-
6th July 2014, 06:22 AM
#1401
Junior Member
Newbie Hubber
ஷ்யாமின் மிக சிறந்த பாடல்கள் நேற்று வரை ,பூந்தமல்லி யிலே (கருந்தேள் கண்ணாயிரம்),உள்ளத்தில் போராடும் எண்ணங்கள்
(உணர்ச்சிகள்),பூவே வா வா நிலவு நனையும் நேரம் (வா இந்த பக்கம்),ஆனந்த ராகம்(வா இந்த பக்கம்),பாஞ்சாலி இவளா (புல்லாங்குழல் அடுப்பூதுகிறது), பட்டு பொண்ணு இவ தொட்டுபுட்டா கட்டு மரங்களும் பூ பூக்கும் (என்ன படம்?),மழை தருமோ என் மேகம்,பொன்னே பூமியடி ஆ சரி சரி சரி சரி (மனிதரில் இத்தனை நிறங்களா).
-
6th July 2014 06:22 AM
# ADS
Circuit advertisement
-
6th July 2014, 08:19 AM
#1402
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ஷ்யாமின் மிக சிறந்த பாடல்கள் உள்ளத்தில் போராடும் எண்ணங்கள்
(உணர்ச்சிகள்).
அது உள்ளத்தில் அல்ல. 'நெஞ்சத்தில்'
-
6th July 2014, 08:28 AM
#1403
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (23)

'திருமகள்' படத்தில் ஒரு அழகான பாடல். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன் இசையில் மலர்ந்த மொ(மெ)ட்டு.
ஜெமினி, ஏ.வி.எம்.ராஜன். சிவக்குமார், பத்மினி, லஷ்மி நடித்த இத்திரைப்படம் தனக்கு நிச்சயமான காதலன் (உறவுமுறைதான்) தற்செயலாக விபத்தில் இறந்துவிட, அவன் தயவில் படித்து வரும் இளைஞன் ஒருவனிடம் தன்வசப்பட்டு கற்பைப் பறி கொடுப்பதால் ஏற்படும் சிக்கல்களைப் படம் பிடித்தது.
லஷ்மி அவர் காதலன் ஏ.வி.எம்.ராஜன் இருவரும் ராஜனின் தயவில் படிக்கும் இளைஞனான சிவக்குமாருடன் பிக்னிக் போவது போன்ற காட்சி.
அப்போது மூவரும் பாடும் பாடல் காட்சி.

உள்ளங்களையும், உள்ளங்களால் ஏற்படும் உறவுகளையும் அழகாகச் சித்தரிக்கும் பாடல்.
படத்தில் ராஜன் இறந்துவிட சிவக்குமாரிடம் லஷ்மி தன்னை இழப்பது போன்ற காட்சி உண்டு. இதைக் கவிஞர் படத்தின் முன்பாதியில் வரும் இந்தப் பாட்டிலேயே நாசூக்காக எடுத்துரைத்து விடுவார்.
கிழக்கே ஓடும்நதி
தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி
அணிலுக்கும் போகலாம்
என்ற வரிகளின் மூலமாக.
அருமையான கிடார் இசையுடன் தொடங்கும் இப்பாடலை சுசீலா தன் இனிய குயில் குரலால் தொடங்க, 'பாடகர் திலகம்' பின்னாலேயே வர,
இவர்கள் இவருக்குப் பின்னால் வந்து நம் 'பச்சிளம் பாலகன்' பாலா மழலையை விட அழகான குரல் தந்து அசத்த,
நமக்குக் கிடைத்ததோ என்றும் திகட்டாத விருந்து.
பாடல்கள் பலவிதம். இந்தப் பாடல் ஒரு தனிரகம்.
உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்
உள்ளங்கள் பலவிதம்
மலையில் பிறந்த நதி
கடலுக்குப் போவதேன்
மண்ணில் பிறந்த மலர்
கூந்தலில் வாழ்வதேன்
மலையில் பிறந்த நதி
கடலுக்குப் போவதேன்
மண்ணில் பிறந்த மலர்
கூந்தலில் வாழ்வதேன்
எங்கோ பிறந்தவர்கள்
இங்கே இணைவதேன்
என்னவோ சொந்தமெல்லாம்
கண்ணிலே தெரிவதேன்
எங்கோ பிறந்தவர்கள்
இங்கே இணைவதேன்
என்னவோ சொந்தமெல்லாம்
கண்ணிலே தெரிவதேன்
உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்
உள்ளங்கள் பலவிதம்
கிழக்கே ஓடும்நதி
தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி
அணிலுக்கும் போகலாம்
நதிவழி போவது போல்
மனவழி போகலாம்
நடக்கும் வழிகளெல்லாம்
நல்வழி ஆகலாம்
நதிவழி போவது போல்
மனவழி போகலாம்
நடக்கும் வழிகளெல்லாம்
நல்வழி ஆகலாம்
உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்
மறைத்தால் மறைவதில்லை
மங்கையின் கனவுகளே
பிரித்தால் பிரிவதில்லை
வளர்ந்திடும் உறவுகளே
மறைத்தால் மறைவதில்லை
மங்கையின் கனவுகளே
பிரித்தால் பிரிவதில்லை
வளர்ந்திடும் உறவுகளே
அடித்தால் அழுவதில்லை
ஆனந்த நினைவுகளே
அன்பில் இணைந்தவர்கள்
வார்த்தையில் ஊமைகளே
அடித்தால் அழுவதில்லை
ஆனந்த நினைவுகளே
அன்பில் இணைந்தவர்கள்
வார்த்தையில் ஊமைகளே
உள்ளங்கள் பலவிதம்
எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு
மனம்தானே காரணம்
உள்ளங்கள் பலவிதம்
அஹ்ஹோஹோஹோஹோஹஹோ
அஹ்ஹோஹோஹோஹோஹஹோ
Last edited by vasudevan31355; 28th September 2015 at 11:17 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
6th July 2014, 08:32 AM
#1404
Junior Member
Newbie Hubber
நினைத்தால் போதும் பாடுவேன்.
மெல்லிசை மன்னரின் சாதனை துளிகளில் முக்கியமானது நெஞ்சிருக்கும் வரை.இறுதி காட்சிக்கு முன்போ அல்லது இறுதி காட்சியிலேயோ பாடல் வைக்கும் தைரியம் ஸ்ரீதருக்குத்தான் உண்டு.அதுவும் சற்று சறுக்கினாலும் ,நகைப்புள்ளாக்கி விடும்.காதலிக்க நேரமில்லை நெஞ்சத்தை அள்ளி போல லகுவான படமல்ல. intense emotion with compelling climax scene .முதல் மேதைமை ஹம்சாநந்தி ராகத் தேர்ந்தெடுப்பு.டெம்போ கூட்ட கூடியது.அடுத்தது arrangement of multi -layered archestration with sharp transition counter -points .
அடுத்தது எனக்கு பிடித்த கீதாஞ்சலி. அருமையான நாட்டிய கவர்ச்சி பாவை.இந்த பாடலில் அவர் கொடுத்திருக்கும் fast movements ,துப்பாக்கியை மனதில் கொடுத்து விடும்.அவர் தன் Grace சற்று துறந்து பாடலின் டெம்போ வுடன் இணைவார்.(choreographer யார்?)சிவாஜி ஓடி வருவதில் ,இசையின் வேகத்திற்கேற்ப கட் பண்ணி ஸ்ரீதர் கொஞ்சம் fast motion கொடுத்திருக்கலாமோ என்று தோன்றும்.(அந்த கோப உக்கிரம் அந்த ஓட்டத்தில் register ஆகவில்லை ,விஸ்வநாதனின் இசை உக்கிரத்திற்கு தக்க).கண்ணதாசனை கேட்க வேண்டுமா?
பாலின் நிறம் போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளம் தென்றல் அல்ல
ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல
இறுதியாக பாடகி.ஜானகியை விட்டு வேறு பாடகியை இந்த பாடலுக்கு நினைத்தே பார்க்க முடியாது.(இத்தனைக்கும் கிளாஸ் என்று பார்த்தால் சுசிலாவின் கண்ணன் வரும் தான்)இந்த situation க்கு ஏற்ற பரபரப்பு ,ஆரம்பமே உச்சம் தொடும்,பாவமுள்ள ஜீவனுள்ள பாடும் முறை.
எனக்கு இன்றும் கூச்செறிய செய்யும் பாடல்.ஸ்ரீதர் மட்டும் இன்னும் கொஞ்சம் திரைகதையை செதுக்கி இருந்தால் ,மெல்லிசை மன்னர் பட்ட பாட்டிற்கு நெஞ்சிருக்கும் வரை எங்கோ சென்றிருக்க
வேண்டிய படம். என்னவோ ...ஏதோ....ஒரு பீம்சிங்,பந்துலு,நாகராஜன் சிவாஜியுடன் கூட்டணி கண்டது போல ஸ்ரீதர்,பாலசந்தரால் காண முடியாதது அவர்களுக்கும் நமக்கும் துரதிர்ஷ்டமே.
-
6th July 2014, 08:48 AM
#1405
Junior Member
Newbie Hubber
ஒரு பாடல். அப்போது இரவு சென்னை வானொலியின் புதன் இரவு நேயர் விருப்பம்.(10.00 முதல் 11.00 என்று நினைவு).பெயரெல்லாம் சொல்லி பாடல் போடுவார்கள். அப்படி ஒரு ஜாலி பாடல் என்னை படம் பார்க்கவே தூண்டியது. படம் எனக்கு பிடித்தே இருந்தது. நாடோடியில் நல்ல பாடல்களை சொதப்பி இருந்த பந்துலு,இந்த படத்தில் ஜாலியாக கையாண்டிருந்தார்.ஒரு un -inhibited enthusiasm&energy என்பார்களே அப்படி ஒரு துள்ளல் சம்பத்த பட்டவர்களின் நடிப்பில். சரி விகித humour ,harmony with appropriate coordination ,grace எல்லா பாடல்களிலும் துள்ளும்.(இடமோ சுகமானது,வெற்றி மீது,சொர்க்கத்தை,தொட்டு காட்டவா )எனக்கு பிடித்த படம் என்பதாலோ என்னவோ தோல்வி கண்டு பந்துலுவை துவள வைத்து விட்டது.
இந்த பாடல் situation ,சம்பத்த பட்டவர்களின் நடிப்பு(ஜோதி லட்சுமி உட்பட) படு ஜாலியாய் வந்த மெல்லிசை மன்னரின்,டி.எம்.எஸ். -சுசிலா இணைவின் குறும்பு பாடல்.
Last edited by Gopal.s; 7th July 2014 at 04:38 AM.
-
6th July 2014, 11:11 AM
#1406
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ஒரு பாடல். அப்போது இரவு சென்னை வானொலியின் புதன் இரவு நேயர் விருப்பம்.(10.00 முதல் 11.00 என்று நினைவு).பெயரெல்லாம் சொல்லி பாடல் போடுவார்கள். அப்படி ஒரு ஜாலி பாடல் என்னை படம் பார்க்கவே தூண்டியது. படம் எனக்கு பிடித்தே இருந்தது. நாடோடியில் நல்ல பாடல்களை சொதப்பி இருந்த பந்துலு,இந்த படத்தில் ஜாலியாக கையாண்டிருந்தார்.ஒரு un -inhibited enthusiasm என்பார்களே அப்படி ஒரு துள்ளல் சம்பத்த பட்டவர்களின் நடிப்பில். சரி விகித humour ,harmony with appropriate coordination ,grace எல்லா பாடல்களிலும் துள்ளும்.(இடமோ சுகமானது,வெற்றி மீது,சொர்க்கத்தை,தொட்டு காட்டவா )எனக்கு பிடித்த படம் என்பதாலோ என்னவோ தோல்வி கண்டு பந்துலுவை துவள வைத்து விட்டது.
இந்த பாடல் situation ,சம்பத்த பட்டவர்களின் நடிப்பு(ஜோதி லட்சுமி உட்பட) படு ஜாலியாய் வந்த மெல்லிசை மன்னரின்,டி.எம்.எஸ். -சுசிலா இணைவின் குறும்பு பாடல்.
Last edited by vasudevan31355; 6th July 2014 at 11:15 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
6th July 2014, 12:20 PM
#1407
Senior Member
Seasoned Hubber
மெல்லிசை மாமணி வி.குமார் இசையில் நவக்கிரகம் திரைப்படத்தில் ஏ.எல்.ராகவன் பாடி இடம் பெற்ற எல்லாமே வயத்துக்குத்தாண்டா பாடல் அர்த்தமுள்ளதாகவும் அதே சமயம் இனிமையானதாகவும் இருக்கும். இப்பாடலின் இடையில் சென்னை நகரின் தெருக்களில் நாகேஷ் பாடி ஆடும் காட்சிகளில் சென்னை அண்ணாசாலையில் பிளாசா தியேட்டர் முகப்பில் மாட்டுக்காரவேலன் திரைப்படத்தின் கட்அவுட்களும் அருகிலேயே நம் நாடு மற்றும் எதிர்காலம் பேனர்களும் இடம் பெற்றிருக்கும். இவை தெளிவாகத் தெரிவதைப் பாருங்கள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th July 2014, 01:11 PM
#1408
Junior Member
Newbie Hubber
ரமேஷ்,
யாரிடம் விளயாடுகிறோம் என்று தெரியாமல் வார்த்தைகளை வீசியுள்ளீர்கள் .உங்கள் பதிவில் விஷயமும் இல்லை என்பதால் ,நான் பொருட்டாக பதில் சொல்லவில்லை.நானும் கார்த்திக் சாரும் உரையாடுவது பட்டி மன்றம் போன்றது. சார்பு எடுத்து பேசினாலும் ,இருவரும் எல்லை மீற மாட்டோம்.இருவருக்கும் நாங்கள் எழுதுவது எது நகைசுவை,எது மிகை,என்ன காரணம்,என்ன purpose என்று புரிந்தே தொடர்வோம். முதல் முறையாக ஒரு public figure பற்றி எந்த குடிமகன் போலவும் ,உரிமை எடுத்து எழுதியதற்கு,உரிய பதில் தராமல்,முன் பின் அறியாத ஒருவரை தர குறைவாக விமர்சித்துள்ளீர்கள்.
இலக்கியம்,இசை,சினிமா,காதல் மட்டுமல்ல .உலகில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் மிக மிக நன்றாக தெரியும். அவற்றை நான் உபயோக படுத்தினால்,உங்கள் குடும்பமே தாங்காது. அதனால்,அத்து மீறிய தனி நபர் தாக்குதல் கொண்ட வார்த்தைகளை ,நீங்களாக எடுத்து விடுவது உத்தமம்.இல்லையென்றால் கூடிய விரைவில் புரிய வைப்பேன். ராஜேஷ்,நீங்களும்,அவருடைய quote நீக்கி ,அவருக்கு உதவுங்கள்.
-
6th July 2014, 01:28 PM
#1409
Senior Member
Veteran Hubber
டியர் கோபால் சார்,
'நினைத்தால் போதும் பாடுவேன்' பாடலை நான் எழுதலாம் என்று எண்ணியிருக்கும்போது நீங்கள் எழுதி அசத்தி விட்டீர்கள். நல்லதுக்குத்தான். நான் எழுதியிருந்தால் நிச்சயம் உங்கள் அளவுக்கு எழுதியிருக்க முடியாது.
நெஞ்சிருக்கும்வரை பாடல்கள் அனைத்துமே அருமை. (ஸ்ரீதர் ஒரு பாட்டு ராசிக்காரர், அது ஏ.எம்.ராஜாவிலிருந்து இளையராஜா வரை நிரூபணம் ஆயிற்று. மன்னர்கள் அமைத்தபோதும், மன்னர் அமைத்தபோதும் இந்த ராசி தொடர்ந்தது. குப்பை நினைவெல்லாம் நித்யாவுக்கெல்லாம் என்ன மாதிரி பாடல்கள் அமைந்தன).
எல்லோரும் 'முத்துக்களோ கண்கள்', 'பூமுடிப்பாள்' பாடல்களை எதிர்நோக்கியிருக்க, நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்ப்பது 'கண்ணன் வரும் நேரமிது' மற்றும் 'நினைத்தால் போதும் பாடுவேன்' இரண்டையுமே. காரணம் இருளுக்குள் தள்ளப்பட்ட வைரங்கள் மீது எப்போதும் ஒரு அபிமானம், கரிசனம், ஈர்ப்பு. முதலிரண்டும் சோடையென்று சொல்லவில்லை. தேவைக்கதிகமாகவே புகழடைந்து விட்டன என்பதும் ஒரு காரணம். 'ஒரு ராஜா ராணியிடம்' பாடலைவிட 'ஒருநாளிலே' மீது நீங்களும் நானும் வைத்திருக்கும் பற்று போலவே.
நம்மைப்போலவே சாரதாவும் கூட. இருமலர்களின் மற்றெல்லா பாடல்களையும் விட 'அன்னமிட்ட கைகளுக்கு' பாடலின்மேல் பைத்தியமாக இருப்பார். இது அவரே திரிகளில் பலமுறை சொன்னது.
பாடலின் ஒவ்வொன்றையும் மிக துல்லியமாக கணித்துள்ளீர்கள் என்பதற்கு உதாரணம், நடிகர்திலகத்தின் ஓட்டத்தில் வேகமின்மையை சுட்டிக்காட்டியிருப்பது.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் யாரிடம் திறமையிருந்தாலும் வஞ்சனையின்றி ரசிப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு, இப்படத்தில் நடிகர்திலகத்துக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் தியேட்டரில் விழுந்த கைதட்டல்கள். வி.கோபாலகிருஷ்ணனுக்கு அவர் இறக்கும்போது காட்டிய நடிப்புக்கு, மற்றும் கீதாஞ்சலிக்கு இந்தப்பாடலுக்காக. கைதட்டிய ஏராளமானோரில் அடியேனும் அடக்கம்.
கீதாஞ்சலிக்கு சரியான வாய்ப்புக்களை தமிழ்த்திரையுலகம் தரவில்லையென்பதில் உங்களைப்போலவே எனக்கும் ஆதங்கம் உண்டு. அதற்கு மருந்திடுவது போல அமைந்த பதிவுகள்தான் நண்பர் வாசு அவர்களின் 'என்னென்னவோ நான் நினைத்தேன்' பதிவும், இன்று தங்களின் 'நினைத்தால் போதும் பாடுவேன்' பதிவும். இப்பாடலைப் பார்க்கும்போது, இதை கலரில் எடுத்து கீது மஞ்சள் புடவையணிந்து ஆடியிருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வதுண்டு.
இன்னும் இதுபோன்ற வைரங்களைக் கொண்டுவந்து கொட்டி எங்களை திக்குமுக்காட செய்யுங்கள்..... நன்றி...
-
6th July 2014, 01:49 PM
#1410
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலாக அதிகம் பேருக்குத் தெரியாத 'திருமகள்' பாடலைத் தந்து ஜமாய்த்துள்ளீர்கள். நானும் இப்படத்தை பாரகன் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். அதன்பின் இந்தப்பாடலைக் காணும் வாய்ப்பு கிட்டவில்லை. பாக்யராஜ் பாணியில் சொன்னால் கொஞ்சம் 'கசமுசா'வான கதைதான். ஆனால் விரசம் தெரியாமல் எடுத்திருந்தனர். வழக்கம்போல பத்மினியின் அலட்டல் கொஞ்சம் அதிகம். நீங்கள் எடுத்துக்கொண்ட பாடல் வழக்கம்போல ஒரு அபூர்வம்.
பாராட்டுக்கள்.
Bookmarks