Page 168 of 401 FirstFirst ... 68118158166167168169170178218268 ... LastLast
Results 1,671 to 1,680 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1671
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வணக்கம் ராஜேஷ்ஜி.

    நலம்தானே!

    'கணவன் மனைவி' திரைப்படத்திலிருந்து பாடகர் திலகமும், இசையரசியும் பாடிய ஓர் அருமையான பாடல். 'மெல்லிசை மாமணி' குமார் இசை. நல்ல வரிகள். கொஞ்சம் வித்தியாசம்.

    'மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
    மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்'

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1672
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post

    இசையரசியின் புகழ் பாடியிருப்பது அருமையோ அருமை. 'கதவில் மாட்டிய எலிகளின்' குரல்கள் எக்காலமும் இவரை நெருங்க முடியாது.

    தெளிவு ஏற்படுத்தும் தீர்க்கமான பதிவு. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. நிறைய சொல்லலாம். உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் வர சிரமப்படுகின்றன.
    நான் தங்களுடன் 1000000000000000000000000 சதவிகிதம் உடன் படுகிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1673
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (67)

    இன்றைய ஸ்பெஷலில் மிக மிக வித்தியாசமான ஓர் பாடல்.



    இந்தியா இலங்கை கூட்டுத் தயாரிப்பான கமலாலயம் மூவிஸ் 'வாடைக் காற்று' என்ற ஈழத் தமிழ் திரைப்படத்திலிருந்து.

    சிலோன் ரேடியோ கேட்டவர்கள் அனைவருக்கும் இப்பாடலைக் கேட்டவுடன் சட்டென்று ஞாபகம் வந்து விடும். அந்த அளவிற்கு தமிழ்ப்ப் பாடல்களுக்கு இணையாக புகழ் பெற்று இலங்கை வானொலியில் தினம் தினம் ஒலிபரப்பப்பட்ட பாடல்.

    இப்படத்தைப் பற்றியும், இப்படத்தில் நடித்த கலைஞர்கள் பற்றியும் கீழே பதிந்துள்ள நோட்டீஸ்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.




    பிழைப்புக்காக மீன்பிடித் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் பாடும் பாடல். அழகாக அமைந்த பாடல். நடுவில் பரிதாபமாக ஒலிக்கும் பெண் குரல்களின் கோரஸ். ஏ.எம்.ராஜா அவர்களை நினைவு படுத்தும் குரல். இந்தப் பாடலைக் கேட்கும் போது அந்தக்கால சம்பவங்கள் நம் நெஞ்சில் நிழலாடுவது உண்மை.






    இனி பாடலின் முழு வரிகள்

    வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே
    நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓடத்திலே
    இரவினிலே தொழிலுக்காகச் செல்லுகின்றோம்
    அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.

    (கோரஸ்) அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.

    வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே
    நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓடத்திலே
    இரவினிலே தொழிலுக்காகச் செல்லுகின்றோம்
    அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.

    (கோரஸ்) அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.

    வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே

    ஏலோ ஏலோ ஏலேலோ
    ஏலோ ஏலோ ஏலேலோ

    ஒ........................................ஒ

    நீலக்கடல் மீதினிலே ஓடமிது
    நீங்கி வரும் காலையிலே நாளுமிது

    நீலக்கடல் மீதினிலே ஓடமிது
    நீங்கி வரும் காலையிலே நாளுமிது

    வலை வீசி வாழுகின்ற கூட்டமிது
    நாங்கள் வாழுறது கடலோரம் குடிசையிலே
    எங்க குடிசையிலே

    வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே
    நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓடத்திலே
    இரவினிலே தொழிலுக்காகச் செல்லுகின்றோம்
    அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.

    அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்.

    வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே

    ஏலோ ஏலோ ஏலேலோ
    ஏலோ ஏலோ ஏலேலோ
    ஒ........................................ஒ




    இந்தப் பாட்டோடு போனஸாக 10 நிமிட 'பொங்கும் பூம்புனல்' இலங்கை வானொலி நிகழ்ச்சியை (விருப்ப நேயர்கள் பெயர் அறிவிப்போடு) கேட்டு என்ஜாய் செய்யுங்கள்.

    Last edited by vasudevan31355; 2nd September 2014 at 10:27 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes Russellmai liked this post
  7. #1674
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    உங்கள் ரசனை மெய் சிலிர்க்க வைக்கிறது .1975 கால கட்டங்களில்
    சிலோன் வானொலி நிலையம் மீண்டும் மீண்டும் ஒலி பரப்பிய ஒரு பாடல்
    இந்த பாடலை கேட்ட உடன் நினைவில் வந்த இன்னொரு பாடல்
    'ஈழ திரு நாடே என் அருமை தாயகமே '

    மேலும் இன்னொரு பாடல் அது மக்கள் வங்கி விளம்பர பாடல் என்று நினைவு

    கலை இலக்கியம் இதழியல் சினிமா வானொலி ஊடகத்தில்
    அதிசயங்கள் நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் கமலினி பாடிய

    'அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
    கேள்வி ஒன்று கேட்கலாமா உன்னை தானே '

    தொலைக்காட்சியின் அறிமுகம் இல்லாத அந்தக்காலத்தில் இலங்கை வானொலியின் தமிழ் தேசிய சேவையும் வர்த்தகசேவையும் இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் நன்கு பிரபல்யம் அடைந்திருந்தது. மயில்வாகனம், செந்திமதி மயில்வாகனம், சில்லையூர், கே.எஸ்.ராஜா, அப்துல்ஹமீட், ராஜேஸ்வரி சண்முகம், சற்சொரூபவதி நாதன் சுந்தா சுந்தரலிங்கம், புவனலோஜினி வேலுப்பிள்ளை, சரா இம்மானுவேல், ஜோக்கிம் பெர்ணான்டோ, ராஜகுரு சேனாதிபதி , கனகரத்தினம், ஜோர்ஜ் சந்திரசேகரன் முதலான பலரது குரல் நாடெங்கும் பிரசித்தம். இவர்கள் தமிழ்வானொலி நேயர்களை வானொலியின் அருகே அழைத்து கட்டிப்போட்டவர்கள் என்று சொல்வதுகூட மிகையான கூற்று அல்ல.
    இக்காலத்தில் தொலைக்காட்சி நாடகங்களை அலுப்புச்சலிப்பின்றி பார்த்து ரசிக்கும் எண்ணிறைந்த மக்களைப்போன்று அந்நாட்களில் தமது ரஸனைக்கு விருப்பமான தொடர் நிகழ்ச்சிகள் நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் வேளைகளில் தமது அன்றாடக்கடமைகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு வானொலிக்கருகே வந்துவிடுவார்கள்.
    அல்லது. குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை செவிமடுப்பதற்கு ஏற்றவாறு தமது வீட்டுப்பணிகளுக்கு நேரவரையறை செய்துகொள்வார்கள்.

    பிரேம்நாத் மொறாயஸ் இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளிவந்த ஈழத்து திரைப்படம் வாடைக்காற்று. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலேயே. இப்பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பாடலில் ஏலேலோ என்ற ஹம்மிங் கேட்க மிகவும் அழகாக இருக்கிறது.
    Last edited by gkrishna; 2nd September 2014 at 10:46 AM.
    gkrishna

  8. Thanks Russellmai thanked for this post
  9. #1675
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி தமிழ் விக்கி

    வாடைக்காற்று 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற புகழ் பெற்ற புதினம் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.

    இத்திரைப்படத்தில் ஏ. இ. மனோகரன், கே. எஸ். பாலச்சந்திரன், கலாநிதி கே. இந்திரகுமார், எஸ். ஜேசுரட்னம், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் முதலானோர் நடித்திருந்தனர். பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள்.

    கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.


    வாடைக்காற்று காலத்தில் வெளியிடங்களிலிருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, நட்பு, கோபம் என்பனவற்றை அடிநாதமாகக் கொண்டது இக்கதை. முந்திய வருடத்தில் அங்கு வந்து வாடி போட்டுத் தொழில் செயத சம்மாட்டி செமியோன் (மனோகரன்) உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா (சந்திரகலா)வுடன் கொண்ட உறவு அவளது தந்தை (பிரான்சிஸ்), தமையன் (கந்தசாமி) ஆகியோருடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது. உள்ளூர்க்காரரான பொன்னுக் கிழவர் (ஜேசுரட்னம்) பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை (ஆனந்தராணி) கண்போல வளர்த்து வருகிறார். முயல் வேட்டையாடிக் கொண்டு திரியும் அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலத்துக்கு (பாலச்சந்திரன்) அவளை திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற ஆசை அவருக்கு.

    மீண்டும் அடுத்த பருவகாலம் வருகிறது. வெளியூர் மீனவர்கள் வருகிறார்கள். வெகு தூரத்திலிருந்து கூழக்கடாக்கள் என்ற் பறவைகளும் வருகின்றன. ஆனால் இந்தமுறை புதிதாக மரியதாஸ் (இந்திரகுமார்) என்ற சம்மாட்டி வந்து சேர்கிறான். அவனோடு பிரச்சினைகளும் வருகின்றன. செமியோன் சம்மாட்டி வழக்கமாக வாடி போடும் இடத்திலே தான் வாடி போட்டுத் தொழில் செய்கிறான். பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்கிறான். போதாதற்கு நாகம்மாவையும் மனம் மாற்றி தன்னுடன் அழைத்துப் போய் விடுகிறான். இதனால் விருத்தாசலமும், பொன்னுக்கிழவரும் வேதனையினால் வெந்து போகிறார்கள். செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே வெற்றி கிடைக்கிறது. முறைப்பெண்ணான நாகம்மாவை எங்கிருந்தோ வந்தவனுக்கு பறிகொடுத்த விருத்தாசலத்தை, சுடலைச் சண்முகம் (ஜவாஹர்) கிண்டல் செய்கிறான்.

    ஊர்த் திருவிழா நடக்கிறது. செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிறான். இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட்டார்கள். அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடுகிறான். நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்கிறான். விருத்தாசலமும், செமியோனும் தங்கள் இழப்பினால் வருந்த, மரியதாஸும், நாகம்மாவும் ஊரை விட்டுப் போகிறார்கள். மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது.

    சில குறிப்புகள்[தொகு]
    'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.

    இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.

    வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற பாடலைப் பாடிய ஜோசப் ராசேந்திரன், இலங்கை வானொலியின் ஒரு அறிவிப்பாளர். இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

    'விருத்தாசலம்' (கே. எஸ். பாலச்சந்திரன்) பாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவைத் தான் முதலில் அணுகினார்கள்.
    பிரபலமான கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நடித்த இந்தத் திரைப்படத்தில் பின்னணிக் குரல் கொடுத்தவர்களும் சளைத்தவர்களல்ல. 'தணியாத தாகம்' வானொலி நாடகத்தில் 'யோக்ம்' பாத்திரத்தில் நடித்த விஜயாள் பீற்றர், 'அப்புக்குட்டி' ரி. ராஜகோபால், அருட்பிதா. கரவையூர்ச் செல்வம் ஆகியோரே அவர்கள்.

    வீரகேசரிப் பிரசுரங்களான செங்கை ஆழியானின் வாடைக் காற்று, அ. பாலமனோகரனின் நிலக்கிளி எனும் இரண்டு நாவல்களிடையே ஒன்றைத் தெரிவுசெய்து தரும்படி, இயக்குனர் பாலு மகேந்திராவிடம், அவரது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் சிவதாசன் கேட்டபொழுது, நிலக்கிளி நாவலில் வரும் 'பதஞ்சலி' பாத்திரத்தில் நடிக்க தென்னிந்தியாவிலும் நடிகைகள் இல்லை. 'வாடைக்காற்றை' இலங்கைச் சூழலுக்கேற்ப இலகுவாக படமாக்கலாம்" என்றார் பாலு மகேந்திரா.
    gkrishna

  10. #1676
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணாவா! கொக்கா!

    'வாடைக்காற்று' மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி சார். அவ்வளவும் உபயோகமான அருமை.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1677
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் "இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே". இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.

    நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.

    இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.

    இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)
    இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.

    படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.

    மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.

    செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.
    இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.

    இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது "செம்மீன்" போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.

    " எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்" என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.

    நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

    வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். "ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.

    இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது" படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து " கல்லுக்குள் ஈரம்" வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.

    வாடைக்காற்று திரைப்படமான போது

    கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , "நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்" என்றாராம்.

    நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).

    ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்

    திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
    இசை: ரீ.எவ்.லத்தீப்
    உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
    இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
    படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
    (கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
    திரையிட்ட தேதி: 30.03.1978

    இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்

    முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)


    "வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.

    மறக்கமுடியுமா இதை.


    thanks to ceylon kana prabha
    Last edited by gkrishna; 2nd September 2014 at 11:08 AM.
    gkrishna

  12. #1678
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    விருத்தாசலமும் பொன்னுக் கிழவரும்

    நடிகர் திலகமே தெய்வம்

  13. #1679
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    மீண்டும் மீண்டும் வாதிடுவதால் யாரும் யாருடைய கருத்தையும் மற்றிக்கொள்ளப் போவதில்லையென்று தெரியும். இருந்தாலும் சொல்லியாக வேண்டிய நிலை.

    ஒரேயொரு 47 நாட்கள் படத்தின் சிச்சுவேஷன் பாடலுக்காக நான் அந்தப்பதிவை, (சிலர் பார்வையில் ஒப்பாரிப்பதிவை) இடவில்லை. 70 முதல் 75 வரை தமிழ்த்திரையிசை செத்துக்கிடந்தது என்ற போலியான, பொய்யான, மனசாட்சிக்கு விரோதமான தாக்குதலை நடத்திவந்த சிலரின் கருத்தை முறியடிக்கும் வண்ணம், அந்த காலகட்டத்தில் வந்த அருமையான பாடல்களில் சிலவற்றை (எல்லாவற்றையும் அல்ல, சிலவற்றை) பட்டியலிட்டிருந்தாரே தாரிகன் என்ற நண்பர், அவரையும் அதை நமக்குக் காணச்செய்த கிருஷ்ணாஜி அவர்களையும் பாராட்டியிருந்தேன்.

    திரும்பத்திரும்ப எம்.எஸ்.வி. ஆள்பார்த்து இசையமைத்தார் என்ற தவறான குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன். தனிப்பட்ட நடிகர்கள் மீது சில அபிமானங்கள் இருக்கலாம், அதை தொழிலில் காட்டியதில்லை. காட்டியிருந்தால் ஒரு 'பொன்மகள் வந்தாள்' நமக்குக் கிடைத்திருக்குமா?. ஒன்றுதான் என்று நினைக்கக்கூடாது ஒரு உதாரணத்துக்குத்தான். பிரம்மாண்ட நீரும் நெருப்பும் பாடல்கள் ஹிட்டாகாத நிலையில் சாதாரண பாபு படத்துக்கு அருமையான பாடல்களை ஹிட்டாகித்தந்தவர். பிராப்தம், டாக்டர் சிவா, பொன்னூஞ்சல் படங்களையும் ஓடிய கொஞ்ச நாட்களையும் தன பாடல்களால் ஓட வைத்தவர். இல்லைஎன்று மனசாட்சியுள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள். இவரா ஆள் பார்த்து இசையமைத்தவர்?. ஜெய்சங்கர் நடித்து மதுரை திருமாறன் இயக்கிய படங்களில் எந்த எம்.ஜி.ஆர். நடித்தார்?. முக்தாவின் சூரியகாந்தி உள்பட பல படங்களில் எந்த எம்.ஜி.ஆர். நடித்தார்?. பாடல்கள் ஹிடாகவில்லையா?. இவரா ஆள்பார்த்து இசையமைத்தவர். 'ஒருசிலரின் கடவுள்' நுழைந்த 76-ல் கூட இவர் பாடல்மூலம் வாணி ஜெயராம் தேசிய விருது பெற்றார்.

    இன்னொரு குற்றச்சாட்டு ஒரு சில பாடகர்களையே பயன்படுத்தினார். இதுவும் ஒரு அபத்தக் குற்றச்சாட்டு. சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெய், ரவி குரல்களுக்கு டி.எம்.எஸ். குரல் பொருந்தியது போல யார் குரலும் பொருந்தவில்லை. அதுபோல ஜெமினி, ராஜன், முத்துராமன் ஆகியோருக்கு பி.பி,எஸ். பொருந்தினார் என்பதற்காக அவரைப்பயன்படுத்தினார். ஈஸ்வரியையும் தேவையறிந்து பயன்படுத்தினார். அதற்காக புதியவர்களை அறிமுகப்படுத்தவில்லை என்பதோ அவர்களைப் பயன்படுத்தவில்லை என்பதோ கிடையாது.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ், ஜானகி, வாணி ஜெயராம் ஆகியோர் மெல்லிசை மன்னரிடம் ஏராளமாக பாடியபிறகுதான் இசைக்கடவுள் வந்தார். இவர்களின் குரல்களை வைத்து தன்னை நன்றாக வளர்த்துக்கொண்டார். இதுதான் உண்மை.

    என்ன ஒன்று, இவற்றை விவரமாக எடுத்துரைக்க என்னிடம் மைக் இல்லை. விஜய் ஆதிராஜ் போன்ற விடலைகளின் கையில் மைக் இருக்கிறது. உளறித்தள்ளுகிறார்கள்.

    சில நண்பர்கள் புதிய தொடர்களைத் துவங்குகிறார்களாம். துவங்கட்டும். இதுவரை அவர்களின் அனைத்துப்பதிவுகளையும் (அவை ஒருவரிப்பதிவோ அல்லது முழு ஆராய்ச்சியோ) விடாமல் படித்தவன் நான். இனிமேல் சில பதிவுகளை படிக்காமல் தள்ளிவிட வேண்டியிருக்கும். அவ்வளவே...

  14. #1680
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செமியோனாக நம் பாப் இசை சிலோன் மனோகர்
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •