Page 69 of 400 FirstFirst ... 1959676869707179119169 ... LastLast
Results 681 to 690 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #681
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மன்மத லீலையை அணுஅணுவாகப் படித்து ரசிக்கும் போது அதற்கு முன் எம் மன்னவர் புரிந்த மன்மத லீலைகளை 'திரும்பிப் பார்' க்காமல் இருக்க முடியவில்லை.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #682
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முந்தாநாள் ஊருக்குப் போய்விட்டதால் இன்றைய ஸ்பெஷல் போட முடியவில்லை. நேற்று ரெடி பண்ணி வைத்து போடப் போகும் போது அருமை கார்த்திக் சார் அழகான 'மன்மத லீலை' யை கொண்டு வந்தார். கோபாலும் தொடர்ந்து நல்ல பதிவுதர, போட்டு குழப்ப மனம் வரவில்லை. நிறுத்தி விட்டேன். இன்றைய ஸ்பெஷலை இன்று தொடருவேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #683
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'உத்தமபுருஷன்' படத்தில் பிரபுவும் பிளே-பாயாக நன்றாகப் பண்ணியிருந்தார். படமும் நன்றாகவே ஓடியது.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #684
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பிரபுவின் ராஜா கைய வச்சா (சரியா போகாதது வருத்தமே),உத்தம புருஷன் (நல்ல ஹிட்) இரண்டுமே எனக்கு பிடிக்கும்.. டுபாக்கூர் ரோலில் ராஜா கைய வச்சா படத்தில் அவர் ,கவ்தமி இணைவில் கலக்கியிருப்பார். உத்தம புருஷன் படத்தில் காரில் பெண்களுக்கு லிப்ட் கொடுத்து கலாய்த்து மாடி கொள்ளும் சீன்.வாவ்!!!

    நாசர் -மகளிர் மட்டும் சுமார்தான். பிரபுவிற்கு கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக பண்ணியிருப்பார்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #685
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகம் ,playboy என்றால் திரும்பி பார், இருவர் உள்ளம்,வசந்த மாளிகை. காமெடி playboy என்றால் இருவர் உள்ளம்.தெய்வ மகனில் கொஞ்சம் விஜய் ஆரம்பத்தில்.

    (கொஞ்சமே கொஞ்சம் பெண்ணின் பெருமை,துளி விஷம்,உத்தம புத்திரன்,தீபம்,நல்லதொரு குடும்பம்,திரிசூலம்)
    Last edited by Gopal.s; 22nd June 2014 at 08:02 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #686
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    அப்போதிலிருந்து இப்போது வரை அனுபவித்து பார்க்கும் படம்.

    எல்லாவற்றையும் எழுதி விட்டீர்கள். நானும் ஏதோ ரசித்ததைக் கிறுக்குகிறேன்.

    ரீனாவின் கண்ணடிக்கும் பழக்கத்திற்கு கமலிடம் அவர் அளிக்கும் பதில்.

    'இது என்னுடைய வீக்னெஸ் சார்'

    எது? கண்ணடிக்கிறதா?

    நோ!நோ!கண் துடிக்கிறது.


    'இந்த ஆபிஸ் கதவுக்கெல்லாம் ஒரு வீக்னெஸ். அப்பப்ப தொறந்துக்கும்'.

    'இது ரசிக்கக் கூடிய வீக்னெஸ் இல்ல'.


    'பெண்ணுக்கு கல்யாணம்... கல்யாணம் ஆனவர் உங்ககிட்டே காட்டறதுக்கு என்ன?" என்று தன் பெண்ணின் போட்டோவை கமலிடம் நீட்டும் அய்யரின் பெண்ணின் படத்தை பார்க்கும்போதே, ஒரே நிமிஷத்தில் அவளை பெண் பார்த்து ,கல்யாணம் பண்ணி கொண்டு, ஆசீர்வாதம் வாங்கி,முதலிரவில் பழம் ஊட்டி அவளை அணைத்துக் கற்பனை செய்து கொள்ளும் அல்ப அரை நொடி நேரக் கற்பனை சுகம்

    'எங்கெல்லாம் பெண்கள் ஆபத்தில இருக்காங்களோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன்' (ஜெயபிரதா மோட்டார் சைக்கிளில் ஆடைகள் மாட்டிக் கிழிந்து நிற்க, ஆடைகளைக் கழற்றிக் கொடுத்த கர்ண கிருஷ்ணன்)

    'செக்ஸ் ஒரு பெரிய கடல். அதை முழுசா புரிஞ்சிக்குனம்னா ஒரு மனைவி போதாது'. (இது எப்படி இருக்கு)

    பாவி. ஹியூமன் சைகாலஜி படத்தில் தெரியும் எலும்புக்கூட்டைக் கூட விட்டு வைக்காமல் அது ஆம்பள எலும்புக் கூடா பொம்பள எலும்புக் கூடா என்று பொம்பளை எலும்புக் கூட்டின் மண்டையோட்டில் பிகரை பொருத்தி பார்க்கும் கமலின் வியப்பான வீக்னெஸ். (இதுக்கு மேல எப்படி வீக்னெஸ் காண்பிக்கிறது)

    'ex மேயர் மாப்பிள்ளை ஊர் மேயறான்' மகேந்திர மாமா வத்தி.

    'பெண்கள்னா எனக்கு ஒரு ஈர்ப்பு, affection, அதீதமான ஈடுபாடு... அதான் என்னோட குணச்சித்திரம்' (குணச்சித்திரத்திற்கு என்னா ஒரு விளக்கம்)

    மனோதத்துவ டாகடரிடம் கமல் ட்ரீட்மென்ட் எடுக்கும் போது அங்கு தூரத்தில் தெரியும் டாக்டரின் அசிஸ்டன்ட் பெண்ணை ஸ்க்ரீன் விளக்கி அடிக்கடி சைட் அடிப்பார்.

    அந்தப் பெண் பிரவீணா பாக்கியராஜ்.

    புருஷன் படிக்காத மேதையா இருந்தா பரவாயில்ல
    படிக்காத போதையா இருந்தா (ஹேமாவிடம் கமலின் கரிசனம்)

    ஒளிந்திருக்கும் ரூமுக்கு உள்ளேயே ஹேமா டிரஸ் மாற்றும் கதையை (மொட்டைமாடி வாட்டர் டேங்க் பாவ மன்னிப்பு) அய்யரிடம் சொல்லும் போது அய்யர் பதைபதைத்து 'அய்யயோ அப்புறம்! (என்னாச்சோ! இந்தப் படுபாவி என்ன பண்ணானோ) என்று அலற, கமல் அலட்டாமல் 'நீங்க ரொம்ப அவசரப்படுறீங்க' (அடுத்து நிகழ்ந்ததைக் கேட்க அய்யர் இவ்வளவு ஆவலாய் இருக்காரே) என்பாரே! இத்தனைக்கும் இருவர் முகமும் காட்டப்படாமல். நான் ரொம்ப ரசிச்ச இடம். கிரேஸி நினைவுக்கு வருவார்.

    ராதாரவியை கடுப்பேற்ற கமலை ஜெயப்பிரதா ஹக் செய்து 'பொறாமை படறானா பாரு' என்பார்.

    அதற்கு கமல் பதில்

    'பொறாமை பத்தல'.

    'நாதமென்னும் கோயிலிலே

    இசையும்
    எனக்கிசையும்.
    தினம் என் மனம்தான்
    அதில் அசையும்

    மனதை அசைத்த பாடல்தான்.

    சுகம்தானா
    சொல்லு கண்ணே

    அருமையான சுகானுபவம்.

    இன்னும் நிறைய எழுதலாம். வித்தியாசமான ரசிக்கத் தகுந்த காட்சிகள். ஆனால் கோர்வையற்ற ரசமான வைரத் துண்டுகளின் இணைப்புகள்.
    Last edited by vasudevan31355; 22nd June 2014 at 08:33 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes chinnakkannan liked this post
  9. #687
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பிருந்தாவன சாரங்கா.

    சொந்தங்களுக்குள் காதல் எண்ணங்களை பரிமாறி கொள்வது,சொந்தங்களை சீராட்டுவது(குழந்தைகளையும் சேர்த்தே), காதலியிடம் உருகி நீதான் என் மனதில் என்று அழுத்தி சொல்வது ,இவற்றுக்கேன்றே ஒரு ராகம் உள்ளதா? உள்ளேன் ஐயா என்று உங்கள் முன் ஆஜர் ஆவது பிருந்தாவன சாரங்கா.

    சிறு வயதில் மூன்று படங்கள் என்னை உலுக்கும்.இவ்வளவு வித்யாசமான கதை கரு, திரை கதை மற்றும் கலை மேதையின் நடிப்பு மூன்றிலும். படித்தால் மட்டும் போதுமா,ஆலய மணி,புதிய பறவை. முற்றிலும் வேறு பட்ட சிந்தனையில் புத்தம் புதிய நமக்கு பழகாத கதையமைப்பு கொண்டவை. இரண்டு இணை பிரியா சகோதரர்கள் (ஒன்று விட்ட) .ஒருவன் sophisticated படிக்காத வேட்டை காரன். மற்றவன் polished படித்த மென்மையான மனிதன். இருவரும் ஒருவருக்கு பார்த்த பெண்ணை மற்றவர் சென்று பார்த்து அங்கீகரிக்க ஏற்பாடு செய்து ,வந்த பிறகு எண்ணங்களை பரிமாறி கொள்ளும் மைல் கல் காட்சி.இதில் படித்தவனின் எண்ணம் திரிபு பட என் விழியில் நீ இருந்தாய் என அப்பாவி வேட்டை காரனும், உன் வடிவில் நான் இருந்தேன் என படித்த வக்கிரமும் பாடும் இந்த பாடலும் இன்றும் எல்லோராலும் நேசிக்க படும் அதிசயம்.டி.எம்.எஸ் ஒரு கட்டை குறைக்க,பீ.பீ.எஸ் ஒரு கட்டை ஏற்ற ,இந்த இரண்டு நேர்த்தியான பாடல் திலகங்களின் அபூர்வ சங்கமம்."பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை".

    இருவர் மேல் எனக்கு அலாதி பற்று. இருவருமே அவரவர்க்கு உரிய அங்கீகாரம் பெறாத மேதை பால்கேக்கள். இருவரும் பெற வேண்டிய இடம் என் மனதில் நிஜமாகாத நிழலாகவே தொடர்கிறது. அடிமைகள், மற்றும் சிலகம்மா செப்பிந்தி என்சற படங்களை தழுவி இயக்குனர் சிகரம் தந்த நிழல் நிஜமாகிறது.ஈர்ப்பு நிறைந்த வசீகரம்.இரு துருவங்களாக கமல்,சுமித்ரா.love teasing concept வைத்து இதற்கு மேல் எதுவும் செய்ய இல்லை என்று பாலு-கமல்-சுமித்ரா கூட்டணி இறுதி செய்து விட்ட முத்திரை படம். தோதுவாய் சரத்-ஷோபா-ஆனந்து. உறுத்தாமல் மௌலி (suspect list லே கூட இல்லியா).ஒரு பாதிக்க பட்டு பெண்ணுக்கு காப்பளனான ஒருவன் தன் ஒரு முனை பட்ட தன்னலமற்ற அன்பால் அந்த பெண்ணின் மனதிலும், அல்லிராணி காதலில் விழுந்தாலும் புகை படர்ந்த சந்தேகத்தால் ,தன் காதலை தள்ளி வைத்து போடும் நாடகம். இரண்டையும் இணைத்து சொந்தங்களின் மன ஓட்டத்தை ,போராட்டத்தை சொன்ன மெல்லிசை மன்னர் தான் யார் என்று ஊருக்குணர்த்திய பாடல். "இலக்கணம் மாறுதோ,இலக்கியம் ஆனதோ".

    70 களில் ,horny teen -ager (இன்றும் அப்படித்தான் .மனிதன் மாறவில்லை.அவன் மயக்கம் தீரவில்லை)ஆக நான் வலம் போது ,ஒரு பாடல்,அது படமாக்க பட்ட பரபரப்பான சூழ்நிலை,அற்புதமான இசை,நடித்தவர்களின் தோதுவான erotic Enactment &expressions என்று கிக் ஏற்றி படத்தின் வெற்றிக்கே துணை செய்தது.அந்த பாடல் "நாலு பக்கம் வேடருண்டு".

    இந்த ராகத்தில் எனது மற்ற விருப்பங்கள்.

    1)பூவரையும் பூங்கொடியே- இதயத்தில் நீ.
    2)முத்து நகையே உன்னை- என் தம்பி.
    3)சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே-வீர பாண்டிய கட்டபொம்மன்.
    4)இது குழந்தை பாடும் தாலாட்டு-ஒருதலை ராகம்.
    5)நெஞ்சாங்கூட்டில்- டிஷ்யூம்.
    Last edited by Gopal.s; 22nd June 2014 at 08:40 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Likes chinnakkannan liked this post
  11. #688
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சனி,ஞாயிறு ஓவர் டைம் செய்தது எதற்காம். ஒரு வாரம் லீவ் சார் please ,Sanction . As my grand mother is sick ,so I request you to (as உம் so வும் சேர்ந்து வர கூடாதுடா அபிஷ்டு)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #689
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நடிகர்திலகம் ,playboy என்றால் திரும்பி பார், இருவர் உள்ளம்,வசந்த மாளிகை. காமெடி playboy என்றால் இருவர் உள்ளம்.தெய்வ மகனில் கொஞ்சம் விஜய் ஆரம்பத்தில்.

    (கொஞ்சமே கொஞ்சம் பெண்ணின் பெருமை,துளி விஷம்,உத்தம புத்திரன்,தீபம்,நல்லதொரு குடும்பம்,திரிசூலம்)
    தெய்வமகன் விஜய்?. சும்மா ஒரு பாட்டுக்கு ஜெயலலிதாவை வெறுப்பேற்ற அப்படி நடிப்பார்.

    சேர்க்க வேண்டிய இன்னொருவர் 'என்னைப்போல் ஒருவன்' சேகர்.

  13. #690
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஏன் தீபம்..ராஜா யுவ ராஜா??

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •