Page 138 of 400 FirstFirst ... 3888128136137138139140148188238 ... LastLast
Results 1,371 to 1,380 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1371
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    you tube error காண்பிக்கிறதே . உங்களுக்கு?
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1372
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    முத்தான முத்துசிப்பி பாடலை ரசித்தேன். பிடித்த பாடல்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1373
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'முத்துச்சிப்பி' படத்தில் பாடல்கள் ஏ.ஒன் ராகம்.



    ஒருநாள் பழகிய பழக்கமல்ல
    மறுநாள் மறப்பதேன் வழக்கமல்ல
    நீயென்றும் நானென்றும் இருவரல்ல
    நிழல்தான் உயிரை சுடுவதில்லை

    சுசீலா, டி.எம்.எஸ்ஸின் குரலில் கணீரென்று ஒலிக்கும் பாடல்.

    பாடகியர் திலகத்தின் இன்னொரு பாடல்

    ஜெயலலிதா அவர்கள் ஆடிப்பாடும்

    அழகுத் திருமேனி தெரிகின்றதா
    ஆடை அலங்காரம் மறைக்கின்றதா

    ('எங்கிருந்தோ வந்தாள்' 'படத்தின் வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக' பாணியில்)

    அப்புறம் கேட்கவே வேண்டாம்



    ஜெயா டிவியின் தேசிய கீதம்

    'தொட்ட இடம் துலங்க வரும்'

    அம்மா! போரடித்து விட்டது. வி.ஐ.பிக்கள் சிறப்புத் தேன் கிண்ணத்தில் வேறு விருப்பமாகச் சொல்லி உயிர் குடிப்பார்கள்.

    எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை. என்னுடைய முதல் தேர்வு ஒருநாள் பழகிய பழக்கமல்ல.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1374
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பொன்வண்டு 1973
    ஜெய் ஜெயசித்ரா உஷா நந்தினி சுபா பாரதி மனோரமா நடித்த
    மணியம் pictures NS மணியம் இயக்கம்
    மெல்லிசை மாமணி குமார் இசையில்

    ஜெய் யை நான்கு பெண்கள் விரும்புவார்கள். நடுவில் நடுத்தர வயது மனோரமாவும் விரும்புவார் . ஜெய் யாரை திருமணம் செய்து கொள்கிறார் என்பது தான் கதை . கொஞ்சம் காமெடி நல்ல இருந்தததாக நினைவு

    சூரிய காந்தி படத்தில் கூட "தெரியாதோ நோக்கு தெரியாதோ " பாடலில் இந்த கட் அவுட் வரும்

    பாடகர் திலகம் சுசீலா ஈஸ்வரி குரல்களில் "பொன்வண்டு பொன்வண்டு வாடியம்மா பொன்வண்டு "
    பாடகர் திலகம் ஸ்வர்ணா குரல்களில்
    "பனி மலரோ குளிர் நிலவோ உன் பார்வை என்ன பொருளோ "
    ஸ்வர்ணாவின் அருமையான ஹம்மிங்
    மனோரமா அவர் சொந்த குரலில் நம்ம NT நினைப்பில் "யாருக்காக இது யாருக்காக "


    Attached Images Attached Images
    gkrishna

  6. #1375
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் கோபால் சார்,

    என்னைப்பொருத்தவரை எம்.எஸ்.வி. செய்த உலகமகா தவறு என்பது மீண்டும் அவர் ராமமூர்த்தியோடு இணைந்ததுதான்.
    இந்த விஷயத்தில் நமக்குள் படு ஒற்றுமை. என் கருத்து படி ராமமூர்த்தி செய்த மாபெரும் தவறு முதல் முறை விஸ்வநாதனோடு
    இணைந்ததுதான்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1376
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    pani malaro is a good tune by kumar. Ofcourse ,nothing for visual. Thanks Vasu.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #1377
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Muthu sippi is a good Film. Mohan productions have made some good Films like Mannippu,Muthu Sippi. Extraordinary work by S.M.S in Mannippu. Interesting movie too. AVM Rajan gave a scintilating performance.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #1378
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    நன்றி சார் முத்துசிப்பியின் பிற பாடல்களுக்கு

    அப்போதே சொன்னேனே கேட்டியா படத்தில் இருந்து
    ஜேசு வாணி குரல்களில் ஒரு பாடல் பதிந்து இருந்தேன்.
    கண்ணதாசன் எழுதிய எளிய தமிழ் வரிகளில் ரொம்ப positive சாங் சார்
    நீங்களும் கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன்
    எனக்கு அந்த வரிகள் ரொம்ப பிடித்து இருந்தது.


    "பூமியின் நீர் உண்டு
    நதி தரும் நீர் உண்டு
    பூஞ்செடி வளர் காட்சி கண்டாய் முன்னே
    தாய் தரும் பால் உண்டு
    தமிழ் எனும் தேன் உண்டு
    உலகத்தில் உயர்வென்று வளர்வாய் கண்ணே
    ரோஜாக்கள் மலரும் ஆனந்த பவனம்
    நமதில்லம் தானே பாப்பா
    ராஜாவை போல மஹா ராணி போல
    வருவீர்கள் நீங்கள் பாப்பா
    சிரிப்புக்கு இதழ் தந்த தெய்வங்களே
    சிறப்புடன் வரவேண்டும் செல்வங்களே "

    இளைய தலைமுறை இனிய தலைமுறையாக

    பதிவின் நடுவிலே படங்களை இணைப்பது எப்படி என்று கேட்டு இருந்தேன்
    எஸ்வி சார் கூட சொல்லி இருந்தார் tiny picture மூலமாக .
    முயற்சி செய்தேன் .

    கொஞ்சம் செய்முறை விளக்கம் தர முடியுமா
    gkrishna

  10. #1379
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    பட்டணத்தில் பூதம் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமையாக, வித்தியாசமாக படமாக்கப்பட்டிருக்கும். ஆர்.கோவர்த்தனம் இசையில் கண்ணதாசனின் பாடல்கள் அனைத்தும் மிக இனிமை.

    பூதம் ஜீபூம்பா வினால் ஏற்பாடு செய்த வரவேற்பில் கதாநாயகன் பாஸ்கரோடு (மக்கள் கலைஞர் ஜெய்) அழகிகளை ஆடவைக்க, அதை அங்கே வந்த லதா (கே.ஆர்.விஜயா) பார்த்துவிட வந்தது வினை. நாயகனோடு நாயகி முறுக்கிக்கொண்டு மலையேறி விடுகிறாள். அவளை சமாதானம் செய்யும் வண்ணம் கதாநாயகன் பாடுவதுதான் 'கண்ணே கண்டதெல்லாம் காட்சியா' என்ற பாடல்.

    வழக்கமாக இதுபோன்ற பாடல்களில் பாடல் முடியும் தருவாயில் இருவரும் சமாதானம் ஆகி விடுவார்கள். ஆனால் இந்தப்பாடலில் நாயகன் என்ன சமாதானம் செய்தும் எடுபடவில்லை. கதாநாயகி போயே போய் விடுகிறார்.

    நைட் எபெக்டில் படமாக்கப்பட்ட பாடல். சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த (இப்போது இல்லை) மாநகராட்சி நீச்சல்குளத்தில் படமாக்கப்பட்டது. நீச்சல் உடையில் கே.ஆர்.விஜயா நடித்த ஒரே படம், ஒரே பாடல். பேண்ட், டி ஷர்ட்டில் மக்கள் கலைஞர். அழகான வண்ணத்தில் காட்சி.

    கண்ணே கண்டதெல்லாம் காட்சியா
    உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
    பெண் தேகமே வெறும் சந்தேகமா
    கோபம் வானவில்லின் வர்ணஜாலமா

    மூடிவைத்த கைகளிலே முத்தும் இருக்கும்
    ஒரு முள்ளும் இருக்கும்
    தேடி வந்த கண்களிலே தேவை இருக்கும்
    நூறு பாவை இருக்கும்
    தெய்வம் வந்து சாட்சி சொன்னால் கோபம் தீருமா
    தெய்வம் பொய்யும் கூறுமா

    படம் வந்த காலத்தில் விஜயாவின் நீச்சல் உடை போஸ் அனைத்து போஸ்ட்டர்களிலும், அனைத்து விளம்பரங்களிலும் இடம்பெற்றிருந்தது...

  11. #1380
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Post

    சூப்பர் பாட்டு கார்த்திக் சார்

    கதாநாயகி போயி போய் விடுகிறார்



    நேற்று இதயக்கனி படத்தில் ராதா சலுஜாவின் நீச்சல் உடை உடன் கூடிய
    பாடகர் திலகம் குரலில்
    "புன்னைகையில் கோடி
    பூங்கவிதை பாடி
    கண்ணிரண்டில் மேவி
    காட்சி தரும் தேவி
    பெண் ஒருத்தி உன் போலே
    இன்னொருத்தி ஏது
    விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது
    ஓன்றும் அறியாத பொண்ணோ உண்மை மறைதாளோ கண்ணோ
    மாற்று குறையாத பொண்ணோ மயுங்குது நெஞ்சம் தயுங்குது கொஞ்சம் "

    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •