-
24th August 2014, 12:03 AM
#11
Junior Member
Devoted Hubber
நினைத்தேன் ஏதாவது காமெடி நடக்குமென்று..
விழா நேரமே தப்பு.. 11 மணிக்கு ஆரம்பித்து அத்தனை புத்தங்களை பற்றி நீட்டி முழக்கி, கரை வெட்டிகளின் இடையூறுகளை தாண்டி எப்படி மதிய உணவு நேரத்துக்குள் முடிக்க முடியும்?
விழா ஏற்ப்பாட்டாளர்கள் எப்படியோ செய்ய நினைத்து இப்படி சொதப்பிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
மாண்புமிகு மற்று அன்பான வாக்கால பெருமக்களை நிகழ்ச்சிக்கு அழைத்தது தவறு...
இரும்படிக்கும் இடத்தில் இவர்களுக்கு என்ன வேலை?
உண்மையில் ராஜா சாருக்காக வந்தவர்கள், நேரத்துக்கு வந்து அவர் போகும் வரை இருப்பதல்லவா மரியாதை?
பொற்கோவின் தமிழ் காலத்துக்கும் நிற்கும், ஆனால் மாண்புமிகு என்கிற மரியாதை? அண்ணாமலையார் அல்ல, அம்மா நினைத்தால் நொடியில் மறைந்து போகும்.
இனிமேல் ராஜா சார் இந்த மாதிரி நிகழ்ச்சிலல்லாம் கலந்துக்கக்கூடாது.. நாங்களும் அதான் சொல்றோம் சுகா சார்.. செறிவூட்டும் இலக்கிய இசை விழாக்களில் பார்வையாளராக மட்டும் ராஜா சார் கலந்து கொள்ளட்டுமே. ரஜினியும் இப்போதெல்லாம் அப்படி போகிறாராம்.
-
24th August 2014 12:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks