-
31st July 2014, 08:05 PM
#2741
Senior Member
Seasoned Hubber
அதே கடவுளின் குழந்தையில் எனக்கு மிகவும் பிடித்த பி.பிஸ்ரீனிவாஸ் இசையரசியின் குரலில் ஜி.ராமனாதனின் மயக்கும் இசையில்
சின்ன சின்ன பூவே
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
31st July 2014 08:05 PM
# ADS
Circuit advertisement
-
31st July 2014, 11:03 PM
#2742
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் ஜி
சங்கராபரணம் ராகத்தை மட்டுமல்ல ஒவ்வொரு ராகத்தையும் மிக அழகாக தாங்கள் தருகின்றீர்கள். ஒவ்வொரு ராகத்தைப் பற்றியும் இங்குள்ளோர் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும் போது பல புதிய விஷயங்கள் தெரிய வருகின்றன.
இனி வரும் காலங்களில் ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டு அதற்கு உதாரணமாய் தரும் பாடலில் அதனுடைய பிரயோகம், விசேஷங்கள், அந்த ராகத்திற்கும் அந்தப் பாடலின் தாளத்திற்கும் ஒத்துப் போகிறதா, அல்லது ஒரு குறிப்பிட்ட ராகத்திற்கு ஒரு குறிப்பிட்ட தாளம் தான் அமைக்க வேண்டுமா என்பது போன்ற அம்சங்களையும் விளக்கினால், இது எதிர்கால சந்ததயினருக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். எந்த கால கட்டமாயிருந்தாலும் அதில் படைப்பாளியின் ஆளுமையும் புலமையும் நிச்சயம் வேறு படும். அந்த வேறுபாட்டையும் விளக்கலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st July 2014, 11:06 PM
#2743
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
முன்பொரு பதிவில் கூறியிருந்தபடி, கோவிந்தராஜூலு நாயுடு என்ற இசையமைப்பாளரைப் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும். சந்தர்ப்பம் வரும் போது அது நிச்சயம் இடம் பெறும்.
இப்போது அவர் இசையமைத்த இன்னொரு அருமையான பாடல், மாய மனிதன் திரைப்படத்தில் ஜிக்கி பாடிய தங்கத் தமிழ் மேனி சதிராடும் பருவம் என்ற பாடல். நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் இனிமையான பாடல்.
http://www.inbaminge.com/t/m/Maaya%20Manithan/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st July 2014, 11:13 PM
#2744
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
பல ஆண்டுகளாக நெஞ்சில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பாடல். அவன் அமரன் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் ஏ.பி. கோமளா பாடி, டி.எம்.இப்ராஹிம் இசையமைத்தது. இதில் உள்ள சிறப்பு பாடி நடிக்கும் கே.ஆர்.ராமசாமிக்கு சீர்காழி அவர்கள் பின்னணி பாடியிருப்பதது தான்.
அதுமட்டுமல்ல இப்பாடல் தலாத் மஹமூத் மற்றும் இரண்டாம் முறை லதா ஆகியோர் பாடி டாக்ஸி டிரைவர் படத்தில் இடம் பெற்ற ஜாயேன் தூ ஜானே கஹா என்ற ஹிந்திப் பாடலின் மெட்டை ஒத்திருப்பதாகும்.
இசைக்கு மொழியேது.. கேட்டுக் கொண்டே இருக்கலாம் என நாம் எண்ணும் இனிமையான பாடல்களில் பட்டியலில் அவன் அமரன் வான் மதி நீ அறிவாய் பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
31st July 2014, 11:21 PM
#2745
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
சிங்கார சங்கீதமே திகட்டாத அமுதாகுமே..
இது உண்மை தானே...
நீலாவுக்கு நிறைஞ்ச மனசு படத்திலிருந்து திரை இசைத் திலகம் கே.வி.எம். இசையில் ஏ.ஜி.ரத்னாமாலா, ஜிக்கி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாடல்
http://www.inbaminge.com/t/n/Neelavu...anja%20Manasu/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st July 2014, 11:24 PM
#2746
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
சங்கீதம் மட்டுமா பரதமும் கூடத் தான் மனக்கவலையை ஆற்றும் மருந்து.. இப்பாடல் சொல்கிறதே..
நீலாவுக்கு நிறைஞ்ச மனசு திரைப்படத்தில் கே.வி.எம். இசையில் தெவிட்டாத இனிய பாடல்
http://www.inbaminge.com/t/n/Neelavu...anja%20Manasu/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st July 2014, 11:31 PM
#2747
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
எத்தனை தலைமுறைகளானால் என்ன, எத்தனை நூற்றாண்டுகளானால் என்ன .. . காதலின் கருவறை கண்கள் தானே... அந்தக் கண்கள் பிரசவிக்கும் குழந்தை தானே காதல்.. ஆனால் கண்கள் பிரசவிக்கும் காதல் என்னும் குழந்தை மட்டும் என்றுமே அதன் குழந்தைத் தன்மை மாறாமலே இருக்கும். அந்தக் குழந்தை காதலர்களின் உள்ளத்தில் என்றும் உவகை பொங்க வைத்துக் கொண்டே இருக்கும். இது தானே உலக நியதி.. இது தானே காதலின் நியதி...
மாங்கல்ய பாக்கியம் திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பி.சுசீலா பாடிய இனிமையான பாடல், ஜி.ராமநாதன் இசையில்... கேட்டு மகிழுங்கள்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
31st July 2014, 11:45 PM
#2748
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
மோசம் போகாதே நீ மதி மோகம் வீணாக ...
மிகவும் அருமையான கருத்துள்ள இப்பாடல் இடம் பெற்ற படம் 1949ம் ஆண்டு வெளிவந்த நம்நாடு படமாகும்.
இசை ஜி. கோவிந்தராஜுலு நாயுடு
http://www.inbaminge.com/t/n/Nam%20Naadu%201949/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st August 2014, 03:37 AM
#2749
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் கோபால் ஜி
சங்கராபரணம் ராகத்தை மட்டுமல்ல ஒவ்வொரு ராகத்தையும் மிக அழகாக தாங்கள் தருகின்றீர்கள். ஒவ்வொரு ராகத்தைப் பற்றியும் இங்குள்ளோர் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும் போது பல புதிய விஷயங்கள் தெரிய வருகின்றன.
இனி வரும் காலங்களில் ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டு அதற்கு உதாரணமாய் தரும் பாடலில் அதனுடைய பிரயோகம், விசேஷங்கள், அந்த ராகத்திற்கும் அந்தப் பாடலின் தாளத்திற்கும் ஒத்துப் போகிறதா, அல்லது ஒரு குறிப்பிட்ட ராகத்திற்கு ஒரு குறிப்பிட்ட தாளம் தான் அமைக்க வேண்டுமா என்பது போன்ற அம்சங்களையும் விளக்கினால், இது எதிர்கால சந்ததயினருக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். எந்த கால கட்டமாயிருந்தாலும் அதில் படைப்பாளியின் ஆளுமையும் புலமையும் நிச்சயம் வேறு படும். அந்த வேறுபாட்டையும் விளக்கலாம்.
ஒரே ராகத்தில் உருவானதாக சொல்ல பட்டாலும்,இவ்வளவு வேறுபாடுகள் எங்கிருந்து வருகின்றன?
இங்குதான் இசையமைப்பாளர்களின் மேதமை நிற்கிறது.(கீழ்கண்டவற்றை இசையின் தன்மை கெடாமல் மக்களின் ரசனையை அடிநாதமாய் பிடித்து அவர்களை கேட்ட உடனே அல்லது கேட்க கேட்க (acquired )அடிமை கொள்ள வேண்டும்)
1)ராகத்தின் tempo எனப்படும் metre மாற்றுவது.
2)சுருதி (Tonic )மாற்றி பாடலின் tone மாற்றுவது.
3)ஸ்வரங்களின் அணிவகுப்பில் விளையாடி,கமகம் (ornamentation ),கற்பனை (kalpana ) என்று ஒரு பிடி பிடிப்பது.
4)பல கலப்பு ராகங்கள் உருவாக்கி விளையாடுவது.
5)Musical arrangements மற்றும் interludes விளையாட்டுக்கள்.
6)தாளங்களில் மாற்றங்கள் மற்றும் புத்திசாலி கலப்படங்கள்.(rhythm Arrangement )
தாளங்களை(Clap ) பற்றி சுளுவாக சொல்லலாம்.
1)ஒரு தட்டு தொடையில் தட்டினால் அனுத்ருதம்(U ) ஒரு அக்ஷரம்..
2)ஒரு தட்டு தொடையில் தட்டி ,ஒரு வீச்சு காற்றில் வீசினால் த்ருதம் .(0) 2 அக்ஷரங்கள்.
3)ஒரு தட்டு தொடையில் தட்டி சுண்டு விரல்,மோதிர விரல்,நடு விரல் என்று கணக்காக்கி விளையாடுவது லகு(1) .(ஒரு தட்டு இரு விரல் என்றால் 3 அக்ஷர திச்ர ஜதி.ஒரு தட்டு மூன்று விரல் என்றால் சதுச்ர ஜதி 4 அக்ஷரம்.ஒரு தட்டு நான்கு விரல்கள் என்றால் கண்ட ஜதி 5 அக்ஷரங்கள்.ஒரு தட்டு 6 விரல்கள் என்றால் மிஸ்ர ஜதி 7 அக்ஷரங்கள். ஒரு தட்டு 8 விரல்கள் என்றால் சங்கீர்ண ஜதி 9 அக்ஷரங்கள் )
4)சதுஸ்ர ஜதி அடிப்படையில் 4 அக்ஷரங்கள் கொண்ட லகு என்று எடுத்து தாளங்களை அலசினால் சுலபம்..
ஆதி தாளம் என்பது 100(ஒரு தட்டு மூணு விரல் எண்ணி ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு ஒரு வீச்சு)- 8 அக்ஷரங்கள்.
ரூபக தாளம் என்பது U 0 (ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு)-3 அக்ஷரங்கள்.
மிஸ்ர சாப்பு என்பது ஒரு தட்டு இரண்டு விரல் ,ஒரு தட்டு ஒரு வீச்சு,ஒரு தட்டு ஒரு வீச்சு .7 அக்ஷரங்கள்.
இது மாதிரி நிறைய.
தாளத்தில் விளையாடி ஒவ்வொரு பாட்டுக்கும் புது மெருகு கொடுக்கலாம்.
இசை மிக சுலபம். கற்பனை வார்த்தைகளாக திரிந்து கெட்டு போகாமல் சுருதி சுரமாகவே பிறவியில் அமையுமென்றால்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st August 2014, 05:16 AM
#2750
Junior Member
Platinum Hubber
பொய்க்கால் குதிரை - ஆட்டத்துடன் வந்த இந்த பாடல் மிகவும் எனக்கு பிடித்தது .
தாயின் மடியில் இடம் பெற்ற இந்த பாடல்
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !
மான் கொடுத்த* க*ண்க*ளுக்கு மை கொடுக்க* வா மாமா
ம*யக்க*த்தில் இருக்கையிலே கை கொடுக்க* வா மாமா
மான் கொடுத்த* க*ண்க*ளுக்கு மை கொடுக்க* வா மாமா
ம*யக்க*த்தில் இருக்கையிலே கை கொடுக்க* வா மாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா ?
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !
சின்னப்பெண் வாச*லுக்கு சீர் எடுத்து வ*ர*லாமா
ஊரெல்லாம் போய் வ*ர*வே தேர் எடுத்து வ*ர*லாமா
சின்னப்பெண் வாச*லுக்கு சீர் எடுத்து வ*ர*லாமா
ஊரெல்லாம் போய் வ*ர*வே தேர் எடுத்து வ*ர*லாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா ?
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !
ஆடியிலே அரும்பானேன் ஆவ*ணியில் ம*ல*ரானேன்
புர*ட்டாசி போன* பின்னே ஐப்ப*சியில் வா மாமா
ஆடியிலே அரும்பானேன் ஆவ*ணியில் ம*ல*ரானேன்
புர*ட்டாசி போன* பின்னே ஐப்ப*சியில் வா மாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா ?
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !
நீ முடிச்ச கூந்த*த*லுக்கு பூ முடிக்க* வ*ருவேனே
நாள் பார்த்து ந*ல*ம் பார்த்து கை பிடிக்க* வ*ருவேனே
நீ முடிச்ச கூந்த*த*லுக்கு பூ முடிக்க* வ*ருவேனே
நாள் பார்த்து ந*ல*ம் பார்த்து கை பிடிக்க* வ*ருவேனே
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி !
ராஜாவே ராஜாவே ராஜாவே ராஜாவே !
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks