Page 291 of 401 FirstFirst ... 191241281289290291292293301341391 ... LastLast
Results 2,901 to 2,910 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2901
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    ஓரிரு வாரங்கள் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு லைக்ஸ் மட்டும் போட்டுக் கொண்டு இருக்கலாம் என நினைத்தேன்..காரணம் ஹோம் வொர்க்கும், எழுத நினைத்த சிலவும் எழுத நேரம் கிடைக்காதது தான் காரணம்..இருந்தாலும் நுழைந்த போது பின்னூட்டம் போடாமல் இருக்க முடியலை..வாசுசாரின் பொல்லாத புன் சிரிப்பு வும் ஒரு காரணம்..

    வாசு சார் எனக்குப் பிடித்த பாடல் இது..வழக்கம் போல அழகான பதிவு..

    யாரைச் சொல்லி என்ன பயன்
    என் வழக்கு தீரவில்லை
    யார் வீட்டுத் தோட்டத்திலே
    பூத்ததிந்த ரோஜாப் பூ

    அகெய்ன் தாங்க்ஸ்..

    மேனகா பற்றி கிருஷ்ணா ஜி.. தாங்க்ஸ்.. ழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்.. மிக அழகிய பாடல்

    இது பற்றி முன்பு ஒரு மலரும் நினைவுகள் எழுதியிருந்தேன்அது..கொஞ்சம் தள்ளி..கீழே..

    வாங்க ராகவேந்தர் சார்..பொங்கும் பூம்புனலும் க்கு நன்றி.. புகைப்படத்தில்பார்த்ததில் மிக்க சந்தோஷம்..என் நமஸ்காரங்கள்

    சந்திரசேகரன் சார் முன்பே பார்த்திருக்கிறேன்.. கிருஷ்ணா ஜியையும்.. பட் இந்த ஃபோட்டோவில் கொஞ்சம் டிஃபரண்ட் லுக்.. முரளி சாரும் முதல் தடவை பார்க்கிறேன்.. மிகச் சந்தோஷம்..ஒன்று மட்டும் தெரிந்தது.. எல்லாருக்கும் இளையவன் நான்..சார் போடுவதில் தப்பில்லை என (அதே இருபத்து நாலு வயது தான் )

    எஸ்வி சாரின் பதிவுகள் எஸ்வாசுதேவனின் பாடல்கள் ராஜேஷ் ஜியின் பாடல் அனைத்துக்கும் ஒரு தாங்க்ஸ் + ஓ

    **
    கொஞ்சம் ம. நி..

    கல்லூரி முடித்திருந்த காலகட்டம்.. வேம்பு என்ற ஒருவர் என் நண்பனின் அண்ண்னின் நண்பர் எம்.எஸ்ஸி மேத்ஸ் எம்ஃபில் எனப் படித்து வேலை தேடிக் கொண்டிருந்தார்..ஒரு நாள் எங்களை திருமோகூர்பக்கம் வந்தால் அவர் ஊர் திருவாதவூருக்கு வாருங்கள் எனச் சொல்லி இருந்தார்..ஸோ அந்த நாளும் வந்தது..திருமோகூர் சென்று ஒம்மாச்சி சேவித்துவிட்டு வந்த மொஃபசல் பஸ் பிடித்து திருவாதவூர் இறங்கினால் எதிரில் வேம்பு..கண்டும் காணாதவர் போல் செல்ல ஹ்லோ..வேம்பு.. பட்டெனத் திரும்ப..

    ஓ.. நீங்கள் வேம்புவின் நண்பர்களா வாங்க..வேம்பு வீட்ட்ல இருக்கான் நான் அவன் அண்ணன் என (பேர் மறந்துவிட்ட்து)ச் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றால் முகமலர்ந்த வேம்பு உள்ளே தங்கைக்கு ஜாடை காட்ட பின் வந்தது சுடச் சுட தண்ணீர் கலக்காத கள்ளிச் சொட்டுக் காஃபி..

    பின் வேம்பு வாங்க பக்கத்துல அண்ணன் வேலை பாக்கற இடம் இருக்கு..அங்க போய்ப் பேசலாம்..எனச் சொல்ல போனால் அது ஒரு டூரிங்க் டாக்கீஸ்

    காலை வேளை என்பதால் பளபளவென் வெயில் மேக்கப் போட்டது போல் அடித்துக் கொண்டிருக்க உள்ளே சென்று மரபெஞ்சில் நான், உடன் வந்த என் நண்பர்கள் இருவர் வேம்பு என அமர்ந்து.. ஆமா ஒங்க அண்ணன் இங்க என்னவா இருக்கார்..

    வேம்புவின் கண்களில் குட்டியாய்ச் சிரிப்பு..இங்க ஒரு டீக்கடை வைத்திருக்கிறார்..என்ன படிச்சுருக்காரா..எம்.எஸ்ஸி ஸூவாலஜி...

    எங்களுக்குப் பேச்சு வராமல்..என்ன வேம்பு..இப்படிச் சொல்றீங்க..ம்ம் என்ன பண்ண வேலை கிடைக்கும் வரை இப்படி கடை வைத்திருக்கிறார் எனச் சொல்லி எதிரே தெரிந்த வெண் திரையை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்துவிட்டு..பின் சொன்னார்..

    ”உங்களுக்குத் தெரியுமா சாவித்திரி ப்டம்.. ஓ..மேனகா நடிச்சது தானே..யா. அதை இந்தத் தியேட்டர்ல போட்டாங்க ரெண்டு மாசத்துக்கு முன்னால.. சுத்த பத்த ஊரெல்லாம் வண்டி கட்டிக்கிட்டு பாக்க வந்துட்டாங்க..சத்யவான் சாவித்திரி படம்னு நினச்சு..பின்ன என்ன..மாட்னி ஃபுல் ஈவ்னிங்க் ஈ காக்கை கூட வரலை..படத்தை எடுத்துட்டோம்.!.”

    பின் பேசி முடித்து மறுபடி வேம்புவின் வீடு வந்தால் அமர்க்களமான சாப்பாடு..மோர்க்குழ்ம்பு, பால் பாயசம், தயிர்வடை, தயிர்ப் பச்சடி.. வேம்பு எங்களுக்கு எதுக்கு இவ்ளோ கிராண்டா..

    மறுபடியும் சிரித்த வேம்பு..”நல்லா இருக்குல்ல..ஒரு ரகசியம் சொல்லட்டா.. நேத்துக்கு கரெண்ட் கட்..தியேட்டர் ஓடலை..வாங்கின பால்லாம் மீந்து.. சரியா நீங்க வந்தீங்க..வேஸ்ட் ஆக்லை..”.. எதுவும் சொல்லாமல் ஒரு வித கனத்துடன் பிரிந்தொம்(வேம்புவிற்கு அருப்புக்கோட்டையில் லெக்சரர் வேலை பின் கிடைத்தது..அவர் அண்ணனைப் பற்றி மறந்து விட்டது)..

    இன்று இருவரிடமும் எனக்குத் தொடர்பில்லை..மனதில் இருப்பது நினைவு மட்டுமே

    **
    Last edited by chinnakkannan; 23rd September 2014 at 11:41 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2902
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி திரைஅரங்கம் வலைபூ

    மேனகா (1935)


    தமிழ்நாட்டில் அக்காலத்தில் பல நாடகக் கம்பெனிகள் கோலோச்சிக் கொண் டிருந்தன. அந்த நாடகக் கம்பெனிகள் நடத்திய பல நாடகங்கள் திரைப்படங் களாகத் தயாரிக்கப்பட்டன. அவ்வாறு புகழ் பெற்ற நாடகக் கம்பெனிகளில் டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்த சபா புகழ் பெற்று விளங்கியது.

    டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ்பெற்ற நாடகங்களுள் ஒன்று “மேனகா’. துப்பறியும் கதை நிபுணர் என்று போற்றப்பட்ட வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலை “மேனகா’ நாடகமாக டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்தனர். அந்த நாடகத்தைப் பார்த்த எம். சோமசுந்தரமும், எஸ்.கே.மொகிதீனும் (பிற்காலத்தில் ஜூபிடர் பிக்சர்ஸ் என்ற படநிறுவனத்தின் அதிபர்கள்), “மேனகா’வைத் திரைப் படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர். இதற் காக டி.கே.எஸ். நாடகக்குழு முழுவதையும் ரூ. 14 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.

    கதை: டெபுடி கலெக்டர் சாம்பசிவ ஐயங் காரின் மகள் மேனகா. வக்கீல் வராகசாமிக்கு மனைவியான மேனகா, புகுந்த வீட்டில் பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள். வராக சாமியின் சகோதரிகள் மேனகாவைக் கொடுமைப் படுத்தியதுடன், வராகசாமிக்கு மறுமணம் செய்விக்கும் நோக்கத்தில், மேனகாவை நைனா முகமது என்ப வனுக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு சாமா என்பவன் உதவி செய்கிறான்.

    வஞ்சிக்கப்பட்ட மேனகாவை நைனா முகமது பலாத்காரம் செய்ய முயலும்போது, தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். அப்போது நைனா முகமதுவின் மனைவி நூர்ஜஹானால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள்.

    இதற்கிடையில் மேனகா, ஒரு நடிகனுடன் ஓடிப் போய் விட்டதாக, வராகசாமியின் சகோதரிகளும், சாமாவும் கதை கட்டி விட, அதை வராகசாமியும் நம்பி விடுகிறான்.

    ஒருதடவை நூர்ஜஹானுடன் மேனகா காரில் சென்று கொண்டிருக்கும்போது, வராகசாமி பார்த்து விடுகிறான். தன்னை ஏமாற்றிய அவளைக் கொல்வ தற்காக, பின்தொடரும்போது, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். மருத்துவ மனையில் மேனகா நர்ஸ் வேடத்தில் கணவனுக்குப் பணிவிடை செய்கிறாள். இறுதியில் உண்மை தெரிய வர, வராகசாமியும், மேனகாவும் ஒன்று சேர்கின்றனர்.

    கலைவாணரின் முதல் படம்: ஒரு மாதத்தில் படமாக்கப்பட்ட மேனகா 1935ஆம் ஆண்டு வெளிவந்து மகத்தான வெற்றியைப் பெற்றது. மும்பை ரஞ்சித் ஸ்டுடியோவில் ரம்மியமாகப் படமாக்கப்பட்ட “மேனகா’ அந்த ஆண்டில் வெளிவந்த 31 படங்களில் பெரும் வெற்றி பெற்ற படமாகும். அகில இந்திய அளவில் நடிகராகவும், இயக்குநராகவும் விளங்கிய தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா சாண்டோ இயக்கினார். டி.கே.எஸ். நாடகக்குழுவினர் நன்கு ஒத்திகை பார்த்து “மேனகா’ நாடகத்தில் நடித்தி ருந்ததால், அந்தக் குழுவினரே படத்திலும் நடித்தனர்.

    டி.கே.பகவதி வராகசாமியாகவும், எம்.எஸ். விஜயாள் மேனகாவாகவும் நடித்தனர். நாடகத்தில் சாமா பாத்திரத் தில் சிறப்பாக நடித்த என்.எஸ். கிருஷ்ணன் படத்திலும் அந்த வேடத்தில் பிய்த்து உதறினார். பிற்காலத்தில் கலைவாணர் எனப் புகழ்பெற்ற என்.எஸ்.கே.யின் திரையுலகப் பிரவேசம் மேனகாவின் மூலம்தான் நடந்தது. அவருக்கு மாத்திரம் அல்லாமல் டி.கே.சண்முகம் சகோதரர்கள், எஸ்.வி. சகஸ்ரநாமம், கே. ஆர். ராமசாமி, டி.என்.சிவதாணு போன்றோருக்கும் அரங்கேற்றம் அளித்தது “மேனகா’தான்.


    டி.கே.சண்முகம் நைனா முகமதுவாகவும், கே.டி.ருக் மணி நூர்ஜஹானாகவும் நடித்த இந்தப் படத்தில் டி.கே.எஸ். சகோதரர்கள் நான்குபேருமே நடித்தனர். மேனகாவின் தந்தை சாம்பசிவ ஐயங் காராக டி.கே.சங்கரன் நடித்தார். பெருந்தேவி என்னும் விதவைப் பெண் வேடத்தில் வேடப்பொருத் தத்துடன் டி.கே. முத்துசாமி தோன்றி பாராட்டுப் பெற்றார்.

    பெண்கள் கூச்சப்பட்டு நடிக்க முன்வராத அந்தக் காலத்தில் நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கும் முறையைப் பின்பற்றி டி.கே.சண்முகத்தின் சகோ தரர் முத்துசாமி தலையை மழித்து விதவைப் பெண் வேட மிட்டு நடித்தார். அதேபோல வேலைக்கார ரங்கராஜனின் மனைவி மற்றும் மகள் வேடங்களிலும் முறையே டி.என். சுப்பையா, பி.எஸ்.திவாகரன் என்ற ஆண்களே நடித்தனர் என்பதும், அவ்வை சண்முகி போன்ற வேடங்களுக்கு இதுவே முன்னோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

    திரைப்படமான முதல் நாவல் என்பதுடன், முதல் சமூகத் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் “மேனகா’ பெற்றது.
    1955ல் “மேனகா’ மீண்டும் புதுவடிவில் வெளியானது. 1935மேனகாவில் சிறிய வேடத்தில் அறிமுகமான கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்து 1955இல் வெளிவந்த மேனகா, முந்தைய “மேனகா’வைப் போல வெற்றிவாகை சூடவில்லை
    gkrishna

  4. Likes chinnakkannan, Russellmai liked this post
  5. #2903
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    மேனகா வை மறக்காத விஸ்வாமித்ரர் வாசு சார்

    அபூர்வ பாடல் கீழ் வானம் சிவக்கும் நினைவு கூர்ந்து உள்ளீர்கள்
    அது தான் வாசு (தில்லு முல்லு நாகேஷ் )
    அதான் கிருஷ்ணா. 'கோல் மால்' இல்லாத கிருஷ்ணா.

    விஸ்வாமித்திரர் கோபக்காரரயிற்றே.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2904
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னுடைய போஸ்ட் இட்டு விட்டு அடுத்து மேனகாவின் ராமனின் மோகனத்தையும், கீ.வா.சி யில் ஒரு பாடல் என்றும் எழுதலாம் என நினைத்து இடுவதற்குள் வாசு சார் இட்டுவிட்டார்....எக்ஸ்பிரஸ் வேகம்..

  7. #2905
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாருங்கள் சின்னக் கண்ணன் சார்.

    பொல்லாத புன்சிரிப்பு வரவழைத்தது உங்களுடைய வேம்பு பதிவு. வேம்பு கடைசியில் உங்களைக் கசக்க வைத்து விட்டாரே! தண்ணீர் கலக்காத கள்ளிச் சொட்டுக் காஃபியா?

    ஆமாம்! வேம்புவின் தங்கைக்கு கல்யாணம் ஆகி விட்டதா?
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2906
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்..ஆகியிருக்க வேண்டும் எனத்தான் நினைக்கிறேன்.. தொடர்பு இல்லையேகுரு.. பலவருடங்கள் ஆகிவிட்டது..

    மதுரை தொடர்பே விட்டு பலவருடம் ஆகி விட்டன


    Quote Originally Posted by vasudevan31355 View Post
    வாருங்கள் சின்னக் கண்ணன் சார்.

    பொல்லாத புன்சிரிப்பு வரவழைத்தது உங்களுடைய வேம்பு பதிவு. வேம்பு கடைசியில் உங்களைக் கசக்க வைத்து விட்டாரே! தண்ணீர் கலக்காத கள்ளிச் சொட்டுக் காஃபியா?

    ஆமாம்! வேம்புவின் தங்கைக்கு கல்யாணம் ஆகி விட்டதா?

  9. #2907
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பழைய மேனகா படபதிவுக்கு நன்றி கிருஷ்ணா சார்.. இப்போது தான் அதுபற்றித் தெரியும்..வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஓரிரு நாவல்கள் படித்திருக்கிறேன் சில வருடம் முன்பு..அந்தக் கால நடை..

  10. #2908
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    மேனகா 1935 அருமையான நினைவூட்டல். நன்றி

    அப்போ இது என்ன மேனகா? அதற்கு பிறகு வந்த இன்னொரு மேனகாவா?

    டி.கே.ராமச்சந்திரன் இருக்கிறாரே.

    Last edited by vasudevan31355; 23rd September 2014 at 12:22 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2909
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார்

    மேனகா 1935 அருமையான நினைவூட்டல். நன்றி

    அப்போ இது என்ன மேனகா? அதற்கு பிறகு வந்த இன்னொரு மேனகாவா?
    1955 களில் வந்த கே ஆர் ராமசாமி நடித்த மேனகா அது என்று நினைவு வாசு சார்
    gkrishna

  12. #2910
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Thanks to cinema express magazine

    திருப்புமுனைத் திரைப்படங்கள்: 7

    1935 - மேனகா

    தமிழில் வெளிவந்த முதல் சமூகச் சித்திரம்!

    தமிழ் சினிமாவின் நீண்ட வரலாற்றுப் பக்கங்களில் அதன் பொன் எழுத்து பளிச்சென்று தெரிந்தது 1935-ஆம் ஆண்டில்தான். 1931-ல் ஒன்று, 1932-ல் நான்கு, 1933-ல் எட்டு, 1934-ல் பதினான்கு என்றிருந்த பேசும் சினிமாவில்.. 1935-ம் ஆண்டில் 34 படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டு வெளியான படங்களை வரிசைப்படுத்திப் பார்க்கிறபோது, அப்படி என்ன புரட்சி? படங்களின் எண்ணிக்கைதானே அதிகரித்துள்ளது என்று சொல்லத் தோன்றும்.

    ஆனால், எண்ணிக்கை என்பதைத் தாண்டி குறிப்பிடத் தகுந்த புரட்சிகள் பல நடந்துள்ளன.

    புராண, இதிகாசக் கதைகளாகவே அதுவரை சினிமா இருந்து வந்தது. அதிலும் பெரும்பாலும் இந்து சமயம் மற்றும் இந்து மதக் கடவுள்களைப் பற்றிய சினிமாக்களாகத்தான் இருந்தன. ஏற்கெனவே தெருக்கூத்தாகவும், நாடகமாகவும் கதாகாலாட்சேபமாகவும் பல்லாயிரம் முறை கேட்டு, பார்த்து சலித்துப் போயிருந்த ரசிகர்கள், புதுமையாக திரையில் ஏதாவது பார்க்க மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்த படம்தான் "மேனகா'.

    மர்மக் கதைகள் பல எழுதிவந்த வழுவூர் துரைசாமி, "மேனகா' என்ற சமூகக் கதையை எழுதி அப்போது புகழ் பெற்றிருந்தார். அந்தக் கதை, அதே பெயரில் நாடகமாகி அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. நாடகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து திரைப்படமாக

    உருவானது.

    கதைச்சுருக்கம்

    வக்கீல் தொழில் பார்க்கும் வராகசாமி என்ற இளைஞனுக்கு பெருந்தேவி, கோமளா என்று இரண்டு இளைய சகோதரிகள். துரதிர்ஷ்டவசமாக திருமணமாகி சிறிது காலத்திலேயே இருவரும் விதவைகளாகி விடுகின்றனர்.

    கால ஓட்டத்தில் வராக சாமிக்கும், டெபுடி கலெக்டர் சாம்பசிவம் என்பவரின் மகள் மேனகாவுக்கும் திருமணம் நடக்கிறது. பேரழகியான மேனகாவின் மீது வராகசாமி உயிரையே வைத்திருக்கிறான்.

    வாழ வேண்டிய வயதில் விதவைகளாகிவிட்ட வராகசாமியின் சகோதரிகள், தங்களிடமிருந்து வராகசாமியை மேனகா பிரித்துவிடுவாளோ என்று அஞ்சுகிறார்கள். இதனால், மேனகாவிடம் தன் தம்பி அன்பு செலுத்தவிடாமல் சூழ்ச்சிகள் பல செய்கிறார்கள்.

    சகோதரிகள் கிழித்த கோட்டைத் தாண்டாத வராகசாமி, சகோதரிகள் மனதைக் குளிர வைப்பதற்காக நாளடைவில் மனைவியை அடித்துத் துன்புறுத்த ஆரம்பிக்கிறான்.

    இந்நிலையில் வராகசாமிக்கு வேறு பெண்ணை மறுமணம் செய்துவைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் பெருந்தேவியும், கோமளாவும். வராக சாமியின் மறுமணத்திற்கு மேனகா சம்மதிக்க மாட்டாள் என்பதால் சாமா அய்யர் என்ற கொடியவனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுகின்றனர். வராகசாமி கோர்ட்டுக்கு சென்றிருக்கும் நேரத்தில் மேனகாவைக் கடத்திக் கொண்டு போய் நைனா முகமது என்பவனிடம் ஐயாயிரம் ரூபாய் பணத்திற்கு விற்றுவிடுகிறான் சாமா அய்யர். பணம் கொடுத்து வாங்கிக் கொண்ட தைரியத்தில் மேனகாவின் கற்பைச் சூறையாட முயற்சிக்கிறான் நைனா முகமது. தற்செயலாக அங்கே வரும் நைனா முகமதுவின் மனைவி நூர்ஜஹான் மேனகாவைக் காப்பாற்றி அவளது தந்தையிடம் சேர்ப்பிக்கிறாள்.

    நடந்த நிகழ்ச்சியால் பிரமை பிடித்தவள்போல் ஆகிவிடும் மேனகாவை, ஒரு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைத்து சிகிச்சை அளிக்கிறார் மேனகாவின் தந்தை.

    மேனகாவை விற்ற செய்தி தெரிந்தால், வராகசாமியின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதால் சாமா அய்யருடன் சேர்ந்து மீண்டும் ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள் பெருந்தேவியும், கோமளாவும்.

    மேனகாவுக்கும் ஒரு சினிமா நடிகனுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவனுடன் அவள் ஓடிப்போய்விட்டாள் என்றும் கதை கட்டுகிறார்கள். அதற்கு ஆதாரமாக மேனகாவின் பெட்டியில் அந்த நடிகனின் போட்டோவை வைத்து வராகசாமியிடம் காட்டுகிறார்கள்.

    இதையெல்லாம் பார்த்த பிறகு, மேனகா ஓடிப்போய்விட்டதாக வராக சாமியும் நம்பி விடுகிறான்.

    மனைவி பிரிந்த ஏக்கத்தில், சித்தம் கலங்கிய நிலையில் பைத்தியக்காரனைப் போல் ஆகிவிடுகிறான் வராகசாமி. ஒருமுறை சாலையில் நூர்ஜஹானோடு காரில் மேனகா போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.

    மேனகாவைப் பார்த்த உடன், "சண்டாளி.. உன்னை ஒழித்துக் கட்டுகிறேன் பார்..' என்று ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கொண்டு அவளது காரைத் துரத்துகிறான். அப்போது எதிரில் வரும் கார் ஒன்றின் மேல் மோதி படுகாயமடைகிறான். படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறான்.

    கணவனுக்கு ஏற்பட்ட விபத்தையும், அவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதையும் அறிந்த மேனகா கணவனைப் பார்க்கத் துடிக்கிறாள். நூர்ஜஹான் ஆலோசனையின் பேரில் மேனகா நர்ஸ் உடை தரித்து ஆஸ்பத்திரிக்குச் செல்கிறாள். மயக்கம் தெளிந்த வராகசாமிக்கு நர்ஸ் வேடத்திலிருக்கும் மேனகா மூலமாக எல்லா உண்மைகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது.

    நூர்ஜஹானின் தந்தை மரக்காயர் உதவியால் சாமா அய்யரை போலீஸ் கைது செய்கிறது. வராக சாமியின் சகோதரிகள் மனம் திருந்தி, தன் சகோதரனுடன் மேனகாவைச் சேர்த்து வைக்கிறார்கள். சுபம் என்று படம் நிறைவடைகிறது.

    திரைக்குப் பின்னால்..

    தயாரிப்பு: சண்முகானந்தா டாக்கி கம்பெனி

    கதை: வழூவூர் துரைசாமி அய்யங்கார்

    வசனம்: கந்தசாமி முதலியார்

    இயக்கம்: ராஜா சாண்டோ

    இசை: டி.கே. முத்துச்சாமி,

    பாடல்: இதயக்கோட்டை பூமிபாலதாஸ்

    நடிகர், நடிகையர்: டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, டி.கே.சங்கரன், டி.கே. முத்துச்சாமி, என்.எஸ். கிருஷ்ணன், மொய்தீன், எம்.விஜயா, கே.டி.ருக்மணி, டி.கே.ராமசுந்தரி, டி.கே.விமலா.

    நீளம்: 17,000 அடி

    வெளியான தேதி: 06.04.1935

    சில சுவாரஸ்யங்கள்:

    இந்தப் படத்தை இயக்கிய ராஜா சாண்டோ தமிழ்நாட்டைச் சேர்ந்த பம்பாய் வாசி. "மேனகா' டி.கே.எஸ். சகோதரர்களால் நாடகமாகத் தயாரிக்கப்பட்டு, அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. பலமுறை நாடகத்தில் நடித்த நடிகர்களே சினிமாவிலும் நடித்ததால், அவர்களின் நடிப்பில் இயல்பும் யதார்த்தமும் வெளிப்பட்டு காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன.

    டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான, டி.கே.எஸ். முத்துச்சாமி பிராமண விதவைப் பெண் வேடம் ஏற்று நடித்திருந்தார். படம் பார்த்தவர்கள் "பிரமாதமாக நடித்திருக்கிறாளே.. யார் அந்தப் பெண்?' என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். டி.கே.எஸ். முத்துச்சாமிதான் அந்தப் பெண் என்று படக்குழுவினர் சொன்னபோது யாரும் நம்பவில்லை.

    அதேபோல சுப்பையாவும், இசையமைப்பாளர் திவாகரும் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்தார்கள்.

    நகைச்சுவை வேடங்களில் பிற்காலத்தில் நட்சத்திரமாக ஜொலித்த என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த முதல் திரைப்படம் "மேனகா' என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகி மேனகாவைத் துன்புறுத்தும் சாமா அய்யர் வேடத்தில் நடித்து படம் பார்த்த தாய்க்குலங்களின் வசவுகளுக்கு வஞ்சகமில்லாமல் ஆளானார். என்.எஸ்.கிருஷ்ணன் "சதிலீலாவதி'யில் நடிக்க ஆரம்பித்திருந்தாலும் முதலில் வெளிவந்தது "மேனகா'தான்.

    ராஜா சாண்டோ முதன்முதலாக இந்தப் படத்தில் ஒரு நீண்ட முத்தக்காட்சியை அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். டி.கே. சண்முகமும், கே.டி.ருக்மணியும் நடித்திருந்த இந்த காட்சி பலத்த எதிர்ப்புகளை சம்பாதித்தது. ஆனாலும், இந்தக் காட்சிக்காகவே, படத்தைப் பலமுறை பார்த்த ரசிகர்களும் உண்டு.

    பேசும்படம் வருவதற்கு முன்னரே நடிகராகவும், இயக்குநராகவும் பெயர்பெற்ற ராஜா சாண்டோ இந்தப் படத்தில்தான் நடிகர், நடிகைகளின் பெயரை டைட்டிலில் போடும் முறையை அறிமுகப்படுத்தினார். மும்பையில் உள்ள ரஞ்சித் ஸ்டுடியோவில் மூன்று மாதத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. நாவல் ஒன்று, நாடகமாகி, பின் சினிமாவாகி வெற்றி பெற்றது ஒரு புதிய டிரண்டை ஏற்படுத்தியது.

    முதல் சமூகப்படமாக வெளிவந்து வசூலையும் பாராட்டையும் பெற்ற "மேனகா' வேறு பல சமூகப்

    படங்கள் தயாரிக்க வழிகாட்டியாகவும் அமைந்தது.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Thanks gkrishna thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •