Results 1 to 10 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1972 மறக்க முடியுமா? மக்களின் நாயகனை?

    அக்டோபர் மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நமது நாயகர் புரட்சி நடிகர் என்ற வட்டத்தைத் தாண்டி புரட்சித் தலைவராக உயர்ந்ததுதான். ஆம். அக்டோபர் 17ல் தான் இருண்டு கொண்டிருந்த தமிழகத்துக்கு ஒளிவிளக்கேற்ற நம்மை ஆளாக்கிய பேரறிஞரின் பெயரால் அண்ணா திமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்கினார். அந்த ஆண்டு 1972.
    அந்த 1972ம் ஆண்டில் தலைவரின் அரசியல், கலையுலகம் என்னும் இரு வேறுபட்ட துறைகளில் அவர் நிகழ்த்திய பிரம்மாண்டமான வரலாற்று சாதனைகளை சற்று நினைவுகூர்வோம்.
    * ரிக்க்ஷாக்காரன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக இந்த ஆண்டில்தான் தலைவருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்பதற்கான பாரத் விருது கிடைத்தது.
    *தேவர் பிலிம்சின் நல்ல நேரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது. தமிழக மக்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளிபிறக்க அதிமுகவை தலைவர் தொடங்குவதற்கான ‘நல்ல நேரம்’ பிறந்து விட்டது என்பதை கட்டியம் கூறியது.
    * தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை பெற்றார். அவரா வைத்துக் கொண்டார்? அதிக தொகையை சம்பளமாக அவர் பெறுவதே மக்களுக்கு கொடுப்பதற்குத்தானே?
    * அவரது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும் வசூலையும் பார்த்து தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டனர். பிரபல தயாரிப்பாளர்களின் 15 புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    *திரையுலக சக்கரவர்த்தி, வசூல் மன்னன் என பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன.
    * நான் ஏன் பிறந்தேன்? வித்தியாசமான கதையமைப்பு கொண்ட திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே, நான் ஏன் பிறந்தேன்? என்று ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டும் பாடல். குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்பதற்கு அறிவுரை கூறும் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’. இளம் பெண்களின் தூக்கத்தை கெடுத்த நம் அழகனை பெண்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ‘என்னம்மா சின்னப் பொண்ணு’. தன்னை எத்தனை பேர் விரும்பினாலும் கட்டிய மனைவியுடன் மட்டுமே ஒழுக்கமான வாழ்வை வலியுறுத்தும் ‘உனது விழியில் எனது பார்வை’. குடும்பம், குட்டி, பிழைப்பு என்று மட்டுமே இல்லாமல் சமூக சிந்தனையுடன் தொழிலாளர் நலனில் அக்கறையை வெளிப்படுத்தும் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த ‘சித்திரச் சோலைகளே’ வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தின் பாடல்களில் விளக்கிய அற்புதம்.
    *தலைவர் நடித்த கடைசி கருப்பு வெள்ளைப் படமாக வெளிவந்து வசூலை வாரிக் குவித்த அன்னமிட்ட கை. பாரதியுடன் தலைவர் நடித்த கனவுக் காட்சியான ‘மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு’ பாடலும் காட்சியமைப்பும் அருமை. தலைவரைக் கண்டு நாமே மயங்கும்போது பாரதி மயங்குவதில் வியப்பென்ன? தொழிலாளர் மேன்மையை உணர்த்தும் பாடலான ‘அன்னமிட்ட கை’ பாடலை யார்தான் மறக்க முடியும்? முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் மறக்கவே முடியாதே. இன்னும் அந்தக் கட்சிக்கு சில ஓட்டுக்களாவது கிடைக்க இந்தப் பாடலும் ஒரு காரணம்.
    * புரட்சிக் கவிஞரின் பாடல் தலைப்பைக் கொண்டு கரு. சடையப்ப செட்டியாரின் வள்ளி பிலிம்ஸ் ‘சங்கே முழங்கு’ வெளியாகி வெற்றி பெற்றது. இதில் அதுவரை தமிழ் திரைப்படத்தில் எந்த கதாநாயகனும் ஏற்றிராத கிர்பால் சிங் என்ற சீக்கியர் வேடமும் அது தலைவருக்கு பொருந்திய விதமும் அற்புதம். நீதிமன்ற காட்சியில் கிர்பால் சிங்காக தலைவர் எடுத்து வைக்கும் வாதங்களும் அசோகனை மடக்கும் இடங்களும் உற்சாகம் கொப்பளிக்க வைக்கும். வாழ்க்கை தத்துவத்தை விளக்கும் டி.எம்.எஸ்.சின் உருக்கும் குரலில் நாலு பேருக்கு நன்றி பாடலும் அதற்கு முஸ்லிம் வேடத்தில் ரயில் செல்வது போல உள்ள காட்சிக்கு ஏற்ப தலையை ஆட்டிக் கொண்டே கண்ணீர் வழிய யாரிடமும் சொல்ல முடியாமல் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி பார்ப்பவரை கலங்க வைக்கும். (பிறவி நடிகரின் என்ன ஒரு இயற்கையான நடிப்பு). இந்தக் காட்சிக்காவே 1972ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருக்க வேண்டும். கிடைக்காதது ஏமாற்றமே.
    * திருவளர் செல்வியோ, நல்லது கண்ணே, உள்ளம் உந்தன் ஆராதனை பாடல்களில் காஷ்மீரின் அழகை கொள்ளையடித்த ராமன் தேடிய சீதை ரசிகர்களுக்கு சர்க்கரைப் பொங்கல். அதிகமான உடையலங்காரத்தில் தலைவர் ஜொலித்த படம்.
    * அதிமுகவை தொடங்கிய பிறகு முதலில் வெளியாகி பெருவெற்றி பெற்ற இதய வீணை. இதிலும் காஷ்மீரின் அழகு. பத்திரிகையாளர் மணியனை படத் தயாரிப்பாளராக தலைவர் உயர்த்தி விட்ட படம்.
    *இந்தப் படங்களில் நல்ல நேரம், இதயவீணை படங்களைத் தவிர மற்ற படங்கள் 100 நாள் என்ற எண்ணைத் தொடாவிட்டாலும் வசூலை வாரிக்குவித்து ரசிகர்களையும் திருப்தி செய்த படங்கள்.
    *100 நாள் தொடாத படங்கள் கூட மறுவெளீயீடுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றே வந்து வசூலையும் அள்ளி வழங்கின. மற்ற படங்கள் முதல் வெற்றியோடு சரி. உதாரணமாக கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் பணமா? பாசமா? முதல் வெளியீட்டில் சக்கை போடு போட்டது. அதோடு அவ்வளவுதான். ஆனால், தலைவர் படங்கள் அப்படி அல்ல. எப்போது வெளியிட்டாலும் வெற்றிப்படங்கள்தான்.
    இனி அரசியல்:
    * செப்டம்பர் மாதத்தில் தலைவரின் புகழை மறைக்கும் முயற்சிகள். சோதனைகள் அதையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து மக்களின் மனங்களில் நின்றார் நம் தலைவர்.
    *அந்தப் பொறாமையால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவரை மக்கள் வாரி அணைத்துக் கொண்டனர்.
    *முதன் முதலில் மதுரையில்தான் தாமரைப்பூ சின்னத்துடன் மதுரையில் தொண்டர்கள் கழகக் கொடி ஏற்றினர்.
    *தலைவரின் படம் ஒட்டப்படாமல் எந்த ஒரு வாகனமும் இயங்க முடியாது என்ற நிலை.
    *திமுக ஆட்சியின் ஊழல் குறித்து கவர்னர் மாளிகை நோக்கி பிரம்மாண்ட பேரணி.
    *மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியிடம் திமுக ஊழல்கள் குறித்து தலைவர் மனு. இதற்காக ரயில் மூலம் மதுரைக்கு தலைவர் சென்ற ரயில் வழிநெடுக மக்கள் அளித்த மகத்தான வரவேற்பு காரணமாக 16 மணி நேரம் தாமதமாக சென்று சேர்ந்தது. இது எந்த தலைவராலும் முறியடிக்கப்படாத உலக சாதனை.
    * கலைத்துறையில் புரட்சி நடிகராக கோலோச்சியவர் புரட்சித் தலைவராக விஸ்வரூபம் எடுத்த ஆண்டு. மறக்க முடியுமா? 1972ஐ.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •