Page 62 of 397 FirstFirst ... 1252606162636472112162 ... LastLast
Results 611 to 620 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #611
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    ஆதி நாராயண ராவ் .. அருமையான இசைக்கலைஞர். மராட்டி இசையை தெலுங்கு இசையுலகுக்கு அறிமுகம் செய்தவரும் இவரே

    அப்படிப்பட்ட 2 பாடல்கள் இதோ

    மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்(தெலுங்கில் ஸ்வர்ண மஞ்சரி)

    பழம்பெரும் நடிகர் நாகய்யாவும் இசையரசியும் பாடும் மதுரமைனா குரு தீவெனா







    அடுத்து பக்த துகாரம் திரையில் எல்லாமே அருமையான பாடல்கள்

    அப்படி ஒரு பாடல் இதோ. பொடி சங்கதிகள் , மராட்டிய இசை என தூள் கிளப்பும் பாடல் . இசையரசி பின்னுகிறார்


  2. Likes Russellmai, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #612
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..


    கோபால் சார்..இதயக்கமலம் இந்த ஒரு வருடத்திற்குள் தான் பார்த்தேனா என நினைவில்லை.. கலைஞர் டிவி என நினைவு.. பாடல் மட்டும் நினைவிருக்க படம் சுத்தமாய் மறந்து விட்டிருக்க பார்க்க த்ரிலலக இருந்தது (வெள்ளிக்கிழமை மதிய த் தூக்கத்தை விட்டுப் பார்த்த ப்டம்)

    //"என்னதான் ரகசியமோ இதயத்திலே.." என்று துவங்கும் இந்தப் பாடல் காட்சியில் ஷீலா, கே.ஆர். விஜயா ஆகிய இருவருமே நடித்திருப்பார்கள். பி.சுசீலாதான் இருவருக்குமே பாடி இருப்பார்.

    ஷீலா பாடுவதாக அமைந்த பல்லவியும், சரணங்களும் "காபி" ராகத்திலும், கே.ஆர். விஜயா பாடும் சரணங்கள் "திலங்" ராகத்திலும் முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்த பாடல் இது.// இந்தப் பாட்டு ரொம்ப அழகாய்ப் படமாக்க ப் பட்டிருக்கும்..சுசீலாம்மாவும் வெகு அழகாகப் பாடியிருப்பார்..

    ஒரு ஒரியப் படத்தை எல்.வி ப்ரசாத் எடுத்து ஆருர் தாஸிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்லி பின் அதற்கு கைகால் கண் மூக்கெல்லாம் போட்டு ஆரூர் தாஸ் கதை வசனம் எழுதியதாக அவருடைய ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார்.. கே.ஆர்.வி யின் இரண்டாவது படம்..இம்மெச்யூரிட்டி படக்கென நடிப்பில் தெரியும்.. (ஆரூர் தாஸா சித்ராலயா கோபுவா நினைவில்லை)

    ஸ்ரீதர் படப் பாடல்களுக்கு நன்றி ராக வேந்தர் சார்.. நானே நானா, துயிலாத பெண்ணொன்று கண்டேன் எல்லாம் என் உயிர்ப்பாடல்கள்... பிற்காலப் படங்களில் ஸ்ரீ தர் பாடல்களில் எனக்கு மிகுந்த இஷ்டம் எது தெரியுமோ.. மலய மாருதத்தில் (கோபால் சார் சரிதானே) வரும் கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்



    ராஜேஷ்.. யா..ஜானகியாக்த் தான் இருக்கும் என நினைத்தேன்..வாணி என இட்டு விட்டேன்.. அந்த ஆணிப் பொன் வாலி ஐயா விட்டதே இல்லை..

    ஆணிப்பொன்னு ஐயராத்துப் பொண்ணுன்னு இன்னொரு பாட்டில் வேறு எழுதியிருப்பார்..

    ஒரிஜினல் பார்த்தால் பாசுரமாக்கும்..

    மாணிக்கங்க் கட்டி வைர மணிக்கட்டி
    ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்

    அப்புறம்...ஸ்ரீதரோட பாட்டுன்னா இதைச் சொல்லாம விட முடியுமோ..

    கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை



    அப்புறம் வாரேன்..

  5. Likes Russellmai, vasudevan31355, rajeshkrv liked this post
  6. #613
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    chinnakkaNNan: I posted 'achutham keshavam' in Sanskrit classical compositions in movies' thread as I said. Play it in the morning and avaoid being chastised !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  7. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  8. #614
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (99)

    'இன்றைய ஸ்பெஷலி'ல் பத்மினி பிக்சர்ஸ் அளிக்கும் 'தேடி வந்த மாப்பிள்ளை' படத்திலிருந்து மனத்தைக் கொள்ளை கொள்ளும் ஒரு பாடல். 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அசோகன், சோ, ஜோதிலஷ்மி, எம்.வி.ராஜம்மா, மேஜர் சுந்தர்ராஜன், விஜயஸ்ரீ, காந்திமதி முதலானோர் நடித்திருந்தனர். பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய இப்படத்திற்கு இசை 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். வசனம் 'எம்.ஜி.ஆரி'ன் ஆர்.கே சண்முகம். (உதவி டைரக்ஷன் பொறுப்பும் இவர் ஏற்றிருப்பார்). பாடல்கள் கண்ணதாசன் மற்றும் வாலி. நடனம் பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சோப்ரா. ஒப்பனை பீதாம்பரம்.



    பணக்கார குடும்பப் பெண் ஜெயலலிதாவிற்கு மேல்நாட்டு சங்கீதம் கற்றுத்தர அவரின் அப்பா 'மேஜர்' சுந்தர்ராஜன் ஒரு வேதாந்தி மாஸ்டரை பேப்பர் விளம்பரம் தந்து ஏற்பாடு செய்ய, அங்கு தன் தந்தையைக் கொன்றவர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு எம்.ஜி.ஆர் வயதான மாஸ்டராக மாறு வேடம் பூண்டு வருகிறார். ஜெயலலிதாவுக்கு பியானோ வாசித்தபடி சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார்.

    இந்த சிச்சுவேஷனில் வரும் பாடல்.



    எம்.ஜி.ஆர் வயதான கெட் -அப்பில். நரைத்த பிரவுன் கலர் முடி, வழுக்கைத் தலை,தொங்கு மீசை, தாடி, கருப்பு கோட் சூட், கூலிங் கிளாஸ், கையில் குடை ஸ்டிக் என்று சார்லி சாப்ளின் தோற்றத்தில் கனகச்சிதம். (பீதாம்பரம் ஒப்பனையில் கலக்கியிருப்பார். எம்.ஜி.ஆரை மிக வித்தியாசமான மாறு வேஷத்தில் ஒப்பனை செய்து காட்டி சபாஷ் வாங்குவார்). எம்.ஜி.ஆர் இந்த ரோலில் அட்டகாசமாய் மின்னுவார். மிக அழகாக காமெடி இழையோட இந்த ரோல் படைக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர் அவர்களும் இந்த வயதான மாஸ்டர் பாத்திரத்தை உணர்ந்து பண்ணியிருப்பார். (அது என்னவோ தெரியவில்லை... சாப்ளின் ரோல் பண்ணினாலே நம்ம நடிகர்களுக்கு மிகவும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். கமல் கூட 'புன்னகை மன்னன்' படத்தில் 'சாப்ளின்' செல்லப்பாவாக பிளந்து கட்டியிருப்பார்)

    பந்துலு தன் படங்களில் எம்.ஜி.ஆர் அவர்களின் வழக்கமான பாணியோடு சேர்த்து சற்றே வித்தியாசமாக காமெடி கலந்து உலாவ விடுவர். 'ரகசிய போலீஸ் 115' லும் சரி, 'தேடி வந்த மாப்பிள்ளை' படத்திலும் சரி... காமெடி படத்தோடும், கதையோடும் மெலிதாகச் சேர்ந்தே பயணிக்கும். ரசிக்கும்படியும் இருக்கும்.

    அது 'தேடி வந்த மாப்பிளை'யில் இன்னும் ரசிக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுவும் வயதான மியூசிக் டியூஷன் மாஸ்டர் ரோலில் இன்னும் அது அதிகமாக வெளிப்படும். இந்த ரோலும் மிக வித்தியாசமான எம்.ஜி.ஆர்.அவர்களை நாம் கண்டு ரசிக்க முடியும். (வழக்கமான மாறு வேஷத்தில் வந்து அறிவுத்தல் பாடல்கள் போல் இல்லாமல் இது செம வித்தியாச ஜாலி)

    ஜெயலலிதா மேஜரின் மகளாக வந்து எம்.ஜி.ஆருடன் ஆடிப் பாடுவது அமர்க்களம். அம்மணிக்கு சொல்லியா கொடுக்கணும் நடனம் ஆட? அதுவும் வெஸ்டர்ன். ஜமாய்ப்பார்.


    பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாப்ளின் ஸ்டைலில் எம்.ஜி..ஆர் அவர்களை அற்புதமாய் ஆட வைத்து நம்மை ரசிக்க வைத்திருப்பார். பாடலின் துவக்கத்தில் அந்த பியானோ ஒலியின் ஆர்ப்பாட்டம் தொடங்கும் போது எம்.ஜி.ஆர் பியானோ வாசித்தபடி தலையாட்டுவது அருமையாக இருக்கும். பியானோ இசைக்குத் தக்கவாறு மேடம் கைகளில் சிட்டிகை சொடுக்கியபடியே கால்களை மாற்றி மாற்றி வைத்து ஓடிச் செல்லும் அழகே அழகு.

    இரண்டு கால்கையும் அகல விரித்து, முழங்கால்களை மடக்கி, இரு பாதங்களையும் எதிரெதிர் திசையில் ஷூவோடு வைத்தவாறு கையில் ஸ்டிக் வைத்துக் கொண்டு நடந்து வரும் சாப்ளினின் ஸ்டைல் சிறு குழந்தைகளுக்கும் தெரியும். அதை எம்.ஜி.ஆரும் நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். அதனுடன் வயதான தள்ளாட்டத்தையும் சேர்த்துக் காண்பித்திருப்பார். 'பப்பரப்பா' எனும் போது தொப்பியைத் தூக்கி வழுக்கையைக் காட்டுவது ஜாலியான காமெடி.

    அதே போல பாடலின் இடையிசையில் வரும் அந்த டேப் மியூசிக் ஒலிக்கு எம்.ஜி.ஆர் பொருத்தமாகவே ஸ்டெப்ஸ் வைப்பார். எம்.ஜி.ஆரா இது என்ற ஆச்சர்யம் மேலிடும். ஒரு இடத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணையாக ஆடும் போது புரிந்து கொண்டு மிக அழகான ஸ்டெப்ஸ்களை டைமிங்காக வைப்பது ஜோர்.


    இப்பாடலில் கொடி கட்டும் இன்னொரு மாஸ்டர் 'மெல்லிசை மன்னர்' மாஸ்டர்தான். யப்பா! என்ன ஒரு உறசாகம்! என்ன ஒரு வேகம் கலந்த விவேகம்! சும்மா பியானோ புகுந்து புறப்பட்டு துவம்சம் செய்துவிடும். இப்பாடலின் ஒவ்வொரு வினாடியும் இசைக்கருவிகள் புரியும் விந்தைகள் சொல்லி முடியாது. (இதே போல 'கண்ணன் என் காதலன்' படத்தில் 'பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்" பாடலில் பியானோவில் விளையாடி இருப்பார்) பாடலின் முடிவில் சௌந்தரராஜன் 'லலலல்லலா' என்று முடித்தவுடன் அதே 'லலலல்லலா' வை டிரம்பெட்டில் கொண்டு வருவது ஏக ரகளை.

    பாடல்கள் வரிகள் செம ரகளை.

    சங்கீத ஞானம், சரசம், சுகம் தானே வரும்.... அதுவாய் கனியும் கனி உண்டு, அடித்துக் கனியும் கனியும் உண்டு... இசை ஞானம் தானே வர வேண்டும், யாரும் சொல்லி வரக் கூடாது என்ற பொருள் பதிந்த வரிகள்.

    'இசையை ரசிப்பது உண்டு
    இடையை ரசிப்பது உண்டு'

    வரிகளில் கவிஞரின் குறும்பு கொப்பளிப்பதைப் பாருங்கள்.

    'எதிலே விழுந்தால் சுகமோ
    அதிலே இதயம் பதிவதும் உண்டு'




    அற்புதமான வைர வரிகள். எதில் சுகம் இருக்கிறதோ அந்த விஷயத்தில் நம் மனது ஆழமாகப் பதிந்து விடுவது இயற்கை. (இப்போது என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன்... நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பில் ஈடு இணையில்லா சுகம் நான் கண்டதனால்தான் என் இதயம் அவர் வசமாகி விட்டது)

    அதை இரண்டே வரிகளில் உணர்த்திய கவிஞரின் திறமையை எப்படிப் புகழ!

    'தள்ளாடும் இடையுடன் நடமிடும் பெண்ணின்
    கண்ணே காதலின் வாசல்'

    மேற்கண்ட வரிகளுக்கு விளக்கம் வேறு தேவையா? அட்டகாசம் போங்கள். பாடகர் திலகம் பட்டை கிளப்பியிருப்பார்.


    இசையமைப்பாளர், நடன இயக்குனர், ஒளிப்பதிவாளர், மேக்-அப் மேன், பாடலாசிரியர், பாடகர், நடிக நடிகையர் அனைத்தும் ஒன்று சேர்ந்து இப்பாடலை அற்புதமாக பரிமளிக்கச் செய்திருப்பார்கள்.

    மொத்தத்தில் அதியற்புத இசைப் பின்னணி கொண்ட இன்பத்தை அள்ளித் தரும் பாடல்.


    இனி பாடலின் வரிகள்



    தொட்டுக் காட்டவா
    மேலை நாட்டு சங்கீதத்தைத் தொட்டுக் காட்டவா
    வட்டம் போடவா
    வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா

    ஹூ..ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ
    லலலல்லலா பப்பரப்பா

    தொட்டுக் காட்டவா
    மேலை நாட்டு சங்கீதத்தைத் தொட்டுக் காட்டவா
    வட்டம் போடவா
    வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா

    அதுவாய்க் கனிவது உண்டு
    அடித்தால் கனிவது உண்டு
    சங்கீத ஞானமும், சரசமும் சுகமும்
    தானே வருவது உண்டு
    இசையை ரசிப்பது உண்டு
    இடையை ரசிப்பது உண்டு
    எதிலே விழுந்தால் சுகமோ
    அதிலே இதயம் பதிவதும் உண்டு

    தொட்டுக் காட்டவா
    மேலை நாட்டு சங்கீதத்தைத் தொட்டுக் காட்டவா
    வட்டம் போடவா
    வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா

    தாளத்தில் விழுவது பாடல்
    தாகத்தில் எழுவது காதல்
    தள்ளாடும் இடையுடன் நடமிடும் பெண்ணின்
    கண்ணே காதலின் வாசல்
    ஆசையைத் தருவது மேனி
    ஆசையைத் துறந்தவன் ஞானி
    அஞ்சாமல் நடப்பதும் வேரியைப் பார்ப்பதும்
    நவீன உலகத்தின் பாணி

    தொட்டுக் காட்டவா
    மேலை நாட்டு சங்கீதத்தைத் தொட்டுக் காட்டவா
    வட்டம் போடவா
    வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா

    ஹூ..ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ
    லலலல்லலா பப்பரப்பா


    Last edited by vasudevan31355; 20th October 2014 at 01:57 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks Richardsof thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post
  10. #615
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த பாடல் எனது பிடித்தம் கூட. தேடி வந்த மாப்பிள்ளை நிஜமான ஜாலி படம். தொட்டு காட்டவா,சொர்கத்தை தேடுவோம்,இடமோ சுகமானது,வெற்றி மீது எல்லாமே நல்ல படமாக்கம்.இந்த பாடல் வேடம்,அமர்க்களம்.



    இதே போல என்னை கவர்ந்த போயும்,போயும் மனிதனுக்கிந்த,எத்தனை பெரிய மனிதருக்கு,நானொரு குழந்தை,எங்கள் தங்கம் காலட்சேபம் இவற்றையும் பதிக்கலாம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #616
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தொட்டுக் காட்டவா நல்ல பாட்டு வாசுசார்..ம்ம் தேடிவந்த மாப்பிள்ளை.. அதுல தானே நாலுபக்கம் சுவரு.. நடுவுல பார் இவரு.. பாட்டு. சிவாஜி ஸ்டில் நல்ல இடம் நீ வந்த இடம் தானே..எதற்கு இங்கு போட்டீர்கள்..கொஞ்சம் புரியலை.இந்தப் பாட்டு வாலி தானே..வழக்கம் போல நன்றி.. ஆமா நூறாவத் போஸ்ட்டுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கொஞ்சம் தெரிந்த பாட்டாப் போடுங்க..

  12. #617
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //chinnakkaNNan: I posted 'achutham keshavam' in Sanskrit classical compositions in movies' thread as I said. Play it in the morning and avaoid being chastised ! // கண்டிப்பா.. I will do that.. இப்போக் கூட மறுபடியும் பாசுரங்களுக்குப் போகலாம்னு இருக்கேன்! அந்தத் தொடர் வேறு அப்படியே நிக்குது

  13. #618
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    .எதற்கு இங்கு போட்டீர்கள்..கொஞ்சம் புரியலை.ஆமா நூறாவத் போஸ்ட்டுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
    நன்றி சின்னக் கண்ணா சார். பதிவை முழுசாப் படிங்க.. அப்ப எதுக்குப் போட்டேன்னு புரியும். விவரமா எழுதி இருக்கேனே. கவனிக்கலையா?
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #619
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்

    தேடி வந்த மாப்பிள்ளை - படத்தில் இடம் பெற்ற ''தொட்டு காட்ட வா '' பாடலை மிக அற்புதமாக
    ஆய்வு செய்து பதிவிட்ட உங்களுக்கு ஒரு சபாஷ் . பாராட்ட வார்த்தைகள் இல்லை .

    ஒரு நாள் கூத்துக்கு மீசையை '' பாடல் - விரைவில் உங்களின் ஸ்பெஷல் பதிவை ஆவலுடன்
    எதிர்பார்க்கிறேன் .

  15. #620
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //எதிலே விழுந்தால் சுகமோ
    அதிலே இதயம் பதிவது உண்டு' //இந்த வரிக்குத் தானா..ஸ்டில் கூட கலரா மாற்றிவிட்டீர்களே..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •