-
20th August 2014, 04:55 PM
#10
Junior Member
Devoted Hubber
நான் சொன்ன மூன்று படங்களிலும் நல்ல கதை, பாடல்கள் இருந்தும், படம் பண்ணிய விதத்தில் சுவாராசியம் கம்மியானதால், குப்பைக்கு சென்றுவிட்டன.
இப்போதும் கூட அவருடைய மண்வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் பார்த்தால் எனக்கு சிலிர்க்கும். மண்வாசனை ஒச்சாயி கிழவி பற்றி என்னுடைய தமிழாசிரியர், தஞ்சை ஆழி ஐயா, நாள் கணக்கில் பாடம் எடுத்ததை இப்போது நினைவு கூறுகிறேன்.
எப்படியோ கதை சொல்லி, நல்ல பாடல்களை ராஜா சாரிடம் வாங்கி இருக்கிறார். உருப்படாத வாலிபமே வா வா படத்தில் கூட அழகே உன்னை கொஞ்சம் கண்கள் எழுத வா வா.. சுசீலாவும், வாசுதேவனும் பிரமாத படுத்தி இருப்பார்கள். உயர்ந்த இசையில், புலமைபித்தனின் எளிமையான வார்த்தைகள்,
வானில் இன்று மேக ஊர்வலம்
யாரை தேடி போகுமோ?
ஏழு வண்ண வானவில்லிலே
மாலையாக சூட்டுமோ?
மலையில் அங்கும் இங்கும் பச்சை மரகதம்
இயற்க்கை அன்னை தந்த அன்பின் தரிசனம்
அழகை விழியில் அளப்போம் வா வா வா...
https://www.youtube.com/watch?v=wb_qyFZKxzU
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks