-
30th August 2014, 11:55 AM
#2771
Junior Member
Regular Hubber
-
30th August 2014 11:55 AM
# ADS
Circuit advertisement
-
30th August 2014, 11:56 AM
#2772
Junior Member
Regular Hubber
-
30th August 2014, 12:29 PM
#2773
Junior Member
Platinum Hubber
-
30th August 2014, 12:46 PM
#2774
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
ஒவ்வொரு பக்தனின் இன்றைய ஏக்கம்
தலைவா இன்னும் ஒரு முறை மண்ணில் நீ பிறந்து வந்தால் தெருவுக்கு ஒரு கோயில் குறைந்து
சாதிக்கு ஒரு தலைவன் இல்லாமல் இந்த தரணிக்கு ஒரு தலைவனாக மக்கள் உன்னை ஏற்று கொள்வார்கள்
கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு
அந்த நாள் வந்திடுமா ?
கடைசியாக ஒரு விண்ணப்பம் கடவுளுக்கு
கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு

அற்புதம் யுகேஷ் சார். அனைவரின் ஆசைகளையும் அழகாய் சொல்லிவிட்டீர்கள். நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th August 2014, 12:49 PM
#2775
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
மக்கள் வெள்ளத்தில் எங்கள் மன்னாதி மன்னன்
courtesy dinamalar reported ramakrishnan
சரித்திரம் படைத்த சாமான்யர். நன்றி. திரு. யுகேஷ் சார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th August 2014, 12:54 PM
#2776
Junior Member
Veteran Hubber
அரிய, அற்புத, அசத்தல் ஆவணம். நன்றி திரு. ராமமூர்த்தி சார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
30th August 2014, 01:02 PM
#2777
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Pradeep Balu
வள்ளலுக்கும் வள்ளலின் புகைப்படத்தில் வள்ளலைக் காட்டிய வள்ளலின் வாரிசு வாழ்க நூறாண்டு. நன்றி. திரு. பிரதீப் சார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th August 2014, 03:31 PM
#2778
Junior Member
Platinum Hubber
Malaimalar - to day
எம்.ஜி.ஆர் நடித்து 1965ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். இதில் கதாநாயகியாக தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நடத்து இருந்தார். நம்பியார், நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர் போன்றோரும் நடித்தனர்.
இந்த படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14ந்தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 122 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தற்போது சென்னையில் உள்ள சத்யம், ஆல்பட் தியேட்டர்களில் 25வது வாரமாக 175வது நாளை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறது.
இதையொட்டி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பணியாற்றியவர்களை பாராட்டி சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
175வது நாள் வெற்றி விழாவையும் கலைஞர்களுக்கு பாராட்டு விழாவையும் நாளை மறுநாள் (1ந்தேதி) மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடத்துகின்றனர். சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் வரவேற்று பேசுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களான சத்யராஜ், பி.வாசு, ஆர்.பாண்டியராஜன், விக்ரமன், விவேக், செந்தில், கே.ராஜன், மயில்சாமி, சார்லி, ஜாக்குவார் தங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணி பாடலை பாடிய பி.சுசீலா, வசன கர்த்தா ஆர்.கே.சண்முகம், நாகேஷ் ஜோடியாக நடித்த மாதவி, எல்.விஜய் லட்சுமி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.ரவிசங்கர் போன்றோருக்கு விழாவில் கேடயம் வழங்கப்படுகிறது. பி.எஸ்.ராஜூ நன்றி கூறுகிறார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th August 2014, 04:04 PM
#2779
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th August 2014, 09:35 PM
#2780
Junior Member
Diamond Hubber
repeated article but interesting
`சத்யா மூவிஸ்' தயாரித்த "காவல்காரன்'' படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.
1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
சிவகுமாரும் தன் தாயார் பற்றி எம்.ஜி.ஆரிடம் கூறினார்.
இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-
"என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.
ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.
இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.
எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.
எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார். குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.
அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று, விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.
எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.
எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.
7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.
Bookmarks