-
12th July 2014, 11:50 AM
#1681
Junior Member
Newbie Hubber
இங்கு தெரிந்த அனைத்தையும் ஒரே நாளில் கொட்டி தீர்த்து விடும் வெறியுடனே வர வேண்டியதில்லை. பதிவுகளுக்கு வேண்டிய spacing ,interraction ,digestion அவசியம். போட்டு ஒரு நாளைக்கு இருபது பக்கங்கள் என்று எல்லாவற்றையும் சமாதியாக்காமல்,மற்றவர் பதிவுகளுக்கும் இடமளித்தால் நலம்.
இங்கு ரசிக்கவும் வரலாமே?தவறில்லையே?ஒரு பார்வையாளர் ஒரு நாள் எத்தனைதான் தாங்க முடியும்?மயில் தோகையானாலும்,ஒரு அளவு மேல் வண்டியில் ஏற்றினால் அச்சு முறிந்து விடும் என்று வள்ளுவன் கூறியுள்ளானே?
-
12th July 2014 11:50 AM
# ADS
Circuit advertisement
-
12th July 2014, 12:05 PM
#1682
Junior Member
Newbie Hubber
டிங் டிங் டாங் டிங் டாங் டிங்கிலோலா நீச்சல் குளத்திலா?
-
12th July 2014, 12:32 PM
#1683
Senior Member
Veteran Hubber
ஒரு உண்மையான தமிழ்க்கவிஞன் மாயவனாதனை நினைவுகூர்ந்த கோபால், ராஜேஷ், ராகவேந்தர், கிருஷ்ணா மற்றும் அன்புள்ளங்களுக்கு நன்றி. இதுபோன்ற காலத்தால் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட நிஜமான திறமையாளர்களை நினைவு கூர்வதில் நமது திரி பெருமையடைகிறது.
திரு மாயவநாதன் இயற்றிய பல பாடல்கள் இங்கு நினைவு கூறப்பட்டன. நண்பர்கள் சொல்ல மறந்த ஒரு அருமையான பாடலை பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் தவறான தீர்ப்பால் கோவலன் கொலைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு, பலிபீடத்தில் அவன் தலை வெட்டப்பட்ட அடுத்த கணம் கணீரென்று அசரீரியாய் ஒலிக்கிறது ஒரு குரல்
"நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா?. அல்லது நீயும் சென்று அந்தக்கொலைக்களத்தில் உயிர் விட்டாயா?"
என்ற தொகையறாவை தொடர்ந்து துவங்குகிறது பல்லவி, அருளிசைப் பாடகி கே.பி. சுந்தராம்பாளின் கணீர் குரலில்....
அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது.
காலடி தாமரை நோவதை மறந்து காதலனோடு நடந்தாளே
அந்தக்காலனும் தொடர்ந்து நடந்ததை எண்ணி கற்புக்கரசி துடித்தாளே
அடையாகதவாய் இமையா விழியாய் ஆயிரம் யுகங்கள் பொறுத்தாளே
இன்று விளையாநிலத்தின் விதையாய்ப்போன வேதனையறிந்து தவித்தாளே
(ஆகா என்னவொரு வார்த்தை ஜாலம்.., சொற்சிலம்பம்...,)
அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது.
வெயிலே இல்லாத காலத்தில் கிடைக்கின்ற நிழலால் பயனென்ன
கெஞ்சி வேண்டியபோது ஒதுங்கிய நீதி வந்தேன்ன போயென்ன
உயிரே போனபின் உடலெனும் கூட்டுக்கு உயர்வென்ன தாழ்வென்ன
செய்யா பிழைக்கே தலையது வீழ்ந்தால் செய்தவன் கதியென்ன
செய்தவன் கதியென்ன
பிழை செய்தவன் கதியென்ன
சுதர்சனத்தின் அதிரடி இசையுடன் பாடல் நிறைவுறும்.
என்ன அருமையான பாடல், என்னவொரு கருத்துச்செறிவு, என்னவொரு சொல்லாடல்... ஆகா இவ்னடா கவிஞன். நாயகர்களை துதி பாடியவர்களை பெருங்கவிஞர்கள் என்று கொண்டாடிய நம் சிறுமதியை என்ன சொல்வது?
முதலில் இப்பாடலின் பல்லவியை
அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது
என்று எழுதினார் மாயவநாதன். ஆனால் 'தெய்வம் எங்கே சென்று விட்டது என்று நான் பாடலாமா? அதை மட்டும் மாற்றிக் கொடுங்கள் என்று கே.பி.எஸ். கேட்க 'தெய்வம் இங்கே வந்து விட்டது' என்று மாற்றி, அந்த வரி வரும்போது கண்ணகி கையில் சிலம்போடு பொட்டல்வெளியில் கோபாவேசத்தோடு வருவதாக காட்டியிருப்பார்கள்.
படம் : "பூம்புகார்....
-
12th July 2014, 12:43 PM
#1684
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
முதலில் இப்பாடலின் பல்லவியை
அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது
என்று எழுதினார் மாயவநாதன். ஆனால் 'தெய்வம் எங்கே சென்று விட்டது என்று நான் பாடலாமா? அதை மட்டும் மாற்றிக் கொடுங்கள் என்று கே.பி.எஸ். கேட்க 'தெய்வம் இங்கே வந்து விட்டது' என்று மாற்றி, அந்த வரி வரும்போது கண்ணகி கையில் சிலம்போடு பொட்டல்வெளியில் கோபாவேசத்தோடு வருவதாக காட்டியிருப்பார்கள்.
படம் : "பூம்புகார்....
கார்த்திக் சார்,
அன்று கொல்லும் அரசின் ஆணை பாடலை படு விவரமாக நினைவு கூர்ந்து (மாற்ற பட்ட வரிகள் உட்பட) சொன்ன விதம் சுகமோ சுகம்.
இவர் காகித ஓடத்தில் ஏறாமல் போனது வருத்தமே.
இவரின் இன்னொரு வசீகர பாடல் திரை இசை திலகத்தின் கை வண்ணத்தில் தொழிலாளியில் என்ன கொடுப்பாய்,என்ன கொடுப்பாய்.
இந்த பாடலும்,காதல் எந்தன் மீதில் பாடலும் cute என்று சொல்ல வேண்டிய ரகம்.
-
12th July 2014, 12:47 PM
#1685
Senior Member
Veteran Hubber
நான் அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பது வழக்கம். அதை மீண்டும் இங்கே வைக்கிறேன் (67-வது முறையாக)...
மூன்று வரி, நான்கு வரி கமெண்ட் எழுதுவதற்காக கிட்டத்தட்ட அரைப்பக்கம் அளவிலான பெரிய பதிவுகளை, அதிலுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடன் அப்படியே 'கோட்' செய்யாதீர்கள். பலவீனமான சர்வர் இணைப்பு உள்ளவர்கள் இதனால் சிரமப்பட ஏதுவாகிறது....
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள் + 1,00,000
(ராஜேஷ் சார், நூல்வேலி படத்தின் பாடலுக்கான தங்கள் பின்னூட்டத்தை பார்த்தபின் வேண்டுகோள் விடுக்கத் தோன்றியது. வருத்தப்பட வேண்டாம்)..
Last edited by mr_karthik; 12th July 2014 at 01:11 PM.
-
12th July 2014, 01:09 PM
#1686
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
இதுபோன்ற காலத்தால் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட நிஜமான திறமையாளர்களை நினைவு கூர்வதில் நமது திரி பெருமையடைகிறது.
டி.கே.ராமமூர்த்தி தவிர.....???????????
-
12th July 2014, 01:15 PM
#1687

Originally Posted by
mr_karthik
நான் அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பது வழக்கம். அதை மீண்டும் இங்கே வைக்கிறேன் (67-வது முறையாக)...
மூன்று வரி, நான்கு வரி கமெண்ட் எழுதுவதற்காக கிட்டத்தட்ட அரைப்பக்கம் அளவிலான பெரிய பதிவுகளை, அதிலுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடன் அப்படியே 'கோட்' செய்யாதீர்கள். பலவீனமான சர்வர் இணைப்பு உள்ளவர்கள் இதனால் சிரமப்பட ஏதுவாகிறது....
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள்
தயவு செய்து ஒத்துழையுங்கள் + 1,00,000
அன்பு கார்த்திக் சார்/கோப்ல சார்
நீங்கள் இருவரும் சில improvement suggestions கொடுத்து உள்ளீர்கள்
என்னுடைய வேண்டுகோள்
ஒரு உதாரணத்திற்கு எந்த பதிவில் எப்படி இருந்து இருக்க வேண்டும் என்று சொன்னால் எனக்கு கொஞ்சம் புரிந்து கொள்ள வசதி ஆக இருக்கும் . நான் இதை positive feedback ஆகவே எடுத்து கொள்கிறேன்
நான் நிறையவே சொல்புத்திகாரன் .கொஞ்சம் தான் சுயபுத்தி
.
-
12th July 2014, 01:16 PM
#1688
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
டி.கே.ராமமூர்த்தி தவிர.....???????????
அவரையும்தான். (அடுத்தவரை மட்டம் தட்டாது சரியான முறையில் நினைவு கூறப்பட்டால்)..
-
12th July 2014, 01:20 PM
#1689
Senior Member
Veteran Hubber
டியர் கிருஷ்ணாஜி,
நான் சொன்னது நண்பர் ராஜேஷ் அவர்களின் பதிவு குறித்து. (பதிவில் மாற்றம் செய்திருக்கிறேன் பாருங்கள்)
மற்றபடி பதிவுகளின் எண்ணிக்கை குறித்து நான் எதுவும் சொல்லவில்லை.
பதிப்பவர்களுக்கே சிரமம் இல்லாதபோது
படிப்பவர்களுக்கு சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன்
Last edited by mr_karthik; 12th July 2014 at 01:25 PM.
-
12th July 2014, 01:56 PM
#1690
நன்றி கார்த்திக் சார்
என்னுடைய பதிவில் ஏதாவது தவறு அல்லது improvement தேவை என்றால் நீங்கள் பதிவை குறிப்பிட்டு தவறை சுட்டி காட்டீர்களானால்
திருத்தி கொள்ள ஏதுவாக இருக்கும்
இந்த வேண்டுகோள் எல்லோருக்குமே பொதுவாக வைக்கப்படும் ஒன்று
அதே போல நேற்று விடுதலை படத்தில் பாடல்கள் சரியாக அமையவில்லை என்று குறிப்பிட்டு இருந்தேன். அது நம் NT அல்லது ரஜினி ரசிகர்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும் என்றால் அதையும் திருத்தி கொள்ள தயார் ஆக இருக்கிறேன்
Bookmarks