பொன்வண்டு 1973
ஜெய் ஜெயசித்ரா உஷா நந்தினி சுபா பாரதி மனோரமா நடித்த
மணியம் pictures NS மணியம் இயக்கம்
மெல்லிசை மாமணி குமார் இசையில்
ஜெய் யை நான்கு பெண்கள் விரும்புவார்கள். நடுவில் நடுத்தர வயது மனோரமாவும் விரும்புவார் . ஜெய் யாரை திருமணம் செய்து கொள்கிறார் என்பது தான் கதை . கொஞ்சம் காமெடி நல்ல இருந்தததாக நினைவு
சூரிய காந்தி படத்தில் கூட "தெரியாதோ நோக்கு தெரியாதோ " பாடலில் இந்த கட் அவுட் வரும்
பாடகர் திலகம் சுசீலா ஈஸ்வரி குரல்களில் "பொன்வண்டு பொன்வண்டு வாடியம்மா பொன்வண்டு "
பாடகர் திலகம் ஸ்வர்ணா குரல்களில்
"பனி மலரோ குளிர் நிலவோ உன் பார்வை என்ன பொருளோ "
ஸ்வர்ணாவின் அருமையான ஹம்மிங்
மனோரமா அவர் சொந்த குரலில் நம்ம NT நினைப்பில் "யாருக்காக இது யாருக்காக "
Muthu sippi is a good Film. Mohan productions have made some good Films like Mannippu,Muthu Sippi. Extraordinary work by S.M.S in Mannippu. Interesting movie too. AVM Rajan gave a scintilating performance.
அப்போதே சொன்னேனே கேட்டியா படத்தில் இருந்து
ஜேசு வாணி குரல்களில் ஒரு பாடல் பதிந்து இருந்தேன்.
கண்ணதாசன் எழுதிய எளிய தமிழ் வரிகளில் ரொம்ப positive சாங் சார்
நீங்களும் கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன்
எனக்கு அந்த வரிகள் ரொம்ப பிடித்து இருந்தது.
"பூமியின் நீர் உண்டு
நதி தரும் நீர் உண்டு
பூஞ்செடி வளர் காட்சி கண்டாய் முன்னே
தாய் தரும் பால் உண்டு
தமிழ் எனும் தேன் உண்டு
உலகத்தில் உயர்வென்று வளர்வாய் கண்ணே
ரோஜாக்கள் மலரும் ஆனந்த பவனம்
நமதில்லம் தானே பாப்பா
ராஜாவை போல மஹா ராணி போல
வருவீர்கள் நீங்கள் பாப்பா
சிரிப்புக்கு இதழ் தந்த தெய்வங்களே
சிறப்புடன் வரவேண்டும் செல்வங்களே "
இளைய தலைமுறை இனிய தலைமுறையாக
பதிவின் நடுவிலே படங்களை இணைப்பது எப்படி என்று கேட்டு இருந்தேன்
எஸ்வி சார் கூட சொல்லி இருந்தார் tiny picture மூலமாக .
முயற்சி செய்தேன் .
பட்டணத்தில் பூதம் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமையாக, வித்தியாசமாக படமாக்கப்பட்டிருக்கும். ஆர்.கோவர்த்தனம் இசையில் கண்ணதாசனின் பாடல்கள் அனைத்தும் மிக இனிமை.
பூதம் ஜீபூம்பா வினால் ஏற்பாடு செய்த வரவேற்பில் கதாநாயகன் பாஸ்கரோடு (மக்கள் கலைஞர் ஜெய்) அழகிகளை ஆடவைக்க, அதை அங்கே வந்த லதா (கே.ஆர்.விஜயா) பார்த்துவிட வந்தது வினை. நாயகனோடு நாயகி முறுக்கிக்கொண்டு மலையேறி விடுகிறாள். அவளை சமாதானம் செய்யும் வண்ணம் கதாநாயகன் பாடுவதுதான் 'கண்ணே கண்டதெல்லாம் காட்சியா' என்ற பாடல்.
வழக்கமாக இதுபோன்ற பாடல்களில் பாடல் முடியும் தருவாயில் இருவரும் சமாதானம் ஆகி விடுவார்கள். ஆனால் இந்தப்பாடலில் நாயகன் என்ன சமாதானம் செய்தும் எடுபடவில்லை. கதாநாயகி போயே போய் விடுகிறார்.
நைட் எபெக்டில் படமாக்கப்பட்ட பாடல். சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த (இப்போது இல்லை) மாநகராட்சி நீச்சல்குளத்தில் படமாக்கப்பட்டது. நீச்சல் உடையில் கே.ஆர்.விஜயா நடித்த ஒரே படம், ஒரே பாடல். பேண்ட், டி ஷர்ட்டில் மக்கள் கலைஞர். அழகான வண்ணத்தில் காட்சி.
கண்ணே கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
பெண் தேகமே வெறும் சந்தேகமா
கோபம் வானவில்லின் வர்ணஜாலமா
மூடிவைத்த கைகளிலே முத்தும் இருக்கும்
ஒரு முள்ளும் இருக்கும்
தேடி வந்த கண்களிலே தேவை இருக்கும்
நூறு பாவை இருக்கும்
தெய்வம் வந்து சாட்சி சொன்னால் கோபம் தீருமா
தெய்வம் பொய்யும் கூறுமா
படம் வந்த காலத்தில் விஜயாவின் நீச்சல் உடை போஸ் அனைத்து போஸ்ட்டர்களிலும், அனைத்து விளம்பரங்களிலும் இடம்பெற்றிருந்தது...
நேற்று இதயக்கனி படத்தில் ராதா சலுஜாவின் நீச்சல் உடை உடன் கூடிய
பாடகர் திலகம் குரலில்
"புன்னைகையில் கோடி
பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி
காட்சி தரும் தேவி
பெண் ஒருத்தி உன் போலே
இன்னொருத்தி ஏது
விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது
ஓன்றும் அறியாத பொண்ணோ உண்மை மறைதாளோ கண்ணோ
மாற்று குறையாத பொண்ணோ மயுங்குது நெஞ்சம் தயுங்குது கொஞ்சம் "
Bookmarks