Page 131 of 400 FirstFirst ... 3181121129130131132133141181231 ... LastLast
Results 1,301 to 1,310 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1301
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கார்த்திக் சார்

    எனக்கு மிகவும் பிடித்த மெல்லிசை மாமணி குமார் அவர்கள் இசை அமைத்த பொம்மலாட்டம் படப் பாடல்களை நினைவு படுத்தியதற்கு நன்றி!

    தங்களால் நந்தனும் வந்தான்.

    'மயக்கத்தைத் தந்தவன் யாரடி' என்னுடைய பேவரைட்.

    அழகென்று நினைத்து பழகிடும் போது
    அசடாயிருந்தால் என்னாவது
    சொத்து சுகக்காரன் மெத்தப் படித்தாலும்
    பித்துக்குளியானால் சுகமேதடி

    அருமையான வரிகள். காதலை காய்ச்சி எடுக்கும் பாடல்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1302
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கார்த்திக் சார்

    எனக்கு மிகவும் பிடித்த மெல்லிசை மாமணி குமார் அவர்கள் இசை அமைத்த பொம்மலாட்டம் படப் பாடல்களை நினைவு படுத்தியதற்கு நன்றி!

    தங்களால் நந்தனும் வந்தான்.

    'மயக்கத்தைத் தந்தவன் யாரடி' என்னுடைய பேவரைட்.

    அழகென்று நினைத்து பழகிடும் போது
    அசடாயிருந்தால் என்னாவது
    சொத்து சுகக்காரன் மெத்தப் படித்தாலும்
    பித்துக்குளியானால் சுகமேதடி

    அருமையான வரிகள். காதலை காய்ச்சி எடுக்கும் பாடல்.

    'பொம்மலாட்டம்' படத்தில் கார்த்திக் சார் குறிப்பிட்ட பாடல்.


    நீ ஆட ஆட அழகு
    நான் பாடப் பாட பழகு
    வந்தாடு தந்தாடு
    என்னோடு நீயும் வா வா

    விரியாத மொட்டே நீ விரிந்தாடவா
    விளைவாகும் நிலவே நீ விரைவாக வா
    வீணைக்கு நானுண்டு
    பாட்டே நீ வா
    விடிந்தாலும் மஞ்சம் கொஞ்சத் தாலாட்ட வா

    நீ ஆட ஆட அழகு
    நான் பாடப் பாட பழகு
    வந்தாடு தந்தாடு
    என்னோடு நீயும் வா வா

    பாடலின் ஆரம்பத்தில் வரும் கிடார் இசை அதன் பின்னே வரும் சிதார் இசை அற்புதம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1303
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    உன்னுடைய விருப்பத்தைக் கேட்டுக் கொள்.

    http://www.saavn.com/s/song/tamil/Ne...ar/IicyaEJ2Rgs
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1304
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    யாரடி வந்தார் பாட்டில் விஸ்வநாதன் விளையாட்டில் ராட்ஷஷி.அமர்க்களம். போனஸ் ஆக ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா வேறு.

    ரங்க ராட்டினம் படத்திலேயே தங்க தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #1305
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1306
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மங்கள வாத்யம் 1979 சரிகமபதநீ
    கே.ஷங்கர் இயக்கம்
    இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
    தயாரிப்பு கோபிக்ரிஷ்ணன் (மெல்லிசை மன்னரின் புதல்வர் )
    பாடல்கள் கண்ணதாசன்
    திரை கதை வசனம் கலைமணி
    எடிட்டிங் கிருஷ்ணன்
    கேமரா ராஜாராம்
    கலை பாபு
    வெளியான நாள் 21/9/1979

    நடிகர் நடிகைகள் - கமல்ஹாசன்,ஸ்ரீப்ரியா,ஸ்ரீகாந்த்,நம்பியார்,நாகேஷ்,க ாந்திமதி,
    மகேந்திரன்

    மாமியார் மருமகள் உறவு முறை பற்றிய கதை .கமல் திக்கு வாய் கதாபாத்திரம்
    சாவி வார பத்திரிகையில் இந்த படத்தை பற்றி மிகவும்
    'சிலாகித்து' எழுதிய ஒரு வரி விமர்சனம்
    "ஒரு பொண்ணோட இதை அதை கொண்டவன் தான் தொடணும்
    எதை
    அவள் கொண்டையை "
    இப்படி தொடை இடுக்கில் கையை வைத்து கொண்டு சிரிக்க வைக்கும்
    சில வசனங்கள் - மொத்தத்தில் அபஸ்வரம்

    மிகவும் எதிர்பார்கபட்டு தோல்வியை தழுவிய படம்

    பாலா வாணியின் குரல்களில் கனவு பாடல்

    "ராஜாத்தி குங்குமம் சிங்காரம்
    ராஜாவின் பக்கத்தில் ஸ்ரிங்காரம்
    ஆரம்ப ராகம் அதிசய மேளம்
    ஆனந்தம் பாடும் மங்கள வாத்யம் "

    அமர்களமான ஆரம்ப இசை ,நாதஸ்வர இசையுடன் கூடிய இணை இசை படத்தின் தலைப்புக்கு பொருத்தமாக



    பாடகர் திலகம் குரலில்
    "வெள்ளை காக்கா மல்லாக்க பறக்க " தத்துவ பாடல்

    விஸ்வநாதன் ஜானகி குரல்களில்
    "துள்ளி வரும் காளை " -

    ஜானகி குரலில் "சொர்க்கம் தெரிகிறது "

    இது போக பாலாவிற்கு ஒரு சோலோ நினைவில் உண்டு
    "வண்டினா வண்டிதான் "

    விஸ்வநாதனின் சொந்த படத்தில் ஈஸ்வரிக்கு பாடல் இல்லை
    என்ன கொடுமை இது சரவணன்

    வாசு சார் இதுக்கு ஆடியோ வீடியோ லிங்க் எதாவது கிடைச்சா அவுத்து விடுங்க
    gkrishna

  8. #1307
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    எஸ்வி சார்

    மிக அருமையான பழைய பத்திரிகையின் இணைப்பு
    உடன் இது வரை காண கிடைக்காத தகவல்கள்
    மிக்க நன்றி
    தொடரட்டும் உங்கள் பணி
    gkrishna

  9. #1308
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (20)

    இன்று ஒரு பழைய பாடல். அற்புதமான பாடல்.



    படம் ; இது சத்தியம்
    இயக்குனர் : கே. சங்கர்
    நடிப்பு :அசோகன், சந்திரகாந்தா
    இசையமைப்பு : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    தயாரிப்பாளர் : 'சரவணா பிக்சர்ஸ்' ஜி. என். வேலுமணி
    படம் வெளியான வருடம் :1963


    ஆனால் பாடல் போய்ச் சேர்ந்த நடிகர்கள்தான்?



    அசோகனுக்கும், சந்திரகாந்தாவுக்கும் இப்பாடல் ஒத்துப் போவதாகத் தெரியவில்லை. (சந்திரகாந்தா நம்ம நம்ம அலட்டல் நடிகர் 'அக்கா' சண்முகசுந்தரம் அவர்களின் தங்கை. அப்படியே சண்முகசுந்தரத்திற்கு பெண் வேடம் போட்ட மாதிரியே தெரிகிறார்)

    அருமையான டூயட் கேட்க மட்டுமே! அவ்வ்வளவு இனிமை. பார்க்க அவ்வளவு சுவாரஸ்யமில்லை.

    பாடக திலகங்கள் இருவரின் வளமான குரலில் வஜ்ரம் போல் நம் மனதில் ஒட்டிக்கொண்ட பாடல்.

    மெல்லிசை மாமன்னர்களின் அசாத்திய திறமை பாடல் முழுதும் எதிரொலிக்கிறது. குறிப்பாக ஷெனாயின் பங்களிப்பு இதிலும்.


    இனி பாடல்.

    மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
    கல்லும் கனியாகும்

    ஹாஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹாஹா ஹாஹஹா

    மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
    கல்லும் கனியாகும்
    முதன்முதலாக அவள் கைகள் விழுந்தால்
    முள்ளும் மலராகும்
    ஆஹா முள்ளும் மலராகும்
    ஆஹா கல்லும் கனியாகும்

    பாதிக் கண்ணை மூடித் திறந்து
    பார்க்கும் பார்வை காதல் விருந்து
    ம்...ம்..ம்...ம்...ம்ம்
    பாதிக் கண்ணை மூடித் திறந்து
    பார்க்கும் பார்வை காதல் விருந்து
    ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு
    சாறு கொண்ட காதல் கரும்பு
    அன்னம் என்ற நடையினைக் கண்டு
    மன்னர் தம்மை மறந்ததுமுண்டு
    அன்னம் என்ற நடையினைக் கண்டு
    மன்னர் தம்மை மறந்ததுமுண்டு

    மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
    கல்லும் கனியாகும்
    முதன்முதலாக அவள் கைகள் விழுந்தால்
    ஆஹா முள்ளும் மலராகும்
    ஆஹா கல்லும் கனியாகும்

    ஹாஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹாஹா..

    வாழைத் தோட்டம் போல இருந்தாள்
    வண்டு போலப் பாடித் திரிந்தாள்
    ஆ ..ஆ ..ஆ ..ஆ ..ஆ..

    வாழைத் தோட்டம் போல இருந்தாள்
    வண்டு போலப் பாடித் திரிந்தாள்
    தென்னம்பாளை போலச் சிரித்தாள்
    சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள்
    கன்னம் என்ற கனிகளின் மீது
    இன்னும் நாணம் மோதுவதேனோ

    அவள் இவள்தானா
    இவள் அவள்தானா
    அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
    அவள் வரலாமா நலம் பெறலாமா
    அவர் சம்மதம் தரலாமா
    அவர் சம்மதம் தரலாமா
    அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா

    வானம்பாடி போலப் பறந்தாள்
    வாழ்வு தேடித் தேடி அலைந்தாள்
    காதல் தந்த கள்வனைக் கண்டாள்
    தன்னை தந்த கையில் விழுந்தாள்
    தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
    நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
    தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
    நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்

    அவள் இவள்தானா
    இவள் அவள்தானா
    அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
    அவள் வரலாமா நலம் பெறலாமா
    அவர் சம்மதம் தரலாமா
    அவர் சம்மதம் தரலாமா
    அவர் சம்மதம் தரலாமா

    ஹாஹஹஹா ஹாஹஹஹா ஹாஹஹஹா....


    Last edited by vasudevan31355; 3rd July 2014 at 10:32 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1309
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்வி சார்

    அருமையான பழைய ஆவணத்திற்கு நன்றி! இன்னும் தொடரவும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1310
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Brilliant Vinod.Thanks.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •