-
6th September 2014, 03:24 PM
#1961
Junior Member
Platinum Hubber
என்னுடைய ஆவண பதிவுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு ராஜேஷ் , திரு வாசு , திரு சின்ன கண்ணன் , திரு கார்த்திக் ,திரு கிருஷ்ணா மற்ற நண்பர்களுக்கும் அன்பு நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .
இனிய நண்பர் திரு கார்த்திக் அவர்களின் மோகன புன்னகை - மீள் பதிவு அருமை . நன்றி கிருஷ்ணா சார் .
-
6th September 2014 03:24 PM
# ADS
Circuit advertisement
-
6th September 2014, 04:05 PM
#1962
Junior Member
Platinum Hubber
இவர் யார் என்று தெரிகிறதா ?
-
6th September 2014, 06:36 PM
#1963
Junior Member
Regular Hubber
கிருஷ்ணாஜி சார்,
நெல்லை பார்வதி திரையரங்கில் நூறு நாட்களைக் கடந்தும் வசூல் குறையாமல் ஓடிக் கொண்டிருந்த பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தின் ஓட்டத்தை
தடுத்த படம் வாழையடி வாழை.இரு படங்களுக்கும் ஒரே விநியோகஸ்தர் அமைந்ததால்
வந்த கொடுமை.
கோபு
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
6th September 2014, 08:07 PM
#1964
To My Dear Gopal and all Vani Fans

Regards
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th September 2014, 09:19 PM
#1965
Senior Member
Senior Hubber
மதுரைக்கென்று சில பிரத்யேகத் தமிழ் உண்டு..அதில் ஒன்று பந்தா..
யாராவது அலட்டுகிறார்க்ள் என்றால் ரொம்ப பந்தா பண்றான் பாரேன் என்பார்கள்..(இப்பவும் உண்டா தெரியவில்லை)
அதுல பாருங்க பாஸ்..இந்தப் பெண்கள் இருக்காங்களே..ம்க்கும் இந்த லவ்வர்க்கு முன்னால் பந்தா பண்ணுவாங்க பாருங்க..
அதுவும் வாலியே என்ன சொல்லியிருக்கார்.. கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை..கொஞ்சம் ஓரளவுக்கு உண்மை தான்!
இருந்தாலும் உஷார் ப் பார்ட்டிங்க தான்.. பிடிக்கும் கொஞ்சம் காதலோட காதலன் தன்பக்கம் இழுத்தணைக்கறது..ஆனா பிடிக்காத மாதிரிக் காட்டுவாங்க..என்று ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்..!
வேறுவேண்டும் எனக்கேட்டால் பதிலெதுவும் சொல்லாய்
...விஷமக்கண் பார்வையினால் மெளனத்தால் கொல்வாய்
மேருபோல நிமிர்ந்திருந்த முகத்தினையே சற்றே
..மேவித்தான் இதழமுதம் பருகிடவே அழைத்தால்
சேறுபட்ட சீலையினைப் பார்த்தாற்போல் பதறி
..செவ்விதழைத் தான்மடித்துத் தள்ளலாமோ பெண்ணே
தேருநிலை மாறியதே தங்கநிறப் பெண்ணே
..தெனாவட்டாய் நிலைகொள்ளச் செய்திடுவாய் கண்ணே..
பின்ன என்னங்க..டார்க் ப்ளூலெக்கின்ஸ்ல டிசைன் வேற..மேல ஒரு பிங்க் கலர் ஸ்பாகெட்டி டாப்ஸ்.. தலைமுடியோ பஃப்னு விரிச்சிருக்கா.. எல்லாம் அனுப்பிச்ச செல்ஃபி போட்டோ தான் .போட்டோல்ல பார்க்கறச்சயே கிறங்குதே.. கூப்புடலாமா..சட்டுன்னு காதலியக் கூப்பிட பழைய பாட்டத்தவிர வேற என்ன இருக்கு
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்குவரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக – நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா நெஞ்சைக்
கேட்டுச் சொல்லடி சுவையாக..
//அவளுக்கும் அந்தப் பாட்டுத் தெரியும் போல..வாஸ்ஸப்ல அவளே பாடறா.. அட குரலும் நல்லா இருக்கே//
விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும்தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களும் உறவாட..
//கூடவே வாய்ஸ் வேற வருது..டேய் பாட்டுத்தான் பாடினேன் நீ பாட்டுக்கு பைக் எடுத்துக்கிட்டு வீட்டுப் பக்கம் வந்துடாதே..டாட் இஸ் தேர்….ஓகே.. பாடறதுன்னா பாடு..வேறவழி சந்திரபோஸ் பாடறதா நினச்சுக்கறேன்!//
கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ..
