-
7th October 2014, 10:24 AM
#761
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalaiventhan
அக்டோபர் - 5
30 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில்தான் 3வது பிறவி எடுத்து தான் ஒரு தனிப்பிறவி என்பதை நிரூபிப்பதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தலைவர் சேர்ந்த நாள். அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகளோ, உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளும் வகையில் செல்போன், இணையதளம் ஆகியவை கிடையாது. மாலைப் பத்திரிகையில்தான் தலைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியை பார்த்தேன். சிறியதாகத்தான் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், மருத்துவமனைக்கு செல்வதை விரும்பாத தலைவர் அதுவும் பரிசோதனை முடிந்து உடனே திரும்பாமல் அங்கேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றால்.... லேசாக பொறி தட்டியது.
அதற்கேற்பவே அடுத்தடுத்த நாட்களில் தலைவரின் உடல் நிலை மோசமடைந்ததாகவும் மேல் சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்காக செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. பிரதமர் இந்திரா காந்தியே அப்பல்லோ வந்து தலைவரை சந்தித்து அமெரிக்க பயணத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.
பிறகு தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அங்கிருந்தபடியே தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்து திரும்பி வந்து 3வது முறையாக முதல்வராகி 3 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது வரலாறு.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சாதனைகள் என்றால், அது திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி, நம் புரட்சி தலைவர் ஒருவரால் மட்டுமே படைக்க முடியும். பழைய நினைவுகள் சில துயரமாக இருந்தாலும், சாதனை படைத்த விவரத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி திரு. கலைவேந்தன் அவர்களே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 7th October 2014 at 10:28 AM.
-
7th October 2014 10:24 AM
# ADS
Circuit advertisement
-
7th October 2014, 10:39 AM
#762
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
எம். ஜி. ஆர். என்ற மந்திர சொல்லுக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் உள்ள மவுசு எப்படிப்பட்டது என்பதை நாம் அடிக்கடி கூறுவதை, உறுதிப்படுத்தும் விதத்தில், நடு நிலை வார இதழ் "கல்கி" பிரசுரித்த செய்தியை, திரியின் பார்வையாளர்கள் அனைவரும் அறியும் வண்ணம், பதிவிட்டமைக்கு, சகோதரர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
7th October 2014, 10:55 AM
#763
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
தமிழக முதல்வரான பின்பும், நம் புரட்சித்தலைவர் கடைப்பிடித்த எளிமை, வாழ்ந்த வாழ்க்கையின் தூய்மை, ஆண்ட ஆட்சியின் நேர்மை, புரோட்டா கால், பந்தா இல்லாமல் பலரையும் கவர்ந்த தன்மை - இதுதான் இதய தெய்வத்தின் அடையாளம்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
7th October 2014, 10:59 AM
#764
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
THANKS LOGANATHAN SIR
SUPER ART DESIGN


அனைத்து லட்சணங்களும் பொருந்தி அனைவரும் மயங்கும் அழகிய இளவரசர்...நம் எழில் ஓவியத்தின் அழகை சுந்தரமாய்க் கொண்டு வந்த அந்த கைகளின் சொந்தக்காரருக்கு எம்ஜிஆர் பக்தர்களின் இதயங்கனிந்த நன்றி. - பதிவிற்கு நன்றி திரு. லோகநாதன் சார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Last edited by kaliaperumal vinayagam; 7th October 2014 at 01:01 PM.
-
7th October 2014, 01:49 PM
#765
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆருடைய படங்களுக்கு, திராவிட இயக்கத்தின் பிரபலங்கள் கிட்டத்தட்ட 11 பேர் கதை-வசனம் எழுதினார்கள். அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு, கே.சொர்ணம் ,ஏ.கே.விஸ்வம், முரசொலிமாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி.மனோகரன் முதலானோர்.
-
7th October 2014, 04:28 PM
#766
Junior Member
Newbie Hubber

You can call them as Super Stars, Thalais, Dhalpathis, Supreme Stars, Ulaga Nayagans etc., etc.; Whatever you may feel like. But how long?
Bhagwan Budha quoted that three things cannot be hidden , the Truth, the Sun and the Moon. Likewise, the Charisma of MGR, the three letters magic word would only exist for ever as far as tamil cinemas are concerned.
Yes, no one could have even imagined the tremendous response given by the public at Albert Theatre on the eve of 100th day celebration of “Ayirathil Oruvan” which was originally released in 1965, 50 years back, when most of us were not even born. He had left this world for his heavenly abode in 1987, almost 27 years completed. But still, the gratitude without any expectation given away by the tamil speaking people towards their beloved leader had been proven beyond any doubts which could not be expressed in words. The gratefulness shown by them on that day to a great man who was a dedicated altruistic was awesome. He is still being remembered by them all over the world irrespective of their cast, creed and religion, he lives in their hearts. Time may pass and fade away but memories of him will live for immortal ages.
On that day, the 1040 seated capacity movie hall was jam-packed with around 1500 die-hard fans of MGR, most of them standing near the screen, sitting on the pathway – shouting, dancing and whistling whenever their demigod appeared on the screen. Most of them born after 1965 and I saw hundreds of people in their twenties and early thirties who have born after his death or were kids at the time of his death respectively. The stylish hero had carved a niche for himself not only in the field of acting but in every field of cinema. His body language and the elegant style of fighting (especially fencing) are not only magnetising the younger generations but will definitely create a centre of attention in the minds of future generation too. He had marked an indelible link which will remain eternally.
-
7th October 2014, 06:13 PM
#767
Junior Member
Diamond Hubber
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போதுதர்மம் வெளியேறலாம்தர்மம் அரசாளும் தருணம் வரும்போதுதவறு வெளியேறலாம்நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்அண்ணா அன்று சொன்னார்என்றும் அதுதான் சத்தியம
-
7th October 2014, 06:20 PM
#768
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் தோட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத டி.ராஜேந்தர்!
சென்னை - 05-Oct-2014
3.10.2014 அன்று டி.ராஜேந்தருக்கு பிறந்த நாள். ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பினால் பெங்களூர் சிறையில் இருக்கும் காரணத்தால், தன் பிறந்த நாளைக் கொண்டாடாத ராஜேந்தர். தன் ஸ்ரீவில்லிப்புத்தூர் ரசிகர் மா. ஆனந்தராஜின் (இதயக்கனி வாசகரும் கூட) விருப்பத்திற்காக சென்னை ராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர்., தோட்டத்திற்கு முதன்முதலாக வருகை தந்தார். அங்குள்ள காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் பள்ளி மாணவ- மாணவியருடன் மனம் விட்டுப் பேசி கண்ணீர் விட்டு அழுதார். மாணவ-மாணவியர் அவரது கண்ணீரைத் துடைத்த காட்சி கண்டு அனைவரும் நெகிழ்ந்து போயினர். பின் அனைவரும் ஆனந்தராஜின் செலவில், 'இதயக்கனி' விஜயனின் ஏற்பாட்டில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காலஞ்சென்ற முன்னாள் சபாநாயகர், அமைச்சர் க. ராசாராமின் மகன் ராஜசேகர், முன்னாள் அமைச்சர், சபாநாயகர் மதியழகனின் மகன் இளங்குமரன், தாம்பரம் ராஜன் (இதயக்கனி வாசகர்) ஆகியோரும் பங்கேற்றனர். "என் மனநிலையும், உணர்ச்சியும் எம்.ஜி.ஆரின் ஆன்மாவோடு சம்பந்தப்பட்டது. இந்த நாளை என் வாழ்நாளில் என்றும் மறக்க மாட்டேன்" என்றார்.
-
7th October 2014, 06:21 PM
#769
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
எம். ஜி. ஆரின் இதயவீணை, பல்லாண்டு வாழ்க, சிரித்து வாழ வேண்டும் உள்ளிட்ட பல படங்களுக்கு அவரோடு வேலை செய்திருக்கிறேன். சிரித்து வாழ வேண்டும் படத்தில் ஒரு காட்சியில் எம். ஜி. ஆர். சிறைச்சாலைக்குள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியை என்னை எடுக்கும் படி சுபா சுந்தரம் சொல்ல நான் கேமராவை எடுத்து கோணம் பார்த்தேன்.
இப்போ மாதிரி சைபர் சாட் கேமராக்கள் அப்போ கிடையாது. அதனால் போட்டோ எப்படி வர வேண்டுமோ அதற்கேற்ப மாதிரி நடிகர்கள் ஆக்ஷன் கொடுக்க வேண்டும். அதனால் நான் எம். ஜி. ஆரிடம் 'சார் கொஞ்சம் சாப்பாட்டு தட்டை மேலே தூக்கி சாப்பிடுவது போல கையை வையுங்கள்' என்றேன். உடனே பக்கத்தில் இருந்த எம். ஜி. ஆரின் உதவியாளர்கள் ஓடி வந்து என் கையைத் தட்டி விட்டு, 'நீ என்ன சொல்றே...? அவரு எப்படி இருக்காரோ அப்படியே எடு' என்றார்கள். உடனே எம். ஜி. ஆர் அவர்களிடம், 'நீங்க சும்மா இருங்க அவர் வேலையை சரியா செய்ய இடம் கொடுங்க. காட்சி தத்துரூபமா வரணும்ணு தம்பி நினைக்கிறான்' என்று கரகரத்த குரலில் சொன்னதும் நான் புல்லரித்து நின்றேன்.
புகைப்பட கலைஞர் ஸ்டில் ரவி அவர்கள் பேட்டியில் இருந்து
உண்மை விளங்கும் நேரம்
தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இயக்குநர்களுக்கும் புரட்சித் தலைவர் ஒத்துழைக்க மாட்டார்; அவர் விருப்பப்படிதான் மற்றவர்கள் செயல்பட வேண்டும் என்று நினைப்பார் என்றெல்லாம் கூறப்படும் விமர்சனங்களை தவிடுபொடியாக்கும் வகையில் ஸ்டில் ரவி அவர்களின் பேட்டியை ஆதாரத்தோடு பதிவிட்ட திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
நான் ஏற்கனவே உ..சு.வா.புத்தர் கோயில் சண்டைக் காட்சி பற்றிய பதிவில் கூறியபடி, திரு.ஜி.கிருஷ்ணா போன்றவர்கள் எங்கிருந்தாலும் மக்கள் திலகத்தை ரசிக்கவே செய்கின்றனர். தலைவர் நடித்து சிவகாமியின் சபதம் திரைப்படம் வெளியாகவில்லையே என்று நம்மைப் போலவே ஏங்கும் அவருடைய உயர்ந்த ரசனைக்கும் ஸ்டில் ரவி அவர்களின் பேட்டியை பதிவிட்டதன் மூலம் உண்மையை விளங்க வைத்த நேர்மைக்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து தாங்கள் இதுபோன்ற பதிவுகளை பதிவிட எங்கள் திரி நண்பர்கள் சார்பாக வேண்டுகிறேன். நன்றி திரு. ஜி.கிருஷ்ணா சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின்குறிப்பு: நண்பர் திரு.முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு, தங்களுடைய 2,508வது பதிவில், எனக்கு அளித்த பதிலில், இத்தனை நாள் உங்களுடன் interact செய்தது போதும் என்று குறிப்பிட்ட தாங்கள், அந்த விரதத்தை முடித்து என்னுடன் interact செய்ததற்கும் அதற்கு காரணமான மார்ச் 31ம் தேதி திரையுலகின் கருப்பு நாள் என்று நண்பர் திரு.கோபால் அவர்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு (பின்னர் அவர் அந்த பதிவை எடுத்து விட்டாலும் கூட) அவருக்கு தாங்க முடியாத ஏமாற்றத்தை தந்த, எனக்கும் மிகவும் பிடித்த ராஜராஜ சோழன் திரைப்படத்துக்கும் நன்றி.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th October 2014, 06:28 PM
#770
Junior Member
Diamond Hubber
Bookmarks