Page 231 of 401 FirstFirst ... 131181221229230231232233241281331 ... LastLast
Results 2,301 to 2,310 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2301
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இப்போது கூட ராஜேஷ்ஜி பதிவுகளை தாக்கியுள்ளீர்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் ஒதுங்குங்கள். எனக்குப் பிடித்திருக்கிறது.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2302
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,



    என் வெளியீட்டு முறைகள் வெளிப்படையானவை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேச தெரியாது. நான் எதிரிகளிடம் விவாதிப்பேன். ஆனால் நண்பர்களிடம் மட்டுமே உரிமையாக சண்டையிடுவேன். விஸ்வாமித்திரன் , அப்படித்தான். தவ வலிமை இழந்து இழந்து மீண்டும் பெறுவது இயல்பானால் அதை தடுக்க முடியுமா?



    புரிந்து கொண்டால் சரி. யாரையும் அவமான படுத்தும் பதிவுகளை நான் இட்டதில்லை.



    எல்லோரையும் சார் வேண்டாம், கோபால் என்றே அழையுங்கள் என்று சொன்ன ஒரு சாதரணனாக சொன்ன கோபாலை உங்களுக்கு தெரியாதா? கிருஷ்ணா உட்பட அனைவருக்கும் விளக்குங்கள்,என்னை விட சிறந்த நண்பன் அவர்களுக்கு அமைய போவதில்லை என்று.



    இயல்பு படியே ,உயர்வு நவிற்சி அணி எனக்கு கை வராத ஒன்று. வாழ்த்தும் போதும் ,உண்மையை உரைத்தே வாழ்த்துவேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #2303
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நாம் அனைவருமே மிக நல்ல ஒரு ரசிக தன்மை உடையவர்கள். அதை தேவை அற்ற விவாதங்களை செய்து சக்தியை வீணடிக்க வேண்டாமே .
    வரலாறுகள் திரிக்கபடுகின்றன. நல்ல பல சம்பவங்கள் மறக்க படுகின்றன . சாதனைகள் அமுக்கபடுகின்றன . நம் திரி மூலம் அதை வெளி கொண்டு வருவோமே . தயவு செய்து எல்லோரும் ஓர் இனம் ஓர் குலம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இணைந்து பணி ஆற்றுவோமே
    நாம் அனைவருமே கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தை சேர்ந்தவர்கள். என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த பகிர்வு

    நேற்று புதிய பறவை திரைப்படம் பார்த்தேன். நம் நடிகர் திலக திறனாய்வு பேரவை நிகழ்ச்சியில். மிக அருமையாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் முன்னால் எந்தவித டெக்னாலஜி development இல்லாத நடிகர்களின் குரல்,வசனம்,முக பாவனை, மேற்கத்திய படங்களுக்கு சவால் விடும் இசை, எல்லாம் கலந்து ஒரு இன்ப மாலை வேளை

    மிக சிறந்த காட்சி அமைப்புகள் அதுவும் படத்தின் தயாரிப்பாளர் அவரே கதையின் நாயகன் ஆனால் இறுதியில் அவரே எதிர் நாயகன் . அவரை காதலிக்கும் பெண் உண்மையை கண்டு பிடிக்க வந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், அவரது தந்தை என்று வேடமிட்டு வந்த காவல் துரையின் மேல் அதிகாரி, முன்னாள் மனைவியின் சித்தப்பா என்ற வேடமிட்டு வரும் இன்னொரு அதிகாரி,நண்பனாய் இருக்கும் உள்ளூர் போலீஸ் அதிகாரி, அவரது முன்னாள் மனைவியின் அண்ணன் இப்போது எதிரியாக மாறுவது. யோசித்து பாருங்கள்
    என்ன ஒரு துணிச்சல் இருந்தால் தன நடிப்பு மீது இவ்வளவு நம்பிக்கை இருந்தால் இந்த வேடத்தை ஏற்று இருக்க வேண்டும். வேறு யாரால் இப்படி பட்ட வேடங்களை ஏற்று நடிக்க முடியும் .
    Last edited by gkrishna; 15th September 2014 at 10:18 AM.
    gkrishna

  5. Likes Russellmai liked this post
  6. #2304
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    6 தினங்களாக உங்கள் இன்றைய ஸ்பெஷல் பதிவிற்காக காத்து கொண்டு இருக்கிறோம்
    gkrishna

  7. #2305
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்

    என்னது வாசு வந்துட்டாரா.. வாங்கோ வாசு சார் வாங்கோ..

    காலைல என்ன பாட்டுப் பாடலாம்..

    சொர்க்கத்தின் திறப்பு விழா
    இங்கு சொர்க்கத்தின் திறப்பு விழா
    புது சோலைக்கு வசந்த விழா
    பக்கத்தில் பருவ நிலா
    இளமை தரும் இனிய பலா
    பார்க்கட்டும் இன்ப உலா

    ஓ.. ஸாரி.. வழக்கம்போல வேற பாட்ட கட் பேஸ்ட் பண்ணிட்டேன்..பாட நினச்சது..

    ஒன்றே குலமென்று பாடுவோம்
    ஒருவனே தேவனென்று போற்றுவோம்
    அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்


    கடவுளிலே கருணை தனை காணலாம்
    அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்
    நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
    அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

    **

    சரியா அப்புறம் வரட்டா.. இப்ப என்ன இன்னொரு பாட்டா.. சரி பாடிட்டுப் போறேன்

    போய் வா .......நதியலையே ......
    இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
    வா வா நதியலையே ..
    ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

    *
    கண்டிப்பா அப்புறம் வருவேன் உஷார்

  8. Likes Russellmai, gkrishna liked this post
  9. #2306
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அதே,அதே வாசு. உன்னுடைய காலை பதிவுகள் இல்லாமல் எங்களுக்கு போர் அடித்தது. (தினமும் இருந்தாலும் அதேதான். வாசுவினால் போர் தான்).உன்னால் அதிர்ச்சி அடைய காத்திருக்கிறோம். இன்ப அதிர்ச்சி நிறைய, துன்ப அதிர்ச்சி அவ்வப்போது, அதுசரி,என்ன செய்து கார்த்திக்கை மிரட்டினாய்?வரவே காணோம்?



    போடு .உன்னுடைய sincere presentation ,யாராலும் நெருங்க முடியாத ஒன்று.உன்னுடைய ரசிக நண்பன் நான்.



    நன்றி கிருஷ்ணா, நடந்ததை மறப்போம். நான் எதற்காக கோப பட்டேன் என்று நண்பர்கள் விளக்கியிருப்பார்களே?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #2307
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    2009 ஆம் ஆண்டு ஒரு நண்பர் புதிய பறவை திரைபடத்தை முதன்முறையாக பார்கிறார் .அவரது பார்வையில்

    ஒரே வரிதான் கதை,அதனை கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் வியப்பு. சிவாஜி மலேசியாவில் தன்னுடைய இதயம் பலஹீனமான குடிகார மனைவியை (சவுகார் ஜானகி) அறைந்ததில் இறந்து விடுகிறார். அதனை மறந்து இந்தியாவில் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய நினைக்கையில் மீண்டும் சவுகார் ஜானகி அத்தான் என்றபடி வீட்டுக்குள் நுழைகிறார்.இந்த தருணத்தில் சிவாஜி தான் செய்த கொலையை மறைத்து, வந்திருப்பவர் தன் மனைவி சவுகார் ஜானகி அல்ல என்பதை நிரூபிக்கவேண்டும்.இதனை அவரின் முகத்தில் கொண்டு வருவதுதான் இந்தபடம்.படத்தின் இறுதியில்தான் தான் மனைவியை கொலை செய்ததை சொல்வார். அதுவரை நடப்பதுதான் கதை.

    பல இடங்களில் சிவாஜி தன்னுடைய முத்திரையை பதித்து இருப்பார். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு.கப்பலில் சந்தித்த வி.கே.ராமசாமி அவரது மகள் சரோஜாதேவிக்கும் ஊட்டியில் தன் இல்லத்தில் இடம் கொடுத்திருப்பார்.அப்போது மிரட்டல் தொணியில் வரும் எம்.ஆர்.ராதாவின் போனை கேட்டு முடித்தவுடன் முகத்தில் குழப்பமும்/கோபத்தையும் ஒருங்கே கொண்டு வந்த அந்த நடிப்பு இந்த மனிதருக்கு மட்டுமே வரும் போல.

    சரோஜாதேவியுடன் காதல் வயப்பட்டு நிச்சயம் செய்யும் ஒரு நன்னாளில், மனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வருகிறார்,அவருடைய சித்தப்பாவாக எம்.ஆர்.ராதாவும் நுழைகிறார்.நிச்சயம் தடைபடுகிறது.இந்த சௌகார் ஜானகி தன் மனைவி அல்ல என்று நிரூபிக்கிறேன் அதுவரை வீட்டில் இருக்கசொல்கிறார்.அவர்களும் இருக்கிறார்கள்.

    மனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வீட்டுக்கு வந்தவுடன். அவர் தன் மனைவி இல்லை என்று நிரூபிக்க அவர் படும் சிரமங்களை சில இடங்களில் ஆணவத்தோடும், பல இடங்களில் எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்துடனும் தந்திருப்பார். சில இடங்களில் ஒரு சிலரால் சொல்லப்படும் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் உண்டு. அது அந்த படம் எடுக்கப்பட்ட கால கட்டத்தை யோசித்தீர்கள் ஆனால் நிச்சயம் அது மிகை நடிப்பு என்று கொள்ள முடியாது .சரோஜாதேவியும் அருமையாக நடித்திருப்பார்.நாகேஷ்,வி.கே.ராமசாமியின் பங்கு அவ்வளவு சுகம் என்று சொல்லமுடியாது ஒருவேளை 2009 ல் ரசிக்கமுடியவில்லையாகவும் இருக்கலாம்.எங்கே நிம்மதி பாட்டையும் நன்றாகவே படமாக்கியிருப்பார்கள்.உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்லவேண்டும் என்னை பாடச்சொன்னால் என்ன பாடத்தோன்றும் பாடலும் அருமை.

    வந்திருப்பவர் தன் மனைவி அல்ல என்பதை நிரூபிக்க தன் போலிஸ் நண்பன், சிங்கப்பூர் நணபரை தொடர்பு கொள்ள முயற்சி,மனைவியின் அண்ணன் மூலம் இறுதி முயற்சி செய்கிறார்.கடைசியில் மனைவியின் அண்ணனும் தங்கச்சி,சித்தப்பா என்று சொன்னவுடன். எல்லா முயற்சியும் தோல்வியுற்ற நிலையில்,சிவாஜி தான் தான் அந்தக்கொலையை செய்தது என்பதை ஒரு நீண்ட விளக்கம் /பிளாஷ்பேக் மூலம் தருவார்.தந்து முடித்தவுடன் இப்போது தெரிந்ததா இவள் என் மனைவி அல்ல என்று கூறி சரோஜாதேவியை இப்போ என்னை நம்புகிறாயா எனக்கேட்கும் போது, சரோஜாதேவி இன்ஸ்பெக்டர் இவரை கைது செய்யுங்கள் என்று கூறூவார்.

    எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி ஆகியோர் உண்மையைக்கண்டுபிடித்து சிவாஜியை கைது செய்ய வந்தவர் என்ற உண்மையை சொல்வார்.இதனைப்போல சில விஜயசாந்தி நடித்த டப்பிங் படம் மூலம் பார்த்துவிட்டதால் ஓரளவு யூகிக்கமுடிந்தது.ஆனாலும் அந்தக்காலத்தில் எடுத்த ஒரு திரில்லரை இப்போதும் ரசிக்கமுடிகிறது.

    thanks to KJMK
    Last edited by gkrishna; 15th September 2014 at 10:43 AM.
    gkrishna

  11. Thanks Russellmai thanked for this post
  12. #2308
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கண்டிப்பா அப்புறம் வருவேன் உஷார்
    chinnakkaNNan: If you return in the evening here are a few veNNila songs for you:

    -veNNilaavum vaanum pole
    -veNNilaa jothiyai veesudhe
    -oho veNNilaave
    -vaaraayo veNNilaave
    -vandhu vandhu konjuvadhen veNNilaave
    -vaana meedhil neendi Odum veNNilaave
    -veNNilavin oLithanil veesum thendral
    -aagaaya veedhiyil azhagaana veNNilaa

    Now, you can write about veNNilaa songs! This is an assignment from the professor! Don't worry about grades..
    I don't have teaching assistants any more tto grade assignments! I am retired !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  13. Likes gkrishna liked this post
  14. #2309
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஜனவரி 29 2014 அன்று தினமலர் பத்திரிகையில் வந்த செய்தியும் அதற்கு வந்த பின்னூட்டமும்

    1964ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகின்றன. அவற்றில் பல காவியங்கள் அடங்கும். யாரும் விழா எடுத்து பொன் விழாவைக் கொண்டாடப்போவதில்லை. நாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக் கொள்வோம்.

    எம்.ஜி.ஆர்

    1964ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஆண்டாகவே இருந்தது. இந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த 7 படங்கள் வெளிவந்தது. தெய்வத்தாய், என்கடமை, படகோட்டி, பணக்கார குடும்பம், தாயின் மடியில், தொழிலாளி, வேட்டைக்காரன். இதில் 5 படங்களில் சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வலம் வந்த ஆண்டாக அமைந்தது. ஒரு படத்தில் சாவித்திரியும் ஒரு படத்தில் கே.ஆர்.விஜயாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இதில் தாயின் மடியில் தவிர மற்ற படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.

    சிவாஜி

    சிவாஜி, கை கொடுத்த தெய்வம், நவராத்திரி, பச்சை விளக்கு, புதிய பறவை, ஆண்டவன் கட்டளை ஆகிய 5 படங்களில் நடித்திருந்தார். சாவித்ரி 3 படங்களிலும், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துவந்த சரோஜாதேவி புதிய பறவையிலும், தேவிகா ஒரு படத்திலும் ஜோடியாக நடித்தனர். புதிய பறவை சஸ்பென்ஸ் த்ரில்லர் வரிசையிலும், நவராத்திரி 9 வேடங்களில் நடித்த முதல் படம் என்ற வகையிலும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாகின.

    கட்டுரையாளர் முரடன் முத்து மற்றும் கர்ணன் இரண்டையும் மறந்து விட்டார்

    ஜெமினி-எஸ்.எஸ்.ஆர்

    இவர்கள் இருவரையும் தவிர ஜெமினி கணேசன் வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, பாசமும் நேசமும், ஆயிரம் ரூபாய் என 4 படங்களிலும், எஸ்.எஸ்.ராஜேந்திரன் அல்லி, பூம்புகார், உல்லாச பயணம், வழி பிறந்தது என 4 படங்களில் நடித்தார். பூம்புகர் காலத்தை வென்ற காவியமாக இப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    இதுதவிர டி.எம்.சவுந்தர்ராஜன் நடித்த அருணகிரி நாதர், வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய திகில் படமான பொம்மை, ஸ்ரீதரின் காதல் காவியமான காதலிக்க நேரமில்லை, நாகேஷ் நடித்த வெள்ளிவிழா படமான சர்வர் சுந்தரம், ஆகிய முக்கியமான படங்களும் இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது.

    விஸ்வநாதன்-ராமமூர்த்தி

    1964ம் ஆண்டும் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரின் இசை ராஜாங்கம்தான் இருந்தது. வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, சர்வர் சுந்தரம், புதிய பறவை, பணக்கார குடும்பம், பாசமும் நேசமும், ஆண்டவன் கட்டளை, தெய்வத்தாய், கை கொடுத்த தெய்வம், காதலிக்க நேரமில்லை, கருப்பு பணம், கலைகோவில், பச்சை விளக்கு, படகோட்டி, படங்களுக்கு இசை அமைத்திருந்தனர். கே.வி.மகாதேவன் 9 படங்களுக்கு இசை அமைத்திருந்தார்.

    பொன்விழாவை கொண்டாடும் அனைத்து படங்களுக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். - See more at:

    http://cinema.dinamalar.com/cinema-n....sDgIID8m.dpuf

    வாசகர் கருத்து (8)
    jacob Martin - chennai,இந்தியா 21 பிப்,2014 - 21:46 Report Abuse
    jacob Martin MGR இன் இரண்டு படங்கள் மட்டுமே வெற்றிப்படங்கள். மீதி 5 தோல்வி தழுவிய படங்கள். சிவாஜி அவர்களின் 7 படங்களில் முரடன் முத்து தவிர அனைத்துமே மிக பெரிய வெற்றி படங்கள். சிவாஜி பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்யாதீர்கள்
    Rate this:
    2 members
    0 members
    2 members
    Share this comment
    Reply
    V.MURUGAN - PAPPANAPPATTU,இந்தியா 05 பிப்,2014 - 09:30 Report Abuse
    V.MURUGAN மலரும் நினைவுகள்...மறக்கமுடியா நினைவுகள்...அசைபோட உதவிய தினமலருக்கு நன்றி..
    Rate this:
    1 members
    1 members
    78 members
    Share this comment
    Reply
    Nagaraj - Doha,கத்தார் 30 ஜன,2014 - 14:10 Report Abuse
    Nagaraj நெஞ்சை விட்டு என்றும் நீங்காதவை
    Rate this:
    0 members
    0 members
    7 members
    Share this comment
    Reply
    K Chandrasekar - Chenai,இந்தியா 30 ஜன,2014 - 10:43 Report Abuse
    K Chandrasekar நினைத்து பார்க்கவே பெருமையாக உள்ளது.
    Rate this:
    0 members
    0 members
    5 members
    Share this comment
    Reply
    Swaminathan - atlanta,யூ.எஸ்.ஏ 30 ஜன,2014 - 09:48 Report Abuse
    Swaminathan அந்தநாள் மீண்டும் வருமோ.
    Rate this:
    0 members
    0 members
    6 members
    Share this comment
    Reply
    Sundar - Bangalore,இந்தியா 30 ஜன,2014 - 08:36 Report Abuse
    Sundar காதலிக்க நேரமில்லை படத்திற்கு இணையான படம் இதுவரைக்கும் இல்லை.
    Rate this:
    0 members
    0 members
    15 members
    Share this comment
    Reply
    அறிவாலயம் c / o போயஸ் - Chennai,இந்தியா 30 ஜன,2014 - 07:02 Report Abuse
    அறிவாலயம் c / o போயஸ் காதலிக்க நேரமில்லை, சர்வர் சுந்தரம் இரண்டைத் தவிர எல்லாம் குப்பை ஒரே ஓவர் ஆக்டிங் செயற்கையான வசனங்கள் எப்படித்தான் ரசித்தனரோ?
    Rate this:
    13 members
    1 members
    7 members
    Share this comment
    Reply
    naresh - Chennai ( Posted via: Dinamalar Android App ) 29 ஜன,2014 - 22:02 Report Abuse
    naresh உள்ளம் கணிந்த வாழ்த்துக்கள்
    Rate this:
    0 members
    0 members
    8
    - See more at: http://cinema.dinamalar.com/cinema-n....sDgIID8m.dpuf
    gkrishna

  15. #2310
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    புதிய பறவை விகடன் பொக்கிஷம்
    புதிய பறவை சேகர்-சந்தர்
    சேகர்: மலேயாவிலிருந்து புறப் பட்டு, கப்பல் வழியாக இந்தியாவுக்கு வந்து, ஊட்டிக்குச் சென்று உல்லாசமாகப் பறக்கிறதல்லவா பறவை!
    சந்தர்: ஆமாம்! கதைகூட ஆங்கிலத்திலிருந்து புறப்பட்டு, வங்காளத்துக்கு வந்து, அங்கிருந்து தமிழுக்கு வந்திருக்கிறது.
    சேகர்: சஸ்பென்ஸை கடைசி வரை நன்றாகக் காப்பாற்றி இருக்கிறார்கள். தாதா மிராசி திறமையாக டைரக்ட் செய்திருக்கிறார்.
    சந்தர்: யு ஆர் ரைட்! நடிப்பு, டைரக்ஷன், போட்டோகிராபி, கலர் எல்லாமே பிரமாதம்தான்.
    சேகர்: சிவாஜியின் முத்திரை பல இடங்களில் சிறப்பாக விழுந் திருக்கிறது. சௌகார்ஜானகி இயற்கையாக நடித்திருக்கிறார். சரோஜாதேவி அழகாக வந்து போகிறார்.
    சந்தர்: நாகேஷ் காமெடி?
    சேகர்: கொஞ்சம் மிகையாகஇருந்தாலும், நகைச்சுவை குறையவில்லை.
    சந்தர்: இரவுக் காட்சிகளெல்லாம் ரொம்பப் பிரமாதமா எடுத்திருக்காங்க, இல்லையா சேகர்?
    சேகர்: ஆமாம்! வெறும் நிழலைக் காட்டி இரவு என்று சொல்லாமல், இங்கிலீஷ் படம் மாதிரி எடுத்திருக்காங்க. 'செட்' கண்ணைக் கவர்கிறது.. . .
    gkrishna

  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •