-
12th October 2014, 10:44 AM
#261
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
பதில் போட்டாச்சு
தேங்க்ஸ்ஜி! பார்த்துட்டேன்.
'பலே பலே பலே தேவா
பாரோர் அறியார் உன் மாயா'
'மாயா பஜார்' படத்தில் சீர்காழியின் நல்ல பாட்டு இல்ல ராஜேஷ்ஜி?!. மலைச் சாலைகளில் குதிரை வண்டி சாரட்டில் நாமே பயணிப்பது போன்ற உணர்வை நமக்குத் தரும் பாடல்.
Last edited by vasudevan31355; 12th October 2014 at 10:54 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th October 2014 10:44 AM
# ADS
Circuit advertisement
-
12th October 2014, 10:53 AM
#262
Senior Member
Diamond Hubber
ஆஹா! அருமை! 1000 பொற்காசுகள் கிடைத்தது போல மனம் மகிழ்கிறது வினோத் சார். இதெல்லாம் எங்கே கிடைக்கும்? நினைத்தாலும் கிடைக்குமா? ஏதோ உங்களைப் போன்ற சில நல்ல உள்ளங்கள் இருப்பதால் இத்தகைய சந்தோஷங்களை நாங்கள் உணர முடிகிறது. இந்த மாதிரி ஆவணங்களின் அருமைகளை உணர்ந்ததால் இவைகளின் மதிப்பு என்னவென்றும் புரிகிறது.
ஒன்று தெரியுமா வினோத் சார்? இந்த மாதிரி ஒரு பக்கம், ஒரே ஒரு பக்கம் பழைய நடிகர் திலகத்தின் பட விளம்பரம் ஒன்றுக்கு ஆனந்த விகடன் அலுவலகத்தில் ஒரு ஜெராக்ஸுக்கு 500 ரூபாய் கேட்டார்களாம். அவ்வளவு பொக்கிஷம் போல இவைகள். சில பேர்களுக்கு இதன் அருமை பெருமைகள் புரியாததுதான் வருத்தமாக இருக்கிறது. தெரியாவிட்டாலும் பரவாயில்லை. வாயை வைத்துக் கொண்டு சும்மாவாவது இருக்கலாம் இல்லையா? இதெல்லாம் எங்கே பார்க்க முடியும்?
'ஆலயமணி' ஆவணத்திற்கு மிக நன்றி வினோத் சார்.
-
12th October 2014, 10:58 AM
#263
Senior Member
Diamond Hubber
கோபு சார்,
தங்கள் நன்றிகளுக்கு என் மனமார்ந்த நன்றி
-
12th October 2014, 01:58 PM
#264
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (91)
ஸ்ரீ நவநீதா பிலிம்ஸ் அளிக்கும் 'தாய்க்கு ஒரு பிள்ளை' படத்திலிருந்து ஒரு பாடல்.

ஜெய்சங்கர், நிர்மலா, சாவித்திரி, சோ, ஏ.வி.எம்.ராஜன், பாலாஜி, சசிகுமார், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தது.
கதை வசனம் : குகநாதன்.
பாடல்கள் : வாலி, புலமைப்பித்தன், முத்து.
நடனம் : மதுரை ராமு.
ஒளிப்பதிவு : டி. ராஜகோபால்.
இசை : சங்கர் கணேஷ்.
தயாரிப்பு : சுப்ரமணிய ரெட்டியார்.
டைரக்ஷன் : பட்டு.
ஒரு அயோக்கியனால் காதலிக்கப்பட்டு, கர்ப்பமுற்று, அவனால் விபச்சாரி என்ற பழிச் சொல்லுக்கும் ஆளாகி, இறுதியில் தந்தையையும் இழந்து, அந்த சதிகாரனால் நடுத்தெருவுக்கு வரும் அபலைப்பெண் ஒருத்தி ஒரு டாக்டரால் காப்பாற்றப்படுகிறாள். அந்தக் கருணை உள்ளம் கொண்ட மருத்துவன் அவள் மேல் அனுதாபம் கொண்டு, அவளுக்குப் பிறக்கும் சிசுவைத் தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டு, சமூகத்தில் அந்தக் குழந்தைக்கு உயர்ந்த அந்தஸ்து கிடைக்க உறுதி பூணுகிறான். அந்தக் குழந்தையை நன்கு படிக்க வைத்து, அவனை உயரிய நிலைக்கு கொண்டு வருகிறான்.
அந்த அபலைக்கு குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையைத் தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டு, அதன் தகப்பனாக மகிழ்ச்சியுடன் அவன் பாடும் பாடல். குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று அவன் கனவு காணுவதை இப்பாடலில் உணர்த்துகிறான். அன்னையின் ஆசைகளை நிறைவேற்றும் 'தாய்க்கு ஒரு பிள்ளை'யாக நீ வளர வேண்டும்" என்று அந்தப் பிள்ளைக்கு அறிவுரை கூறுகிறான்.
டாக்டராக ஏ..வி.எம்.ராஜனும், அபலைப் பெண்ணாக 'நடிகையர் திலகம்' சாவித்திரியும், நயவஞ்சக நரியாக பாலாஜியும், தாய்க்கு ஒரு பிள்ளையாக ஜெய்சங்கரும் நடித்த படம் இது.
ஏ.வி.எம்.ராஜன் சாவித்திரியின் குழந்தையை படிப்படியாய் வளர்த்தபடியே கொஞ்சிப் பாடும் அருமையான பாடல். ஏ.வி.எம்.ராஜனுக்கு ஏ.எம்.ராஜா குரல் தந்திருப்பார். செகண்ட் ரவுண்ட். ('செந்தாமரையே... செந்தேன் இதழே' (புகுந்த வீடு), 'மலரே... ஓ மலரே', 'ராசி நல்ல ராசி' (வீட்டு மாப்பிள்ளை), 'மனதுக்குத் தெரியும் என்னை' (எனக்கொரு மகன் பிறப்பான்) என்று சூப்பர் ஹிட் பாடல்கள். எல்லாமே ஏ..வி.எம்.ராஜனுக்குத்தான்) பொருத்தமாகவே இருக்கும். ராஜன் டிப் டாப்பாக கோட் சூட்டெல்லாம் போட்டுக் கொண்டு, உள்ளங்கை அகல கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு, அநியாயத்துக்கு உடை அலங்காரத்திலும், நடிப்பிலும் நடிகர் திலகத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுக்கிறார். (போதும்டா சாமி நடிகர் திலகம் இவர்களிடம் பட்ட பாடு). வயது முதிர்ந்த சாவித்திரி இளம் கன்னிகையாக. அதுவும் பாலாஜிக்கு ஜோடி. சகிக்காது. அப்புறம் வயதான பிறகு தாயாக ஓ.கே. இப்பாடலில் சில முகபாவங்கள் இவர் 'நடிகையர் திலகம்' என்பதை சூளுரைக்கின்றன. பாடலில் வரும் தாய்க்கு ஒரு பிள்ளையாய் வரும் சிறார்கள் கொள்ளை அழகு.
அப்போதும் இப்போதும் எப்போதுமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் இது. சங்கர் கணேஷ் போட்ட அருமையான டியூன். கருத்துச் செறிவுள்ள பாடலும் கூட.
இனி பாடலின் வரிகள்.

சின்னக் கண்ணனே
நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
சின்னக் கண்ணனே
நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும்
எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும்
பிரிந்த போதிலும் உன் நினைவு வாழட்டும்
சின்னக் கண்ணனே
நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
அரும்பு விழி குறும்பு மொழி
ஆட அழைக்காதோ என்னை
சிறு குழந்தை விளையாட்டில்
தன்னை மறப்பாளோ அன்னை
அரும்பு விழி குறும்பு மொழி
ஆட அழைக்காதோ என்னை
சிறு குழந்தை விளையாட்டில்
தன்னை மறப்பாளோ அன்னை
அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற ஆனை வாகனம்
அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற ஆனை வாகனம்
நாளை இந்தப் பிள்ளை ஒரு ராஜாவாகணும்
நாளை இந்தப் பிள்ளை ஒரு ராஜாவாகணும்
சின்னக் கண்ணனே
நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
ஏடெடுத்து நீ படித்து
தந்தை பேர் சொல்ல வேண்டும்
என் மகனே உன் புகழை
நாளும் ஊர் சொல்ல வேண்டும்
ஏடெடுத்து நீ படித்து
தந்தை பேர் சொல்ல வேண்டும்
என் மகனே உன் புகழை
நாளும் ஊர் சொல்ல வேண்டும்
அன்னை நெஞ்சின் ஆசைகளை
அளந்தவரில்லை
அன்னை நெஞ்சின் ஆசைகளை
அளந்தவரில்லை
அதை நிறைவேற்று நீயோ
அந்த தாய்க்கொரு பிள்ளை
அதை நிறைவேற்று நீயோ
அந்த தாய்க்கொரு பிள்ளை
சின்னக் கண்ணனே
நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
Last edited by vasudevan31355; 12th October 2014 at 02:14 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th October 2014, 02:10 PM
#265
Senior Member
Senior Hubber
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..
ஹாய் வாசு சார்.. சின்னக் கண்ணனே பாட்டு எனக்குப் பிடித்த பாடல்..வீட் போய் தான் படம் பார்க்கவேண்டும். அஸ் யூஸ்வல் கதைச்சுருக்கம் அண்ட் பதிவு குட்.. நன்றி..
சச்சா மம்மா பப்பா ஓ.. அழகு மொழி...பருவ எழில்...முத்துரதம் முழு நிலவோமுத்தமிழின்..கரையெதுவோ தந்தாள் உன் அன்னை உன்னை.. (லிரிக்ஸ் தப்பா இருக்கலாம்) ஹம்மிங்க் ஒலிக்கிறது..அது என்ன பாட்டு..
ஹை.. நானும் சொல்லுவேனே..வாசு சார் நான் ஒரு பி.எம். பண்ணியிருக்கேனே..
-
12th October 2014, 02:12 PM
#266
Senior Member
Seasoned Hubber
ஆஹா... வாசு சார்... சி.க.வை வரவழைக்க என்ன மாதிரியெல்லாம் ஐடியா போடுகிறீர்கள்... சூப்பர் சார்...
எங்கே நம்ம கிருஷ்ணா...ஜீ....யைக் காணோம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th October 2014, 02:16 PM
#267
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
ஆஹா... வாசு சார்... சி.க.வை வரவழைக்க என்ன மாதிரியெல்லாம் ஐடியா போடுகிறீர்கள்... சூப்பர் சார்...
எங்கே நம்ம கிருஷ்ணா...ஜீ....யைக் காணோம்...
கிருஷ்ணாஜி இன்று லீவ் ராகவேந்திரன் சார். ஈவ்னிங் வருவார்.
-
12th October 2014, 02:17 PM
#268
Junior Member
Seasoned Hubber
Mr Neyveliar - a song from your favourite movie. Enjoy
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th October 2014, 02:29 PM
#269
Senior Member
Seasoned Hubber
அருமையான தேர்வு வாசு சார்... இலங்கை ரேடியோவின் புண்ணியத்தில் இப்பாடலும் ஹிட்டாகியது. சங்கர் கணேஷின் பங்களிப்பு தமிழ்த்திரையுலகிற்கு கணிசமானதாகும். அதில் அவர்கள் ஏ.எம்.ராஜாவின் இரண்டாவது ரவுண்டை அமர்க்களமாக தொடங்கி வைத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் இளையராஜா அவர்களின் இசையில் ஏ.எம்.ராஜா அவர்கள் ஒரு பாடல் பாடியுள்ளார். இன்று வரை அதனுடைய விவரம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பாடியிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். ஒரு கிராமஃபோன் இசைத்தட்டில் இந்த விவரங்களைப் பார்த்தேன். ஆனால் படத்தின் பெயர் சரியாக நினைவில்லை.
மேலே தாங்கள் அளித்துள்ள பாட்டும் மறக்க முடியாத பாட்டுத் தான்.
இதில் ஏ.எம்.ராஜாவின் குரலில் ஏற்பட்ட தொய்வையும் மாற்றத்தையும் அப்பட்டமாக பிரதிபலித்த பாடல் மனதுக்குத் தெரியும் உன்னை என்கிற பாடல்.
மற்றவை ஓ.கே. ரகம்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th October 2014, 02:48 PM
#270
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..
ஹாய் வாசு சார்.. சின்னக் கண்ணனே பாட்டு எனக்குப் பிடித்த பாடல்..வீட் போய் தான் படம் பார்க்கவேண்டும். அஸ் யூஸ்வல் கதைச்சுருக்கம் அண்ட் பதிவு குட்.. நன்றி..
சச்சா மம்மா பப்பா ஓ.. அழகு மொழி...பருவ எழில்...முத்துரதம் முழு நிலவோமுத்தமிழின்..கரையெதுவோ தந்தாள் உன் அன்னை உன்னை.. (லிரிக்ஸ் தப்பா இருக்கலாம்) ஹம்மிங்க் ஒலிக்கிறது..அது என்ன பாட்டு..
ஹை.. நானும் சொல்லுவேனே..வாசு சார் நான் ஒரு பி.எம். பண்ணியிருக்கேனே..

தேங்க்ஸ் சி.க .சார்.
'மின்மினியைக் கண்மணியாய் கொண்டவனை
என்னிடமே தந்தாள் உன் அன்னை(அம்மாதான்) உன்னை'
டி.எம்.எஸ், ராட்சஸி பாடிய எவர்க்ரீன் பாடல். 'கண்ணன் என் காதலன்' படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களும், ஜெயலலிதா அவர்களும் குழந்தையுடன் பாடும் பாடல். சாகாவரம் பெற்ற பாடல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks