-
23rd June 2014, 08:58 PM
#811
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
மெல்லிசை மன்னரின் வெறித்தனமான ரசிகனாக என்னை ஆக்கிய பாடல்களில் ஒன்று ஓ மஞ்சு படத்தில் இடம் பெற்ற சபலம் சலனம் மயக்கம் குழப்பம் .... பாடல்... மிக வித்தியாசமான மெட்டில் தாளக் கட்டில் வாணியின் குரலில் உள்ள அத்தனை நுணுக்கங்களையும் ஒருங்கிணைத்து ஈடு இணையற்ற பாடலாக இதை உருவாக்கிவிட்டார் மெல்லிசை மன்னர். பல்லவி முடிந்தவுடன் ஒரு ட்ராம்போன் அதைத் தொடர்ந்து வயலின்கள் கிடார் என தொடரும் அதோடு சரணம் 1 துவங்கும். இந்த வயதில் என வாணி பாடும் போது கூடவே ட்ரம்ஸ் கலக்கல் ....
இதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.. இன்று முழுதும் ... ஏன் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ...
சபலம் சலனம் மயக்கம் குழப்பம்....
நான் பாட்டை சொன்னேன்..
நீங்களும் கேளுங்கள்...
http://www.raaga.com/player5/?id=204...16194546222687
பி.கு.
இந்த ஓ மஞ்சு திரைப்படத்தில் நடிக்க ஸ்ரீதர் முதலில் அணுகியது ..
இளையதிலகம் பிரபு அவர்களை...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd June 2014 08:58 PM
# ADS
Circuit advertisement
-
23rd June 2014, 11:36 PM
#812
Senior Member
Seasoned Hubber
இறைவனை நாம் வேண்டுவோம்.. காலச் சக்கரம் பின் நோக்கி நம்மை அழைத்துச் செல்லக் கூடாதா ... அந்தக் கால இனிமையான பாடல்களைக் கேட்டு மகிழ மாட்டோமா என்று... இந்தக் காலத்தில் அதே போல பாடல் வந்து நம்மை அழைத்துச் சென்றால் ... அது ஏன் காலச் சக்கரமாக இருக்கக் கூடாது... மனதை மயக்கும் மதுர கானங்களுக்கு காலமேது நேரமேது .. தலைமுறை தான் ஏது...

அந்தக் காலச்சக்கரத்தை நமக்குத் தந்தவர் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் ...
ராமானுஜம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள துளித்துளியாய் பாடல் முதல் முறை கேட்கும் போதே நமது நாடி நரம்பெல்லாம் புல்லரிக்கச் செய்யும் அளவிற்கு உள்ளே புகுந்து விடுகிறது.. கேளுங்கள்.. நிச்சயம் இதை உண்மை எனத் தாங்கள் உணர்வீர்கள்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th June 2014, 04:14 AM
#813
Junior Member
Newbie Hubber
ரமேஷ் விநாயகம்.
என்னை கவர்ந்த இசையமைப்பாளர். நல்ல பாடகர்.ஏ.எம்.ராஜா மாதிரியே சமரசம் செய்ய விரும்பாமல் வாய்ப்புகளை இழந்து கொண்டிருப்பவர் .திறமைசாலிகள்,மேதைகள் எல்லோரிடமே இந்த eccentricity நிறைந்த சமரசமற்ற போக்கு இருக்கும் போலும். உலகம் அவர்களை புரிந்து கொள்ள முயல்வதில்லை. இவருடைய விழிகளின் அருகினில் வானம் 2000 இலிருந்து 2010 வரை வந்த பாடல்களிலேயே best composition என்பேன். என்ன இது என்ன இது என்னை கொல்வது மற்றொன்று.
இதே மாதிரி மற்றொரு திறமையாளர் கார்த்திக் ராஜா. (ஆனால் யுவன் மாதிரி சராசரிகளுக்கு தான் காலம்)
நானே நேற்று ராமானுஜர் கேட்டு திரியில் சிலாகிக்க நினைத்த போது ,அதை செய்த ரசிக வேந்தர் ராகவேந்தருக்கு நன்றிகள்.படு வித்யாசமான நல்ல இசை.
திரும்ப எழ ரமேஷ்,உங்களுக்கு என் வாழ்த்துகள்.
-
24th June 2014, 07:43 AM
#814
Senior Member
Devoted Hubber
யூன் 8 ல் ஆரம்பிக்கப்பட்ட இத்திரி
இன்றுடன் 82 பக்கங்களை எட்டியுள்ளது
நாளொன்றுக்கு சராசரி 5+ பக்கங்கள்
வாழ்த்துக்கள்
இத்திரியில் பெரும்பாலும் எழுதுவது
சிவாஜி ரசிகர்கள்
அங்கே நடிகர்திலகத்தின் திரி
1 பக்கத்தை தாண்ட 2 நாட்களுக்குமேல் எடுக்கிறது
நல்லாயிருங்க நன்றி நன்றி நன்றி
வேற என்னத்த சொல்ல
-
24th June 2014, 08:26 AM
#815
Senior Member
Diamond Hubber
அன்பு நண்பர் சிவா சார்,
தங்களது நாகரீகமான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
-
24th June 2014, 08:31 AM
#816
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் அவர்களை நீங்களும், கோபால் சாரும் நினைவுகூர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளீர்கள். இந்த இசை அமைப்பாளரை அதிகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இனி நிச்சயமாக நாங்கள் அவரது பாடல்களை ரசிக்க ஆரம்பிப்போம். நன்றி!
-
24th June 2014, 08:51 AM
#817
Junior Member
Platinum Hubber
மனதை மயக்கும் மதுர கானங்கள் - திரி சிறப்பாக செல்லும் இந்த நேரத்தில் இன்று பிறந்த நாள் காணும் கவியரசர் கண்ணதாசன் - மெல்லிசை மன்னர் இருவரையும் நினைவு கொள்வதில்
பெருமையாக உள்ளது . இவர்கள் உருவாக்கிய பாடல்கள் , காலத்தால் அழியாத கீதங்கள் .
என் உள்ளம் உந்த ஆராதனை ....
முத்துக்களோ கண்கள் .... தித்திப்பதோ ..கன்னம் .
பூ மாலையில் ஓர் மல்லிகை ....
இயற்கை என்னும் இளைய கன்னி ...
முத்தமோ .. மோகமோ ... தத்தி வந்த ....
விழியே கதை எழுது .....
சொல்லி கொண்டே போகலாம் . முடிவே இல்லாத காவிய மதுர கீத மன்னர்கள் .
-
24th June 2014, 10:02 AM
#818
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (13)
'கவியரசர்' கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள் சிறப்புப் பதிவு.

1974-ல் காசிராம் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'பாதபூஜை' திரைப்படத்திலிருந்து மிக மிக அற்புதமான, அவ்வளவாக கேட்கக் கிடைக்காத பாடல்.
.jpg)
சிவக்குமார், ஜெயசித்ரா, ஜெயா, வி.எஸ்.ராகவன், வி.கே.ராமசாமி, மனோரமா ஆகியோர் நடித்த இத்திரைப்படத்திற்கு கதை கலைஞானம். வசனம் பனசை மணியன். பாடல்கள் 'கவியரசர்' கண்ணதாசன்.
இசையமைப்பு ஜெயவிஜயா.
திரைக்கதை, இயக்கம் பீம்சிங் அவர்கள்.
உயிருக்குயிரான இரு சகோதரிகள் (அக்காவாக ஜெயா, தங்கையாக ஜெயசித்ரா. ஆனால் நிஜ சகோதரிகள் கிடையாது படத்தின் கதைப்படி) தங்களைப் படிக்க வைக்க தன் தந்தை (வி.எஸ்.ராகவன்) படும் கஷ்டங்களுக்காக வேலைக்குப் போக முடிவெடுக்கிறார்கள். (அக்கா வேலை பார்த்து முந்திக் கொள்வாள்) அக்கா தான் வேலைக்கு முதலிலேயே போய்விட்டதாகவும், தன் தங்கை தொடர்ந்து படிக்க வேண்டும் என்று அன்பு ஆணையிடுகிறாள். தன் தந்தையின் கடன்களை அடைக்கிறாள்.
அப்போது சகோதரிகள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மானசீகமான அன்பை வெளிப்படுத்திப் பாடும் மறக்க இயலாத பாடல். உண்மையாகவே நம் மனதை என்னவோ செய்யும் பாடல்.
பாடலின் முதல் பகுதியில் ஜெயாவும், ஜெயசித்ராவும் சேலையில் ஆடி பாடுவது அழகு. ஜெயா படுபாந்தம். ஜெயசித்ராவோ துறுதுறு.
இரண்டாவது பகுதியில் சற்றே கிளாமரான கவுன் அணிந்து இருவரும் கலக்கல்.
மூன்றாவது பகுதியில் தந்தை, தாயுடன் பாச இணைவு.
தங்கை அக்காளிடம் 'உன் மனக் கண்ணாடியைப் பார்த்தால் அதில் என் முகமே தெரிகிறது' என்ற அர்த்தம் தொனிக்க பாடுவதாக கவிஞர் வரிகளை அமைத்திருக்கிறார்.
'மழைத்துளி மண்ணில் விழும் வரை அதனுடைய இயல்பு நிறத்திலேயே இருக்கும்....மண்ணில் பட்டதும் மண்ணின் நிறத்திற்கே மாறிவிடும்.( செம்புலப் பெயல் நீர் போல) அப்படி நாம் இருவரும் அன்பால் இரண்டறக் கலந்து விட்டோம்' என்ற பொருள்பட இவர்கள் அன்பைச் சித்தரிக்கிறார் கவியரசர்.
மிக அருமையாகப் போடப்பட்ட டியூன். Fast beat என்பார்களே! அப்படி வேகமாகச் செல்லும் பாடல். (பாச உணர்வு பாடல்கள் எல்லாம் வழக்கமாக ஸ்லோவாகத்தானே இருக்கும். இது வித்தியாசம்)
இந்தப் படத்தின் மியூசிக் டைரக்டரும் தமிழுக்கு அதிகம் பரிச்சயமில்லாதவர். மலையாளத்தை சார்ந்தவர்.
இந்த இசையமைப்பாளரைப் பற்றித் தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்.
http://www.jayavijaya.com/biography.html
ஜெயாவுக்கு வாணி ஜெயராம் அவர்களும், ஜெயசித்ராவுக்கு சுசீலா அவர்களும் அவ்வளவு அழகாக பின்னணி தந்து இந்தப் பாடலை பாடி நம்மை மகிழ்விப்பார்கள்.

இனிப் பாடலின் வரிகள். (கேட்க கேட்கத் திகட்டாத பாடல்)

கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
சிவந்த நிலத்தின் நிறம்
வான் பொழிந்த மழைக்கும் வரும்
ஒ.. ஒ.. ஒ
இரண்டும் கலந்த நிலை
நாம் பிறந்து வளர்ந்த கலை
தங்கம் போல் ஒரு உள்ளம்
வைரம் போல் அது நீ என் கண்ணே
ஓஹோ... ஒ.. ஒ..ஒ...
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
ம்ம்ஹூம் ம்ம்ஹூம் ம்ம்ஹூம்
இருந்து படைக்கும் விருந்து உனக்குத் தேன் அல்லவா
அறிந்து இனிக்கும் விருந்து எனக்கு நீயல்லவா
நெஞ்சம் கிண்ணமல்லவா
பாசம் அன்னமல்லவா
பாலும் தேனும் அல்லவா
எந்தன் கண்ணே ஓஹோ..
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
நமக்கு இறைவன் கொடுத்த நலங்கள் தாயல்லவா
அனைத்து வளர்த்த தகப்பன் குணத்தில் சேயல்லவா
இல்லம் கோயில் அல்லவா
தெய்வம் காவலல்லவா
அன்பு தீபமல்லவா
எந்தன் கண்ணே ஓஹோ...ஒ
கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
ம்ம்ஹூம் ம்ம்ஹூம் ம்ம்ஹூம்.
Last edited by vasudevan31355; 24th June 2014 at 10:24 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
24th June 2014, 10:08 AM
#819
24/06/14- எல்லோருக்கும் காலை வணக்கம்
திரு வேந்தர் சார் /கோபால் சார்
ரமேஷ் விநாயக் அவர்களையும் ,கார்த்திக் ராஜா அவர்களையும் நினைவு கூர்ந்துள்ளீர்கள் . மிக்க நன்றி
ரமேஷ் விநாயக் அவர்களின்
நள தமயந்தி ,அழகிய தீயே,ஹே ரொம்ப அழகா இருக்கே ,ஜெர்ரி
போன்ற படங்களில் இவரது பங்கு நன்றாக இருக்கும்
வழக்கம் போல் கோபால் சார் நமக்கு பிடித்த அவருக்கும் பிடித்த
"என்ன இது என்ன இது "
ஒரு அழகான மெலடி பாடலை நினவு படுத்திவிட்டார்
ராமானுஜன் லேட்டஸ்ட் ஹிட் எல்லோரும் மிக ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் படம் பாரதி, மோகமுள்,பெரியார்,முகம்
போன்ற சில பரீட்சார்த்த படங்களை கொடுத்தவர் கொடுத்து கொண்டு இருப்பவர் (ghana sekaran )
karthik ராஜா உண்மையில் நல்ல திறமை சாலி அவருடைய மாணிக்கம்
காதலா காதலா டும் டும் டும் எல்லாம் பாடல்களை ரசித்து கேட்ட படங்கள்
நம் உடைய திரியில் இது நிச்சயம் சிலாகிகபடும் என்று நினைக்கிறன்
-
24th June 2014, 10:19 AM
#820
வாசு சார்
கோலார் தங்க வயலில் வெட்டி எடுக்கப்பட்ட ஒரு நல்ல உறவு முறை
பாடல் ஒன்றை கண்ணதாசன் பிறந்த நாள் அன்று நினவு படுத்தி உள்ளீர்கள் .இந்த பாடலை பற்றி சொல்வது என்றால்
நமக்கு இறைவன் கொடுத்த நலங்கள் தாயல்லவா
அனைத்து வளர்த்த தகப்பன் குணத்தில் சேயல்லவா
இல்லம் கோயில் அல்லவா
தெய்வம் காவலல்லவா
அன்பு தீபமல்லவா
இதை விட வேறு எந்த வார்த்தைகளால் நம் உறவு முறையை
சிறப்பிக்க முடியும்
3 தினகளுக்கு முன் பம்மல் கண்ணதாசன் தமிழ் சங்கம் வாணி மஹால்
கலை அரங்கில் முனைவர் சரஸ்வதி ராமநாதன் அவர்கள் தலைமையில்
பாரதி ராஜா அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது . மேலும் காதலிக்க நேரமில்லை 50 வது ஆண்டு பொன்விழா
கொண்டாட்டமாக திரு c.v கோபு அவர்க ளும் பாராட்ட பட்டார்கள்
நானும் சென்று இருந்தேன் .
அங்கு சாஸ்த தாசன் என்பவர் ஒரு மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்
மிக நல்ல அரிய கண்ணதாசனின் பாடல்களை எல்லாம் பாடினர்
எடுத்துகாட்டாக
"வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் "
"கோயில் மணி ஓசை தன்னை "
"நாளாம் நாளாம் திருநாளாம் "
"அனுபவம் புதுமை "
"விஸ்வநாதன் வேலை வேண்டும் "
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks