Page 17 of 397 FirstFirst ... 715161718192767117 ... LastLast
Results 161 to 170 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #161
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    வீடியோ இருந்திச்சு.. இப்போ காணவில்லை. இப்போதைக்கு ஆடியோவைக் கேட்டு ரசியுங்க..

    அப்படியே அங்கே இருந்து..

    பொன்னா இல்லை பூவா
    dear madhu sir

    இதே மாதிரி அன்பை தேடி படத்தில் ஒரு பாட்டு வரும் டி எம் எஸ் சுசீலா சேர்ந்து 'புத்தி கெட்ட பொண்ணு ஒண்ணு சுற்றுதடி'
    சுசீலா முதலில் கீழ் ஸ்தாயியில் எடுத்து 'கண்களே நீங்கள் பாருங்கள் காதல் பேசுங்கள்' என்று பாடி விட்டு பின்னல் அதையே மேல் ஸ்தாயியில் பாடுவார் . நடிகர் திலகம் மல் ஜிப்ப கீழே கைலி ஒரு பெல்ட் costume பஞ்சம்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #162
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சில சமயங்களில் பாடல்கள் முதலில் கேட்டிருப்போம்.. படத்தில் வேறு விதமாக இருக்கும்..

    அது போன்ற பாடல் இது,.. எனக்கு மிக மிகப் பிடிக்கும்.. ஆனால் படம் வெளியான போது வரவில்லை.. சரி என சமீபத்தில் வந்த புதுப்படத்தில் அதே பாடலை உபயோகப்படுத்துகிறார்கள் எனத் தெரிந்த போது மகிழ்ச்சியாய் இருந்தது.. பாடல் பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றம் தான்..கல்யாண ஃபங்க்ஷனில் அந்தப் பாட்டைப் பாடுவது போன்று காட்சியமைப்பு..கொஞ்சம் வருத்தம் தான்..

    இன்று எதையோ தேடிப் பார்க்கப் போக அந்தப் பழைய படத்தில் வராத பாட்டின் வீடியோ கிடைக்க ஆவலுடன் பார்த்தால் அதுவும் ஏமாற்றமே..

    ( இன்னும் என்னடா சஸ்பென்ஸ்… பாட்டச் சொல்லு..
    ஷ்ஷ் மனசாட்சி)

    பாடல் புத்தம் புதுக் காலை படங்கள் அலைகள் ஓய்வதில்லை அண்ட் மேகா

    http://www.youtube.com/watch?feature...&v=Ytzlszu2MaQ

    http://www.youtube.com/watch?feature...&v=mRWj5knSvC0

  4. #163
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் சி கே சார்

    நமக்கோ ஏமாற்றம் . சிலர் அதை தான் மாற்றம் என்கின்றனர் .
    gkrishna

  5. Likes chinnakkannan liked this post
  6. #164
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    dear madhu sir

    இதே மாதிரி அன்பை தேடி படத்தில் ஒரு பாட்டு வரும் டி எம் எஸ் சுசீலா சேர்ந்து 'புத்தி கெட்ட பொண்ணு ஒண்ணு சுற்றுதடி'
    சுசீலா முதலில் கீழ் ஸ்தாயியில் எடுத்து 'கண்களே நீங்கள் பாருங்கள் காதல் பேசுங்கள்' என்று பாடி விட்டு பின்னல் அதையே மேல் ஸ்தாயியில் பாடுவார் . நடிகர் திலகம் மல் ஜிப்ப கீழே கைலி ஒரு பெல்ட் costume பஞ்சம்

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #165
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி மது சார்

    இந்த மூன்று பாடல்களுமே கிட்டத்தட்ட ஒரே இசை கோர்வையில் அமைக்கப்பட்ட பாடல்கள் போல் இருக்கும் .
    gkrishna

  9. Likes madhu liked this post
  10. #166
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    நண்பரிடம் தாய் படப்பாடல் வீடியோ கீதுங்கோ... அவர் அனுமதிக்காக வெயிட்டிங்

    இந்தாங்கோ


  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #167
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அவள் ஒரு விலைமகள்.. சூழ்நிலையில் அப்படி ஒரு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டவள்..உடல், உணர்வுகள், மனம் எல்லாம் மரத்து இருப்பவள்..

    அவளிடம் ஒரு நாள் எதிர்பாராத விதமாக ஒருவன் வருகிறான்.. அழகாய்ச் சீவிச் சிங்காரித்து படுக்கையறையில் அமர்ந்திருப்பவளின் மீது அவனது கண்கள் ஆவலாய்த் தீண்டுகின்றன.. கண்கள் மட்டும்..

    அவளுக்கோ புரியவில்லை.. அவன் அவளைப் பார்க்கிறான் ஆவல் மிகக் கொண்டு. பின் அந்த அறையில் உயிர்ப்பூவாய்ச் சிரிக்கும் அவளது கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைப் பார்க்கிறான்.. மறுபடியும் அவளை..

    என்ன சொல்வது, என்ன செய்வது எனத் தெரியாமல் (அவளுக்கே இது புது அனுபவம்) அந்தப் புகைப்படத்தை எடுத்து அவனிடம் கொடுக்கிறாள்.. எடுத்துக்கொண்டு போ எனவும் சொல்கிறாள்..

    அவன் எடுத்துக் கொண்டு செல்கிறான்..மறு நாள் அந்தப் புகைப்படத்தை வைத்துக் கல்லில் வெகு அழகாகச் சின்ன சிற்பமொன்றை வடிக்கிறான்.. ஆம் அவன் ஒரு சிற்பி..

    வடித்த அந்தக் கற்சிற்பத்தை இந்த உயிர்ச்சிற்பத்திடம் கொடுக்கிறான்..அந்த ஊமை.. அவன் வடித்த பெண் சிலை உயிரோடு அவளிடம் பேசுகிறது..அவளுக்கோ மடை திறந்து பொங்கும் நீரலையென மனம் பொங்குகிறது..கண்களில் நீரோடை கட்டுகிறது..மைவிழி கரையக் கரைய அவளது மனதிற்குள் இருக்கும் உணர்வுகள் பொங்கி எழுகின்றன..

    இவன் என்னை ஏற்றுக் கொள்வானா.. ஒரு பாலைவனமாய் இருந்த வாழ்வில் பசுங்காற்று வீசும் சோலையென வந்துவிட்டானா.. இவன் என்னை ஏற்றுக் கொண்டால் நான் என்ன ஆவேன் என நினைக்கிறாள்.. அதே சமயம் தாலி கட்டவா..என்னை மணக்க சம்மதமா என்பது போல் அவன் கேட்கிறான் அவளுடைய சந்தோஷத்தில் பாட்டும் வருகிறது..
    *
    இனிமேல் நாளும் இளங்காலை தான்
    எனையே சூடும் மணமாலை தான்..
    என்றும் வசந்தம் என் காதல் சொந்தம் கை கூடும் ம்ம்

    பெண்ணென்று வாழாமல் பிழையாய் வாழ்ந்தேன்
    கண் காண முடியாத் பிறையாய்த் தேய்ந்தேன்
    நீ வந்த நேரம் நீங்காத பாரம்
    சருகாய்க் காய்ந்து மெருகாய்த் தேய்ந்து போகும் என் பாவம் இந் நேரம்.ம்ம்

    என் பாட்டின் ஆதாரம் உந்தன் ராகம்
    என் ராக அலங்காரம் உந்தன் தாளம்
    இசையாக நாளும் இணைகின்ற கோலம்
    வளர்பிறையாக வளரும் காலம்..
    கீதம் சங்கீதம் சந்தோஷம் ம்ம்ம்
    *
    மேற்கண்ட பாடல் இரவுப் பூக்கள் படத்தில் சித்ரா பாடியது.. படம் நான் பார்த்ததில்லை.. இந்தப் பாடல் மட்டும் இப்போது கேட்டேன். கொள்ளை கொள்கிறது மனத்தை..

    படத்தில் நடித்திருப்பது ஜீவிதா ரவீந்தர். ஜீவிதா கொஞ்சம் கொஞ்சம் பூர்ணிமா ஜெயராம் சாயல். நல்ல நடிகை.. மொச்சைக் கொட்டை மொச்சைக் கொட்டையாய்க் கண்கள்..சிறு கொடையாரஞ்சுப்பழத்தை எப்போதும் புதைத்திருப்பதுபோலப் பொசு பொசு கன்னம்..கொஞ்சம் வித்யாச அழகு (பிற்காலத்தில் தெலுங்கு டாக்டர் ராஜசேகருக்கு மனைவியாக ஆனவர்)

    எஸ்பெஷ்லி இந்தப்பாட்டில் அந்த ப் பெண்ணின் ஏக்கம், தாகம், வேண்டும் தன்மை, இறைஞ்சும் தன்மை எனக் கண்களில் வெகு இயல்பாய்க் கொண்டு வந்திருக்கிறார்..

    பாடல் வீடியோ..
    http://www.youtube.com/watch?feature...&v=Kzd31yE2KPM

    படத்தில் என்ன ஆகும்..அவர்களதுகல்யாண வாழ்க்கை?

    (பாடலைக் கேட்டுக் கேட்டு வரிகளை டைப்படித்தேன்!)
    Last edited by chinnakkannan; 11th October 2014 at 12:57 PM.

  13. Likes vasudevan31355 liked this post
  14. #168
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அவள் ஒரு இள நங்கை..படித்தவள். அழகி.. எப்படிப் பட்ட அழகு?

    முகமதி நெற்றியில் மூண்ட பயமும்
    அகத்தினில் தேக்கும் அழகே - தகதகக்கும்
    பார்வையிலே பேசுகின்ற பாவைநீ என்னுடைய
    ஆர்வத்தைத் தூண்டுகிறாய் ஆம்

    என்றெல்லாம் இளைஞர்கள் பேசும் வண்ணம் கொண்ட தெறிக்கும் அழகு..

    அதுமட்டுமில்லை..அவள் ஒரு ரிப்போர்ட்டர்..பத்திரிகையில் செய்திகள் எழுதுபவள்..

    மெய்யிலே பொய்கூட்டா மேனிகொண்ட பாவையவள்
    செய்தி வரைபவள்தான் ஆம்..

    அவள் ஒரு தொடர் எழுதுகிறாள் பத்திரிகையில்..யாரைப் பற்றி. ஒரு தூக்குத் தண்டனைக் கைதியைப் பற்றி.. எழுதுகையிலேயே அவளுக்குக் கண்கள் கலங்குகின்றன.. நெஞ்சம் விம்முகிறது..காரணம் அந்தக் கைதி அவளின் அக்காவின் கணவர்..அக்காவைத் துன்புறுத்தி துன்புறுத்தி மரணமடைய வைத்த ஒரு சேடிஸ்ட் துன்பியலாளன்..

    அன்று இரவு தொடர் எழுதி முடிக்கையில் வாசலில் தட் தட்.. பார்த்தால் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் ஒருஆண்மகன்.. அவளும் அவளுடன் வீட்டில் தங்கும் டாக்டர் தோழியும் அந்த் ஆண்மகனைத் தாங்கி படுக்கையறைக்குக் கூட்டிச் செல்கிறார்கள். முகம்பார்த்தால் அந்த நங்கைக்கு அதிர்ச்சி..

    ஆம்..அந்த மனிதன் அவளது அக்காவின் கணவன்.. எவனை மிக ஆழமாக வெறுத்தாளோ அவனே அவள் வீட்டில்..கைதி உடையில்

    போலீசுக்குப் போகலாம் என நினைக்கையில் டாக்டர் தோழி தடுக்கிறாள்..முதலில் மருத்துவம் அப்புறம் போலீஸ்..

    ம்ஹூம் என இவள் மறுக்க மறுக்க டாக்டர் அந்தக் கைதிக்கு மருத்துவம் செய்ய, கண் விழிக்கும் அவன் தனது மைத்துனியை அடையாளம் கண்டு கொள்கிறான்..

    அவளிடம் சொல்கிறான்.. “ மைத்துனியே.. நீ உன் அக்காவைக் கொடுமைப் படுத்தினேன் நான் என்று பத்திரிகையில் எழுதியிருந்தாய்.. அது எல்லாம் பொய்.. உண்மை என்னவெனில்..” எனத் தன் கதையைச் சொல்கிறான்..

    சிவகுமார், ராதா, ஜெயஸ்ரீ நடித்த மனிதனின் மறுபக்கம் படத்தின் சுருக்க்கக் கதை.. சிவகுமார் - தனது மைத்துனி ஜெயஸ்ரீ கதை எழுதும்போது கெட்டவராகவும், அதே சமயத்தில் தன் கதை சொல்லும்போது நல்லவராக நடித்திருப்பார் நன்றாக.. ராதா தான் ஜோடி..மாடலிங் கின் போது மாடர்ன் டிரஸ்ஸாகட்டும் வித வித வண்ண மயமான சேலைகளிலாகட்டும் சற்றே நிறம் குறைந்த புஷ்பமாக ஒளிர்ந்திருப்பார் (வாசு சார் இந்தக்கால ஃபோட்டோ வே வேண்டாம்..!)

    இந்தப் படத்தில் அனேகமாக எல்லாப்பாடல்களும் நன்றாக இருக்கும்

    இருந்தாலும் இந்தப் பாட்டு எஸ்.பி.பி ஜானகி பாடுவது எனக்குப் பிடிக்கும்.. பாடல் வரி வைரமுத்து..

    *

    கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
    நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

    நீ என்ன மாயம் செய்தாய்
    நீருக்குள் தீயை வைத்தாய்

    நீதந்த காதல் சொந்தம்
    வாழட்டும் கண்ணா என்றென்றும்


    வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம்
    பூமிக்கு நீரை சிந்தும் சொந்தம் என்னம்மா

    நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே
    நெஞ்சத்தில் தாகம் என்று நீயும் சொல்லம்மா

    காலங்கள் செல்லச்செல்ல ஆயுள் இன்று கூடும்
    ஆனாலும் காதல் என்னும் சொந்தம் என்றும் வாடும்
    நீலம் பூத்த கண்கள் ரெண்டும் உன்னை வைத்துக்கொள்ளட்டும்
    நீயும் நானும் மாலை சூடும் காலம் என்ற காலம் இந்தக்

    கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
    நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன



    பூவுக்கு தாலி கட்ட போகும் தென்றல் காற்று
    போகட்டும் நீயே இன்று வாழ்த்துச்சொல்லி போ
    காதுக்குள் நாளை அந்த மேளச்சத்தம் கேட்கும்
    கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டித்தா

    தாளத்தை தள்ளிவைத்து ராகம் எங்கு போகும்
    பாசத்தை தள்ளிவைத்து ஜீவன் எங்கு வாழும்
    பொன்னில் பாதி பூவில் பாதி
    பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்
    காதல் வேதம் கண்ணில் ஓடும் கண்ணே கட்டி பெண்ணே இந்த

    கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
    நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன


    பாடல் வீடியோ..


    http://www.youtube.com/watch?feature...&v=yEayiPak0-I

  15. Likes vasudevan31355, Russellmai liked this post
  16. #169
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (90)

    'சபதம்' (1971) (Full meals)



    தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' (1971) என்ற அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். (கிருஷ்ணா! இதிலும் இந்திராதேவி உண்டு) நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.

    கதை

    மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.


    வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.


    தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.



    வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..

    இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.



    இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமான தூண் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். என்ன ஒரு திறமை! இவர் நம் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு குறிஞ்சி மலர். இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகரும் கூட.



    இப்படத்தில் இடம் பெற்ற எஸ்.பி.பாலா தங்கக் குரலில் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான

    'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'

    பாடல் ஒன்று போதும் ஜி.கே.வெங்கடேஷ் அவரின் திறமையை காலம் முழுதும் பறைசாற்ற. நமக்கு இறப்பு என்று ஒன்று வரும்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கண் மூடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும்.



    இந்தப் படத்தில் அதே போல அருமையான ஒரு பாடல். 'இன்றைய ஸ்பெஷலா'க வரும் பாடல். ஆனால் அதிகம் பேசப்படாத அதிசயப் பாடல். அப்போது ஓரளவிற்குப் பிரபலம். பாடலென்றால் அப்படி ஒரு பாடல்.

    'ஆட்டத்தை ஆடு
    புலியுடன் ஆடு
    போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு'

    இந்தப் பாட்டின் இடையிடையே வரும் இசை சித்து வேலைகள் நிஜமாகவே பிரமிக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை. புத்திசாலித்தனமான வரிகளுக்கு கமர்ஷியல் இசை கிளாஸிக்காக. நிறைய வித்தியாசங்களை இப்பாடலில் உணர முடியும். ஒரு குத்துப் பாட்டு ரேஞ்சுக்கு இருந்தாலும் கதையோடு ஒட்டிய பாடல் வரிகளாலும், பங்கு கொண்ட நடிகர்களின் உற்சாகமான நடிப்பாலும், துள்ளல் போட வைக்கும் இசையாலும் இப்பாடல் ஜோராக மிளிர்கிறது.



    பாடலின் வரிகள் அற்புதம்.

    'உயர்ந்து நின்றால் தேவாரம்
    உருண்டு வந்தால் அடிவாரம்'

    மகோன்னதமான வரிகள்.

    "பொய் வேஷம் போடும் துரைசிங்கமே! இப்போது உயரத்தில் நிற்கலாம். என்னால் அடிவாரத்திற்கு உருண்டு வரப்போகிறாய்"

    என்ற அர்த்தம் தொனிக்கும் அழகான வரிகள். கண்ணதாசன் ரகளை வரிகளை தந்திருப்பார்.

    பாடலின் நடுவில் வரும் குத்திசைக்கு நாகேஷும், ரவியும் ஆடுகளின் முகமூடி அணிந்து கொண்டு குத்தாட்டம் போடுவது அமர்க்களம். நாகேஷுக்கு அவருக்காகவே பாடுவதற்கென்றே பிறந்த ஏ.எல்.ராகவனும், கே.ஆர்.விஜயாவிற்கு ராட்சஷியும், ரவிச்சந்திரனுக்கு ஜி.கே.வெங்கடேஷ் அவர்களும் குரல் தந்து பின்னியிருப்பார்கள். (ஜி.கே.வெங்கடேஷின் குரல் அம்சமான ஒரு குதூகலம். சாய்பாபா குரல் போல) ஈஸ்வரின் அபரிமிதமான தெள்ளத் தெளிவான உச்சரிப்பு இப்பாடலுக்கு கூடுதல் பலம். 'பொல்லாத சபதம்' என்று அவர் 'ல்' லிற்கு படு அழுத்தம் கொடுத்து உச்சரிப்பது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று.


    'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.




    இனி பாடலின் வரிகள்.

    தொகையறா

    உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்
    உறவு கலவாமை வேண்டும்

    தத்தளாங்கு தகஜும்... தத்தளாங்கு தகஜும்... தத்தளாங்கு தகஜும்

    கே.ஆர்.விஜயா

    ஆட்டத்தை ஆடு
    புலியுடன் ஆடு
    போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
    இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
    வெள்ளாட்டின் சபதம்
    அது பொல்லாத சபதம்

    ஆட்டத்தை ஆடு
    புலியுடன் ஆடு
    போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
    இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
    வெள்ளாட்டின் சபதம்
    அது பொல்லாத சபதம்


    ரவிச்சந்திரன்

    கட்டு கட்டா திருநீறு
    கழுத்தில் ஆடும் மணிமாலை
    கட்டு கட்டா திருநீறு
    கழுத்தில் ஆடும் மணிமாலை
    பக்தி பொங்கும் புலியைப் பார்த்து
    பயப்படாதே வெள்ளாடு
    பயமில்லாமல் நீ ஆடு
    அடுத்த ஆட்டம் நீ ஆடு

    வெள்ளாட்டின் சபதம்
    அது பொல்லாத சபதம்
    வெள்ளாட்டின் சபதம்
    அது பொல்லாத சபதம்

    ஆட்டத்தை ஆடு
    புலியுடன் ஆடு
    போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
    இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு


    நாகேஷ்

    தகப்பன் புலியோ தள்ளாடுது
    அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
    தகப்பன் புலியோ தள்ளாடுது
    அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
    அப்பாவி அப்பாவும்
    இப்பாவி பப்பாவும்
    தப்பான சொந்தங்கள் கொண்டாடுது
    மொகத்தப் பார்த்து நீ ஆடு
    களத்தைப் பாத்து காய் போடு

    வெள்ளாட்டின் சபதம்
    அது பொல்லாத சபதம்
    வெள்ளாட்டின் சபதம்
    அது பொல்லாத சபதம்

    ஆட்டத்தை ஆடு
    புலியுடன் ஆடு
    போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
    இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு


    கே.ஆர்.விஜயா

    உயர்ந்து நின்றால் தேவாரம்
    உருண்டு வந்தால் அடிவாரம்
    உயர்ந்து நின்றால் தேவாரம்
    உருண்டு வந்தால் அடிவாரம்
    கள்ளனாகி தோல்வி கண்டால்
    கையில் உண்டு தேவாரம்
    அதிகம் உண்டு ஆதாரம்
    தவணை தந்தோம் ஒரு வாரம்.


    பகவதி சரணாகதி அடைய ஒரு வாரம் தவணை தருகிறார்களாம். வாவ்!

    வெள்ளாட்டின் சபதம்
    அது பொல்லாத சபதம்
    வெள்ளாட்டின் சபதம்
    அது பொல்லாத சபதம்

    ஆட்டத்தை ஆடு


    மூவரும்

    புலியுடன் ஆடு
    போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
    இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு

    வெள்ளாட்டின் சபதம்
    அது பொல்லாத சபதம்
    வெள்ளாட்டின் சபதம்
    அது பொல்லாத சபதம்


    இப்பாடல் இணையத்தில் தனியே தேடிப்பார்த்ததில் கிடைக்கவில்லை. அதனால் 'சபதம்' முழுப் படத்தையும் இங்கு பதித்திருக்கிறேன். அதில்

    1:42:56 நேரம் தொடங்கி 1:47:35 நேரம் வரை இப்பாடலைக் கண்டு இன்புறுங்கள். அவசியம் கேட்டுப் பாருங்கள்.

    'சபதம்' உண்மையிலேயே எனக்கு கொஞ்சம் சவால் விட்டுதான் விட்டது.


    Last edited by vasudevan31355; 11th October 2014 at 08:13 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes Russellmai liked this post
  18. #170
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மனிதனின் மறுபக்கம் ரங்கராஜ் படம் இல்லையோ சி கே சார்

    இந்த ஜேசுதாஸ் பாடல் ஒண்ணு நினைவில் உண்டு
    இந்த படம் வரும்போது எல்லாம் திலிப் அதுதாங்க நம்ம ரஹ்மான் சார் தான் கிபோர்ட் பிளேயர் என்று கேள்வி

    'ஊமை நெஞ்சின் சொந்தம்
    இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
    ஊமை நெஞ்சின் சொந்தம்
    இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

    வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா '
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •