-
15th July 2014, 07:57 PM
#1841
Senior Member
Veteran Hubber
தமிழ் திரைப்படங்களில் எத்தனையோ வகையான டூயட்டுகள் வந்துள்ளன. காதலன் காதலி டூயட் அல்லது கணவன் மனைவி டூயட்தான் என்றில்லை, அண்ணன் - தங்கை டூயட் (உம்: இந்த மன்றத்தில் ஓடிவரும்) அப்பா - மகள் டூயட் (உம்: அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா) இப்படி பல. ஆனால் சித்தப்பாவுக்கும் அண்ணன் மகளுக்கும் டூயட் வந்திருக்கிறதா?. எனக்குத்தெரிந்து இது ஒன்றுதான். மீண்டும் சொல்கிறேன், எனக்குத்தெரிந்து (ஒருவேளை தெரியாமல் ஏதாவது இருக்கலாம்).
கல்யாண ஊர்வலம் (1970)
நாகேஷ் கதாநாயகனாகவும், கே.ஆர்.விஜயா கதாநாயகியாகவும், மணிமாலா நாகேஷின் அண்ணன் மகளாகவும் நடித்த கருப்பு வெள்ளைப்படம். எஸ்.பி.பி.யும் ஜேசுதாஸும் திரையுலகில் மும்முரமாகி பி.பி.எஸ்.ஸை முற்றிலும் ஓரம் கட்டும் முன் ஜேசுதாஸ் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடிக்கொண்டிருந்த நேரம். சரி இப்பாடலில் ஜேசுதாஸின் குரல் நாகேஷுக்கு பொருந்தியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் இசை தேவராஜன் ஆயிற்றே. யாருக்காக இருந்தாலும் ஜேசுதாசையும் மாதுரியையும்தானே கொண்டு வருவார். இதிலும் கொண்டுவந்து விட்டார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தன் மணநாளை மனதில் எண்ணி மகிழ்ச்சியுடன் பாட, அவளுடைய சித்தப்பாவும் அந்த குதூகலத்தை எண்ணி பாடலைத் தொடர்வதாக அமைந்த பாடல்.
மாதுரி:
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மைதடவி
காத்திருக்கும் கன்னிமகள்
காதல்மனம் ஒரு தேனருவி
புது மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் - அதில்
மங்கல சங்குகள் கொஞ்சும்
காதலி உள்ளம் வெள்ளம் -அதில்
காதலின் ஓடம் செல்லும்
கை வளையல் குலுங்கிவர கனவு கலந்துவர
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....
ஜேசுதாஸ்:
நெஞ்சமெனும் ஆலயத்தில்
நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதை தன்னுடனே
எடுத்துச்செல்வாள் அந்த அன்புமகள்
புது மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....
ஆயிரம் காலத்தை கடந்து
விழி நீரினை கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து
நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
இளம்பருவ மழையில் இரு
புருவம் நனைந்து வர
கல்யாண நாள் வருமோ... கல்யாண நாள் வருமோ...
-
15th July 2014 07:57 PM
# ADS
Circuit advertisement
-
15th July 2014, 08:39 PM
#1842
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
தமிழ் திரைப்படங்களில் எத்தனையோ வகையான டூயட்டுகள் வந்துள்ளன. காதலன் காதலி டூயட் அல்லது கணவன் மனைவி டூயட்தான் என்றில்லை, அண்ணன் - தங்கை டூயட் (உம்: இந்த மன்றத்தில் ஓடிவரும்) அப்பா - மகள் டூயட் (உம்: அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா) இப்படி பல. ஆனால் சித்தப்பாவுக்கும் அண்ணன் மகளுக்கும் டூயட் வந்திருக்கிறதா?. எனக்குத்தெரிந்து இது ஒன்றுதான். மீண்டும் சொல்கிறேன், எனக்குத்தெரிந்து (ஒருவேளை தெரியாமல் ஏதாவது இருக்கலாம்).
கல்யாண ஊர்வலம் (1970)
நாகேஷ் கதாநாயகனாகவும், கே.ஆர்.விஜயா கதாநாயகியாகவும், மணிமாலா நாகேஷின் அண்ணன் மகளாகவும் நடித்த கருப்பு வெள்ளைப்படம். எஸ்.பி.பி.யும் ஜேசுதாஸும் திரையுலகில் மும்முரமாகி பி.பி.எஸ்.ஸை முற்றிலும் ஓரம் கட்டும் முன் ஜேசுதாஸ் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடிக்கொண்டிருந்த நேரம். சரி இப்பாடலில் ஜேசுதாஸின் குரல் நாகேஷுக்கு பொருந்தியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் இசை தேவராஜன் ஆயிற்றே. யாருக்காக இருந்தாலும் ஜேசுதாசையும் மாதுரியையும்தானே கொண்டு வருவார். இதிலும் கொண்டுவந்து விட்டார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தன் மணநாளை மனதில் எண்ணி மகிழ்ச்சியுடன் பாட, அவளுடைய சித்தப்பாவும் அந்த குதூகலத்தை எண்ணி பாடலைத் தொடர்வதாக அமைந்த பாடல்.
மாதுரி:
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மைதடவி
காத்திருக்கும் கன்னிமகள்
காதல்மனம் ஒரு தேனருவி
புது மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் - அதில்
மங்கல சங்குகள் கொஞ்சும்
காதலி உள்ளம் வெள்ளம் -அதில்
காதலின் ஓடம் செல்லும்
கை வளையல் குலுங்கிவர கனவு கலந்துவர
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....
ஜேசுதாஸ்:
நெஞ்சமெனும் ஆலயத்தில்
நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதை தன்னுடனே
எடுத்துச்செல்வாள் அந்த அன்புமகள்
புது மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....
ஆயிரம் காலத்தை கடந்து
விழி நீரினை கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து
நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
இளம்பருவ மழையில் இரு
புருவம் நனைந்து வர
கல்யாண நாள் வருமோ... கல்யாண நாள் வருமோ...
கார்த்திக் சார். ஜானகி மாதுரி மாதிரி கேட்டதா உங்களுக்கு .. பரவாயில்லை.....
இசை தேவராஜன் இல்லை ஆர்.பார்த்தசாரதி .
வரிகள் வாலி ஐயா அவர்கள்
மணிமாலா நல்ல அழகு நல்ல நடிகை .
இதில் இடம்பெற்ற இன்னுமொரு அழகான பாடல் இசையரசியின் குரலில்
-
15th July 2014, 08:41 PM
#1843
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
வா இந்த பக்கம் உமா பின்னாட்களில் பின்னணி குரல் பேசுபவராக இருந்தார் என்றும் அவருடைய கணவர் கூட திரைப்படத்துறையில் பணி புரிபவர் என்றும் நினைவு
உமா தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நடித்தவர். பின்னாளில் மருதகாசி ஐயாவின் மகன் மருதபரணியை திருமணம் செய்து கொண்டு
உமா பரணியானார் மீனாவிற்கு பல படங்களில் குரல் கொடுத்தவர் இவர்.
-
15th July 2014, 08:50 PM
#1844
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ஷியாம் இசையில் என்னைக் கவர்ந்த இன்னொரு பாட்டு.
ஒரு டப்பாங்குத்து ரேஞ்சிற்கு என்னாலும் அட்டகாசமாக ஒரு பாடலைத் தர முடியும் என்று ஷ்யாம் நிருபித்த பாட்டு.
இனிமைக்கு வழக்கம் போல குறைவில்லைதான்.
'வா இந்தப் பக்கம்' படத்தில் 'இவள் தேவதை.... இதழ் மாதுளை' என்ற பாடல்.
நம்ம 'லூஸ்' பிரதாப் போத்தனும் (நான் சொல்லலப்பா... அல்லாருஞ் சொல்றது) உமாவும் நடித்திருப்பார்கள். உமாவின் தாயார் 'நாடகக் காவலர்' மனோகர் ட்ரூப்பில் பிரதான நடிகை. ராஜேஷ் சார் ஹெல்ப் ப்ளீஸ்.
ராஜேஷ் சார்,
வீடியோ கிடைக்குமா?
உமாவின் தாயார் டி.ஆர்.லதா .. பல தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர் , பல மொழி மாற்று படங்களுக்கு குரல் கொடுப்பவரும் கூட
வா இந்த பக்கம் வீடியோ கிடைக்கவில்லை . முயற்ச்சிக்கிறேன்
-
15th July 2014, 11:17 PM
#1845
Senior Member
Diamond Hubber
'வா இந்தப் பக்கம்' உமா

Last edited by vasudevan31355; 15th July 2014 at 11:37 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th July 2014, 11:32 PM
#1846
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்,
கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு இசையமைப்பாளர்.

இதில்
நான் ஒன்ன நெனச்சேன்
நானொரு பொன்னோவியம் கண்டேன்
இரு பாடல்களும் செம ஹிட் என்பது ஊரறிந்த விஷயம்.
ஆனால் ஆடு மேய்த்துக் கொண்டே ஒரு பாடல்
'1,2,3,4,5,6 எல்லா ஆடும் இருக்குதான்னு எண்ணிப் பார்போம் வாடா'
என்றொரு பாடல் உண்டு. பாடியவர்கள், இசையமைப்பாளர் யாரென்று கூற இயலுமா? ரொம்ப நாளாக சந்தேகம்.
-
15th July 2014, 11:43 PM
#1847
Senior Member
Seasoned Hubber
i think the 1 2 3 song was composed by t.R.Pappa & sung by B.S.Sasirekha & chorus
-
16th July 2014, 06:32 AM
#1848
Senior Member
Seasoned Hubber
தாயை போல பிள்ளை நூலைப்போல சேலை 1959'ல் வெளியான படம்
இசை மகாதேவன் அவர்கள்
விலைமதிப்பில்லாத அருட்பெரும் கலையே .. என்ற அருமையான பாடல்
குரல்கள் இசையரசி மற்றும் சூலமங்கலம் ராஜலெக்*ஷ்மி
thayaipola pillai noola pola selai-vilai madhippilladha kalaye.mp3
-
16th July 2014, 08:10 AM
#1849
Senior Member
Seasoned Hubber
பதிவுகளைப் பாராட்டிய ஒவ்வொரு அன்பு உள்ளத்திற்கும் என் மனமார்ந்த நன்றி. மின்னல் வேகம், ஜெட் வேகம் என்று வேகத்திற்கு உதாரணமாக மற்றவற்றைக் கூறுவதை விட இந்தத் திரியைக் கூறி விடலாம். தொடருங்கள்.
மிகவும் மகிழ்ச்சியோடு எனக்குத் தெரிந்து இணையத்தில் முதன் முதலாக,
மெல்லிசை மன்னரின் இசையில் எஸ்.பி.பாலாவும் எஸ்.ஜானகியும் இசை ராஜாங்கமே நடத்தியிருக்கும் என் மிகவும் விருப்பமான பாடலை உங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன்.
கவ்வாலி டைப் பாடல் தான். இருந்தாலும் அதில் இந்த அளவிற்கு ஆளுமை தந்திருக்கும் மெல்லிசை மன்னரின் திறமையை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. பாடலில் எஸ்.பி.பாலாவின் குரலைக் கேட்கும் போதும் சங்கதிகளை அவர் தந்திருக்கும் விதத்தைப் பார்க்கும் போதும் எப்பேர்ப்பட்ட இசை வளத்தை இறைவன் அவருக்கு அளித்திருக்கிறான், எப்பேர்ப்பட்ட இசையமைப்பாளர் அவரை எவ்வளவு தூரம் பயன்படுத்தியிருக்கிறார் என்பது புரியும்.
முதன்முறை கேட்பவர்களுக்கு இந்தப் பாடல் பிடிக்க சற்று தாமதமாகலாம். ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டுப் பாருங்கள். இப்பாட்டின் மகத்துவம் புரியும்.
நீண்ட நாட்களாக நான் கேட்கத் துடித்த அந்தப் பாடல், நேற்று நான் குறிப்பிட்டது போல், கங்கா யமுனா காவிரி படத்திலிருந்து உமர் கயாம் எழுதி வைத்த கவிதை...
http://www.mediafire.com/listen/jv1b...markhayyam.mp3
பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக கோப்பாக தரவேற்றப் பட்டுள்ளது. கேட்டு மகிழவும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th July 2014, 10:05 AM
#1850
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (30)
'இன்றைய ஸ்பெஷலி'ல் ஒரு அழகான மெலடி டூயட். 'திருமாங்கல்யம்' படத்திலிருந்து.

ஜெயா மேடத்தின் நூறாவது படம். டி.ராமாநாயுடுவின் விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் தயாரிப்பு. வண்ணப்படம். முத்துராமன், சிவக்குமார், லக்ஷ்மி, மேஜர், நாகேஷ், ஸ்ரீகாந்த் நடித்திருந்தனர். ராமாநாயுடுவும் சில காட்சிகளில் நடித்திருந்தார். ராமா நாயுடுவின் படங்களில் தவறாமல் இடம் பெறும் சாந்தகுமாரியும் உண்டு. பாலாஜி வில்லன். லஷ்மி செம ஹாட். படம் ரொம்ப எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல குடும்பப் படமாய் இருந்தும், நிறைய செலவு செய்து எடுத்தும் சலிப்படையச் செய்யும் காட்சிகளின் நீளத்தால் பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் போனது.

கதை - எத்தனபூடி சுலோச்சனாராணி. வசனம் - ஏ.எல்.நாராயணன்.
இசை 'மெல்லிசை மன்னர்'. காலம் மறக்க முடியாத அற்புத டூயட்டை ஜெயாவின் நூறாவது படத்திற்கு பரிசாகத் தந்திருக்கிறார்.
'சவாலே சமாளி' படத்தில் வரும் 'என்னடி மயக்கமா சொல்லடி ...வஞ்சி...அவனை வஞ்சி' டைப்பில் 'திருமாங்கல்யம் கொள்ளும் முறையில்லையோ' என்ற பாடல் ஒன்று உண்டு. ஜெயா சுசீலாவுடன் இணைந்து இதைப் பாடியிருப்பார் இல்லை இல்லை பேசியிருப்பார்.
இன்னொரு பாடலும் ஜெயா சொந்தக் குரலில் பாடியிருப்பார் 'உலகம் ஒருநாள் பிறந்தது... அது ஊமையாகவே இருந்தது'
லஷ்மி நண்பர்களுடன் 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் முத்துச் சோலை' பாடலில் ஜெயா கலக்குவது போல கவர்ச்சியாகக் கூத்தடிக்கும் ''உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்... ஆனந்தம் பிரம்மானந்தம்' பாடல் ஈஸ்வரியின் இன்னொரு இனிய இம்சை.
'ஜனனம் ஒரு வழி... மரணம் பலவழி' என்ற பாடகர் திலகத்தின் டிரேட் மார்க் பாடல் ஒன்று உண்டு சோகத்துடன். (ஈமச் சடங்கு பாடல்)

படம் முழுக்க முழுக்க ஜெயலலிதா அவர்களின் ஆக்கிரமிப்பு. ஆனால் உடல் ஸ்லிம் குறைந்து பருமனாக தெரிவார். முகம் மட்டும் அப்படியே அழகு. ஸ்ரீகாந்த் ஜெயாவின் சகோதரனாக வருவார் வழக்கம் போல திருடனாக.
வின்சென்ட் இப்படத்தை இயக்கியிருந்தார்.
முத்துராமனுக்கும், ஜெயா மேடத்திற்கும் இந்த டூயட். வழக்கமாக காதல் காட்சிகளில் எனக்கென்ன என்று உணர்வில்லாமல் நிற்கும் முத்துராமன் இதில் கொஞ்சம் பரவாயில்லை. விதவித டிசைன் கொண்ட வண்ண வண்ண உடைகளில் டீசெண்ட் கடைபிடிக்கிறார்..
ஜெயா முழுக்க முழுக்க அழகான சேலைகளில் (ஒயிட் ரொம்ப அழகு) வந்து அசத்துகிறார். அழகான பூங்காவிலும், இயற்கை எழில்சூழ் பகுதிகளிலும் இப்பாடல் படமாக்கப்பட்டு கண்களையும், மனதையும் குளிர்விக்கிறது.
'பாடும் நிலா' பாலுவும், 'கண்ணியப் பாடகி' சுசீலாவும் மிக கண்ணியமாக கௌரவமாக இப்பாடலைப் பாடியிருப்பார்கள். இருவரும் இணைந்து கொடுத்த சூப்பர் ஹிட் காதல் பாடல்களில் இதுவும் மிக முக்கியமானது. நன்கு ஹிட் ஆன பாடல். இப்போது மீண்டும் நாம் ஞாபகப்படுத்தி மகிழ.
இனி பாடல் வரிகளுக்குள் நுழைந்து பின் பாடலை பார்த்து, கேட்டு களிக்கலாம்.
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஹே ஹே ஹே ஹே ஏ ஏ ம்...ம்
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என் ஆசைக் கண்ணன்
நாள் பார்த்து வந்தான்
என் ஆசைக் கண்ணன்
நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
தாலி கட்டி வேலியிட்டு
தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம்... அது சொந்தம்
தாலி கட்டி வெளியிட்டு
தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம்...அது சொந்தம்
சொந்தமொன்று வந்த பின்னே
சொர்க்கம் ஒன்று கேட்கிறது
நெஞ்சம் அது மஞ்சம்
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஹே ஹே ஹே ஹே ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
எங்கோ ஒரு நாதம்
ஏதோ ஒரு ராகம்
எனக்குள்ளே கேட்கின்றது
அது ஆசைகள் தாளாமல்
நான் பாடும் கீதம்
என் உள்ளம் சொல்கின்றது
அன்று கோபம் கொண்டு
சிவந்த கன்னம்
நாணம் கொண்டு சிவந்ததென்ன
மானே சுகம்தானே
இன்று வேண்டுமென்று
எண்ணி விட்டேன்
வெட்கம் கொண்டு
மாறியது பெண்மை
அது உண்மை
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
(இனி வானொலியில் ஒலிக்காமல் திரையில் மட்டுமே ஒலி(ளி)க்கும் வரிகள்).
இதழின் நிறம் செம்மை
இரு கண்ணின் நிறம் வெண்மை
இடம் கொஞ்சம் மாறட்டுமே
அது தேனள்ளி தந்தாலும்
நான் உண்ண மாட்டேனோ
இதழ் கொஞ்சம் சேரட்டுமே
அம்புலியில் கட்டிலிட்டு
செம்பவள மெத்தையிட்டு
ஆடு விளையாடு
கம்பனுக்கு தூது சொல்லி
காவியங்கள் பாட வைப்பேன் இன்று
மனம் உண்டு
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என் ஆசைக் கண்ணன்
நாள் பார்த்து வந்தான்
என் ஆசைக் கண்ணன்
நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
ஹாஹாஹா ஹா ஹா ஹா
ஹாஹாஹா ஹா ஹா ஹா
ம்ஹும்ஹும்
Last edited by vasudevan31355; 16th July 2014 at 10:14 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks