-
11th September 2014, 04:49 PM
#2181
தேவ் ஆனந்த்
தேவ் ஆனந்த் நடித்து இயக்கிய முக்கியமான படம் பிரேம் பூஜாரி. இதிலும் வகிதா ரஹ்மான்தான் ஜோடி.இப்படம் 1970ல் இந்தியா-சீனா, இந்தியா- பாகிஸ்தான் யுத்தங்களைப் பின்புலமாக கொண்டது.ராணுவ வீரராக நடித்திருப்பார் தேவ் ஆனந்த்.காதலையும் தேச பக்தியையும் இணைத்த இந்த படத்தில் கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்கள் அதே எஸ்.டி. பர்மன் தாதாவின் இசையில் இடம் பெற்றன . இதிலும் தாதா ஒரு பின்னணி பாடலைப் பாடினார். பிரேம் கே பூஜாரி ரே என்ற அந்தப் பாட்டும் ஒரு தொலைதூர எதிரொலி போல நமது மனத்தின் அடியாழங்களுக்குச் சென்று ஊடுருவக் கூடியது. எல்லா இசையமைப்பாளர்களும் சொந்தக் குரலில் பாடுகிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் பாடிய பல பாடல்கள் நீங்காத இடம் பெற்றுள்ளன. அதே போல் இந்தியில் தாதாவின் குரலில் ஒலித்த பாடல்களுக்கென தனி இசை ரசிகர்கள் உண்டு.
ராஜேஷ்கன்னா நடித்த ஆராதனா படத்திலும் தாதா ஒருபாட்டு பாடினார். காஹேகோ ரோயே....என்ற இந்தப் பாட்டுத்தான் தமிழில் சிவகாமியின் செல்வனாக மாறிய போது, எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே....இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே...என்று மெல்லிசை மன்னரின் குரலில் ஒலித்தது. தாதாவின் குரலுக்கும் எம்.எஸ்.வி.யின் குரலுக்கும் அப்படியொரு பொருத்தம்னா பொருத்தம்.
லதா பாடிய ரங்கீலா ரே பாட்டும் அதற்கு வகிதா ஆடிய ஆட்டமும் திரையில் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்றாக அதனை மாற்றியுள்ளது. அதே போல நேபாளி குழந்தைகளின் கோரசுடன் கிஷோர் பாடும் ஃபூலோன் கே ரங்சே என்ற பாட்டும் ஒரு நல்ல பாடல்.சினிமா பாடல்களின் பரவசமான அனுபவத்திற்கு இது பொன்னான சான்று.
Shokhiyon Mein Ghola Jaye
Rangeela Re Tere Rang Mein
Phoolon Ke Rang Se
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th September 2014 04:49 PM
# ADS
Circuit advertisement
-
11th September 2014, 04:56 PM
#2182
வாகனங்களும் அதில் இடம் பெற்ற பாடல்களும்
மாட்டு வண்டி - பாரப்பா பழனியப்பா
குதிரை வண்டி - நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
அருமை எஸ்வி சார்
மாட்டு வண்டி - வள்ளி மயில் மான் குட்டி எங்கே போறே
ஜீப் - இரண்டு கைகள் நாம் ஆனால்
கார் - போதுமோ இந்த இடம்
லாரி - உலகம் பெரிது சாலைகள் சிறிது
ரயில் - வெட்கப்படவோ ஆஹா
சைக்கிள் - ஒன்று எங்கள் ஜாதியே
விமானம் - மழை கால மேகம் ஒன்று
கப்பல் - உன்னை ஒன்று கேட்பேன்
குதிரை வண்டி - ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
Last edited by gkrishna; 11th September 2014 at 05:03 PM.
gkrishna
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 06:50 PM
#2183
Senior Member
Veteran Hubber
குதிரை வண்டி - பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை
ஜீப் - நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
சைக்கிள் - வருக எங்கள் தெய்வங்களே (தியாகம்)
படகு - நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு (தியாகம்)
ரயில் - சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
கார் - ஆண்டவன் படைச்சான்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 07:06 PM
#2184
Junior Member
Newbie Hubber
Originally Posted by
mr_karthik
குதிரை வண்டி - பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை
ஜீப் - நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
சைக்கிள் - வருக எங்கள் தெய்வங்களே (தியாகம்)
படகு - நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு (தியாகம்)
ரயில் - சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
கார் - ஆண்டவன் படைச்சான்
இந்த லிஸ்ட் அற்புதம் கார்த்திக். அந்தந்த வாகனங்களுக்கே பெருமை சேர்க்கும் லிஸ்ட். நன்றி.
-
11th September 2014, 07:14 PM
#2185
Senior Member
Senior Hubber
அப்ஜெக்*ஷன் யுவர்ஹானர்.. ரயிலில் - சித்திரை மாத்ததை விட உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று - மிக அழகு என்பதை
குபு குபு குபு குபு நான் இஞ்சின் - ஓ இதுல ரயில் பாட்ட்ல்ன்னா வரும்..
என் நினைவுக்கு வரும் லிஸ்ட் ஆஃப் வாகனங்கள்
படகு - படகு படகு ஆசை படகு (ஓ இதுல படகு வராதோ) பள்ளியறைக்குள் வந்த புள்ளிமயிலே..படகு என்பதாய்த் தான் நினைவு..ஹப்புறம்..ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து (ஓடம் படகு ரெண்டும் ஒண்ணு தானே..
கப்பல் - ஏன் சிவந்தம்ண் பிஜிஎம் சேர்க்கப் படாது..
சைக்கிள் - வாடிக்கை மறந்ததும் ஏனோ, அக்கம்பக்கம் பார்க்காதே..
தேவ் ஆனந்த் போஸ்டிங்க்ஸ்க்கு நன்றி கிருஷ்ணா ஜி.. அவரைப் பற்றி விரிவாக எழுதவேண்டும் ..எழுதுங்களேன்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 07:15 PM
#2186
Senior Member
Senior Hubber
ஹெலிகாப்டர் - பறந்தாலும் விடமாட்டேன்..அன்று நான் உன்னிடம்கைதியானேன் இன்று நான் உன்னையே கைது செய்வேன்..
-
11th September 2014, 07:20 PM
#2187
Senior Member
Diamond Hubber
படகு - வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 08:16 PM
#2188
Junior Member
Newbie Hubber
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-3.
எம்.எஸ்.வீயை பற்றி விளக்க வேண்டுமானால் முத்துக்களோ கண்கள் பாட்டை எடுங்கள்.
இந்த பாடலில் பொதுவாக மத்யமாவதியின் சாயல் (ச ரி2 ம1 ப நி1 ச ) இருந்தாலும் அதில் பல அந்நிய ஸ்வரங்களின் கலப்பினால் புது வடிவம் பெறுகின்றது. காகலி நிஷாதம் (நி2) கலந்ததனால் பிருந்தாவன சாரங்கா போல தெரியும். ஆனால் மேலும் சரணத்தில் ஷதுர்ஷ்ட தைவதம் (த2) மற்றும் சுத்த காந்தாரம் (க1) சேர்க்கை மேலும் இனிமையை கொடுப்பதோடு ராகங்களின் இலக்கணத்தை முற்றுமாக தாண்டுகிறது. இதை MSV கந்தர்வனி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
இதெல்லாம் தெரிந்து பண்ணும் அளவு எம்.எஸ்.வீ சங்கீத பிஸ்தா எல்லாம் ஒண்ணும் கிடையாது.ஆனால் எந்த சங்கீத பிஸ்தாவும் இதை மீறி சாதிக்க முடியாது.
அடானா ராகத்தை முதலில் பயன் படுத்தியவர்.(வருகிறாள் உன்னை தேடி). ஒப்பாரிக்கு இசைவான முகாரி ராகத்தில் டூயட் போட்டவர். (கனவு கண்டேன்). பெரிய சங்கீத வித்வான்களும் தொட தயங்கும் சந்திர கௌன்ஸ் என்ற ராகத்தில் மிக மிக சிறந்த பாடலான மாலை பொழுதின் மயக்கத்திலே ,உண்மையான அதிசய ராகம் மகதியில்(S G 2M 2P D1N 1S ----S N 1D1P M 2G 2S )
அதிசய ராகம் பாட்டை தந்தவர் (பாலமுரளி ஸ்பெஷல் ராகம் படத்தில் ஜேசுதாஸ்),கர்ணன் ஒரு படத்தில் ஹம்சா நந்தினி,ஆனந்த பைரவி,கம்பீர நாட்டை,சஹானா,பிலு,சுத்த சாவேரி,ஆரபி,பேஹாக் ,சாரங்க தரங்கிணி,நீலாம்பரி,ககரபிரியா,சக்கரவாகம்,சரசாங்கி,க ேதாரம்,பகாடி,ஹமீர்கல்யாணி,ஹம்சநாதம்,ஹிந்தோளம் என்று பதினேழுக்கு மேற்பட்ட ராக அணிவகுப்பை தந்தவர்(கள் ) என்பதெல்லாம் ஒரு புறம்.
ஆனால் ராகங்களை முன்னிலை படுத்தாமல் ,ராகமே அந்த பாடல் சந்தத்தில் இயல்பாக பொருந்தும் படி செய்து மீட்டர் உடைப்பு,தாள மாற்றம்,ராக கலப்பு அனைத்தும் அவ்வளவு இயல்பாக விழுந்து கேட்போரை மயங்கி விழ செய்யும்.ஒரு பாட்டின் போக்கினை ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து எங்கோ நிறுத்துவார். (ஆபேரி அல்லது பீம்ப்ளாஸ் பூமாலையில் ஒரு சான்று), தேடினேன் வந்தது பாட்டில் சரணம் பல்லவியோடு loop back பாணியில் ஹம்மிங் ஓடு இணைவது,ஒரே ராகத்தை விதவிதமாக வளைப்பது.
தேஷ் ராகத்தில் சிந்து நதியின் மிசை, அன்றொரு நாள் , ரசிக பிரியா ராகத்தில் உருக்கும் ஒரு நாள் இரவு,துள்ள வைக்கும் இன்று வந்த இந்த மயக்கம், கல்யாணியா இது என்று விற்பன்னர்களும் காண முடியா கஜல் பாணி இந்த மன்றத்தில் ஓடி வரும்,அதே கல்யாணியில் நாட்டு புற குத்து என்னடி ராக்கம்மா என்று எத்தனை ஜாலங்கள்???
(தொடரும்)
Last edited by Gopal.s; 11th September 2014 at 08:21 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 08:18 PM
#2189
Senior Member
Senior Hubber
படகு : நிலவும் மலரும் பாடுது
மூடு பனி குளிரெடுத்து
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
வெண்மதியே கொஞ்ச நேரம் நில்லு என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 08:33 PM
#2190
Junior Member
Newbie Hubber
கார்- பறவைகள் பலவிதம்.,வா வா வா எனக்காகவா .
படகு-முல்லை மலர் மேலே.,வெள்ளி கிண்ணந்தான்.
குதிரை- பாட்டு பாடவா ,சமாதானமே .
எஞ்சின்- கேள்வி பிறந்தது அன்று.
விமானம்- ஒ மானிட ஜாதியே.
எருமை- தாழையாம் பூ முடிச்சு
ஜீப்- உள்ளம் ரெண்டும் .
மாட்டு வண்டி- வள்ளி மலை மான் குட்டி .
சைக்கிள்- வந்த நாள் முதல் .
ரிக்ஷா - இதோ எந்தன் தெய்வம்
ஸ்கூட்டர்- கள்ள பார்வை கண்ணுக்கு.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks