-
15th August 2014, 09:16 PM
#161
Junior Member
Newbie Hubber
Originally Posted by
rajeshkrv
அன்பு நண்பர்களான கோபால் ஜி, எஸ்.வி ஜி, கிருஷ்ணா ஜி மற்றும் அனைவருக்கும்... திரி ஆரம்பித்து கொஞ்ச நாட்களிலேயே திருஷ்டி வேண்டுமா ...
இது அடியேனின் வேண்டுகோள்
எஸ்வி யை நான் தடுக்கவில்லை. அவர் நோக்கங்களைதான் கேள்வி கேட்கிறேன்.அவர் இங்கு வந்து proxy war நடத்த பார்ப்பதை எதிர்த்தேன்.எல்லோரும் உள்ளே மருகி கொண்டிருக்கும் விஷயத்தை நான் உடைப்பதால், நான் கெட்டவனாகிறேன் . அல்லவா? நான் அவரின் பங்களிப்பை தடுக்கவில்லை.ஆனால் யாருடையது முக்கியம் என்ற கேள்விக்கு ,எல்லோரும் தேவை என்ற ஜனநாயக முறையில் நம்பிக்கை இல்லாதவன். அந்த விதத்தில் நான் ஜார்ஜ் ஆர்வெல் கட்சி.
"All Animals are Equal but some animals are more equal" .
-
15th August 2014 09:16 PM
# ADS
Circuit advertisement
-
15th August 2014, 09:18 PM
#162
Senior Member
Senior Hubber
சற்றே நெருங்கி உற்றுப்பார்த்தால்
*
என்ன செளக்கியமா
விசாரிக்கும் அலுவலக நட்பு
முகத்தில் சிரிப்பு
முதுகில் கத்தி
*
பிஞ்சு வெண்டை
பையனுக்குக் கொடுங்க
அறிவு விருத்தியாகும் என
சிரித்தபடி முற்றலைத் தள்ளும்
வியாபாரி..
*
இதவாங்கிட்டுப் போ சாமி
கொல்லுன்னு சம்சாரம் சிரிக்கும்
என
மலர்ந்த பூக்களைத்
தள்ளிவிடும் வாடிக்கைப் பூக்காரி..
*
நீயே உலக அழகி
என
இரவில்
மனையிடம் சொல்லும் நான்…
*
எல்லாம் போலி
எல்லாம் வேஷம்
எது நிஜம்..
நீ நிஜம்..அம்மா
உன் வலி நிஜம்..
**
இது பற்பல வருடங்களுக்கு முன் நான் எழுதிப்பார்த்த கவிதை
அன்னையைப் போல தெய்வம் ஒன்றுண்டா..என்ன சில பேருக்கு இருக்கும் போது அருமை தெரியாது..
அன்னையைப் பற்றிப் பல பாடல்கள் வந்தாலும் இந்தப் பாட்டு.. அடிக்கடி சிலோன் ரேடியோவில் கேட்டது தான்.. உருகி நின்று விடுவேன்..பாடகர் திலகம் இசையரசி குரல்..படம் கண்ணா நலமா.படம் பார்த்ததில்லை...
*
இனி பாடல் வரிகள்..
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில்
ஒரு விசித்திரமான வழக்கு வந்தது
ஒரு பிள்ளை … இரண்டு தாய்மார்கள்
இரண்டு பேரும் அது தன்னுடைய பிள்ளை என் கிறார்கள்
பிள்ளைக்கோ தன் தாய் யாரென்று சொல்லத் தெரியவில்லை
மன்னன் சாலமன் யோசித்தான்
ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ … நகல் யாரோ
அசல் யாரோ நகல் யாரோ
அறியேனென்று அதிசயித்த மன்னன் சொன்னான் முடிவில் ஒன்று
முடிவில் ஒன்று
இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால்
யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை
ஆகவே … காவலா, இந்தப் பிள்ளையை ஆளுக்குப்
பாதியாகக் கொடு என்றான்..
காவலன் சென்றான் ..இடை வாளை எடுத்தான்
அந்த மகனை இழுத்தான்
வாளை ஓங்கினான்
வாளை ஓங்கினான் …..
மன்னா …மன்னா ஆஆ
அம்மா என்றொரு குரலில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கின்றாள்
இன்னொரு பெண்ணோ வாளைக் கண்டும் புன்னகை புரிகின்றாள்
புன்னகை புரிகின்றாள்
பாதி கொடுங்கள் என்றே அவளோ மன்னனைக் கேட்கின்றாள்
மன்னா வேண்டாம் என்றே இவளோ மன்னனைத் தடுக்கின்றாள்
இந்தா என்றவன் அந்தப் பெண்ணிடம் மகனைத் தருகின்றான்
இவள் தான் உண்மைத் தாயென மன்னன் சாலமன் முடிக்கின்றான்
சாலமன் முடிக்கின்றான்
சக்தி வடிவானவளே அன்னை அன்னை
அவள் தானறிவாள் தான் வளர்த்த கண்ணை கண்ணை
சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..
பக்தியிலும் அன்னை தான் முதலில் தெய்வம்
இந்தப் பார் முழுதும் அவள் வளத்த செல்வம் செல்வம்
பதியம் வைத்த மரம் புதிய தோட்டம் தனில் நின்று வாழ்வதுண்டு
புதியதாக வரும் உறவு யாவும் அதன் சொந்தமாவ்தில்லை
உதிரம் கொண்டு வரும் இதயம் போல ஒரு உண்மை அன்பு இல்லை
உருகும் உள்ளமென தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை
பூவும் மஞ்சளுடன் பொங்கும் தேவி அவள் புவனேச்வரி
பூஜை செய்து வரும் மாதர் காவல் தரும் ராஜேஸ்வரி
பாசம் பொக்கி வரும் தேவி சக்தி அவள் ஜெகதீஸ்வரி
பார்வை தன்னில் உயர் நீதி சொல்ல வரும் பரமேஸ்வரி
• காவலன் சென்றான் உடை வாளை எடுத்தான் வாளை ஓங்கினான்..சொல்லிவிட்டு அம்மா..என்னும் பாவம்..பாடகர் திலகத்தின் குரல் அப்படியே உருக்கும்..
• நல்லபாட்டு தானே..(ஏற்கெனவே போடவில்லை தானே)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 09:29 PM
#163
Junior Member
Newbie Hubber
Superb Chinna Kannan.Thoroughly enjoyed your kavithai. Not the Kanna nalama one.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th August 2014, 09:34 PM
#164
Junior Member
Newbie Hubber
Originally Posted by
mr_karthik
ஐயோ வாசு சார், இப்போதுதான் நினைத்தேன். "அங்கே" நுழைய ஹைதராபாத் கேட் தடையிருப்பதால், இங்கு நமது திரியில், முரளி சாருக்கு சப்போர்ட்டாக 'போலி ஆவணம்' பற்றிய பதிவொன்றை இங்கே இடலாம் என்று நினைத்தேன். என் கைகளைக் கட்டிவிட்டீர்களே.
பரவாயில்லை.., தங்களுக்கும் தர்மசங்கடத்தை உண்டாக்க விரும்பவில்லை.
ஹைதராபாத் ,வேறு மாநிலத்துக்கு போய் (தெலுங்கானா) ரொம்ப காலமாகிறது. கேட் நொறுக்கியாயிற்று. எல்லோரும் அங்கே வாருங்கள் தலைவரே.திரியில் விடுபட்டு சதி-பதிகள் இன்ப வாழ்வு வாழ்கிறார்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 09:56 PM
#165
Senior Member
Senior Hubber
சி.க அருமை கவிதை அருமை ...உமது தமிழ் நடையே அருமை அருமை..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th August 2014, 09:58 PM
#166
Senior Member
Senior Hubber
கோபால் சார், ராஜேஷ் ஜி நன்றி..
*
யாருமே பாட்டுப் போட மாட்டேங்கறாங்க. ஒரு வேளை புதுப் படங்களுக்குப் போயிருப்பாங்களோ என்னவோ..
. என்ன செய்றது..ஓ தில்லை அம்பல நடராஜா எனக் கேட்டால் மனதுக்குள் மணி அடிக்கிறது.. கணீர்க் குரல் கட்டழகர் அந்தக்காலப் பெண்களின் கனவுக் காரிகன்(காரிகையின் ஆண்பால் ?!) எம்.கே.டி தான் நினைவுக்கு வருகிறார்..
ஹரி தாஸில் பாடிய கிருஷ்ணா முகுந்தா முராரேயை வச்சுக் கூப்பிடலாமா..
ஹரிதாஸ் மதுரை தேவித் தியேட்டரில் முழு வெர்ஷன் அம்மாவுடன் அரை டிராயர் சிறுவனாகப் பார்த்தது..பின் வயது வந்த பிறகு..கல்லூரிப் பருவத்தில் ஜெகதாவில் ரிலீஸ் செய்ய பார்க்க நினைத்து முடியாமல் போனது..
போய்விட்டு வந்த என் நண்பன் ரகுராமன் சொன்னான்.. நல்லா இருக்குப்பா ஷார்ட் ஃபில்ம் 14 ரீல் தான்.. என்னது ஷார்ட்டா பதினாலு ரீலா எனக் கேட்டால் பின் தான் தெரிந்தது..அவர்களே ஒரு எடிட்டட் வெர்ஷன் போட்டு விட்டார்கள் என்று..
இதில் அந்த கால கட்ட இளைஞர்கள் திடுதிப்பென்று எம்.கேடியின் ஃபோட்டோ போட்டு. திடீர் எம்.கே.டி ரசிகர் மன்ற போர்ட் வைத்திருந்தனர் என அவனே சொன்னான்..
*
ஆல் டைம் பக்தி பொங்க வைக்கும் சாங்க் அல்லவா..
*
கிருஷ்ணா!முகுந்தா!முராரே!
ஜெய கிருஷ்ணாமுகுந்தாமுராரே ஜெய
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா
கனகாம்பர தாரீ கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
காளிய மர்த்தன கம்சனி தூஷன
கமலாயத நயனா கோபாலா
கமலாயத நயனா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
குடில குண்டலம் குவலய தளநீலம்
மதுரமுரளீ ரவலோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜா கோபாலம்
கோபி ஜன மன மோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே முராரே!
*
அந்த முராரேயில முடிக்குமொரு எண்ட் நோட்..அழகு..
-
15th August 2014, 10:03 PM
#167
Junior Member
Newbie Hubber
சலில் சௌதரி.
வங்காளத்தை சேர்ந்த சலில் சௌதரி 1923 இல் பிறந்து 1995 இல் மறைந்தார். வளர்ந்தது அஸ்ஸாம் டீ எஸ்டேட் என்பதாலும்,தகப்பனார் நாடக விருப்பம் உள்ளவர் மற்றும் மேற்கத்திய இசையில் நாட்டம் உள்ளவர் என்பதால் சலில் சிறு வயதிலேயே ,இசை,நாடகம்,கம்யுனிசம் இவற்றில் ஈர்க்க பட்டார். 1949 இல் வங்காள படத்திற்கு இசையமைக்க தொடங்கி, ஹிந்திக்கு பிமல் ராய் (என்னுடைய பிடித்தமான இயக்குனர்)அவர்களால் 1953 இல் தோபிகா ஜமீனில் அறிமுகமாகி,மலையாளம் செம்மீன் மூலம் 1964 முதல் இங்கேயும் அவர் கொடி பறக்க ஆரம்பித்தது.
என்னுடைய பிடித்தங்கள் அவர் இசையில்.
மதுமதி, சாயா,ஜூலா,சாந்த் ஔர் சூரஜ்,பூனம் கி ராத்,செம்மீன்,ஆனந்த் ,நெல்லு,ராச லீலா,கோகிலா,அழியாத கோலங்கள்,வஸ்துஹாரா,சாமி விவேகானந்தா .
இவர் இசை திறனுக்கு சான்றுகள்.
மதுமதி - சுஹானா சபர்
செம்மீன் -சாஹரா
ராச லீலா -ஆயில்யம் பாடத்து (கிளியே கிளி கிளியே)
ஆனந்த் -ஜிந்தகி -கை சி ஹாய் பெஹலி
Last edited by Gopal.s; 15th August 2014 at 10:08 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th August 2014, 10:28 PM
#168
Senior Member
Senior Hubber
ஓ கோபால் சார்.. மதுமதி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல செம்மீன் தோணிக்காரா.. இந்த கிளி யே கிளி கிளியேவும் கேட்டிருக்கிறேன் பிடிக்கும்.. அடுத்த பாட்டைக்கேட்டுச் சொல்கிறேன்
ஆறுபெய்யும் மாறு பெய்யம் ஆறுச்சூடும்.. கிளியே கிளியெ நீலாஞ்சனப் பைங்கிளியே நீ பருவவயல் கூடுதய்யா..நீ கூடவா.. அர்த்தம்புரியாட்டாலும் வெரி நைஸ்.. மிக்க நன்றி வளர தாங்க்ஸானு.. ரொம்ப தாங்க்ஸ் ஹை.. ஆமா மதுமதி மத்தபாட்டும் போடலாமோன்னோ..
-
15th August 2014, 10:53 PM
#169
Senior Member
Diamond Hubber
டியர் ராஜேஷ்ஜி
இன்று இரண்டாம் ஷிப்ட் இப்போதுதான் முடிந்தது. (ஹைய்யா ஜாலி! இன்று விடுமுறைக்கு வேலைக்கு சென்றதால் டபுள் சம்பளம்) வந்தவுடன் வீட்டின் உள்ளே கூட நுழையவில்லை. நேரே சிஸ்டம்தான். நீங்கள் ஆன்லைனில் இருப்பதை முதலில் பார்த்தேன். அப்புறம் உங்கள் பதிவுகள் எத்தனை குறைந்துள்ளன என்று பார்த்தேன். ம் இதானே வேணாம்கிறது என்கிறீர்களா?
சரி! இன்று உங்களுக்கு 'ஆண்டி பெற்ற செல்வத்'திலிருந்து ஒரு பாடல்.
ஜிக்கியம்மா என்னைப் போலே தங்களுக்கும் பிடிக்கும் என்பதால்.
'கண்ணைத் திறந்து பாரடா'
Last edited by vasudevan31355; 15th August 2014 at 10:59 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th August 2014, 10:57 PM
#170
Senior Member
Senior Hubber
கோபால் ஜி
சலீல் செளத்ரியின் இசை அருமையோ அருமை ..அவுட் ஆப் த வெர்ல்ட்..
எனக்கு மிகவும் பிடித்த நீயும் விதவையோ நிலவே
Bookmarks