-
8th August 2014, 07:14 AM
#3141
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு தாவுதம்மா மீன்போலே..
தெரிஞ்சது தானே என்கிறீர்களா.. அந்த அனுபவத்தை அந்தப் பெண் பாடுவதைக் கேட்டுத் தான் தெரிஞ்சுக்குங்களேன்..
வாணி ஜெயராம்... பூம்பூம் மாடு திரைப்படத்தில் சங்கர் கணேஷ் (?) இசையில்..
http://www.inbaminge.com/t/b/Boom%20Boom%20Maadu/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th August 2014 07:14 AM
# ADS
Circuit advertisement
-
8th August 2014, 07:29 AM
#3142
Junior Member
Newbie Hubber
தலைவர் ராகவேந்தர் கொடுக்கும் ஊக்கமே அலாதி. நடிப்பு பள்ளிகளை பற்றி எழுதும் போதும் வரிக்கு வரி தொடர்ந்து ஊக்கமளித்தது நீங்கள்தான்.உங்கள் பொங்கும் பூம்புனல் மறக்க பட்ட இலங்கை தமிழ்,ஆசிய சேவைகளின் நினைவூட்டல்.
Sss ,மது- நிலாவில் நேற்று பார்த்தது எனது பிடித்தமான வாணி பாடல். நன்றி.
வாசு- திரியை தொடங்கி ,அனைவரையும் அரவணைத்து நீ பயணிப்பதை 5000 மைலுக்கு அப்பால் நின்று ரசிக்கிறேன்.
கிருஷ்ணா- ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள்.
கார்த்திக்- காணவேயில்லை?பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து விடுவோம்.(சிறு வயது புகை படம் கொடுத்து)
மது,ராஜேஷ்- திரிக்கு புது சுவை,மணம்,குணம்,காரம் கொடுத்து ரத்தினம் பட்டினம் பொடி போல கிர் ஏற்றி கொண்டிருக்கிறீர்கள்.நன்றி.
-
8th August 2014, 07:38 AM
#3143
Senior Member
Seasoned Hubber
கோபால் ஜி அருமை.. அருமை.. மற்றவ்ர்க்ளை பாராட்டும் விதம் கூட பட்டய கிளப்புது ...
இதோ நடிகர் திலகத்தின் திருமால் பெருமையில் நாம் அதிகம் கேட்டிராத பாடல்
இசையரசியின் குரலில் (வாசு ஜி வாங்கோ வாங்கோ குரலா அது இல்லை இல்லை தேனாபிஷேகம்)...
கண்ணா கண்ணா காவிய கண்ணா ..
kanna_kanna_kaviyavanna.mp3
-
8th August 2014, 07:49 AM
#3144
Senior Member
Diamond Hubber
இதோ வந்துட்டேன் ராஜேஷ் சார்.
-
8th August 2014, 07:57 AM
#3145
Senior Member
Diamond Hubber
//கண்ணா கண்ணா காவிய கண்ணா .. //
ஆஹா! அருமையான நினைவூட்டல். இதுக்குதான் ராஜேஷ் சார், மது சார், ராகவேந்திரன் சாரெல்லாம் வேண்டும் என்பது. அற்புதமான பாட்டு.
குழலினிது யாழினிது மழலை இனிது என்போர் இசையரசி குரலைக் கேளாதோர்.
-
8th August 2014, 08:09 AM
#3146
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்,
இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். என்ன ஒரு அருமையான பாடல். 'மீண்டும் பல்லவி' திரைப்படத்தில்
நம் இசையரசி பின்னாட்களில் கூட எவ்வளவு இனிமையாக பாடி நம்மை மகிழ்விக்கிறார்! என்னை மிகவும் கவர்ந்த சுசீலாம்மாவின் பாடல்.
இயற்கை நடிப்பரசி சுஜாதா இசையரசியின் குரலில் ஜமாய்க்கிறார் ஆட்டுக்குட்டியோடு. மல்லிகைப்பூ சரத்தாலே மனதை வருடும் பாடல்.
'பூமி நெறஞ்சிருக்கு
பொன்னாக விளைஞ்சிருக்கு
சாமி துணையிருக்கு கண்மணியே'
அதுவும்,
'தோட்டம் துறவுல தாண்டிக் குதிக்காதே'
சரண வரிகளின் உச்சரிப்பும், பாவமும் சான்சே இல்லை.
அப்படியே சுண்டி இழுக்குது சார் இந்தப் பாடல். அருமையான மெல்லிசை மன்னரின் வைரப் பாடல்.
-
8th August 2014, 08:12 AM
#3147
Senior Member
Seasoned Hubber
ஆம் மீண்டும் பல்லவி பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் “சோறு கண்ட இடம் சொர்க்கம் உங்களுக்கு வேறு கவலை என்ன நிம்மதியே “ அருமை
இதை கேட்கும்போதெல்லாம் அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கனும் பாடல் என் ஞாபகத்திற்கு வரும்
-
8th August 2014, 08:20 AM
#3148
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
//கண்ணா கண்ணா காவிய கண்ணா .. //
ஆஹா! அருமையான நினைவூட்டல். இதுக்குதான் ராஜேஷ் சார், மது சார், ராகவேந்திரன் சாரெல்லாம் வேண்டும் என்பது. அற்புதமான பாட்டு.
குழலினிது யாழினிது மழலை இனிது என்போர் இசையரசி குரலைக் கேளாதோர்.
அருமை அருமை .. வாசுஜியின் ரசிப்பு....சபாஷ்
-
8th August 2014, 08:20 AM
#3149
Senior Member
Diamond Hubber
அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
உம்மனசும் எம்மனசும் ஒன்னு போல இருக்கணும்
தாராபுரம் சுந்தரராஜனும், இசைத்தாராவும் இணைந்து தந்த கிராமியப் பாடல்.
அந்த ஒ..........ஒ ஹம்மிங் தூள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th August 2014, 08:29 AM
#3150
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்,
இன்னொரு சுகமான சுசீலாம்மா அவர்களின் தாலாட்டு. பின்னாளில் வந்த 'ருசி கண்ட பூனை' திரைப்படத்தில். இந்த இடத்தை நிரப்ப வேறு யார்? ஆனால் கிடைத்த அங்கீகாரம்??? இவர் குரலைக் கேட்பதே கௌரவம். கௌரவமான கண்ணியப் பாடகி ஆச்சே!
'சந்தனமிட்டு சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு
உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது மலரும் மனது (ஆஹா! அருமை இந்த இடம்)
சந்தனமிட்டு சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு'
பேபிக்கள் எவ்வளவு அழகு! சாரதாப்ரீதா கள்ளம் கபடம் இல்லாமல் சிரிப்பது அழகோ அழகு.
Bookmarks