repeated article but interesting


அன்புக்கு நான் அடிமை..” என்று பாடி அன்பாகவே வாழ்ந்து மறைந்த அதே எம்.ஜி.ஆர்...
ஒருமுறை தன் தொண்டர்களிடம் “கத்தி வைத்துக் கொள்ளுங்கள் “ என்று சொன்னபோது ,நடுநிலையாளர்கள் பலர் அதிர்ந்து போனார்கள்...

மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழாவில் , தன் கட்சி தொண்டர்களை தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ள சொன்னதாக ஞாபகம்.....

ஆனால் இந்தக் கத்திக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறதாம்....

எம்.ஜி.ஆரின் இறுதிக் காலத்தில் அவர் வாய் பேச இயலாத நிலையில் இருந்தபோது , அவரை “ஊமையன்” என்று மேடைக்கு மேடை விமர்சிக்கத் துவங்கினார்கள் எதிர்க் கட்சியினர் ...

இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்ததாம்..அவர் கட்சிக்காரர்கள் பொங்கி எழுந்து புறப்பட்டபோதும் “அதற்கு பதில் அளிக்க வேண்டாம்” என்று தடுத்து விட்டாராம் ... அந்த வேளையில் நடந்த மாநாட்டில்தான் கஷ்டப்பட்டு பேசி “எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்று மட்டும் சொன்னார் ...
இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்று எவருக்குமே புரியவில்லை ...
ஆனால் அடுத்த நாள் பத்திரிகைகளின் பரபரப்புச் செய்தி இதுதான்...!

உடனே “ஒரு முதல் அமைச்சர் இப்படி பேசலாமா ?” என்று முழங்கினார்கள் எதிர்க் கட்சியினர்...

அதிகாரிகள் ,எம்.ஜி.ஆரிடம் இதை எடுத்துச் சொன்னபோது பதிலுக்கு எம்.ஜி.ஆர். புன்னகையுடன் சொன்னாராம்..

”ஊமையன் என்று சொன்ன அதே நபர்கள் எல்லாம் இன்று ...முதல்வர் இப்படி பேசலாமா என்று கேட்டதன் மூலம் , நான் பேசுவதை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி..”..

# ....இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை !