-
5th August 2014, 06:38 PM
#2981
Senior Member
Senior Hubber
வேதாவின் ஹிந்தி ரீமேக் பாடல்கள் எல்லாமே சுவையாகத் தான் இருக்கும்.. கட்டக் கடைசியாக காளிக்கோவில் கபாலி என நினைக்கிறேன்..க்யாஹூவா பாட்டை வெள்ளி நிலா வெள்ளித் தட்டு வானிலே முல்லை மொட்டு என மாற்றியிருந்த நினைவு..அதன் இசை வேதாவா யானறியேன்..
மனம் என்னும் மேடை மீது முகம் ஒன்று ஆடுது..
-
5th August 2014 06:38 PM
# ADS
Circuit advertisement
-
5th August 2014, 06:40 PM
#2982
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
வேதாவின் ஹிந்தி ரீமேக் பாடல்கள் எல்லாமே சுவையாகத் தான் இருக்கும்..
மனம் என்னும் மேடை மீது முகம் ஒன்று ஆடுது..
சௌ சால் பெஹலே முஜே தும்ஸே ப்யார் தா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th August 2014, 06:50 PM
#2983
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
வேதாவின் ஹிந்தி ரீமேக் பாடல்கள் எல்லாமே சுவையாகத் தான் இருக்கும்.. கட்டக் கடைசியாக காளிக்கோவில் கபாலி என நினைக்கிறேன்..க்யாஹூவா பாட்டை வெள்ளி நிலா வெள்ளித் தட்டு வானிலே முல்லை மொட்டு என மாற்றியிருந்த நினைவு..அதன் இசை வேதாவா யானறியேன்..

இசை தாராபுரம் சுந்தர்ரராஜன் என்று நினைக்கிறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th August 2014, 07:03 PM
#2984
Senior Member
Diamond Hubber
Vasu ஜி.. காளி கோயில் கபாலி இசை ராஜேஷ் என்று போட்டிருக்காங்க.. யாருன்னு கண்டு பிடிக்கணும்.
ம்ம்... இன்னும் இன்னொரு லிங்க் கிடைச்சது. இதுதான் ஒரிஜினலாம்.. பப்பா.. ஷி லவ்ஸ் மம்மா
http://singapore60smusic.blogspot.in...presented.html
-
5th August 2014, 07:19 PM
#2985
Junior Member
Newbie Hubber
எதிரிகள் ஜாக்கிரதை படம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் சற்றே வித்தியாசமான நல்ல படம்.மனோகர் ஏறக்குறைய ஹீரோ போல வருவதால் ரவி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.அதனால் படம் சுமாராக போனது. ஆனாலும் ரவி-விஜி pair அவ்வளவு அழகு.(ரவி பக்கம் நின்றாலே கதாநாயகிகளுக்கு ஒரு ஒளி வந்து விடும்)
நேருக்கு நேர் நின்று ,எனக்கொரு ஆசை இப்போது,நீயாக என்னை தேடி வருகின்ற நேரம்,அஹ்ஹாஹா இன்று தேன் நிலவு,ஜிலுக்கடி ஜிலுக்கடி,அம்மா பக்கம் வந்தா என்று வேதா கிளப்பியிருப்பார்.
Last edited by Gopal.s; 5th August 2014 at 08:18 PM.
-
5th August 2014, 07:34 PM
#2986
Senior Member
Diamond Hubber
ஜிலுக்கடி ஜிலுக்கடி ஜிகினா பாட்டின் வீடியோ இந்தாங்கோ..
நீயாக எனைத்தேடி வருகின்ற நேரம்
ஆஹாஹா.. இன்று தேனிலவு
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th August 2014, 08:18 PM
#2987
Junior Member
Newbie Hubber
-
5th August 2014, 08:30 PM
#2988
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
Fantastic Madhu sir.
-
5th August 2014, 08:39 PM
#2989
Senior Member
Senior Hubber
வெண்கல மணியின் நாதம் போன்ற ஓசை கொண்ட குரலுக்குச் சொந்தக் காரர் யார்..என்று அன்றும் இன்றும் விரல் சுட்டினால் ஒரே ஒரு நபர்.. சீர்காழி கோவிந்த ராஜன் தான் முதலில் நினைவுக்கு வருவார்..
எவ்வளவோ நல்ல பாடல்கள்
ஓடம் நதியினிலே
நடந்தாய் வாழி காவேரி
உள்ளத்தில் நல்ல உள்ளம்
இன்னும் நிறைய இருந்தாலும் தற்போது மனதில் ஊடாடுவது...
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போது மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோய்..
கடைசியில்..மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்கே தெரியவில்லை ஹோய் என முடியும்..இசைக்களஞ்சியத்தில் கேட்ட இந்தப் பாடல் அப்புறம் அவ்வளவாய்க் கேட்டதில்லை.. என்ன படம் எனத் தெரியாது..சொல்வீர்கள் தானே
-
5th August 2014, 09:07 PM
#2990
Senior Member
Diamond Hubber
மது சார்,
'காளி கோயில் கபாலி' படத்திற்கு இசை ராஜேஷாகத்தான் இருக்க வேண்டும். இதே ஆண்டு வெளியான மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'வல்லவன் வருகிறான்' படத்துக்கு இசை ராஜேஷ்தான். அதனால் இந்தப் படத்திற்கும் ராஜேஷ் அவர்களே இசையமைத்திருக்கலாம்.
Bookmarks