-
20th June 2014, 10:29 AM
#551
ராஜா படத்தில் ஒரு டயலாக்
சிவாஜி கலைசெல்வியிடம் சொல்வார்
"நான் உங்களை புத்திசாலினு நினச்சேன் "
நீங்கள் என்னை முட்டாளா(க) (ஆக்க) பார்கிறீர்கள்"
ஓகே இது ரவி thread
-
20th June 2014 10:29 AM
# ADS
Circuit advertisement
-
20th June 2014, 11:22 AM
#552
Senior Member
Senior Hubber
ரசிப்புத் தன்மை மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனும் வேறு வேறு. அந்த ஒரு மனிதனும் ஒவ்வொரு கணமும் வேறு வேறு - சூழ்நிலையினாலும், இன்ன பிற விளைவுகளாலும், சார்ந்திருப்பவர்களாலும்.
எனக்கும் நடிகர் திலகம் மட்டும் தான் ஆதர்சம். இருப்பினும், மற்ற பல கலைஞர்களையும் பிடிக்கும், மக்கள் திலகம் உட்பட - குறிப்பிட்ட சில படங்களில்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
20th June 2014, 03:16 PM
#553
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
ரவி சந்திரன் - என்ன ஒண்ணு constipation வந்த மாதிரி குரல், stiff நடிப்பு, ஸ்டைல் என்ற பெயரில் தேவைக்கும் மேல் ரெண்டு இன்ச் கூட வளைவார்.
CONSTIPATION மற்றும் கூடுதல் வளைவுக்கு காரணம் வேறு ஒன்றும் அல்ல !
தன்னை ஒரு POOR MAN 's சிவாஜி என்று நினைத்து கொண்டு நடிகர் திலகத்தின் MANNERISM பலவற்றை நூதனமாக திருட முயற்சி செய்ததன் பலன் !
சிவாஜியை போல சிகை அலங்காரம் பல படங்களில் ..ஆனால் சிவாஜியை போல ஒரு பினிஷிங் இவர் சிகையில் பார்க்க முடியாது....சிவாஜியை போல நடை பழகல் ..BUT AN INCOMPLETE வாக் ! .ஒ..ஒ..எத்தனை அழகு பாடலில் காஞ்சனா கை பிடித்து நடக்கும்போது நாம் கண்கூடாக பார்க்கலாம், திரும்பி பார்ப்பது...நடந்துகொண்டே திரும்புவது...இப்படி பல விஷயங்கள் நடிகர் திலகத்தை கோப்பி செய்து படுதோல்வி..!
ஊமை விழிகள் படத்தில் பார்த்தால் இன்னும் அப்பட்டமாக தெரியும்...அப்படியே நடிகர் திலகத்தை போலவே தன்னை நினைத்துகொண்டு நடிக்க முயற்சிப்பது !
நிலவு இல்லை என்றால் என்ன ? ஒன்றும் இல்லை ! காரணம் நமக்கு அமாவாசை பழகியதுண்டு
ஆனால் சூரியன் இல்லாவிடில் ! நடிகர் திலகம் இல்லாத ஒரு திரை உலகம் ! இன்னும் நாதா ...நாதி....என்று ஒரு 50 வருடம் இழுத்திருக்கும் !
அது தான் சூரியன் என்னும் நடிகர் திலகம் !
Last edited by RavikiranSurya; 20th June 2014 at 03:21 PM.
-
20th June 2014, 03:27 PM
#554
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
கலைக்கு சூரியன் உண்டு ,நட்சத்திரங்கள் ஏராளம்,
நிலவாக வந்தவன் நீ ஒருவனே,- அப்படி என்றால் சூரியன் மட்டும் இரண்டு மூன்று உண்டோ ?
தமிழர்கள் சராசரி வயதை நாற்பதிலிருந்து ஒரே நாளில்
இருபதாக்கிய விந்தை வாலிபனே, முதன் முதலில் ஆக்கியது யார் என்ற கேள்வி கேட்கவும் வேண்டுமோ ?
உன்னுடன் சேர்ந்து எங்கள் மனமும் குதித்து பயிற்சி செய்து
இளமையாகி இளைத்து வண்ணமாக்கியது வாழ்வை.
கவலைகள் எங்கள் வீட்டு ஆணி சுவர்களில் , மகிழ்வு
மட்டுமே நீ வருகை தந்த கொட்டகையில்
எங்களுக்கு பாடம் சொல்ல ஆசிரியர்கள் மட்டுமே
இருந்த போது ,விடுமுறை நண்பன் நீ.
காதலிக்க நேரமில்லை என்ற முகவரி அட்டையுடன் வந்து,
நேரமிருந்த எங்களை காதலிக்க வைத்தாய்,
எங்கள் இதய கமலங்களில் குமரி பெண்கள்,அதே கண்கள்,
துள்ளி ஓடும் புள்ளி மான்களின் மீது,
நீ தண்ணீரை மட்டுமே குடித்திருந்தால், உன் நலத்தோடு,
எங்கள் நலமும் இன்னும் நீடித்திருக்குமே.ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதை மறந்தவர்களுக்கு ஒழுக்கம் என்றுமே பாடம் என்ற பரிசு கொடுக்க தவறியதில்லை. பரிசு பெற்றவர்களில் நிலவு நிச்சயம் அடங்கும் !
நீ தொலைத்தது உன் வாழ்வை மட்டுமா? எங்கள் இன்ப
நிலவு கண்டு மகிழ்ந்த மாலைகளையும்தான்.
.....
-
20th June 2014, 07:53 PM
#555
Junior Member
Veteran Hubber
வேண்டாமே RKS Sir. இது ரவியின் சிறப்புத் திரி. அவருடைய நல்ல அம்சங்களை மட்டுமே நினைவு கூர்வோமே !
-
2nd July 2014, 03:07 PM
#556
Junior Member
Newbie Hubber
I am also a fan of kalainilavu. Honestly i am pleased to read about actor Ravichandran and please
try to discuss only about him. do not compare with other actors, Remember one man's food is another
man's poison. i didnot have the chance to watch sorgathil Thirumanam. Please upload if can.
-
2nd July 2014, 03:21 PM
#557
Junior Member
Newbie Hubber
நீயும் நானும் என்றொரு படம். ரவி-ராஜஸ்ரீ ஜோடி.யாரடி வந்தார் உன் நெஞ்சத்தை கொள்ள
-
5th July 2014, 07:28 AM
#558
Junior Member
Newbie Hubber
Kaarthik/Vinodh/vasu,
Pl.contribute regularly in this thread.
-
5th July 2014, 08:05 AM
#559
Junior Member
Newbie Hubber
சிறு வயதில் எனக்கு சினிமா பார்க்கும் ஒரே தியேட்டர் அமராவதி(நெய்வேலி). சொன்னால் வெட்க கேடு. சென்னை சென்று சாந்தி,தேவி,மிட்லண்ட் என்று குளு குளு ஏ.சி தியேட்டர்களில் பார்த்த படத்தை கூட விடுமுறைக்கு வரும் போது அமராவதி திரையரங்கில் பார்த்தால்தான் நிறைவாகும்.ரொம்ப நாள் சுலேகா என்ற அடாசு தையல் காரனை ஆஸ்தான டெய்லர் ஆக பாவித்து சென்னையில் பெரிய பெரிய கடைகளை புறக்கணித்து,இவரிடமே லீவிற்கு வரும் போது அனைத்தையும் தைத்து போவேன்.அப்போது பாக்கெட் மணி சினிமாவிற்கே செலவாகி விடும். நைஸ் ஆக ஜெயா மெடிக்கல் கடையில் சோப்பு ,சீப்பு,கண்ணாடிகளை account இல் வாங்கி சென்று விடுவேன்.அம்மா அப்பா அவ்வப்போது செல்லமாக கண்டித்து மன்னித்தும் விடுவார்கள். நான் இவ்வளவு பற்று வைத்திருந்த tailor என்னை படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை.தீபாவளிக்கு முதல் நாள் அம்மா பதறுவார்கள். டேய் ...சுலேகா இன்னும் உங்கள் யார் டிரஸ்உம் தரவில்லை.எதை கட்டி கொள்ள போகிறீர்கள் என்று?அப்போ இப்போ என்று காஜா மட்டும் எடுக்கணும் என்று ஒரு வாரமாக தட்டி கழித்து வரும் சுலேகாவிடம் இரவு 10 மணிக்கு சென்றால் ,தம்பி அந்த துணிகளை எடு என்பார்..புது மெருகு அழியாமல் நாங்கள் கொடுத்த கடை label உடன் எங்கள் துணிகள்.நீங்க போங்க தம்பி.ஒரே மணிநேரம் ,முடிச்சு கொடுத்துறேன் என்ற சத்தியத்தை நம்பாமல் அங்கேயே உட்கார்ந்து ,கண்ணுறங்காமல் ,வேலை முடித்து ,சரியாக 4.32 க்கு காவல் தெய்வம் சிவகுமார் போல் வீடு வந்து சேருவேன்.(ஒரு
தீபாவளிக்காவது முதல் நாள் உறங்கும் சுகத்தை எனக்கு சுலேகா தந்ததில்லை).இந்த முறை வாசுதேவனுடன் மெயின் பஜார் சுற்றிய போது சுலேகா அங்கு இல்லாதது ஒரு வெறுமையை தந்தது.இத்தனைக்கும் எங்கள் தங்க ராஜா பாணியில் பெல்ஸ் தைத்து ,நண்பர்களிடம் என்னை நாண செய்யும் tailor .
அப்போது டவுன் கிளப் என்ற பொழுது போக்கு கிளப்பில் ஒவ்வொரு வாரம் புதன் ஒரு ஆங்கில படமோ,தமிழ் படமோ போடுவார்கள்.35mm with projector . ஆஜராகி விடுவோம். அதில் என்னை கவர்ந்த இரு படங்கள் வரிசையாக இரு வாரங்கள் .தேன் மழை (காமெடி,பாடல்கள் பிடிக்கும் ),
நினைவில் நின்றவள் (முழுபடமும் பிடிக்கும்)அதிலும் குறிப்பாக குமாரின் இசையில் ,ஈஸ்வரி குரலில்,ஆனந்தன்-தேவகி இணைவில் இந்த பாடல்.(எனக்கு மனோகர்-ஷீலா இணைவில் அம்மாம்மாவும் உயிர்)
பார்த்து மகிழுங்கள்.
-
5th July 2014, 06:24 PM
#560
Senior Member
Diamond Hubber
Bookmarks