//லூஸீ… நீ தான்மொட்டை மாடிலல் நான் இருந்தாலும் யாரும் இல்லாம இருக்கறச்சயும் கூட அந்த எதிர் ஃப்ளாட் மாமா ஜன்னல்லருந்து பார்க்கறார்னு பயந்த..இப்ப என்னடான்னா பாட்டு மூலமா கிஸ்கேக்கற – இப்படில்லாம் நெனச்சுக்கிட்டா..ஆனா சொல்லலை..கண்டின்யூ பண்றா/
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அது தானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்னவேண்டும் இன்னும் சொல்லலாமா
/இவனுக்கோ பக்னு ஆய்டுச்சு..அடாடா.. இட்லி மொளகாப்பொடில்லாம் தரமாட்டாளாம்மா..ஓ பாட்டு தானே..இருந்தாலும் நாளைக்கு நேர்ல பார்க்கறச்சே கேட்டுக்கணும்!//
காவேரிக் கரையின் ஓரத்திலே
தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக்கொள்ள வருவாயோ
கனியே கொஞ்சம் தருவாயோ..
// ம்ம்..மஹாபலிபுரம் கூடப் போலாம்னு கேட்ட ஆள் தானே இவன்..நோ சான்ஸ்னு அப்போதே சொல்லிட்டேனே..இவனோட திருச்சி வரைக்குமா..என் ஆஃபீஸ்லயும் லீவ் கிடைக்காது..அவனுக்கும் தான்..என்ன தான்பாட்டுப் பாடினாலும்லாஜிக்கா கொஞ்சம் மாத்திப் பாடலாமில்லை..லூஸீ..அதுக்கு எப்படி பாட்டுல்லாம் எழுத வரும்..இருந்தாலும் நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லிடுத்து ஃபோட்டோல்ல..அதுவும் இன்னிக்கு க் காலைல தான் ஃபேஸியல் பண்ணிக்கிட்டேன்னு அதுக்குத்தெரியாது..சரிசரி.மிச்சப் பாட்டையும் முடிச்சுடலாம்.. //
ஆற்றங்கரை என்ன அவசியமா
அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
தேதி குறித்து ஊரை அழைத்து
காலம் அறிந்து மாலை அணிந்து
தரவேண்டும் தந்து பெறவேண்டும்..
/ம்க்கும்.. பார்க்கலாம்..அப்பா கூட யு.எஸ்லருந்து ஒரு ஜாதகம் பொருந்தியிருக்குன்னு சொன்னாரே..சரி சரி இப்போ இதுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் கொடுத்துடலாம்.. ஐ லவ்யூடா.. வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கான் பாரேன்.. ஒடனே மீ டூ.. இன்ஃபினிட் டைம்ஸ்னு வந்துடுச்சு..//
**
.படம் புதிய பூமி பாடகர் திலகமும் இசையரசியும் பாடும் இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்குமாக்கும்..அதுவும் இசையரசி..விருந்துஎன்றாலும் வரலாம் வரலாம் என இழுக்கும் ராகம்… நைஸ்…
*
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2014, 09:29 PM
#1966
Senior Member
Senior Hubber
எஸ்.வி.சார்.. யார்னு தெரியலையே
வெண்ணிலவின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளோ
..வீசுகின்ற தென்றலதின் வேட்டகத்து உறவோ
எண்ணத்தில் பார்த்திருக்கும் இளவரசி தானோ
..எழுத்தினிலே சரித்திரத்தில் வருகின்ற தேனோ
கன்னந்தான் சிவந்ததுவோ கலர்ப்படத்தின் பிரமையோ
கண்களிலே சிரித்திருக்கும் கவிதையதும் எதுவோ
வண்ணமகள் படந்தந்தீர் வாகாக இங்கே..
..வஞ்சியவள் பெயரென்ன பட்டெனவே சொல்வீர்..
//கண்ணா வரவர உன்னோட ஜொள் தாங்க முடியலை..
ச்சும்மா ஃபன் தானே மனசாட்சி
//
-
6th September 2014, 10:48 PM
#1967
Senior Member
Diamond Hubber
ஒரு கலர்ப் படத்துக்கு இவ்வளவு ஜொள்ளா?
வெடி போட்றவருக்கே எஸ்வி மருந்து கிடிச்சுட்டாரே! என்ன கொடுமை சரவணன் சார் இது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2014, 11:07 PM
#1968
Junior Member
Seasoned Hubber
Fantastic melody from Ashiqui 1990 movie. Enjoy the song.
-
6th September 2014, 11:10 PM
#1969
Junior Member
Seasoned Hubber
Superb melody and if you listen the song in night it will be a memorable experience. What a melody.
-
7th September 2014, 05:29 AM
#1970
Junior Member
Newbie Hubber
நண்பர்களே,
வேலை நிமித்தம் மற்ற நாடுகளுக்கு சென்று வர வேண்டியுள்ளதாலும்,மாலை வேலைகளை வியாபார விருந்தாளிகளுக்கு பங்கு வைத்து விடுவதாலும்,சில நாட்கள் அடிக்கடி எழுத்தில் உங்களுடன் பங்கு பெற இயலாது.
ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பதும் ,மானசீக பங்களிப்பும் உண்டு. மன்னிக்கவும்.
வாழ்த்துக்களுடன்,
Bookmarks