-
5th July 2014, 04:17 PM
#1381
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
இந்த விஷயத்தில் நமக்குள் படு ஒற்றுமை. என் கருத்து படி ராமமூர்த்தி செய்த மாபெரும் தவறு முதல் முறை விஸ்வநாதனோடு
இணைந்ததுதான்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
1952-லிருந்தே இருவரும் தனித்து இயங்கியிருந்தால், ராமமூர்த்தி அப்பவே காணாமல் போயிருப்பார். காரணம் நீங்களே சொல்லியிருக்கிறீர்களே. அவருக்கு ஆள் பிடிக்கத் தெரியாது என்று. வெறும் திறமையை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து என்ன பயன்?. இருக்கும் சரக்கை கடைவிரிக்கத் தெரிந்த விஸ்வநாதன் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்திருப்பார். ஜி.இராமநாதன் கர்னாடக இசையில்தான் புலி. மெல்லிசையில் அவர் ஒரு பூனையே. எனவே அவரை சமாளிப்பது எம்.எஸ்.வி.க்கு பெரிய சவாலாக இருந்திருக்காது.
-
5th July 2014 04:17 PM
# ADS
Circuit advertisement
-
5th July 2014, 04:20 PM
#1382
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (22)
இன்று ஒரு அரிதான பாடல்.
'சூதாட்டம்' 1971-ல் வந்த படம்..
ஜெய்சங்கர், முத்துராமன், கே.ஆர்.விஜயா, சிவக்குமார், நிர்மலா நடித்திருந்தனர்.
மதுரை திருமாறன் இயக்கிய படம் இது என்று நினைவு.

சுசீலா சூதாட்டத்தில் பாடிய 'விளக்கேற்றி வைக்கிறேன்' பாடல் வீட்டுக்கு வீடு ஒலித்தது. சாதரண ஹிட்டல்ல. பேய் ஹிட்.
இந்தப் படத்தில் அருமையான இளமை பொங்கும் ஒரு டூயட். சிவக்குமாரும், நிர்மலாவும் அவ்வளவு கியூட்டாக இருப்பார்கள் made for each other போலே. செமை ஜோடிப் பொருத்தம். இருவரும் கண்பட்டுவிடும் அழகு. ஒளிப்பதிவும் பளிச்.
பாலாவும், ராட்சஸியும் பாடிய இன்னொரு உற்சாகத் துள்ளல் பாடல்.
அந்தக் கொஞ்சல்களும், கெஞ்சல்களும் காதுகளை விட்டு அகலாதவை.
இந்த இருவரும் இணைந்த இன்னொரு அதகள நிகழ்வு.
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்
தொட்டுத் துடிக்க
நான் கட்டிப் பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன்
கொட்டிக் குவிக்க
கொட்டிக் குவிக்க
தட்டிப் பறிக்க
இன்றுமுதல்
நாளை வரை
என் மடியில்
நீ இருந்தால்
ஒன்று முதல்
நூறுவரை
நல்ல கதை
நான் படிப்பேன்
(ஷெனாய் குதூகலம். அடடா! என் செல்போனின் ரிங்க் டோனாக இருந்தது.)
தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட
தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட
சுவை தோன்றுமா பசி தீருமா
அந்த சொர்க்கம் எங்கே கொண்டு செல்லம்மா (பாலா கொஞ்சல் கெஞ்சல்)
தேரோட்டம் கால்களிலே கண்டு
நூலாட்டம் இடையினிலே நின்று
கன்னம் கொஞ்சம் நேரம் கனியானால்
சுவை தோன்றலாம் பசி தீரலாம் (ராட்சஸி 'லா' க்களில் பட்டை உரிப்பார் )
அந்த சொர்க்கம் என்னவென்று சொல்லலாம்
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறுவரை
நல்ல கதை நான் படிப்பேன்
லாஹஹாஹா லாஹஹாஹா லாஹஹாஹா லாஹஹாஹாஹா
பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம்
போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட
பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம்
போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட
மலர் வாடையோ
சிறு போதையோ (போதை சொல்லும் போது நிஜமாகவே ஒபோதை ஏறும்)
இந்த மங்கை சொல்லும்
இன்பம் ஒன்றல்ல
நீரோடும் நதியினிலே வெள்ளம்
ஏதேதோ எண்ணுதடி உள்ளம்
மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்
நான் உன்னிடம் நீ என்னிடம்
நீ சொல்லச் சொல்லக் கேட்பேன் சொல்லலாம்.
தொட்டுத் துடிக்க
நான் கட்டிப் பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன்
கொட்டிக் குவிக்க
கொட்டிக் குவிக்க
தட்டிப் பறிக்க
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறுவரை
நல்ல கதை நான் படிப்பேன்
லாஹஹாஹா லாஹஹாஹா லாஹஹாஹா லாஹஹாஹாஹா
Last edited by vasudevan31355; 5th July 2014 at 04:25 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
5th July 2014, 04:52 PM
#1383
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
சூதாட்டம் மதுரை திருமாறன் இயக்கிய படம்தான். எம்.எஸ்.காசியின் தயாரிப்பு. 1971-ல் சக்கைபோடு போட்ட படங்களில் ஒன்று. வெலிங்டனில் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக நினைவு. பேனர்களெல்லாம் வெளுத்துப்போய் நார் நாராக கிழிந்து தொங்கியபோதும் அந்த தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது.
சூதாட்டத்தை தொடர்ந்து திருமாறன் வாயாடி, திருடி, மேயர் மீனாட்சி, சொந்தங்கள் வாழ்க என்று பல படங்கள் இயக்கினார்.
'விளக்கேற்றி வைக்கிறேன்' பாடல் அந்த ஆண்டின் (1971) விவிதபாரதியின் சூப்பர் டூப்பர் ஹிட்களில் ஒன்று.
மற்ற ஹிட்கள்....
நீயில்லாத இடமே இல்லை அல்லா அல்லா
ஆலயமாகும் மங்கை மனது
பொட்டுவைத்த முகமோ
அழகிய தமிழ்மகள் இவள்
நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன்
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
தேரு பார்க்க வந்திருக்கும் சித்திர பெண்ணே
வசந்தத்தில் ஓர் நாள்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
உத்தரவின்றி உள்ளே வா
தேனாற்றங்கரையினிலே
எங்கே அவள் என்றே மனம்
உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
கடலோரம் வாங்கிய காற்று
எதையும் தாங்குவேன் அன்புக்காக
-
5th July 2014, 05:03 PM
#1384
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
டியர் கோபால் சார்,
'ஒரு நாளிலே உறவானதே' (தலைவரின் மிகச்சிறந்த டூயட்களில் ஒன்று)
மிக ரம்மியமான மேலோடி, குறிப்பாக ப்ளூட் மற்றும் சிதார் விளையாட்டு. இதைத்தொடர்ந்து வரும் சண்டைக்காட்சி சொதப்பல். தரையில் சண்டையிடுவதாக மட்டும் காட்டாமல் தண்ணீருக்குள்ளும் குதித்தது மேலும் சொதப்பல்.
.
'ஒரு நாளிலே உறவானதே' (தலைவரின் மிகச்சிறந்த டூயட்களில் ஒன்று)
இதற்கு(சண்டைக்காட்சி ) பதிலாக இன்னொரு சரணம் சேர்த்து சிவாஜி-காஞ்சனாவை தண்ணீருக்குள் கொண்டு போயிருக்கலாம் ஸ்ரீதர்.
-
5th July 2014, 05:17 PM
#1385
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
நீங்கள் சொல்வது உண்மைதான்.
1952-லிருந்தே இருவரும் தனித்து இயங்கியிருந்தால், ராமமூர்த்தி அப்பவே காணாமல் போயிருப்பார். காரணம் நீங்களே சொல்லியிருக்கிறீர்களே. அவருக்கு ஆள் பிடிக்கத் தெரியாது என்று. வெறும் திறமையை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து என்ன பயன்?. இருக்கும் சரக்கை கடைவிரிக்கத் தெரிந்த விஸ்வநாதன் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்திருப்பார். ஜி.இராமநாதன் கர்னாடக இசையில்தான் புலி. மெல்லிசையில் அவர் ஒரு பூனையே. எனவே அவரை சமாளிப்பது எம்.எஸ்.வி.க்கு பெரிய சவாலாக இருந்திருக்காது.
தலைவரே,
உங்களிடம் என்னை மிக மிக கவர்ந்ததே இந்த naive innocence .
ராமமூர்த்தியிடம் சேராதிருந்தால் இசையாவது மண்ணாவது.M.S.V திறமையான ஆப்பிஸ் பணியாளராக இருந்திருப்பார்.என்னுடன் அறிமுகம் ஏற்பட்டிருந்தால்,அவருக்கு சினிமா கம்பனிகள் ஒழுங்காக பணம் தருவதில்லை என்று வேலைக்கு விண்ணப்பித்திருப்பார்.(நான் வேலைக்கு எடுத்திருப்பேனா என்பது வேறு விஷயம்).
நான் அவரை 0 என்று சொல்லவே இல்லை.(நீங்கள் எழுதிய படி)
அவரிடம்(M.S.V) கீழ்கண்ட சிறப்புகள் உண்டு.
நிர்வாக திறமை. P .R .Skills .
தனக்கு தெரிந்ததோ இல்லையோ ,சிறந்த நிர்வாகியாய் மற்றோரிடம் வேலை வாங்கும் திறமை.
என்ன tune violin இல் வாசித்தாலும் அப்படியே ஆர்மோனியம் வைத்து திருப்பி வாசித்து காட்டி எல்லோரையும் அசத்துவார்.
அவரின் நடிப்பு என்னை மிக மிக கவரும்.ஒரு அடக்கமான ஒன்னும் தெரியாத அப்பாவி போல மெகா டி.வீயில் தொடரும் நடிப்பு.(படிக்காத மேதையை விட சிறப்பு)
சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு mozard range இல் கை காலை ஆட்டி ஒரு இசை நடத்துனர் போல நடிக்கும் நடிப்பு superb .
Last edited by Gopal.s; 5th July 2014 at 05:20 PM.
-
5th July 2014, 05:24 PM
#1386
காலங்களில் அவள் வசந்தம் 1976
விஜயபாஸ்கர் films
பஞ்சு அருணாசலம் கதை வசனம்
sp முத்துராமன் இயக்கம்
விஜயபாஸ்கர் இசை
முத்துராமன் ஸ்ரீவித்யா மற்றும் சந்திரகலா நடித்து வெளிவந்த
கருப்பு வெள்ளை
ஸ்ரீவித்யா சந்திரகலா அக்கா தங்கை .தங்கைகாக அக்கா தன கணவனை தியாகம் செய்வது . ஸ்ரீவித்யா ஒரு ஹிஸ்டீரியா நோயாளி ஆக வருவார்.
இதே கதை 1986 கண்மணியே பேசு னு சிவகுமார் லக்ஷ்மி அம்பிகா நடித்து வெளி வந்த நினவு
(எல்லாத்துக்கும் மூலம் சசி கபூர் , ராக்கி, ரேகா நடித்து வெளிவந்த ஹிந்தி படம் basera )
விஜய பாஸ்கர்க்கு வாணி குரலில் சில நல்ல பாடல்களை கொடுத்து உள்ளார்
பாலா வாணி குரல்களில் மிக மென்மையான டூயட்
திருமணத்திற்கு முன்னேயே எல்லாம் செய்யனும்னு ஹீரோ
ஹீரோயின் அதல்லாம் கிடையாது எல்லாம் கல்யாணத்திற்கு பின் தான்
பாலா : முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
வாணி: முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது
பாலா : உன்னை நானும் என்னை நீயும் உணர்ந்த பின்னாலே
உன்னை தொட்டு ஆடி மகிழ தடைகள் சொல்லாதே
வாணி :மனதில் மனது சேர்ந்த போதும் மாலை வேண்டாமா
மாலை ஒன்று போட்ட பின்னால் மடியில் விழலாமே
பாலா :பருவகாலத்தின் புதிய கனவுகள் காத்து கிடப்பதில்
என்ன லா பம்
வாணி : இந்த அழகும் பருவ சுகமும் நிலைத்து நிற்காது
நெஞ்சில் வளரும் உண்மை அன்பு என்றும் மாறாது
பாலா: அந்த உண்மை அறியும் உள்ளம் எனக்கு கிடையாதா ?
அதுவும் வேண்டும் , இதுவும் வேண்டும் , உனக்கு தெரியாத ?
வாணி: அதுவும் புரியுது இதுவும் தெரியிது
காலம் கனியட்டும் அள்ளி தருவேன் !
அது இது எது சார்
இன்னொரு பாட்டு வாணிக்கு
"மனமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது
மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது "
ஷெனாய் நாதஸ்வரம் இரண்டும் சேர்ந்து வாணியின் ஸ்வரங்களுடன் இணைந்து வரும்
இதே மாதிரி இன்னொரு பாட்டு வாணி குரலில்
"அன்பெனும் சுடரால் எரிகின்ற விளக்கு
அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு "
prelude flute,இணை இசை flute ,வீணை ரொம்ப இனிமை
மீண்டும் வாணி "பாடு வண்டே பார்த்ததுண்டா "
எல்லா பாடல்களும் இனிமை
-
5th July 2014, 05:49 PM
#1387
Junior Member
Newbie Hubber
ஹமீர் கல்யாணி.
ஒரு நல்ல பாதாம் அல்வாவை காலை டிபனில் ஒரு பிடி பிடித்து, வீட்டிற்கு வந்தது ,மனைவி பலா சுளையை சுத்த கொம்புதேனில் முக்கி (சபதம் பகவதி ஞாபகம் வருகிறதா)கொடுத்ததை திரும்ப ஒரு வெட்டு வெட்டினால் நாக்கில் எத்தனை இனிமை?அதை போல பாடும் போதே நாக்கில் இனிமை ஊற வைக்கும் ராகம்,மனதிலும் அதே இனிமையை கொடுக்கும்.
இது கல்யாணியின் ஜன்ய ராகம்,இந்துஸ்தானியில் கல்யாண் என்ற வகையில் வைக்க படும்.பெரும் பாலும் சுத்த ஸ்வரங்கள்.மேற்கத்திய இசையில் இது பிரபலம்.(lydia mode )என்று.
மன்னனோ ,தம்பிகளுடன் போராடி மண்ணை கவர்வதிலும்,மாமாவுடன் சதி வேலையில் ஈடு படுவதிலும் பிசி ஆக உள்ளவன்.என்னை போல ஒரு நல்ல உள்ளம் கொண்ட பராக்ரமசாலியை நண்பனாக்கி ,சிற்றரசனாக்கி ,அந்தபுரத்திற்கும் அழைத்து வருகிறான்.ராணி தோழியரிடம் ஆள் சரியில்லை என்று ஆண்மையை குறை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறாள்.(அசோகன் ). இன்றும் சுசிலா குரலில் தேனாக இனிக்கும் ராமமுர்த்தி(விஸ்வநாதன்) இசையில் வந்த அந்த பாடல்."என்னுயிர் தோழி கேளடி சேதி".
இரட்டையர் பிரிந்ததும் ,இரட்டையர் இசை ஒற்றை பெயரில் வந்த நல்ல பாடல்களை (அது மட்டுமே)கொண்ட படம். தினத்தந்தி ஆதித்தனாரை இந்த நாயகனுக்கு எதிர் நிலை எடுக்க வைத்தது.அருமையான இரண்டு டூயட்,ஒரு நகைசுவை பாடல் கொண்ட படம்."சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ "
மிக மிக எதிர்பார்ப்புள்ளான ஒரு படம். ஒரு வெற்றி பட நடன நாயகன் ,ஒரு சின்னத்தம்பி இயக்குனர் சேர்ந்து லண்டன் நகரத்தில் உருவான love Birds .படு ஊத்தல். ஆனாலும் இந்த பாடலின் சுகமும்,படமாக்கமும் அருமை. 90 இறுதிகளின் என்னை மிக மிக ஆட்கொண்ட பாடல்களில் ஒன்று. "மலர்களே மலர்களே இது என்ன கனவா"
என்னை கவர்ந்த மற்றவை.
வெள்ளை கமலத்திலே- கௌரி கல்யாணம்.
உன் பார்வையில் ஓராயிரம்-அம்மன் கோவில் கிழக்காலே.
காதல் ஓவியம் கண்டேன் கனவோ -கவிக்குயில்.
Last edited by Gopal.s; 5th July 2014 at 05:51 PM.
-
5th July 2014, 05:53 PM
#1388
Junior Member
Newbie Hubber
manamagale is an unique composition.
-
5th July 2014, 06:12 PM
#1389
Senior Member
Diamond Hubber
டியர் கார்த்திக் சார்,
சூதாட்டம் தகவல்களுக்கு நன்றி! இன்ட்ரெஸ்ட் ஆக இருந்தது.
மற்ற ஹிட்கள் லிஸ்டும் ஜோராக இருந்தது. எவ்வளவு அருமையான பாடல்கள்!
-
5th July 2014, 06:16 PM
#1390
Junior Member
Newbie Hubber
Superb list karthik sir. My top five (1971)pottu vaiththa ,thoduvathenna,naam oruvaraiyiruvar,naan unnai vaazhththi,malar ethu.
Bookmarks