்கிய விதம் பற்றியும் இங்கு எங்களுக்காக எழுதி அசத்த வேண்டுகோள் வைக்கிறேன்.[/COLOR][/SIZE][/B]
    ஆஹா, அவசியம் அந்த திருப்பணியை செவ்வனே செய்வேன்.கரும்பு தின்ன கூலியா?(அவசரமாய் ஸ்பெல் திருத்தினேன் .கடைசி வார்த்தை விபரீதமாக type ஆகி தொலைத்திருந்தது.)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #488
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    நான் 'புன்னகை', 'கண்ணா நலமா' பற்றி எழுதப்போக நீங்கள் ,'மணிப்பயல்' பற்றி எழுத (அன்றைக்கு 'லட்டு' லதா ஸ்பெஷல் போல) இன்று 'Mega' ஜெயந்தி ஸ்பெஷலா?.

  11. #489
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கார்த்திக் ,

    நான் எங்க வீட்டு ரேடியோ,transistor பற்றி ஒரு புராணம் எழுத நினைத்த போது ,உங்களோட அருமையான பதிவு. என்னுடைய ராக ஆலாபனை உங்களை முந்த வைத்தது எனக்கு சந்தோஷமே. கொடுத்து வைத்த ரேடியோ. மிக ரசித்தேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #490
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    மணிப்பயல் 1973 பொங்கல் ரிலீஸ். அலைகள் 1973 தீபாவளி ரிலீஸ். அதுமட்டுமல்ல, அலைகள் துவங்கியதே 73 மார்ச்சில்தான். எனவே 'தங்கச்சிமிழ் போல்' பாடல்தான் ஜெயச்சந்திரனின் முதல் பாடல்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •