-
12th October 2014, 10:25 PM
#291
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
//என்னை விட்டு ஓடிப் போக முடியுமா// இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.. (இப்போ ரொம்பக்குளிருமா ராஜ்ராஜ்சார்)
You have to put up with 60 deg F difference !
Bring warm clothing ! The high is about 60 deg F ! Nice weather !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
12th October 2014 10:25 PM
# ADS
Circuit advertisement
-
13th October 2014, 12:33 AM
#292
Senior Member
Senior Hubber
அவன் அழகன். அவள் அழகி.. (பெயரும் அதுவே தான்) பருவம் இளமை..பின் என்ன காதல் தான்..
கண்ணிமைக்க மாட்டேனே கண்ணா நானும்
கண்ணுக்குள் நீயிருப்ப தாலே தானே
எண்ணங்கள் மயங்குகின்ற மாலைப் போதும்
..ஏற்றாதே உறக்கத்தை எந்தன் விழியில்
என அவள் சொல்ல
பண்ணிசைத்துப் பாடுகின்ற பாவை உந்தன்
..பக்குவத்தை நானறிவேன் கேட்பாய் நீயே
தன்னிறைவு பெறலாமே மணந்தான் செய்தே
தளிர்க்கொடியே விரைவில்தான் என்றே சொன்னான்..
பின் என்ன..இருவீட்டார்களுக்கும் மகிழ்ச்சி.. வாவ் வாட் எ பேர் யா.. என கண்கொட்டாமல் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து இருக்கையில் பொசுக்கென்று கண்..
எதற்கோ அந்த அழகி எங்கோ செல்ல விபத்தாகி விடுகிறது.. மோதிய கார்க்கார டாக்டர் தம்பதிகளுக்கு பயம்..அதே சமயம் கருணை உள்ளம்.
அந்தப் பெண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டு தங்கள் ஊருக்கே அதாவது சென்னைக்கே கொண்டு சென்று விடுகிறார்கள்..
அழகியையோ காணோம்.. ஊர் என்ன செய்யும்.. ஏசுகிறது.. ஒழுங்காகப் பெண்பார்த்தாயா அழகனுக்கு என அழகனின் பெற்றோரை.. அழகனுக்கோ தெரியும் ஏதோ அழகிக்கு ஆகிவிட்டது என்று..
ஊரில் அவர்கள் சந்திக்கும் ஆலமரம், கோவில் ஏரிக்கரை எல்லாம் தேடிப்பார்க்கிறான்.ம்ஹீம் இல்லை..துயரில் கண்களில் தண்ணீர்லாரியிலிருந்து தளும்பும் நீர்போல நீர் தளும்பிக்கொண்டே இருக்கிறது.. உலகத்திலேயே படிக்காமல், கேட்காமல், பார்க்காமல் வளரக்கூடிய ஒன்றே ஒன்று..முகத்தில் தாடி சமர்த்தாய் அடர்த்தியாய் மிகக்கருப்பாய் அவன் கண்களின் கருவளையத்துக்குப் போட்டி போட்டு வளர்கிறது..
பார்க்க சகிக்க முடியாமல் போகவே அப்பா அழகனைக் கூப்பிடுகிறார்.. மகனே
டாடி
இந்தப்பார்..அந்தப் பெண் எங்கோ ஓடிப் போய்விட்டாள்
அப்படி எல்லாம் இருக்காதுப்பா.. ஏதோ ஆச்சு என் அழகிக்கு
சரி அப்படியே இருக்கட்டும்..அவ திரும்பி வருவான்னு உனக்கு நம்பிக்கை இருக்கா
டன் டன்னாப்பா..
தென்..வா என்கூட.. நாம சென்னை போவோம்..சென்னை நீலாங்கரைப் பக்கத்தில நம்ம பங்களா சும்மா தான் இருக்கு. அங்கே போய் தேடுவோம்..
சரி என்று சொல்லிச் சென்னை.. நீலாங்கரை பங்களா.. பின்புறம் அழகிய கடல்..
அப்பா சொல்லி விடுகிறார்.. டேய் இங்க உள்ள மேகசீன் நண்பர்களிடமெல்லாம் சொல்லி வைத்திருக்கிறேன்..உன்னவளோட ஃபோட்டோவையும் தான்..கவலைப் படாதே..கடல் இருக்குன்னா டபக்குன்னு குதிச்சுடாத.. இது நான் சொந்தமா சேர்த்த சொத்து.. ட்ரஸ்ட்லாம் எழுதி நல்லகாரியம்லாம் என்னைப் பண்ணவெச்சுடாதே..
சரி
சரில்லாம் பத்தாது..இந்தா ஐ நூறு ரூபா..
எதுக்குப்பா
அதான் முகத்துல ஒரு தாடித் தோட்டமே வச்சுர்க்கியே.. தலையும் பாக்க பயங்கரமா இருக்கு.. சமத்தா வெட்டிக்கிட்டு வா..இவ்வளவு ஆகும்..
போய் வேண்டா வெறுப்பாய் முகம், முடி திருத்தி மாலை கடற்கரையில் தரையைப் பார்த்தவண்ணம் நடந்தால் தொலைவில் யார்.. கொஞ்சம் கிட்டக்கச் சென்று பார்த்தால் அவள் தான்..
அவள் இயல்பில் சற்றுக் குள்ளம் தான்..ஒல்லியான உடம்பு..அவனுடைய அழகி தான்..அழகாய்ப் பாவாடை சட்டை தாவணி.. முகம் மட்டும் சற்றே வெளிறியிருக்கிறது..
அழகி அழகி..
அவளோ அவனை ப் புதிராய்ப் பார்க்கிறாள்..
யார் நீங்க..
அதற்குள் அந்த டாக்டர் தம்பதிகள் வர, டாக்டரின் மனைவி அவளை அழைத்துக் கொண்டு சென்று விட டாக்டரிடம் அவன் தன்கதையைச் சொல்ல..ஓ நீ அந்த மரங்கொத்தி கிராமமா.. அங்கு தான் இவளுக்கு ஆக்சிடெண்ட் ஆகி நினைவெல்லாம் போய்டுத்தேப்பா..
சார்..மறுபடியும் வருமா
இந்தபார் என்னை என்ன சினிமா டாக்டர்னா நினச்சே.. நெஜம்மாவே நிறையப் படிச்சவனாக்கும்..எனில் இவளுக்கு அனேகமா ஒரு சில மாதங்கள்ள வரலாம் வராமலும் போகலாம்..
இப்பத் தான் சினிமா டாக்டர் மாதிரிப் பேசறீங்க..
சரி வா.. நீயும் ட்ரை பண்ணு..
அழகியின் அருகே சென்று அழகன் டாக்டரின் நண்பன் என அறிமுகப் படுத்தி அவளுடன் தான் பழகிய நாட்கள், அவர்கள் பேசிக்கொண்ட வெற்று இனிமைகள் (தமிழில் ஸ்வீட் நத்திங்க்ஸ்) இன்னும் இன்னும்பலப் பலவாய் சொல்லச் சொல்ல..
நாட்களும் செல்லச் செல்ல
ஒரு நாள் மறுபடியும் அவளுக்கு அடிபடுகிறது..அஃப்கோர்ஸ் நினைவும் வருகிறது..
இவனுக்கோ வாழ்க்கை வெறுக்கிறது..அவளுக்கு நினைவு திரும்பவில்லை என மறுபடியும் கடைசிமுயற்சியாக அவர்கள் சந்தித்ததும் தம்மைப் பற்றிச் சிந்தித்ததும் ஆனகதையைச் சொல்லிப் பாடுகிறான்..
அவளுக்கோ நினைவும் வருகிறது.. கண்ணில் நீரும் வருகிறது.. முகம் சோகமான ஹூட் ஹூட் புயலால் பாதிக்கப் பட்ட செடியாய் வாட,கண்களில் மலையாளத் தண்ணீர்..அதாவது வெள்ளம்..
ஹோ மை ஸ்வீட் ஹார்ட் என் அழகா, அழகுக் கண்ணா.. உனை இவ்வளவு நாளா மறந்துட்டேனே என்றபடி அவனைத் தொடர்ந்து பாடி அவனை அணைத்துக் கொள்கிறாள்..பின்னால் வரும் டாக்டரும் அவரது சகாக்களும் ஜோடிகள் இணைந்ததில் ஆனந்தம் கொள்கின்றனர்..
இது மலர்களே மலருங்கள் என்ற படத்தின் மிகச் சுருக்கிய கதையே இல்லை!
மலர்களே மலருங்கள் என்ற படத்தில் ஜேசுதாஸூம் எஸ்.ஜானகியும் பாடிய பாடலைப் பார்த்ததால் அதற்கேற்ப இட்டுக் கட்டிப் பார்த்த கதையாக்கும்..
அழகான பாடல். சற்றே வெளிறிய உயரக் குறைவான தாமரையாக ஒல்லி வனிதா, (ஆச்சர்யம்) ஆற்று மணற்படுகையைப் போல வரிவரியான ஹேர்ஸ்டைலுடன் சுதாகர்.. நல்லபாடல்
**
.ஞாபகம் இல்லையோ
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பாடுவது உனை பார்த்தாடும் நெஞ்சம்
பார்வைகளில் பல பாவங்கள் கொஞ்சும்
ஓடும் நீரானதே எண்ணமே
இசை தேவன் சன்னிதி அதில் காணும் நிம்மதி
தினம் தேடித்தேடி பாடும் ஏழை மனம்
நெஞ்சமதில் அந்த நினைவென்னும் வண்ணம்
எண்ணுகின்றேன் அவை அழியாத எண்ணம்
எந்தன் முன் ஜென்மத்தின் புண்ணியம்
உனை காண நேர்ந்தது இசை பாட சேர்ந்தது
இனி இன்றுபோல வாழும் என் மனது
ஞாபகம் இல்லையோ கண்ணா
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணா
ஞாபகம் இல்லையோ
வீடியோ..கீழே..
https://www.youtube.com/watch?featur...&v=dlgENw6-aJ0
*
அடப்பாவி இதைச்சொல்ல இவ்ளோ பெர்ரிய கதையா என அடிக்க வருமுன் எஸ்ஸ்ஸ்கேப்..!
Last edited by chinnakkannan; 13th October 2014 at 12:36 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th October 2014, 01:19 AM
#293
Senior Member
Seasoned Hubber
Chinnakkannan: Here is the solo version of ஞாபகம் இல்லையோ கண்ணே...
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பாடுவது உன்னை பார்த்தாடும் நெஞ்சம்
பார்வைகளில் பல பாவங்கள் கொஞ்சும்
ஓடும் நீரானதே எண்ணமே
ஆ... ஆ ஆ ஆ... ஆ... ஆ...
ஓடும் நீரானதே எண்ணமே
இசை தேவன் சன்னிதி
அதில் காணும் நிம்மதி
தினம் தேடித் தேடி பாடும் ஏழை மனம்
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
வைகறையில் பனி தான் மூடும் நேரம்
வைகை நதிக் கரை பூஞ்சோலை ஓரம்
வந்து போராடுதே என் மனம்
ஆ... ஆ ஆ ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
வந்து போராடுதே என் மனம்
உனைக் காண நாளெல்லாம்
பல வந்து போனது
உறங்காத கண்கள் உன்னைத் தேடியது
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம்இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
கண்ணே...
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
13th October 2014, 09:05 AM
#294
Senior Member
Devoted Hubber
மதுரகான வாசகர்கள் நேயர்கள் அன்பர்கள் நண்பர்கள்
அனைவருக்கும் வணக்கம்
வாசு சார் உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிரமிப்பாக
இருக்கின்றன வாழ்த்துக்கள்
எனக்கு ஒரு பாடல் வேண்டும்
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்த
தெய்வதிருமகள் படத்தில் இடம்பெற்ற
சந்தையிலே நான் கண்ட சரக்கு
நல்ல தங்கச்சிலை போல இருக்கு
என்ற பாடல்
யாராவது முடிந்தால் பதிவேற்றம்
செய்யுங்கள்
நன்றி
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th October 2014, 09:48 AM
#295
Senior Member
Seasoned Hubber
சிவா
இதோ நீங்கள் கேட்ட தெய்வத்திருமகள் படப்பாடல்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th October 2014, 09:59 AM
#296
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th October 2014, 10:00 AM
#297
Junior Member
Platinum Hubber
MUSIC DIRECTOR - SUDHARSAN
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th October 2014, 10:01 AM
#298
Junior Member
Platinum Hubber
1963- PONGAL GREETINGS
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th October 2014, 10:02 AM
#299
Junior Member
Platinum Hubber
1963- PONGAL GREETINGS
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
13th October 2014, 10:05 AM
#300
Senior Member
Diamond Hubber
வினோத் சார்,
ஜெமினி சாவித்திரியின் பொங்கல் வாழ்த்து அபூர்வம்
சுதர்சனம் என்ற அந்த அருமையான இசையமைப்பாளரின் புகைப்படத்திற்கு நன்றி!
'கனிமுத்து பாப்பா' இசையரசி புகைப்படமும் அருமை.
Bookmarks