-
15th September 2014, 04:44 PM
#11
Junior Member
Diamond Hubber
ஒரு வேளை விட்டுப்போச்சோ என்ற டவுட்டில் பார்த்திட்டிருக்கேன் புரட்சித் தலைவரின் கன்னித்தாய்.
மாட்டு வண்டியில் வரும் எம்ஜியாரிடம் ஒரு முதியவர் பிச்சை கேட்கிறார்.
அவரிடம் எம்ஜியார்: 'அய்யா உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும்?'
'ஒரு எட்டணா, பத்தணா தம்பி!' (படம் 1965!)
பையில் துழாவி எம்ஜியார் ஒரு அஞ்சு ரூபாயைக் கொடுத்து,
'இத ஒரு வாரத்துக்கு வெச்சிக்கிட்டு அதுக்குள்ள ஒரு வேலைய தேடிக்குங்க. பிச்சை எடுக்குறது தப்பு!'
ஏந்திய கை உயர எழும்பி, 'நீங்க நல்லா இருக்கணும் சாமி!' என்று கும்பிடுகிறது.
புரட்சித்தலைவர் தன் வழக்கமான பாணியில் வலது கையை ஆட்டிச் சின்முத்திரை காட்டியவாறு சொல்கிறார்: 'மனுஷனை சாமி ஆக்காதீங்க அய்யா. அதுக்கு எந்த மனுஷனும் தகுதியில்லை!'
யார் சொன்னது எம்ஜியார் நாத்திகர் என்று!
courtesy net
-
15th September 2014 04:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks