-
19th August 2014, 06:18 PM
#541
Junior Member
Newbie Hubber
அடடா ,முரளி என்னை பற்றி எழுதியது உண்மையோ?சற்றே உணர்ச்சி வசப் பட்டு ,வாக்கு கொடுத்து விட்டோமோ?
யோசித்ததில் பளிச் மின்னல்.
1) ஆபாசம்தான் கூடாதே தவிர,கவர்ச்சி ஒகே தானே?
2)இரண்டு அர்த்தம் கூடாதே தவிர,ஒரே அர்த்தம் ஓகே தானே?
வாசு உன் மேலான யோசனையை எதிர்பார்க்கிறேன்.
(மணிவண்ணன் ஒரு படத்தில் ....
என்னா பாஸ் அவரச பட்டு திருந்திட்டீங்களே ?
கொஞ்சம் போர் தாண்டா அடிக்கும் என்ன பண்றது?)
-
19th August 2014 06:18 PM
# ADS
Circuit advertisement
-
19th August 2014, 06:30 PM
#542
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
2)இரண்டு அர்த்தம் கூடாதே தவிர,ஒரே அர்த்தம் ஓகே தானே?
ஒருமுறை குமுதம் அரசு பதில்களில் படித்தது...
கேள்வி : 'இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் எப்போது ஒழியும்?'
பதில் : 'மூன்று அர்த்தமுள்ள வசனங்கள் வரும்போது'...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th August 2014, 06:50 PM
#543
Junior Member
Newbie Hubber
மறுபடியும் சலில் சௌத்ரி. 1965 இல் வெளியான சாந்து ஔர் சூரஜ் படத்தில்.தனுஜா (நம்ம கஜோல் அம்மா) கஷ்கு முஷ்குன்னு என்னா cute ?
இதை சலில் ரொம்ப பிடிச்சு போயி பெங்காலி (அசல்),ஹிந்தி ,மலையாளம் (செம்மீன்)மூணு மொழிகளில் போட்டுள்ளார். வொர்த் துப்பா.
ஆஷா குரல் தூள் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th August 2014, 07:42 PM
#544
Junior Member
Newbie Hubber
மதன் மோகன்.
சலீலை ஒரு பிடி பிடித்தாயிற்று. அடுத்து நம்ம மதன் மோகன் சார். நம் ஹிந்துஸ்தானி இசையில் வித்தியாச பரிமாணம் கண்ட மேதை.மேற்கத்திய இசையை எஸ்சென்ஸ் மாதிரி விடுவார்.இராக்கில் பிறந்து( 1924) பிறகு பஞ்சாப் வந்தவர். அப்பா பாம்பே டாக்கீஸ்,பில்மிஸ்தான் இவற்றில் பாகஸ்தர்.அம்மா,தாத்தா கவிஞர்களாகவும்,இசை பிரியர்களாகவும் இருந்தது இள வயது மதனுக்கு தோது.எஸ்.டீ .பர்மன் உதவியாளர். 1950 முதல் இசையமைப்பாளர்.1975 இல் 51 வயதில் மறைந்தாலும் இசையில் சாதித்தது நிறைய.
எனக்கு பிடித்தம் அன்பத்,ஷராபி,வோ கௌன் தீ (நம்ம யார் நீ),தஸ்தக் (தோரஹா போல நியூ வேவ்.ரெஹனாசுல்தான் அறிமுகம்),பாவர்ச்சி (நம்ம சமையல் காரன்),கோஷிஷ் (தமிழில் நம்ம திரி கார்த்திக் நடித்தது),வீர் சாரா .
சில சாம்பில்கள்..
,ஷராபி.,கபினா கபி ,முஹம்மத் ரபி.
வோ கௌன் தீ,லக் ஜா கலே (பொன்மேனி),லதா.
,மேரா சாயா ,து ஜஹான்,லதா .
தஸ்தக்,பையன் நா தரோ,லதா .
Last edited by Gopal.s; 20th August 2014 at 04:34 AM.
-
19th August 2014, 09:03 PM
#545
Senior Member
Senior Hubber
எஸ்.வி சார்..அதுபாலாடை மேனி இல்லை..பறக்கும் பாவை..உன்னைத் தானே ஏய்.பாட்டு...
-
19th August 2014, 09:05 PM
#546
Senior Member
Seasoned Hubber
கோபால் ஜி,
தனுஜா ஆரம்பத்தில் மட்டுமே க்யூட் அப்புறம் ஒரே ஆம்பளத்தனமாக இருப்பார்(கொஞம் பாட்டி மாதிரி)
-
19th August 2014, 10:08 PM
#547
Senior Member
Seasoned Hubber
பெரும்பாலும் நாம் பழைய பாடல்களைத் தான் இங்கு பகிர்ந்து கொண்டு வருகிறோம். ஆனால் சமீப காலத்தில் ஒரு பாடல் முதல் முறை கேட்கும் போதே மனசையெல்லாம் என்னவோ செய்து அந்தப் பாட்டுக்குள்ளேயே நம்மையும் அறியாமல் நம்மை உள்ளே அழைத்துச் சென்று விடுகிறது. இந்தப் பாட்டில் எந்த இடத்தைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை.. பாடலாசிரியரைப் பாராட்டுவதா... பாடலின் இனிமையான இசையைப் பாராட்டுவதா... பாடியவரைப் பாராட்டுவதா... பாடலைப் படமாக்கிய விதத்தைப் பாராட்டுவதா..
இந்த அளவிற்கு நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தப் பாடலை சமீப காலத்தில் வந்த மிகச்சிறந்த பாடல் என அடித்துச் சொல்லலாம்..
பாடலின் இடையே நடுவில் ஒரு ஹம்மிங்... மிகவும் மெலியதாக...
அவ்வாறே நோக்கினான் என்ற வரிகளின் முன்னர் வரும் இந்த ஹம்மிங்...
இதைத் தொடர்ந்து வரும் ஆலாபனை...
அதனைத் தொடரும் சாரங்கி...
நடுவில் தனியாக சிதார் ....கூடவே கிடார்....
சிதாரும் கிடாரும் இணைந்து ஒலிக்கும் போது நரம்புகளில் ஒரு பரவச உணர்வு எழுவது நிஜம்..
ஹிந்துஸ்தானியும் கர்நாடகமும் இணைந்து இசையின் மேன்மையையும் அதன் உலகளாவிய தன்மையையும் பறை சாற்றுகின்றன.
இந்தப் பாட்டைப் பற்றி எழுதவே ஒரு தனித்திரி வேண்டும்...
இதிலுள்ள ஃப்யூஷனைப் பற்றி கோபால் மிகச் சிறப்பாக விரிவாக எழுதக் கூடியவர்..
ஓவர் டு கோபால்...
கோபால் இந்தப் பாட்டிற்கு நீங்கள் எழுதக் கூடிய விரிவான விளக்கம் தங்களுடைய பதிவிலேயே முத்திரை பதித்ததாக இருக்கும் என்பது நிஜம்..
_0_0_0.jpg)
http://gaana.com/song/unnai-kaanadhu-naan
கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்க்கும் விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற உனைக் காணாத நானிங்கு நானில்லையே பாட்டைப் பற்றி..
கோபால்... நீங்கள் எழுத வேண்டும்.. நாங்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்...
Last edited by RAGHAVENDRA; 19th August 2014 at 10:25 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th August 2014, 10:46 PM
#548
Senior Member
Diamond Hubber
கோ,
இதெல்லாம் நியாயமே இல்ல! என் பாட்டுக்கள் சிலத நீங்க எப்படி தொடலாம்? அதுவும் தனுஜா ரசிகன் வேற. 3 மாசத்துக்கு முன்னாடியே எடுத்து வச்சேன்.
"bag me kali khili ன்னா அப்படியே சொக்கிப் போவேன். அதுவும் தனுஜா
குதூகலமாக வைக்கும் அந்த கால் ஸ்டெப்ஸ். சான்ஸே இல்லே கோ. ஆஷா வேற கொன்னுடுவார்.
இப்படியே போய்கிட்டு இருந்தா நான் 'விஸ்வரூபம்' எடுக்க வேண்டி வரும். ஆமாஞ் சொல்லிபுட்டேன்.
சலீலை எங்கே முடிச்சாச்சு? இருக்கு கண்ணு. வர்றேன்.
-
19th August 2014, 11:13 PM
#549
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
கோ,
இதெல்லாம் நியாயமே இல்ல! என் பாட்டுக்கள் சிலத நீங்க எப்படி தொடலாம்? அதுவும் தனுஜா ரசிகன் வேற. 3 மாசத்துக்கு முன்னாடியே எடுத்து வச்சேன்.
"bag me kali khili ன்னா அப்படியே சொக்கிப் போவேன். அதுவும் தனுஜா
குதூகலமாக வைக்கும் அந்த கால் ஸ்டெப்ஸ். சான்ஸே இல்லே கோ. ஆஷா வேற கொன்னுடுவார்.
இப்படியே போய்கிட்டு இருந்தா நான் 'விஸ்வரூபம்' எடுக்க வேண்டி வரும். ஆமாஞ் சொல்லிபுட்டேன்.
சலீலை எங்கே முடிச்சாச்சு? இருக்கு கண்ணு. வர்றேன்.
வாசு ஜி சூப்பர்
-
19th August 2014, 11:20 PM
#550
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி
'இதேனா சப்யதே இதேனா ஸ்ம்ஸ்குருதி' இரவு வேலை முடித்து வந்து பார்த்தேன். அமைதியான ஒரு பாடல். உணர்ந்து அனுபவித்து பாடியிருக்கிறார் இசையரசி.
கல்பனா அட்டகாசம். அமைதியாக அதே சமயம் ஆழமாக தன் கருத்தை முன்வைத்து. சில இடங்களில் கத்தின கும்பலை ஓரக்கண்ணில் கேலி கலந்த கண்டிப்புடன் மேய்வது சூப்பர்.
மறைந்த தேசபக்தி தலைவர்கள் காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி இவர்களின் கிளிப்பிங்கஸ் அருமை. (தமிழில் பெரும்பாலும் நடிகர் திலகம் படங்களில் மட்டுமே மறைந்த தேசத் தலைவர்களைக் காண முடியும்)
அதே போல ராணுவ வீரர்கள் படும் கஷ்டங்களும், சோற்றுக்கு வழி இல்லாமல் ஏழைகள் திண்டாடும் காட்சிகளும் பாடலுக்குத் தோதாக இணைக்கப்பட்டுள்ளன.
இன்னொன்று பார்த்தீர்களா? .ம்.. நான் உங்களைப் போய்க் கேட்கிறேனே? நம்ம ஜெயகுமாரி எவ்வளவு கியூட்டாக இருக்கிறார்! குரூப்பில் ஆடிக் கொண்டிருந்தவர் படிப்படியாக முன்னேறி 'சோலோ'வுக்கு வந்தவுடன் மிக அழகாக இருப்பார். கல்பனாவை பார்த்து ஜெயகுமாரி முகம் சுளிப்பாரே, நம் தமிழ் 'கண்ணம்மா' படத்தில் 'எங்கெங்கும் உன் வண்ணம்' பாடலின் போது பாடும் முத்துராமனை சைட் அடிக்கும் (!) கே.ஆர்.விஜயாவைப் பார்த்து அதே முகஞ்ச்சுளிப்பைக் காட்டுவார் ஜெயகுமாரி. எனக்கு அது ஞாபகம் வந்து விட்டது.
ராஜ்குமார் பாடலின் ஆரம்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கோட்டைப் பிடித்துக் கசக்கிக் கொண்டு முழிப்பது நன்றாகத் தெரியும். அதற்கெல்லாம் நடிகர் திலகம் ஒருவரே!
நல்ல பாடலை அளித்ததற்கு நன்றி ராஜேஷ்ஜி!
ஒரு பாடலை எடுத்தால் எத்தனை விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன? எங்கு சுற்றினாலும் அது முடிவது நடிகர் திலகத்திடம்தான். பாடலில் மட்டுமல்ல. எல்லாவற்றிலும்தான். (எங்களைப் பொருத்தவரையில்)
கார்த்திக் சார்,
இந்தப் பாடலை விட்டுவிடாதீர்கள். ஒரு சில வினாடிகளே வந்தாலும் நம் பிரிய ஜெயகுமாரி தூள்.
Last edited by vasudevan31355; 19th August 2014 at 11:56 PM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks