-
17th July 2014, 04:55 AM
#211
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 1
முத்தமிழ் முழக்கமும் மூவேந்தர் முரசமும் முக்கனிச்சாரமும் மும்மூர்த்திகளின் அருளும், எமது மகளிரின் நால்வகை குணங்களும், ஐவகைநிலங்களும் பஞ்சபூதமும், அறுசுவையும், ஏழுகடல் ஏழுமலையும், எண்திசையும் நிறைந்திட்ட இப்புவியில் நவரசமும் காட்டி, பத்துத்திங்கள் கலைத்தாய் ஈன்றெடுத்த அவனியின் பத்தும் பறந்திடாத நடிப்புப் பசியுடன் கோலோச்சிய ஒரேஒரு நடிப்புக்கடவுளே! இருவிழிநீர் கோர்த்திட இருகரம் கூப்பி உங்கள் நினைவலைகளில் மூழ்கி முத்தெடுக்கும் இத்திரியில் நடிகர்திலகத்தின் கோடானுகோடி புகழார்வலர்களில் ஒருவனாக இருப்பதே என் வாழ்வின் பாக்கியம்!
https://i1.ytimg.com/vi_webp/xsCtzX-9TiU/mqdefault.webp
Last edited by sivajisenthil; 18th July 2014 at 08:36 PM.
-
17th July 2014 04:55 AM
# ADS
Circuit advertisement
-
17th July 2014, 10:12 AM
#212
அருமையான தொகுப்பு முரளி சார்
-
17th July 2014, 11:23 AM
#213
Junior Member
Platinum Hubber
JULY-1971
ANANTHA VIGADAN
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th July 2014, 12:05 PM
#214
esvee sir
என்ன சொல்லி எப்படி சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை
மிக அருமை
-
17th July 2014, 07:45 PM
#215
Senior Member
Devoted Hubber
மூவேந்தர்கள்
(என அன்நாளில் அழைக்கப்பட்டார்கள்)
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th July 2014, 11:21 PM
#216
நண்பர் RKS அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார். பெருந்தலைவரின் பிறந்தநாள் பற்றியும் நடிகர் திலகத்தின் நினைவு நாள் பற்றியும் உரையாடல் நடந்தது. சென்ற வருடம் பெருந்தலைவரின் பிறந்த நாள் அன்று அவர் தமிழக முதல்வராக இருந்தபோது ஏற்படுத்திய தொழிற் புரட்சி பற்றி நமது நடிகர் திலகம் திரியில் பதிவு செய்திருந்தேன். அதை மீண்டும் தனக்காக மீள் பதிவு செய்ய முடியுமா என்று நண்பர் கேட்க இதோ அவருக்காக இந்த மீள் பதிவு.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்
தமிழகத்தில் ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அமைத்த ஒரே ஏழை பங்காளன்.
கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கடமையை நிறைவேற்றிய ஒரே கர்ம வீரன்
தமிழகத்தில் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய ஒரே மனிதன். அந்த மனிதனின் ஆட்சியில்தான்
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் பிளான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
போன்றவை துவக்கப்பட்டன.
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் அனைத்துமே பெருந்தலைவர் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14.
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
இவை அமைக்கப்பட்டதும் அவரின் 9 ஆண்டு கால ஆட்சியில்தான்.
அது மட்டுமல்ல இன்றைக்கு Industrial clusters என்று அழைக்கப்படும்
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கிய ஒப்பற்ற நிர்வாகி.
இத்தனை சாதனைகள் புரிந்தும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ள தெரியாத எளிய மனிதன்.
எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.
மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?
அன்புடன்
-
Post Thanks / Like - 4 Thanks, 3 Likes
-
18th July 2014, 09:58 AM
#217
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
மீள் பதிவு.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்
தமிழகத்தில் ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அமைத்த ஒரே ஏழை பங்காளன்.
கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கடமையை நிறைவேற்றிய ஒரே கர்ம வீரன்
தமிழகத்தில் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய ஒரே மனிதன். அந்த மனிதனின் ஆட்சியில்தான்
PRESTIGIOUS SCHEMES WITH FUTURISTIC VISION !
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் பிளான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
போன்றவை துவக்கப்பட்டன.
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் அனைத்துமே பெருந்தலைவர் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14.
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
இவை அமைக்கப்பட்டதும் அவரின் 9 ஆண்டு கால ஆட்சியில்தான்.
அது மட்டுமல்ல இன்றைக்கு Industrial clusters என்று அழைக்கப்படும்
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கிய ஒப்பற்ற நிர்வாகி.
இத்தனை சாதனைகள் புரிந்தும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ள தெரியாத எளிய மனிதன்.
எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.
மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?
அன்புடன்
THANKS MURALI SIR
THE ONLY CHIEF MINISTER WHO DID PHENOMENAL CONTRIBUTION JUSTIFYING HIS JOB WAS / IS / WILL BE Mr.KAMARAJ !!
NONE CAN DREAM TO COME NEAR HIM !!
Last edited by RavikiranSurya; 18th July 2014 at 10:04 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th July 2014, 10:47 AM
#218
Junior Member
Newbie Hubber
Thanks Yukesh Sir, Senthil Sir,Esvee sir ,Siva,Murali,and RKS.
Last edited by Gopal.s; 18th July 2014 at 10:59 AM.
-
18th July 2014, 04:07 PM
#219
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இப்படி 1971 முடிவிற்கு வரும்போது அதற்கு முந்தைய வருடமான 1970 இறுதியில் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளைப் பொறுத்தவரை நாம் சந்தோஷமாக இருந்தோம். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. 1971 இறுதியில் நிலைமை அப்படியே மாறியது. 1971-ல் ஹாட்ரிக் அடித்திருக்கலாமே, விட்டு விட்டோமே என்ற வருத்தம் இருந்தாலும் 1972- ஐ ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
1972 பிறந்தது. முதல் படமாக ஸ்டைல் சக்கரவர்த்தி ராஜா ஜனவரி 26 அன்று திரையரங்குகளுக்கு விஜயம் செய்தார். மதுரையில் சென்ட்ரலில் வெளியான படத்தின் ஓபனிங் ஷோ பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். இனி இந்த முதல் படமே 100 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல் என்ற வெற்றி இலக்கை அடைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஜனவரி 26 புதன்கிழமை. அன்று 4 காட்சிகள். படத்தின் excellent ரிப்போர்ட் பார்த்ததும் வேலை நாட்களாக இருந்தும் 27 மற்றும் 28 வியாழன், வெள்ளி தினங்களிலும் காலைக் காட்சி சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இதற்கு பிறகு வந்த சனி ஞாயிறு இரண்டையும் சேர்த்தால் ஆக முதல் 5 நாட்களில் நடைபெற்ற 20 காட்சிகளும் புல். ப்ளாக் டிக்கெட் heavy rate-ல் போனது. முதல் 15 நாட்களில் நடைபெற்ற 52 காட்சிகளும் புல். அதே வேகத்தில் முதல் 23 நாட்களில் நடைபெற்ற 78 காட்சிகளும் அரங்கு நிறைந்தது. 25-வது நாள் சனிக்கிழமை காலைக் காட்சிதான் சற்று கவலை தரக் கூடியதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க 24-வது நாள் வெள்ளியன்று மதியக் காட்சியில் சவாலே சமாளி படத்திற்கு ஏற்பட்டது போல் ஒரு ஷாக் ஏற்பட்டது. ஸ்ரீதேவியில் நடந்தது போலவே எண்ணிகையில் வெகு குறைவான டிக்கெட்டுகள் மட்டும் மீதம் இருக்க தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது. இது ரசிகர்களை மிகவும் கோபத்துகுள்ளாகியது. மன்ற நிர்வாகிகள் அல்லது ரசிகர்கள் அரங்கின் வெளியே இருந்திருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.
அந்த பக்கம் பிப்ரவரி 4 அன்று சிந்தாமணியில் சங்கே முழங்கு ரிலீஸ். 1972-ல் வெளியான எம்ஜிஆரின் முதல் மூன்று படங்களும் சிந்தாமணியில் வெளியாக இருந்த விஷயத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.கடைசி நேரத்தில் நல்ல நேரம் படம் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸால் அரங்கு மாற்றப்பட்டதையும் குறித்திருக்கிறேன். இந்த சூழலில் வெளியான சங்கே முழங்கு ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை. படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். சொல்லப் போனால் 72-ல் வெளியான படத்தில் 1968-ல் நடைபெற்ற தென்காசி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற்ற செய்தியை தாங்கிய முரசொலி நாளிதழை எம்ஜிஆர் படித்துக் கொண்டிருப்பது போல் காட்சி வரும். இந்த படம் தொடர் ஹவுஸ் புல் ஆகவில்லை.
மார்ச் 10 அன்று நல்ல நேரம் மார்ச் 11 அன்று ஞான ஒளி ரிலீஸ். இரண்டு படங்களின் ரிப்போர்ட் பற்றி ஏற்கனவே பேசினோம். தொடர் ஹவுஸ் புல் காட்சிகளை பொறுத்தவரை ஞான ஒளி மற்றொரு பாபு என்றே சொல்லலாம். அதாவது உணர்வுபூர்வமான roller coaster ride. இதற்கு repeat ஆடியன்ஸ் factor ஒரு முக்கியமான காரணி. அதையும் தாண்டிய ஒரு ரெஸ்பான்ஸ் படத்திற்கு கிடைத்து தொடர் ஹவுஸ் புல் ஆகிக் கொண்டிருக்கும் போது இரண்டாம் வாரம் என நினைக்கிறேன். வியாழன் அல்லது வெள்ளி ஏதோ ஒரு விசேஷ நாள் வரவே அதற்காக அன்றைய தினம் சிறப்புக் காட்சியாக காலைக் காட்சி போடப்பட்டது. அது தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு வினையாக வந்தது. நல்ல நேரம் படத்தைப் பொறுத்தவரை அலங்கார் மற்றும் மூவிலாண்ட் திரையரங்குகளில் வெளியாகி இரண்டிலும் சேர்த்து 100 காட்சிகள் ஹவுஸ் புல் ஆனது என்று ஞாபகம்.
இத்தகைய பின்புலத்தில்தான் பட்டிக்காட பட்டணமா வெளியானது. தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட பிளாஷ் பாஃக்கை முடித்து மீண்டும் 1972 ஜூன் 10-ந் தேதிக்கு வருவோம்.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th July 2014, 06:36 PM
#220
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 2
தமிழ் திரையுலகில் பாடல் காட்சிகளில் பாடலின் கருத்து மற்றும் காட்சி சூழ்நிலைக்கேற்ற close-up expressions and body language, பின்னணி பாடும் கலைஞரின் குரல் modulations மற்றும் பாடல் வரிகளுக்கேற்ற perfect lip movement synchronization.....இவற்றின் சொந்தக்காரர் என்றுமே நடிகர்திலகம் மட்டுமே! தனது முதல் காவியமான பராசக்தியில் ஒரு புதுமுக நடிகர் என்ற எண்ணமே தோன்றவிடாது இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமனின் கடினபாவமிக்க பாடல்வரிகளை உள்ளத்தில் வாங்கி உதட்டில் வெளிப்படுத்தும் அழகை கா...கா பாடலின் மூலமும் (பெரும்பாலும் single shot frames per stanza of the song! without any camera fear....), பலே பாண்டியா திரைப்படத்தில் தனது குரலாகவே மாறிவிட்ட TMS வாயிலாக நீயே உனக்கு நிகரானவன் பாடலின் மூலமும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்திய மந்திரவித்தையை ( இக்காட்சியின் பாதிப்பை மோகன்லாலின் "சித்ரம்" மலையாளத் திரைப்படத்தில் உணரமுடியும்) இக்காணொளிகள் உறுதி செய்கின்றன!
Last edited by sivajisenthil; 18th July 2014 at 08:37 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks