Page 142 of 400 FirstFirst ... 4292132140141142143144152192242 ... LastLast
Results 1,411 to 1,420 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1411
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஹரி காம்போதி.

    "முல்லை நிலப் பெரும்பண்ணான, முல்லையாழ் - செம்பாலை, தற்காலம் அரிகாம்போதி என்று பெயர் பெற்றுள்ளது. தலைமைப் பாலையாக விளங்கும் சிறப்பைக் கொண்டுள்ளதால் இதற்கு "பாலை யாழ்” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.".

    தொல்காப்பியம் ,மதுரை காஞ்சி,சிலப்பதிகாரம் என பழங்கால தமிழ் நூல்களில் ,நமது தமிழர்களின் நில பகுப்பு முறையில் பகுக்க பட்ட சங்கீதம்,பண் மற்றும் யாழ் என்று வழங்க படுகிறது. சுலபமாக சொன்னால் ,முல்லை பண் 5 ஸ்வரங்கள் கொண்ட மோகன ராகத்தை ஒத்தது.செம்பாலை பண் 7 ஸ்வரங்களுடன் ஹரி காம்போதி ஒத்தது.

    ஹரி காம்போதி ஒரு மேளகர்த்தா சம்பூர்ண ராகமே.இது ஹிந்துஸ்தானி,மேற்கத்திய,மற்றும் நம் பாரம்பரிய இசையில் அங்கம் வகிப்பது.

    நிறைய ஜன்ய உறவினர்கள்.மோகனம்,பஹுதாரி,கமாஸ்,காம்போதி,சஹான ா ,யதுகுல காம்போதி என்று.ஸ்வரங்களை சற்றே கிரக பேதம் செய்தால், கல்யாணி,சங்கராபரணம்,நட பைரவி,கரகரப்ரியா என்று மற்ற ராகங்களாய் விரியும்.

    கிசு கிசு குரலில் உங்கள் அத்தை மகள் உங்களை விளித்து (நிறைய பேரின் நடுவே),ரகசிய காதல் சமிக்ஞை செய்தால் உங்கள் உள்ளம் கிடந்து ஆனந்தத்தால் துடித்து தள்ளாடுமே ,அந்த உணர்வு தரும் ராகம். நம் ஆதி சிந்தனையின் தேக்க விரிவாக,நம் மனதிற்கு உகந்தே நிற்கும் ராகம்.

    ஐம்பதுகளில், மதராசி பிலிம்களை உதாசீனம் செய்த வடக்கிந்தியர்களை,நம்மை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர்கள்,வாசனும்(சந்திரலேகா),சிவாஜியும் (நடிப்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் உலக விருது)ஆவர்.சிறிதே பத்மினியும்,வைஜயந்தியும் புண்ணியம் கட்டினர்.ஆனாலும் மெல்லிசைக்கு பெயராத நமது இசை அவர்களுக்கு பொருட்டாகவே இல்லை. ஒரே ஒரு படம் 1961 இல்,குறிப்பாக ஒரே ஒரு பாடல் ,அந்த பாடகி,இரட்டை இசை மேதைகளை நோக்கி நவுஷாத்,ரோஷன் முதல் லதா,ரபி வரை திரும்பி பார்த்து அதிசயிக்க வைத்தது.ஒரு தமிழ் இலக்கிய பாடலின் (கல்லைத்தான்,மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா)உந்துதலில் ,கண்ணதாசன் எழுதிய,வடக்கை நம் பக்கம் ஈர்த்து ,விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்களை இந்தியாவின் Best composers என்று எல்லோரையும் வியக்க வைத்து,இப்படி ஒரு பாடகியா என்று லதாவை அதிசயிக்க வைத்த உன்னதம் "அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்".

    ஒரு உலக நடிகனின் உலக பட கனவு ,அவர் தயாரிப்பிலேயே நனவானது. தமிழில் அவர் தயாரித்த முதல் படம்.(வடக்கில் கொடி ஐம்பதுகளிலேயே பறக்க விட்டாயிற்று. amardeep மூலம்).பிரம்மாண்டம் நடிப்பில்,இயக்கத்தில்,படப் பிடிப்பில்,கதையமைப்பில்,தயாரிப்பில்.பிரமாண்டம ் என்பதால் ,முதல் காட்சியே பிரம்மாண்ட கப்பலில்,பிரம்மாண்ட மாலை பார்ட்டி.தான் கண்டு மையல் கொண்ட மங்கையை ,அந்த கனவான் பாட அழைக்கும் அந்த கண்ணியமிக்க ரசிக்கத்தக்க மீறல்,மங்கையின் கூச்ச மிகு ஆவல் எல்லாம் அப்படியே மிளிர்ந்த இரட்டையர்களின் சாதனை படங்களில் ஒன்றான
    "உன்னை ஒன்று கேட்பேன்".(நடிகர்திலகம் பியானோ,trumpet வாசிக்கும் நேர்த்தி!!!)

    அந்த பாடலாசிரியர் -இசையமைப்பாளர் பிரிவு ,இரட்டையர் பிரிவு அளவு அல்லோல கல்லோல பட்டது.நல்ல இணை.உன்னதம் தொட்ட பாடல்கள்.பாடலாசிரியர் மிக பாதிக்க பட்டு டப்பிங் படங்கள் எழுதினார் .அப்போது டி.வீயில் அவரெழுதி உடனே மெல்லிசை மன்னர் tune போட்ட ஒரு நிகழ்ச்சியில் இரு பாடல்கள் என்னை பளிச்சென்று கவர்ந்தது.(இசை பாடாவதி ரகம்தான்)ஒன்று சின்ன சின்ன ஆசைகள்.(இசையமைப்பாளர் அவர் குரலில் ஆசைஹள் என்று நீட்டுவார்).இன்னொற்று அழகு அழகு அழகு. 1992. தமிழ் நூற்றாண்டில்
    நிம்மதியாக பகல் தூக்கம் போட்டு கொண்டிருந்த என்னை (வடை,பாயச சாப்பாடு),உலுக்கி எழுப்பிய என் சகோதரி(தற்போது சிங்கப்பூர் எழுத்தாளர்)இந்த பாட்டை கேளுடா ,யாரோ ரகுமான்னு புது பையன் போட்டதாம் என்று டி.வியின் புது பாடல் நிகழ்ச்சியில் கேட்க செய்ய உறைந்து போனேன். அந்த அழகான கவிதை,அந்த அபார இசையால் அதற்குரிய உன்னத இடத்தை அடைந்திருந்தது.அடுத்த கவிதை. அந்த பையனின் அடுத்த வருட படம் புதிய முகம் படத்தில் "அழகு அழகு அழகு கண்ணுக்கு மை அழகு" என்று அதற்குரிய அழகை பெற்றது.வைரமுத்து-ரகுமான் என்ற புது கவிதை கூட்டணி ,பழைய மரபுகளை உடைத்து ,இசைக்கு புது தங்க நாற்கர சாலை அமைத்தது.

    ஹரி காம்போதியின் மற்ற பாடல்கள்.


    ஒரே பாடல் உன்னை அழைக்கும்- எங்கிருந்தோ வந்தாள் .
    அவள் ஒரு நவரச நாடகம்-உலகம் சுற்றும் வாலிபன்.
    மாமன் ஒரு நாள் மல்லிகைபூ- ரோசாப் பூ ரவிக்கைகாரி
    பழமுதிர் சோலை -வருடம்-16.

    ஜன்ய ராகம் யதுகுல காம்போதி பாடல்கள்.

    மலர்களை போல் தங்கை-பாச மலர்.
    காசிக்கு போகும் சந்நியாசி-சந்திரோதயம்.

    ஜன்ய ராகம் காம்போதி பாடல்கள்.


    ஞான பழத்தை பிழிந்து- திருவிளையாடல்.
    கல்வியா செல்வமா வீரமா-சரஸ்வதி சபதம்.
    அறுபடை வீடு கொண்ட -கந்தன் கருணை.(ராக மாலிகை)
    விழியே கதை எழுது- உரிமை குரல்.
    Last edited by Gopal.s; 6th July 2014 at 02:38 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1412
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அப்போது பாலன் பிக்சர்ஸ் பட நிறுவனம் பெரும்பாலும் (பெரிய நடிகரின் தாய் படத்தில் கையை சுட்டு கொண்டதாலோ என்னவோ)ஜெமினி,ஏ.வீ.எம்.ராஜன்,ரவிச்சந்திரன் ,இன்னும் சில வளரும் நடிகர்களை வைத்தே படங்கள் எடுத்து வந்தனர்.பெரும்பாலும் நாம் இருவர் முதல் எனது பிரிய நண்பர் மகேந்திரன் கதை. எஸ்.எம்.எஸ். இசையமைப்பு. அப்போது மோகன் பிக்சர்ஸ் ,சரவணா,பீ.எஸ்.வீ முதலியோர் இதே பார்முலா கையாண்டு கொண்டிருந்தனர்.

    ரவி சந்திரன் முதன் முதலில் இரட்டை வேடமேற்று நடித்த பணக்கார பிள்ளை ,பெரும் வெற்றி கண்டு (நாம் இருவர்,பந்தயம்,சக்கரம் வரிசையில்)பணம் வாரி கொடுத்தது.இதில்தான் ரவி தி.மு.க வாக காட்டி கொண்டார்.(சிக்கினார்)இந்த படத்தில் பெரும்பாலும் நடிகர்திலகத்தின் sobre style நடிப்பை கையாண்டிருப்பார்.

    ஒரு ஜோடி கலை செல்வி.மற்றொரு ஜோடி கவர்ச்சி புயல் ஜோதி.
    ஜோதியை பெரிய இடத்து பெண் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறேன். பூவும் போட்டும் படத்தில் ,எண்ணம் போல பாட்டில் பின்னழகில் சொக்கி ரேகையை அழித்து கொண்டிருக்கிறேன்.
    அவரை நம் முகாமுக்குள் விட்டு,விஜயலலிதாவை தியாகம் பண்ணியிருக்கலாமோ என்று தோன்றும்.

    இந்த படத்தின் இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட் ராகம்.(மாணிக்க,பட்டம்) .அதில் இந்த ராட்சஷி -டி.எம்.எஸ் பாடும் இந்த பாடல் துள்ளல் குறும்பு. ஜோதியை துள்ள விட்டு ,ரவி நடிகர்திலகம் பாணியில் நடித்திருப்பார். (profile பார்க்க நிறைய சிவாஜி சாயல் )

    பாடல் பார்த்து கேட்டு மகிழ (மச மச என்று இருக்கும்)

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1413
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Song: kikikiki kiLiyakkO
    Film: Dharmaraja
    Music: M.S.Viswanathan
    Singers: S.P.Balasubramanyam, Vani Jairam
    Lyrics: ?
    Year: 1980

    Dharmaraja starred Sivaji Ganesan and K.R.Vijaya. The film or parts of it may have been shot in Singapore. Today's pick is one of many beautiful songs in MSV-SPB-VJ combination, with a touch of fun added to it, and it was quite popular when it released.

    This song substitutes a nEyar(bobgalee) viruppam.

    http://raretfm.mayyam.com/stream/pow07/kikikiki.rm
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1414
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    // மற்றொரு ஜோடி கவர்ச்சி புயல் ஜோதி.
    ஜோதியை பெரிய இடத்து பெண் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறேன். பூவும் போட்டும் படத்தில் ,எண்ணம் போல பாட்டில் பின்னழகில் சொக்கி ரேகையை அழித்து கொண்டிருக்கிறேன்.
    அவரை நம் முகாமுக்குள் விட்டு,விஜயலலிதாவை தியாகம் பண்ணியிருக்கலாமோ என்று தோன்றும்.//

    கோபால் சார், என்னது?. விஜயலலிதாவை தியாகம் செய்வதாவது. 'கோட்டை மதில்மேலே', 'நினைத்தபடி கிடைத்ததடி', 'பொன்மகள் வந்தாள்' பாடல்களில் ஜோதிலட்சுமியை நினைத்துப்பார்க்கவே குமட்டுகிறது.

    விஜி நம்ம படங்களில் இன்னும் அதிகமாக வரலையேன்னு நாங்களே வருத்தத்துடன் இருக்கிறோம். இதுல, இருக்கும் ஒன்றிரண்டையும் தியாகம் செய்யச்சொல்வது கொடுமை சார்.

    ஜோதியும்தான் நம் படங்களான எதிரொலி, கலாட்டா கல்யாணம் படங்களில் வந்தாரே. ஒண்ணும் சொல்லிக்கொள்கிறாற்போல இல்லையே.

    ரிக்ஷாக்காரனில் 'பம்பை உடுக்கை கொட்டி' பாடலில் பார்த்து பயந்து விட்டேன். ஆர்.எம்.வீரப்பன் 70 எம்.எம்.படமெடுக்கும்போது இதுகளை போட்டிருக்கலாமே என்று நினைத்தேன்.

    நேற்றிரவு சாந்திநிலையத்தில் 'பெண்ணைப்பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை' பாடலில், ஸ்லீவ்ஸ் அணியாத வெற்றுக்கால்களுடன் விஜயலலிதா... ஆகா... ஓஹோ....

  6. #1415
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    யார் கண் பட்டதோ தெரியவில்லை. இப்போதான் எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் சூடு அடங்கி கைகுலுக்கினோம். இப்போ வீ.எல்-ஜோதி மோதலா?ம்ம்ம்...ஒரு கை பார்க்கலாம்.::-d:-d
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1416
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சாந்தி நிலையத்தில் பெண்ணை பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை,கண்கள் தேடுவது உள்ளம் நாடுவது இரண்டுமே அமர்க்களம் சார்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #1417
    Senior Member Regular Hubber umaramesh's Avatar
    Join Date
    Oct 2005
    Location
    Chennai
    Posts
    247
    Post Thanks / Like
    Gopal

    Sorry if my comments hurt you. I have no intention of hurting you personally, but Pl understand you are writing about musician who contributed and survived decade and he has many followers. pl go through your posting and you can feel how bad you wrote about MSV. Anyway again I am sorry and you have every right to scold me if I hurt you but you have exceeded your limit saying you will scold families also. Otherwise I throughly enjoyed your righting which has more information on music and deep knowledge on happenings. I will not write again in this thread. Bye.

    Regards
    ramesh

  9. #1418
    Senior Member Regular Hubber umaramesh's Avatar
    Join Date
    Oct 2005
    Location
    Chennai
    Posts
    247
    Post Thanks / Like
    Dear moderator

    Pl remove my posting which I replied to Gopal as he felt that my comments are hurting him.

    Thanks

    Regards
    ramesh

  10. #1419
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by umaramesh View Post
    Gopal

    Sorry if my comments hurt you. I have no intention of hurting you personally, but Pl understand you are writing about musician who contributed and survived decade and he has many followers. pl go through your posting and you can feel how bad you wrote about MSV. Anyway again I am sorry and you have every right to scold me if I hurt you but you have exceeded your limit saying you will scold families also. Otherwise I throughly enjoyed your righting which has more information on music and deep knowledge on happenings. I will not write again in this thread. Bye.

    Regards
    ramesh
    Ramesh,

    I Appreciate your concern and participation. But I was objecting to your usage "I am not a fool like you", "Childish" ETC. I gave evidence of two co-workers to prove my point with sustantial evidence.. if you really observe my writings, There will be issue based aggression but there wont be personal abuses on unknown.(except known team ,we pull eachother in a friendly way).Many of my friends(more than 6) also expressed that what I wrote about T.K.Ramamoorthy is 100% correct but I should have done it without hurting M.S.V. I realised later that more I tried to establish T.K.R as the outstanding composer who met with great injustice by his friends (Trust me .I have musical knowledge.He is not just another Narasimhan.Otherwise he wouldnt have been the duo for 13 years.)it is turning against M.S.V whom I thought was scheming and political agaist this musical genius.

    I have greater respect for M.S.V more than any of you. Though he didnt have formal music learning,cant discuss music fluently, he is a suyambu and has extraordinary sense of music and a Good composer. But the duo were the best composers in India from 1961-1965 in comparison with Greats like Naushad,SDB,RDB,Sankar-Jaikishan,O.P.nayyar,Madhan-Mohan,Roshan,Kalyanji-Anandji Etc.

    Anycase, it was an unfortunate split and the greatest loss that music world ever met with.

    Dont feel offended by my reprimand. Pl.Participate and voice your thoughts without usage of strong words against a stranger.
    Last edited by Gopal.s; 7th July 2014 at 06:54 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #1420
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் கோபால் சார்,

    '
    நம்மைப்போலவே சாரதாவும் கூட. இருமலர்களின் மற்றெல்லா பாடல்களையும் விட 'அன்னமிட்ட கைகளுக்கு' பாடலின்மேல் பைத்தியமாக இருப்பார். இது அவரே திரிகளில் பலமுறை சொன்னது.
    என்னையும் இந்த பாடல் பைத்திய லிஸ்டில் சேருங்கள். சொன்னது நீதானா,மாலை பொழுதின்,ஒரு நாள் இரவு ,பாடல்களுக்கு ஈடாக ,அன்ன மிட்ட கைகளுக்கு பாட்டை கேட்கும் போதெல்லாம் , அறியாமல் கண்ணீர் வந்து விடும்.இரு மலர்களில் என் favourite இந்த platinum தான்.என் உயிரோடு கலந்து சிந்து பைரவி ராகம் கூட.(எழுதியிருக்கிறேனே?)
    Last edited by Gopal.s; 7th July 2014 at 04:51 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •