-
15th July 2014, 11:23 AM
#1821
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (29)
பெருந்தலைவர் பிறந்த நாள் ஸ்பெஷல்
இன்று மனிதப் புனிதரின் 112 வது பிறந்த நாள்.
'இன்றைய ஸ்பெஷலா'க மனிதர்களுள் மகுடமாய் ஜொலித்த நம் பெருந்தலைவரை நடிகர்களுள் மனிதனாய் ஜொலித்த நடிகர் திலகம் போற்றிப் புகழும் ஒரு பாடல். பொருத்தமாய் இருக்கும்தானே!
படம்: 'தாய்'.
பேனர்: பாபு மூவீஸ்
இசை: மெல்லிசை மன்னர்
பாடல்கள்: கவியரசர்
கதை வசனம்: எம்.எஸ்.சோலைமலை
ஒளிப்பதிவு: விட்டல்ராவ்
தயாரிப்பு: எஸ்.எஸ்.பிரகாஷ்,எஸ்.எஸ்.ராஜன்
'தாய்' (1974)திரைப்படத்தில் நடிகர் திலகமும்,ஜெயலலிதாவும் ஆடிப் பாடும் பெருந்தலைவர் புகழ் போற்றும் அற்புதமான பாடல்.

அந்த கிராமத்திற்கு நல்லது செய்ய நினைத்து வந்திருக்கும் 'மேஜர்' சுந்தரராஜனைப் புகழ்ந்து கிராமத்து இளைஞர் நடிகர் திலகமும், அவர் காதலியாக வரும் ஜெயலலிதா மற்றும் ஊர் மக்கள் பாடுவது போல் வரும் இந்தப் பாடல் முழுக்க முழுக்க காமாராஜர் அவர்களை மனதில் கொண்டே எழுதப்பட்டது. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பெருந்தலைவரின் புகழை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

பெருந்தலைவரை தெய்வமாகப் போற்றிய நடிகர் திலகம் தன் படப் பாடல்களில் அம்மேதையின் புகழ் பாட மறந்ததேயில்லை. எவ்வித எதிர்பார்ப்புமின்றி, எவ்வித ஆதாயமும் தேடாமல் பெருந்தலைவரின் புகழை தன் பாடல்கள் மூலம் மக்கள் உணரச் செய்தார் அந்த நடிக மாமேதை
'பள்ளி சாலை தந்தவன் ஏழைத் தலைவனை தினமும் எண்ணுங்கள்'
என்று மக்களை எந்நாளும் நினைத்துப் பார்க்கச் சொன்ன தலைவரின் தன்னகரில்லா தொண்டன். அவரை மறக்காமல் மக்களுக்கு நினைவூட்டிய விசுவாசத் தொண்டன்.
'செடி மேல் படர்ந்த கொடிகளைப் போல
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்
அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசம் ஆகலாம்.
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்
தியாகமும் சேலமும் தேசத்தை ஆளலாம்'
என்று எட்டுத்திக்கும் தன் தலைவர் புகழை எதிரொலிக்க வைத்த ஏழைப் பங்காளனின் எளிமைத் தொண்டன்.
'சிவகாமி உமையவளே முத்துமாரி
உன் செல்வனுக்குக் காலம் உண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக் கூறி
இந்த மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டை ஏறி'
என்று தீராத நம்பிக்கையோடு தீச்சட்டி கையில் ஏந்தி களிப்புற்றவன்.
அது உண்மையான பெருந்தலைவரின் மேல் அந்த உண்மையான மனிதனுக்கிருந்த இருந்த பக்தி, பாசம், மரியாதை.
தன் தலைவன் புகழ் பாடும் எங்கள் தலைவன்
இந்தப் பாடலை பெருந்தலைவரின் பிறந்தநாளில் முதன் முறையாக இணையத்தில் தரவேற்றி உங்கள் அனைவருக்கும் அளிப்பதில் பெருமையும், பேரானந்தமும், உவகையும் அடைகிறேன்.
நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு ஹேய்
நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு இல்லாமை தந்தாரு
கல்லூரி தந்தாரம்மா
அம்மம்மா கல்லூரி தந்தாரம்மா
நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு இல்லாமை தந்தாரு
கல்லூரி தந்தாரம்மா
அம்மம்மா கல்லூரி தந்தாரம்மா
பாண்டிய நாட்டுச் சீமையிலே
ஒரு பச்சைக் குழந்தை அழுததடி
பாலுக்காக அழவில்லை
அது படிப்புக்காக அழுததடி
மாடு மேய்க்கும் சிறுவனைக் கண்டு
மனதும் உடலும் பதைத்ததடி
வளரும் பிள்ளை தற்குறியானால்
வாழ்வது எப்படி என்றதடி
நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
பெற்ற தாயையும் மறந்ததடி
அது பிறந்த பொன்னாட்டை நினைத்ததடி
பெற்ற தாயையும் மறந்ததடி
அது பிறந்த பொன்னாட்டை நினைத்ததடி
உற்றார் உறவினர் யாரையும் மறந்து
உலகம் காக்கத் துணிந்ததடி
கல்யாணம் செய்யவும் எண்ணமில்லை
ஒரு காசுக்கும் பணத்துக்கும் ஆசையில்லை
எல்லார்க்கும் எல்லாமும் வேண்டுமென்றே
தினம் எண்ணுவதல்லால் ஏதுமில்லை
நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு இல்லாமை தந்தாரு
கல்லூரி தந்தாரம்மா
அம்மம்மா கல்லூரி தந்தாரம்மா
(கீழே வரும் பாடலின் பகுதி வானொலியின் ஒலிபரப்பில் கிடையாது. அதையும் சேர்த்தே வீடியோவில் அளித்துள்ளேன்).
பிறப்பினில் பச்சைத் தமிழனடி
அவர் பெரியவர் என்போம் நாங்களடி
கர்ம வீரனை தனா காந்தி என்று
அழைப்பார் இந்திய மக்களடி
அவரை அழைப்போம் வாங்களடி
ஓர் அரசை அமைப்போம் நாங்களடி
விருது கொடுத்து நகர்வலம் வருவோம்
வெற்றி முழக்கிடக் கூறுங்கடி
வெற்றி முழக்கிடக் கூறுங்கடி
முதன் முறையாக இணையத்தில்
Last edited by vasudevan31355; 15th July 2014 at 11:41 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th July 2014 11:23 AM
# ADS
Circuit advertisement
-
15th July 2014, 11:43 AM
#1822
[QUOTE=vasudevan31355;1147760]இன்றைய ஸ்பெஷல் (29)
பெருந்தலைவர் பிறந்த நாள் ஸ்பெஷல்
[SIZE=2][B][COLOR="blue"]இன்று மனிதப் புனிதரின் 112 வது பிறந்த நாள்.
வாசு சார்
தாய் பட பாடல் அருமை
உண்மையிலே இந்த பாட்டு நீங்கள் மட்டும் தான் இந்த திரியில் குறிப்பிட்டு உள்ளீர்கள் . நான் இது வரை படித்த பாடல்கள் சம்பந்தப்பட்ட வலை பதிவுகளில் பதியபடாத பதிவு இது .
நிச்சயம் இது புது வரவு .
NT நடித்த கருப்பு வெள்ளையில் தாய்,மனிதரில் மாணிக்கம் தவிர வேறு ஏதாவது படம் உண்டா 1974 கால கட்டத்திற்கு பிறகு
-
15th July 2014, 11:48 AM
#1823
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
NT நடித்த கருப்பு வெள்ளையில் தாய்,மனிதரில் மாணிக்கம் தவிர வேறு ஏதாவது படம் உண்டா 1974 கால கட்டத்திற்கு பிறகு
மனிதரில் மாணிக்கம் (7-12-1973)
தாய் (7-3-1974)
'தாய்'க்குப் பின் வண்ணம்தான்.
வண்ணம் மட்டுமே.
Last edited by vasudevan31355; 15th July 2014 at 12:04 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th July 2014, 12:15 PM
#1824
Junior Member
Platinum Hubber
வாசு சார்
15.7.1972

வேலூர் - அப்சரா அரங்கம்
காலை - 9 மணிக்கு ரசிகர் மன்ற சிறப்பு காட்சி .
கல்லூரி நண்பர்களுடன் [ எல்லா தரப்பு ரசிகர்களும் ] முதல் காட்சி பார்த்த நினைவுகள் .
எல்லோரும் ஜெயா ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
முதல் காட்சி என்பதால் ரசிகர்களின் ஆராவாரங்கள் , விசில்கள் தூள் பறந்தன .
முதல் பாடல் - சுதந்திர பூமியில் பல வகை ...பாடல் காட்சியில் அரங்கமே அதிர்ந்தது .
வீரமென்னும் பாவை தன்னை கட்டி கொள்ளுங்கள் ....
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே .......
போன்ற இனிமையான பாடல்கள் .
ரசித்த அந்த இனிய நாட்கள் இன்றுடன் 42 ஆண்டுகள் முடிந்து விட்டது .
-
15th July 2014, 12:17 PM
#1825
Senior Member
Diamond Hubber
ஷியாம் இசையில் என்னைக் கவர்ந்த இன்னொரு பாட்டு.
ஒரு டப்பாங்குத்து ரேஞ்சிற்கு என்னாலும் அட்டகாசமாக ஒரு பாடலைத் தர முடியும் என்று ஷ்யாம் நிருபித்த பாட்டு.
இனிமைக்கு வழக்கம் போல குறைவில்லைதான்.
'வா இந்தப் பக்கம்' படத்தில் 'இவள் தேவதை.... இதழ் மாதுளை' என்ற பாடல்.
நம்ம 'லூஸ்' பிரதாப் போத்தனும் (நான் சொல்லலப்பா... அல்லாருஞ் சொல்றது) உமாவும் நடித்திருப்பார்கள். உமாவின் தாயார் 'நாடகக் காவலர்' மனோகர் ட்ரூப்பில் பிரதான நடிகை. ராஜேஷ் சார் ஹெல்ப் ப்ளீஸ்.
ராஜேஷ் சார்,
வீடியோ கிடைக்குமா?
-
15th July 2014, 12:24 PM
#1826

Originally Posted by
vasudevan31355
மனிதரில் மாணிக்கம் (7-12-1973)
தாய் (7-3-1974)
'தாய்'க்குப் பின் வண்ணம்தான்.

வண்ணம் மட்டுமே.
பதில் அருமை
வாசுவின் திறமை
திரியின் பெருமை
வாசு சார்
நேற்று ஆரூர் தாஸ் இன் ராணி சந்திரா பற்றிய ஒரு பதிவு தினத்தந்தி யில் வாசித்தேன். அதில் அவர், ராணி சந்திராவை அவர் தான் பத்ரகாளியில் கதாநாயகியாக அதுவும் முதல் தமிழ் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்ததாக SJ அடித்து உள்ளார் . பத்ரகாளி ரிலீஸ் 1976 ஆனால் ராணி சந்திரா 1975 கால கட்டத்திலேயே தேன் சிந்துதே வானம் கமல் இன் ஜோடியாக படத்தில் அறிமுகம் ஆன நினைவு .
இது பற்றி ஏதாவது தகவல் உண்டா . இதை பற்றி இந்த திரியில் கேள்வி கேட்கலாமா
அப்படியே தில்லான மோகனம்பாள் mr கிட்டா ஐயர் பற்றியும்

-
15th July 2014, 12:26 PM
#1827
Senior Member
Diamond Hubber
உண்மைதான் வினோத் சார். நன்றாக நினைவில் இருக்கிறது. முதல் பாதியில் அதம் பறந்த படம் இரண்டாவது பாதியில் ரசிகர்களை வதம் செய்து விட்டது.
இருந்தாலும் நடிகர் திலகத்தின் உழைப்பு அபாரம். குறிப்பாக சண்டைக் காட்சிகளில்.
இன்னொரு மறக்கவே முடியாத விஷயம். நடிகர் திலகத்திடம் இரண்டாவது முறையாக நேரிடையாக அறிமுகமாகி அவருடன் கைகுலுக்கி பேசி மகிழ்ந்தேன்.
ஏனென்றால் தர்மம் எங்கே படத்தில் சில காட்சிகளின் ஷூட்டிங் எங்கள் ஊரில் நடந்தது.
செத்து சுண்ணாம்பாகப் போனாலும் மறக்க முடியாத நினைவு.
நன்றி வினோத் சார் இனிமையான நினைவலைகளை நினைக்க வைத்து சிறகிட்டுப் பறக்க வைத்ததற்கு.
-
15th July 2014, 12:27 PM
#1828
esvee sir
15.7.1972 dharmam enge
super still and good remembrance
-
15th July 2014, 12:29 PM
#1829
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்!
'தாயி'ன் பாராட்டிற்கு நன்றி!
நிஜமாகவே அபூர்வ பாடல் அளித்து எங்களையெல்லாம் 'பணால்' செய்து விட்டீர்கள்.
'வாடியம்மா பொன் மகளே'
ஈஸ்வரி டைப்பில் சுசீலாம்மா புகுந்து விளையாடுவார்கள்.
'பாலூட்டி வளர்த்த கிளி' அல்லவா! அதுதான் அந்த சுவை.
-
15th July 2014, 12:32 PM
#1830
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
பதில் அருமை
வாசுவின் திறமை
திரியின் பெருமை
இது என்ன கொடுமை
கிருஷ்ணா சார்!
Bookmarks