Page 239 of 401 FirstFirst ... 139189229237238239240241249289339 ... LastLast
Results 2,381 to 2,390 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2381
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    dear ck sir /vasu sir

    'சித்திரை'யில் நிலா சோறு ' சமீபத்தில் வெளி வந்த படம் . வெளி வந்த சுவடு தெரியாமல் காணமல் போன படம் .R சுந்தர்ராஜன் இயக்கம்
    ராஜாவின் இனிய பாடல்கள் இருந்தும்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2382
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தொடர்கதையில் வெகு சுவாரஸ்யமாக ப்படித்த நாவல்..கண்ண தாசனின் அதைவிட ரகசியம்.. சந்தர்ப்ப சூழ்நிலையில் கதையின் நாயகி ஒரு டிரெஸ்லெஸ் ஓவியத்திற்குச் சம்மதித்துவிட..வெகு நாட்களுக்குப் பிறகு அதே ஓவியம் அவளது மணப்பரிசாக வருவது போல் இருக்கும் கதை கதா நாயகன் பெயர் ரகு நந்தன்..ஒரு தோழி உண்டு..ஜமீந்தார் உண்டு..கதை தான் நினைவுக்கு வர மறுக்கிறது..க்ளைமாக்ஸில் அந்த ஓவியத்திற்கு ஆடை வரைந்திருப்பார் கதா நாயகன்.. என நினைக்கிறேன்

    படம் பார்க்கவில்லை..ஃபடாபட் ஜெயலட்சுமி இன்னொரு நாயகி யார் எனத் தெரியவில்லை..

    செங்கரும்பு தங்கக் கட்டி ஃபேமஸ்பாட்டு..ஆனால் வாணி ஜெயராம் பிசுசீலா பாட்டு -முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை நன்றாக இருக்கும்..

    கிருஷ்ணா ஜி.. வாணி ஜெயராம் போஸ்ட்க்கு நன்றி.. கேள்வியின் நாயகனே பாட்டுக்கு கவிஞரிடம் சிச்சுவேஷன் சொன்ன போது கவிஞர் எழுதிக் கொடுத்தது ப்தினைந்துக்கும் மேற்பட்ட சரணங்களாம்..பாலச்சந்தரும் எம்.எஸ்வியும் திணறிப் போய் பின்னர் அவற்றிலிருந்து செலக்ட் செய்தார்களாம்..

    ஒருகண்ணும் மறுகண்ணும் பார்த்துக் கொண்டால்
    அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன
    இருகண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்
    அவை இரண்டுக்கும் காட்சியிலே பேதம் என்ன

    பேதம் மறைந்ததென்று கூறு பெண்ணே நமது
    பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே

    கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன
    உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன
    உடல் எப்படி (அம்மாவின் ஆதங்கம்)
    முன்பு இருந்தாற்படி ( பெண்ணின் சமயோசித பதில்)
    மனம் எப்படி (இப்ப என்னடீ பண்ணப் போற)
    நீ விரும்பும் படி...

    இந்தப் பாடலை எத்தனை முறை ரசித்திருப்பேன் கேட்டிருப்பேன் பார்த்திருப்பேன்..அதுவும் கொட்டைப்பாக்கு கொட்டைப்பாக்காய் நான்கு கண்கள்+ இரண்டு கொழுக் மொழுக் கன்னம் அருகருகில் உணர்ச்சிகள் பொங்க (ஸ்ரீவித்யா+ஜெயசுதா)

    இரண்டு பேருக்கும் வாணி மட்டும் பாடியது என்பது இன்னொரு ஆச்சர்யம்..

  4. #2383
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //'சித்திரை'யில் நிலா சோறு ' சமீபத்தில் வெளி வந்த படம் . வெளி வந்த சுவடு தெரியாமல் காணமல் போன படம் .r சுந்தர்ராஜன் இயக்கம்
    ராஜாவின் இனிய பாடல்கள் இருந்தும்// ஆமாம் குரு.. அந்தப் பாடல்கள் கூட நன்றாக இருக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்..கேட்டதில்லை..

    ஆர் சுந்தர்ராஜன் என்றால் பயணங்கள் முடிவதில்லை முண்டியடித்து முன்னால் வரும்..அதில் எனக்கு மிகப் பிடித்த பாடல்
    சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
    கண்ணாளனைப்பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து..

    கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
    அலை வந்து அடித்ததனால் கன்னி மனம் தான் தவிக்க
    கடலுக்குக் கூட ஈரமில்லையோ...

    பூர்ணிமா ஜெயராம் அழகு.. அப்படியே ஸ்ரீ தேவியின் நடன அடிகளை இமிடேட் செய்திருப்பார்..

  5. #2384
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    படம் பார்க்கவில்லை..ஃபடாபட் ஜெயலட்சுமி இன்னொரு நாயகி யார் எனத் தெரியவில்லை..

    செங்கரும்பு தங்கக் கட்டி ஃபேமஸ்பாட்டு..ஆனால் வாணி ஜெயராம் பிசுசீலா பாட்டு -முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை நன்றாக இருக்கும்..
    அது சுமா என்ற ஒரு நடிகை ceekay sir

    கொடுத்தது ப்தினைந்துக்கும் மேற்பட்ட சரணங்களாம்..பாலச்சந்தரும் எம்.எஸ்வியும் திணறிப் போய் பின்னர் அவற்றிலிருந்து செலக்ட் செய்தார்களாம்..
    இந்தப் பாடலை எத்தனை முறை ரசித்திருப்பேன் கேட்டிருப்பேன் பார்த்திருப்பேன்..அதுவும் கொட்டைப்பாக்கு கொட்டைப்பாக்காய் நான்கு கண்கள்+ இரண்டு கொழுக் மொழுக் கன்னம் அருகருகில் உணர்ச்சிகள் பொங்க (ஸ்ரீவித்யா+ஜெயசுதா)

    இரண்டு பேருக்கும் வாணி மட்டும் பாடியது என்பது இன்னொரு ஆச்சர்யம்..


    கொட்டை பாக்கு கிடைத்து விட்டது வெற்றிலை எங்கே சி கே சார்

    இன்னொருவர் சசிரேகா என்று நினைவு சி கே சார்
    ஆனால் நீங்கள் சொன்ன கொட்டை பாக்கு நல்ல உவமான உவமேயம்

    அந்த பாடலின் ரசித்த சில வரிகள்

    பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்
    அந்த பால் அருந்தும் போதா காளை வரும்

    பழனி மலையில் உள்ள வேல் முருக
    சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
    gkrishna

  6. #2385
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாணியின் பதிவிற்கு விருப்பமும் ஆதரவும் தெரிவித்ததற்கு நன்றி sss சார்

    gopu sir

    உங்களுக்கு எப்பவும் உண்டு
    gkrishna

  7. #2386
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //கொட்டை பாக்கு கிடைத்து விட்டது வெற்றிலை எங்கே சி கே சார்// நன்றி க்ருஷ்ணா சார்.. நானும் இரண்டு குரல்கள் என்று தான் நினைத்தேன் கூகுளில் தேடினால் மோஸ்ட் இடங்களில் வாணிஜெயராம் என்று மட்டும் போட்டிருக்கிறார்கள் இந்தப் பாடலுக்கு..

    தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் மங்கை
    தரும தரிசனத்தைத் தேடுகின்றாள்.. தேடுகின்றாள்

    அலர்மேலு அவனிடத்தைக் காண்பாளோ... உருக்க்கமான குரல்.. அண்ட் டயர்டான அலட்சிய ரஜினி..

  8. #2387
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பூர்ணிமா ஜெயராம் அழகு.. அப்படியே ஸ்ரீ தேவியின் நடன அடிகளை இமிடேட் செய்திருப்பார்..

    சித்திரையில் நிலாச்சோறு படத்தின் பாடல்களை நிச்சயம் கேட்டு பாருங்கள் சி கே சார்
    பிடிக்கும் உங்களுக்கு

    ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த 'நன்றி சொல்ல வேணும்' -
    ஆபேரி ராகத்தில் அமைந்த 'காலையிலே மாலை வந்தது'
    சிந்து பைரவி ராகத்தில் அமைந்த 'கல்லாலே செய்து வைச்ச '

    மூன்று பாடல்கள் இனிமை. சமீப காலங்களில் அதாவது 2010 க்கு பிறகு வந்த ராஜாவின் இசையில் நல்லதொரு பாடல்கள். என்ன படம் சிறு முதலீட்டு படம் என்பதால் வெளியில் தெரியாமல் போயிற்று

    பூர்ணிமா ஜெயராம் அழகை குறிப்பிட்டு இருந்தீர்கள் .

    இந்த விடியோவில் உள்ள பாடலை கேட்டு பாருங்கள்
    இளமையான சிரஞ்சீவி மற்றும் அழகான பூர்ணிமா

    gkrishna

  9. #2388
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (73)

    'இன்றைய ஸ்பெஷலி'ல் ஓர் அற்புதமான நடிகர் திலகத்தின் டூயட் பாடல்



    படம்: லாரி டிரைவர் ராஜாக்கண்ணு

    கதை: (டிரைவர் ராமுடு) தாரதாமா பிலிம் யூனிட்

    வசனம்: ஏ.எல்.நாராயணன்

    பாடல்கள்: கண்ணதாசன், வாலி

    ஒளிப்பதிவு டைரெக்டர்: டி.எஸ்.விநாயகம்

    இசை: மெல்லிசை மன்னர்

    தயாரிப்பு: 'ராஜா மகாலட்சுமி ஆர்ட்ஸ்' புஷ்பா ராஜன்.

    இயக்கம்: ஏ.சி.திருலோகசந்தர்.


    இதுவும் ஒரு வாகனப் பாடலே. ஆனால் லொக்கேஷன்கள் பிரமாதம்

    கூட்ஸ் வண்டி ஒன்று இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதியினூடே பயணிக்க, மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட சரக்குப் பெட்டி ஒன்றில் நடிகர் திலகமும், ஸ்ரீபிரியாவும் பங்கு கொள்ளும் ரசமான காதல் காட்சி. மலைப் பகுதி வளைவுகளிலும், பாலங்களிலும், குகை வழியேயும் மரங்கள் பச்சைப் பசேலென்று சூழ்ந்திருக்க, கூட்ஸ் ரயில் வண்டி வேகமாக விரைந்து செல்ல, அழகான பிளாக் ஸ்ட்ரைப்டு கோடுகள் உள்ள ஒயிட் கோட், கூலிங் கிளாஸ் அணிந்து படு ஸ்டைலாக நடிகர் திலகம்.... அவருக்கு தோதாக வெரி சிம்பிளான புடவை அணிந்து, அதிக ஆடம்பர அலங்காரங்கள் இல்லாமல் ஸ்ரீப்ரியா. இடுப்பில் மடித்து
    கட்டப்பட்டு செருக்கப்பட்ட சேலை பிளஸ் மல்லிகைப்பூ. அவ்வளவே.




    நடிகர் திலகம் கூட்ஸ் வண்டியில் நிற்கும் அழகே தனி. நின்ற வாக்கில் அவர் ஸ்ரீபிரியாவின் கைகளைப் பிடித்தவாறு முகபாவங்களில் பாலாவுக்கு ஏற்ப அசத்தியபடி அனாயாசமான ஸ்டைல்களில் கலக்குவார். (இதற்கே உடல் பெருத்திருந்த நேரம். ஆனால் மனிதர் என்ன ஒரு ஸ்டைல்! முகமோ கொள்ளை அழகு!) பல்வேறு இடங்களில் கூட்ஸ் வண்டி நுழைந்து வரும்போது கம்பிகளை பிடித்தும், பிடிக்காமலும் நடிகர் திலகம் நடித்திருப்பதைக் காணலாம். ஒரு இடத்தில் இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்தவாறு பிரியாவை லவ்ஸ் விடுவது தனி அழகு.

    பாடல் முழுவதும் கூட்ஸ் வண்டியிலேயே படமாக்கப் பட்டிருக்கும். பேக் புரஜக்ஷன் காட்சிகளே இருக்காது. லாங் ஷாட்டில் பாலத்தில் வளைந்து திரும்பும் கூட்ஸ் வண்டியை காண ரம்மியமாக இருக்கும்.
    காமெராக் கோணங்கள் பின்னியெடுக்கும். டி.எஸ்.விநாயகம் விஸ்வரூபம் எடுத்திருப்பார் இப்பாடல் காட்சியில். காட்சியமைப்பும், பின்னணிகளும் பிரம்மாண்டத்தைக் கொடுப்பது நிஜம். பாடலை இளமை பொங்க நடிகர் திலகம் ரசிகர்களை மனதில் எண்ணி ஜோராக இயக்கியிருப்பார் ஏ.சி. திருலோக்சந்தர்.


    பின்னாளில் நடிகர் திலகத்திற்கு கிடைத்த மிகச் சிறந்த சில டூயட் பாடல்களில் இந்தப் பாடல் மிக முக்கியமானது.



    'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான படம். இது ஒரு லோ கிளாஸ் படம்தான். ஆனால் வசூலில் ஒரு போடு போட்ட படம். பலர் இந்தப் பாடலை மறந்திருக்கக் கூடும். இப்போது நினைவு படுத்திக் கொள்ளலாம். படம் லோ கிளாஸ் என்றாலும் இப்பாடல் ஒரு ஹை -கிளாஸ்.

    பாடல் இனிமையோ இனிமை. ஆர்ப்பாட்டமாக பாலா நடிகர் திலகத்திற்கு ஏற்றவாறு பாட, ஜானகி அமைதியாக ஈடு செய்வார்.

    'மெல்லிசை மன்னரி'ன் அற்புதமான பின்னாளைய டூயட் இது. கூட்ஸ் வண்டியின் சப்தங்கள், வண்டியின் விசில் சப்தம், ஹாரன் சவுண்ட் என்று ஜிகு ஜிகு உற்சாக இசை. மனிதர் பின்னுவார்.

    அனுபவித்துப் பாருங்கள். நடிகர் திலகம், ஸ்ரீபிரியா இருவருடனும் நாம் கூட்ஸ் வண்டியில் ஊட்டி, கொடைக்கானல் போய்விட்டு வந்தது போல ஒரு சுகமான அனுபவம் கிடைக்கும் நிச்சயமாக.


    இனி பாடலின் முழு வரிகள்

    ஆ ஹா ஹாஹா ஹா
    ஆ ஹா ஹாஹா ஹா
    ஆ ஹா ஹாஹா ஹா

    வெட்கப் படவோ
    செல்லக் கிளியென வட்டமிடவோ
    மெல்லத் தொடுகையில் பூவாகி பிஞ்சாகிக்
    காயாகிக் கனியாகி வண்ணம் பெறவோ

    ஹா ஹாஹா ஹா
    ஹே ஹே ஹே ஹே

    பக்கம் வரவோ
    பத்து விரல்களில் பந்தலிடவோ
    வஞ்சிக் கொடி இது மேலாட மேலாட
    நூலாடை போலாட எண்ணமில்லையோ

    ஆ ஹா ஹாஹா ஹா
    ஹே லா லா ல லா


    (கூட்ஸ் குகைக்குள் நுழையும் போது 'திடுதிடுதிடுமென' ஒரு கலக்கல் ம்யூசிக்)

    நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
    நீ பொன்னோவியம் என்று மாற
    நா....ன் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
    நீ பொன்னோவியம் என்று மாற

    அந்த ரசனைகளை இந்த ரசிகையொரு
    தேர் தேர் தேர் என்று ஆட

    இன்பக் கவிதைகளின் சந்தம் முழுவதையும்
    பார் பார் பார் என்று பாட

    வெட்கப் படவோ...ஹோ ஹோ (பாலா பின்னல்)
    செல்லக் கிளியென வட்டமிடவோ (ஹா ஹா)
    மெல்லத் தொடுகையில் பூவாகி பிஞ்சாகிக்
    காயாகிக் கனியாகி வண்ணம் பெறவோ


    (என்ன உற்சாகமான இடையிசை!)

    நான் புல்லாங்குழல் என்று ஆக
    நீ கண்ணன் விரல் என்று சேர
    நான் புல்லாங்குழல் என்று ஆக
    நீ கண்ணன் விரல் என்று சேர

    மின்னல் கொடி மலர்கள்
    கன்னங் கருவிழிகள்
    மான் மான் மான் என்று துள்ள


    (நடிகர் திலக மான் அபிநயக் கலக்கல்)

    தன்னந்தனிமை இது தந்த இனிமை இது
    யார் யார் யார் தடை சொல்ல

    பக்கம் வரவோ
    பத்து விரல்களில் பந்தலிடவோ
    வஞ்சிக் கொடி இது மேலாட மேலாட
    நூலாடை போலாட எண்ணமில்லையோ

    ஆ ஹா ஹா ஹா ஹா
    லா........
    ஹே ஹே ஹே ஹே


    Last edited by vasudevan31355; 16th September 2014 at 02:47 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks Russellmai thanked for this post
    Likes kalnayak, chinnakkannan liked this post
  11. #2389
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    நானும் இரண்டு குரல்கள் என்று தான் நினைத்தேன் கூகுளில் தேடினால் மோஸ்ட் இடங்களில் வாணிஜெயராம் என்று மட்டும் போட்டிருக்கிறார்கள் இந்தப் பாடலுக்கு..

    தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் மங்கை
    தரும தரிசனத்தைத் தேடுகின்றாள்.. தேடுகின்றாள்

    அலர்மேலு அவனிடத்தைக் காண்பாளோ... உருக்க்கமான குரல்.. அண்ட் டயர்டான அலட்சிய ரஜினி..
    பல தகவல்கள் வலையில் தவறாக தான் உள்ளன
    புராண நடப்பு சம்பவங்களை பாடலாக புனைவதில் கவியரசருக்கு நிகர் அவரே . இன்றும் திருச்சானூர் திருப்பதி பிரமோற்சவ நிகழ்ச்சியில் இதுவும் ஒன்று
    gkrishna

  12. Likes chinnakkannan liked this post
  13. #2390
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    இன்றைய ஸ்பெஷல் லாரி டிரைவர் ராஜாகண்ணு

    தக்காளி MSV 81 களில் போட்ட மிக சிறந்த டூயட் பாடல் .
    சாந்தி திரை அரங்கு கட் அவுட் இன்னும் எனக்கு நினைவில் உண்டு வாசு சார் .அதே சமயத்தில் இங்கே தேவி கலாவில் 'நெஞ்சத்தை கிள்ளாதே',தேவியில் 'ராஜ பார்வை' என்று நினைவு.
    நெல்லையில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த சமயம் .
    இரண்டு தினங்களில் 3 படங்களை பார்த்த நினைவு .interview அட்டெண்ட் பண்ணினேனா என்று நினைவு இல்லை ஆனால் நிறைய படம் பார்த்தேன் .
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •