Page 199 of 400 FirstFirst ... 99149189197198199200201209249299 ... LastLast
Results 1,981 to 1,990 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1981
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post


    சில மாதங்களுக்கு முன் நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெய்குமாரி, தற்போது யாராவது திரைப்படங்களில் / சீரியல்களில் அம்மா ரோல் அல்லது ஏதாவது சிறு வேடம் கொடுத்தாலும் நடிக்கத்தயாராக இருப்பதாகவும், வாய்ப்பு தரும்படியும் வேண்டினார்.

    அவரது வாழ்க்கைப்போராட்டத்தை படித்தபோது என் கண்களில் நீர் துளிர்த்தது..
    டியர் கார்த்திக் சார்
    ஜெயகுமாரி பற்றிய உங்கள் கட்டுரை பல நினைவலைகளை மீட்டு விட்டது . ஒரு 10 அல்லது 12 ஆண்டுகள் இருக்கும் என்று நினைவு அப்போது ஓல்ட் மகாபலிபுரம் ரோடு போடப்பட்டதாக நினைவு இல்லை பெருங்குடி செல்ல வேண்டும் என்றால் velacherry இல் இருந்து தான் கந்தன் சாவடி சென்று பெருங்குடி செல்வோம் . என்னுடைய அத்தை பையன் ஒருவர் அங்கே வீடு கட்டி க்ரஹபிரவேசம் செய்த போது அங்கே வீட்டு வேலைக்கு ஒரு பெண்மணி வந்து இருந்தார்.எனக்கு அந்த பெண்மணியை பார்த்துஉடன் எங்கையோ பார்த்து இருக்கிறோம் கொஞ்சம் சற்று குண்டாக இருந்தார். பிறகு தான் அவர்கள் திருமதி ஜெயகுமாரி என்று அறிந்தேன் . ஒரு 20 நிமிட நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவருடைய மூத்த பெண் MCA படித்து கொண்டு இருப்பதாக சொன்னார் . பழைய வாழ்கை எதையும் பற்றி பேசவில்லை .

    நிழல் நிஜமாகியது
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1982
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (31)

    அந்தப் பெண் ரயில்வே ஸ்டேஷனில் தயிர் விற்பவள். அவள் விற்கும் பொருளைப் போலவே அவளும் 'தள தள'. அழகு திரண்டு வந்து ஜொலிக்கும் கிராமத்து தயிர்க்காரி. 'வெடுக் வெடுக்'கென்று கொஞ்சிப் பேசுவதில் தயிர்க்காரி இல்லை இல்லை கைகாரி.

    அந்த மங்கைக்கு யார் மேல் ஆசை பாருங்கள். அந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மீது. ("இந்தத் தேக்கத்தை கட்டினாரே எஞ்சினியர்... அவர் இங்க வேலை செஞ்ச ஒரு சித்தாளைக் காதலிச்சாரு" என்று நாகேஷ் கைடாக 'தெய்வமகனி'ல் மேடத்திடம் அணைக்கட்டு சுற்றிக் காட்டும் போது சொல்வாரே! அது மாதிரி) ஸ்டேஷன் மாஸ்டரும் சும்மா சொலக் கூடாது... லேசான வயிறுடன், சுருள் முடியுடன் சும்மா 'ஜம்'மென்று தயிர்க்காரிக்கென்றே பிறந்தது போல வாட்ட சாட்டமாக ஜம்மென்று இருப்பார். ஆனல் அந்த ஸ்டேஷன் மாஸ்டரோ சிடுமூஞ்சி...முன்கோபி. அவள் ஸ்டேஷனில் தயிர் விற்கும் போது அவர் 'பிளாட்பாரத்தில் தயிர் விற்கக் கூடாது' என்று கண்டித்துக் கொண்டே இருப்பார். ஆனால் அவள் தயிர் விற்க வருவதே மாஸ்டரை லவ்ஸ் விடத்தானே! தங்கை வெளியில், படிக்க தனியே கஷ்டப்படும் அந்த மாஸ்டருக்கு எல்லா உதவியும் மாய்ஞ்சி மாய்ஞ்சி செய்பவள் அவள்தானே!

    நம்ம ஸ்டேஷன் மாஸ்டரை சாதரணாமாக நினைக்காதீர்கள். கண்டிப்பு, கோபம், கறார் பேர்வழி. ஆனால் எல்லாம் வெளியில்தான். சாருக்கும் அம்மணி மேல் அப்படி ஒரு இதுதான். ஆனால் காட்டிக் கொள்ள மாட்டார். பிரஸ்டீஜ் பத்மநாபன் ஆயிற்றே!

    ஒரு நாள் ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்குப் போகும்போது யாரோ பின் தொடர்ந்து வருவது போல் பிரமை. பார்த்தால் தயிர்க்காரி 'தலுக் குலுக்' நடையில் தயிர்க் கூடையுடன் வேகமாக அவரைக் கடக்கிறாள்.

    இந்த மனிதர் போறவள் போகட்டும் என்று சும்மா இருக்க வேண்டியதுதானே! அவளிடம் பொய்க் கோபமாய் 'ஏன் பின் தொடர்ந்து வருகிறாய்?' என்று வலுவில் பேச்சுக் கொடுக்கிறார். (உள்ளே மலை மலையாய் ஆசை இருக்கே!)


    'ஏய்! ஏன் என் பின்னாடி வர்ற?'

    'ம்..உங்க பின்னாடி வராம வேற யார் பின்னாடி போறதாம்'.. (கொஞ்சல்)

    'எதுக்காக பின்னே மறைஞ்சி மறைஞ்சி வர்ற?'

    'உங்க முன்னாடி......வெக்கமா இருக்கு'

    'ஏன் என்னப் பார்த்து வெக்கப் படற நீநீ ... ?

    'உங்களைப் பார்த்து வெக்கப்படாம வேற யாரப் பார்த்து வெக்கப்படுவேன்? (ஆத்தாடி!என்னா ஒரு ஏத்த இறக்கம் 'வெடுக் வெடுக்'குனு)

    'ஆங்... நீ பேசறது எனக்கொண்ணும் பிடிக்கல'.

    'நீங்க பேசறது எனக்குப் புடிக்குதுங்க. உங்களோட பேசினா பொழுது போறதே தெரியலீங்க'.

    (இவர் பழித்துக் காட்டியபடி) அய்ய!..உங்க கூட பேசிக்கிட்டு இருக்கறதுதானே எங்க வேலை?

    'வேலையும் முக்கியம்... இதுவும் முக்கியமுங்க' (அடிச்சா பாருங்க ஒரு அடி)

    அவள் இரண்டு கைகளிலும் பச்சை குத்தியிருப்பதைப் பார்த்து கேட்கிறார் மாஸ்டர். ஒரு கையில் 'சிவனுடைய பச்சை' இன்னொரு கையில் 'ராமருடைய பச்சை' என்று கூறுகிறாள் அவள்.

    இரண்டையும் சேர்த்துக் காட்டி 'சிவராமரு' என்று கூறி 'அய்யயோ பேரை சொலிட்டேனே' என்று வெட்கப்படுகிறாள்.

    அப்போதான் நம்ம ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரிகிறது

    அட! அது நம்ம பேரு! (ஓ.. ..நம்ம பேரைத்தான் இப்படி நாசூக்கா பச்சை குத்தியிருக்கா)

    அவளிடம் சும்மனாச்சுக்கும் கோபிக்கிறார்.


    'சாமின்னு நெனச்சா கையில குத்திகிட்டு இருக்கே?'

    'பின்னே உங்கள நெனச்சா குத்தினேன்?'

    'ஆமாம்!'

    அவளும்

    'ஆமாமாம். அப்படித்தான் வச்சுக்கோங்களேன்'.

    ஆற்றுப்பாலம், வயல்வெளி, நதியோரம் என்று அந்த உம்மணாமூஞ்சி மாஸ்டரை ஒரு இடம் விடாமல் துரத்தி, துரத்தி, கோபத்தை விடச் சொல்லி, அப்படியே தன் காதலையும் வெளிப்படுத்தி அப்படியே பாட ஆரம்பிக்கிறாள்.

    ஸ்டேஷன் மாஸ்டரும், 'தள தள' தயிர்க்காரியும்.



    உங்கள் அழகென்ன அறிவென்ன
    உங்கள் அழகென்ன அறிவென்ன
    மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
    இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
    பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா
    கோபம் வரலாமா கொஞ்சம் வரலாமா

    காதளவு கண்கள்.. காலளவு கூந்தல்
    பெண்ணழகு எங்கே வரும் எங்கே வரும்
    அந்திப்பகல் துணையிருக்க
    ஆருயிராய் நான் இருக்க
    கோபங்கள் எங்கே வரும்
    கோபங்கள் எங்கே வரும்

    அழகென்ன அறிவென்ன
    உங்கள் அழகென்ன அறிவென்ன
    மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
    இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
    பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா

    திங்களுக்குத் தங்கை
    தென்றலுக்குத் தோழி
    வஞ்சியிவள் வந்தேன் என்றாள்
    வந்தேன் என்றாள்

    திங்களுக்குத் தங்கை
    தென்றலுக்குத் தோழி
    வஞ்சியிவள் வந்தேன் என்றாள்
    வந்தேன் என்றாள்

    திங்களுக்குத் தங்கை
    தென்றலுக்குத் தோழி
    வஞ்சியிவள் வந்தேன் என்றாள்
    வந்தேன் என்றாள்

    முத்துநகை சிந்தி விழ
    முந்தானை முந்திவிழ
    ஆசைகள் தந்தேன் என்றாள்
    ஆசைகள் தந்தேன் என்றாள்

    அழகென்ன அறிவென்ன
    உங்கள் அழகென்ன அறிவென்ன
    மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
    இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
    பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா

    ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று
    கன்னிமனம் இங்கே வரும் இங்கே வரும்
    ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று
    கன்னிமனம் இங்கே வரும் இங்கே வரும்

    கொத்து மலர் பூத்திருந்தும்
    கொய்யாமல் காத்திருந்தால்
    காலங்கள் சென்றே விடும்
    காலங்கள் சென்றே விடும்

    அழகென்ன அறிவென்ன
    உங்கள் அழகென்ன அறிவென்ன
    மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
    இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
    பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா
    கோபம் வரலாமா கொஞ்சம் வரலாமா


    என்று அந்த 'அன்புக் கரங்களி'ல் தவழ்கிறாள்.

    Last edited by vasudevan31355; 18th July 2014 at 10:35 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1983
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அது என்ன மாயமோ தெரியவில்லை.. எல்.ஆர். ஈஸ்வரி என்றால் அங்கு ஜமுனா ராணி என்பது எழுதப் படாத விதியோ....

    பேசாமல் எல்.ஆர்.ஈஸ்வரி-ஜமுனா ராணி பாடல்களைப் பற்றி ஒரு பட்டிமன்றம் நடத்தலாம் போலிருக்கிறதே...
    இரண்டு இனிமையான குரல்களும் இணைந்து பாடிய பாடல்களைக் கேட்டாலே போதுமே

    இதோ சாம்பிளுக்கு ஒண்ணு

    படம் : மணி ஓசை

    கட்டித்தங்க ராஜாவுக்கு காலை நேரம் கல்யாணம்



  5. #1984
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    உங்கள் அழகென்ன அறிவென்ன .. என்ன அழ்கான பாடல்
    என் தமிழ் ஆசான் வாலி ஐயாவின் நினைவு நாளான இன்று அவரது அருமையான பாடலை நினைவு கூர்ந்ததற்கு நன்றி

    இரவு முடிந்துவிடும், ராமனுக்கே சீதை, காகிதத்தில் கப்பல் செய்து என எல்லாமே அருமையான முத்துக்கள்.

  6. #1985
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ம்ம்... சரி.. இந்தப் பாடலில் எந்த வரிகளை எல்.ஆர்.ஈஸ்வரி பாடி இருக்கிறார், எந்த வரிகளை ஜமுனா ராணி பாடி இருக்கிறார் என்று கண்டு பிடிச்சு வச்சுக்குங்க..

    படம் : வெகுளிப் பெண்

    தித்திக்கின்றதா முத்தமிட்டது...??


  7. #1986
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    ஆசையும் நேசமும் பாடலில் விக்கல் ஈஸ்வரி குரல் ஜமுனாராணி (ஈஸ்வரியே கூறியது)

  8. #1987
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    என் தமிழ் ஆசான் வாலி ஐயாவின் நினைவு நாளான இன்று அவரது அருமையான பாடலை நினைவு கூர்ந்ததற்கு நன்றி
    நன்றி ராஜேஷ் சார்! அற்புதமாகக் கண்டு பிடித்து விட்டீர்களே!
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1988
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    ஆசையும் நேசமும் பாடலில் விக்கல் ஈஸ்வரி குரல் ஜமுனாராணி (ஈஸ்வரியே கூறியது)
    இதுவரை நான் கேள்விப்படாத தகவல். நன்றி ராஜேஷ் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes madhu liked this post
  11. #1989
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'சிவந்தமண்'ணின் அந்த சவுக்கடி சவுண்ட் ஈஸ்வரி தந்ததா?

    பலரும் பலவிதமாகச் சொல்லுகின்றனர்.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #1990
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    ம்ம்... சரி.. இந்தப் பாடலில் எந்த வரிகளை எல்.ஆர்.ஈஸ்வரி பாடி இருக்கிறார், எந்த வரிகளை ஜமுனா ராணி பாடி இருக்கிறார் என்று கண்டு பிடிச்சு வச்சுக்குங்க..

    படம் : வெகுளிப் பெண்

    தித்திக்கின்றதா முத்தமிட்டது...??
    ரொம்பக் கஷ்டமாய் இருக்கிறது மது சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •