-
29th October 2014, 09:11 AM
#851
Senior Member
Seasoned Hubber
Song: tujhe pyar karte hain karte rahenge...
Movie: APRIL FOOL (1964)
Lyrics: Hasrat Jaipuri
Music: Shankar Jaikishan
Singers: Mohmmed Rafi & Suman Kalyanpur
Actors: Biswajit & Saira Banu
Song: naan malarodu thaniyaaga...
Movie: IRU VALLAVARGAL (1966)
Lyrics: Kaviyarasu Kannadasan
Music: Vedha
Singers: TMS & P. Susheela
Actors: Jaishankar and Vijayalakshmi
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
29th October 2014 09:11 AM
# ADS
Circuit advertisement
-
29th October 2014, 10:55 AM
#852
===========================================நன்றி:த ிருமதி ஆனந்திராம்குமார்
வாலிப கவிஞர் வாலிக்கு இன்று பிறந்த நாள்!-29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013
********************************************
திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.
-
வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை, சில்க்காக இருந்தால் சந்தன நிறம், இவை தவிர வேறு விருப்பம் இல்லை!
-
`பொய்க்கால் குதிரை, `சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’, என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!.
-
`எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’ –கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
-
அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என 15 புத்தங்கள் எழுதி இருக்கிறார். சிறுகதை, கவிதை, உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!
-
எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!
-
வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும் ரமணத்திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள்.
-
வாலி வீட்டில் தயாராகும் தோசை, மிளகாய்பொடி ரொம்ப்ப் பிரபலம். `இன்று தோசை, மிளகாய்ப் பொடிக்கு வழியிருக்கா’ என்று அடிக்கடி எம்.ஜி.ஆர்.வந்துவிடுவாராம்!
-
வாலி இது வரை திரையிசைப் பாடல்களாக 15, 000-க்கு மேல் எழுதி இருக்கிறார். தனிப்பாடல்கள் கணக்கில் அடங்காது. இன்றும் எழுதிக் கொண்டே இருப்பதால், கணக்கு இன்னும் மேலே போதும்!
-
1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட் இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல், புதிதாக மாற்றிக் கொள்ளத் துணியாமல் வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார் வாலி!
-
சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
-
ஆரம்பத்தில் தங்கச் சங்கிலி, மோதிரம், ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார். இப்போது எல்லாம் தவிர்த்துவிட்டு, எளிமையை அணிந்திருக்கிறார்!
-
17 திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் வாலி, அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன், ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி ஒரே ஒரு கிராமத்தில் இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மாருதிராவோடு சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
-
1966 –ல் `மணிமகுடம்’ படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்கிறது. `அவதார புருஷ்ன்’ விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசி அழைப்பு கலைஞருடையது!
-
எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர்.எப்பவும் `என்ன ஆண்டவனே’ என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!
-
பத்மஸ்ரீ, பாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத்தமிழ் மாநாடு போன்றவற்றின் இவரது பங்கும் உண்டு!
-
ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி, திருலோக சீதாராம்,ஏ.எல்.ராகவன்,ஸ்ரீரங்கம் நரசிம்மன், ராமகிருஷ்ணன்ம் பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
-
வாலி தனிமை விரும்பி அல்ல, எவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக் கொடுத்தால் கவிதை வந்து விடும்!
-
வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
-
வாலியின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் அவரின் உதடுகள் `முருகா’ என்று தான் உச்சரிக்கும். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் தரத் துடிப்பார்!
-
வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வரலாறு , அவர்களின் திறன்,ஸ்டைல் எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார், போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால் முடியும்!
-
எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து, ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான், இன்னும் பழநி பாரதி, நா.முத்துக்குமார், பா.விஜய் நெல்லை ஜெயந்தா, என எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!
-
2005 –ல் raaj டி.வி.வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக `என்றென்றும் வாலி’ என விழா எடுத்து 100 சவரன் தங்கம் பரிசு அளித்தார்கள், வராத நட்சத்திரங்களை, டைரக்டர்களை எண்ணி விடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு அது!
-
வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!
-
ஸ்ரீரங்கத்தில் `பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு `இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!
-
Last edited by gkrishna; 29th October 2014 at 11:03 AM.
gkrishna
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th October 2014, 11:07 AM
#853
மிகவும் ரசித்த வாலியின் வரிகள்
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்தினிலுமே இருப்பது தான் தெய்வம்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th October 2014, 11:17 AM
#854
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
நேற்று இரவு நீண்ட நாள் கழித்து பார்த்த (முழு படமும்) ரசித்த பலே பாண்டியா திரை படத்தில்
மூன்று கெட்டப்களில் வந்து - நாயகனை மிஞ்சும் விதத்தில் குணச்சித்திர நடிகர் எம். ஆர். ராதா பின்னியிருக்கிறார்.
ஆட்சேபிக்கிறேன் கிருஷ்ணா சார்.
'மிஞ்சும் விதத்தில்'.?! முடியவே முடியாது. இனி 'நடிகர் திலக' நாயகனை மிஞ்ச ஒருவன் பிறக்கவும் முடியாது... பிறக்கப் போறவனும் கிடையாது.
எம்.ஆர். ராதா மிகச் சிறந்த நடிகர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவருடைய விசிறி நான். ஒரு கேரக்டர் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் அந்த கேரக்டரில் நடிப்பவர் அந்தப் படத்தில் அவரைவிட பிரமாதமாக நடிப்பவர்களை விட நடிப்பில் விஞ்சி விட்டார் என்று பொத்தம் பொதுவாகச் சொல்வதுண்டு. அதனால் அவர் நடிப்பில் எல்லோரையும் விஞ்சியதாக ஆகி விட மாட்டார். அது அந்த சமயத்தில் அதாவது படம் பார்க்கும் அந்த மூன்று மணி நேரங்களில் அந்த கேரக்டருடன் ஒன்றி அதுவும் நகைச்சுவை பாத்திரம் என்றால் கேட்கவே வேண்டாம் அது ஏற்படுத்தும் தற்காலிக பாதிப்பை வைத்து அந்த கேரக்டரில் நடித்த நடிகர் இன்னொரு நடிகரை மிஞ்சி விட்டார் என்று சொல்வார்கள்.
உதாரணத்திற்கு 'திருவிளையாடல்' நாகேஷ் பண்ணிய தருமி கேரக்டர். சிவாஜியை விஞ்சி விட்டார் என்று சொல்லுவார்கள்.
'கீழ்வானம் சிவக்கும்' சரிதா சிவாஜிக்கு சரியான போட்டி. நடிப்பில் சிவாஜியைத் தூக்கி ஏப்பம் விட்டுவிட்டார் என்று சொல்லுவார்கள்.
'நீலவானம்' படத்தில் தேவிகா சிவாஜியைத் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்பார்கள்
'சபாஷ் மீனா' படத்தில் சந்திரபாபு சிவாஜியை காணாமல் செய்து விட்டார் என்பார்கள்
பெண்ணின் பெருமை, பார்த்தால் பசி தீரும் படத்தில் ஜெமினி சிவாஜியை விட ஒரு படி மேலே நடித்து விட்டார் என்பார்கள்
'கலியுகக் கண்ணன்' படத்தில் தேங்காய் 'கௌரவம்' பாரிஸ்டர் ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்று ஒரு காமெடிக் கூட்டமே கத்தியது. (கருமம்டா சாமி)
'நான் வாழ வைப்பேன்' படத்தில் ரஜினிதான் டாப்... சிவாஜி அப்புறம் தான் என்பார்கள்.
அதனால் மேலே கூறிய நாகேஷ், ஜெமினி, ரஜினி, சந்திரபாபுவெல்லாம் நடிகர் திலகத்தை விஞ்சிய நடிகர்கள் என்று கூறிவிட முடியுமா?
அந்தப் படத்தில் அவர்களுடய கேரக்டர்ஸ் அப்படி. அப்படியே இருந்தாலும் அவர்களையும் மீறி நடிகர் திலகம் அந்தப் படங்களில் ஜொலித்தாரே! அதுதான்யா நடிகர் திலகம்.
'பலே பாண்டியா'வுக்கு வருவோம். ராதாவிற்கு சுவாரஸ்யமான நீங்கள் சொன்னது போல 3 கெட்டப்புகள். ஆனால் மூன்றுமே நகைச்சுவை பாத்திரங்கள்தாம். நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரம் ராதாவுக்கு அல்வா சாபிடுவது போல. ஆனால் அவர் 'பலே பாண்டியா'வாக சிவாஜியை நெருங்கக் கூட முடியாது. கைலியை வழித்து கால் இடுக்குக்குள் செருகி பீடியை வாயில் சுழலவிட்டு வளிக்கும் மருதுவை ராதாவால் தொடக்கூட முடியாது. அம்மாஞ்சி விஞ்ஞானி சங்கராக அவரை நினைத்தால் அவர் பண்ணும் காமெடியைவிட இன்னும் சிரிப்பாகப் போய்விடும். 
முகத்தை அஷ்டகோணலாக்கி 'அய்யய்ய... வவ்வவ்வ' என்று ராதா பாடும்போது சிரிக்காதவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது. ஆனால் அந்த கோணல் சேஷ்டடைகளை எல்லாம் மீறி 'துதி பாடும்' என்று நடிகர் திலகம் நிறுத்தியவுடன் ராதா கன்னாபினாவென்று பாடி 'ஆ..தரிகிடத... தரிகிடத ஜம் ஜம்' என்று நிறுத்தியவுடன் நடிகர் திலகத்தின் முகபாவத்தைக் கவனியுங்கள்.
"என்னடா இது கஷ்டகாலம்... இப்படி வந்து மாட்டிகிட்டோமே... வேற ஏதும் வழியே இல்லையா?... தலையெழுத்து!" என்பது போல முகத்தில் ஒரு நொந்து போன வேதனையை காட்டி, (ஒரு மாதிரி உதடுகளை ஒரு செகண்ட் ஒன்று சேர்ப்பார் 'ப்ச்' என்பது போல) திரும்பப் பாடலை 'பபபபபபபாபா' என்று தொடங்கும் நடிகர் திலகத்திற்கு ராதாவுக்கு விழும் கைத்தட்டல்களைவிட, நூறு மடங்கு கைத்தட்டல்கள் தியேட்டரில் விழுந்து கூரை நொறுங்குமே! அந்த வினாடி முகபாவத்தை ராதா என்ன... அவர் தாத்தா என்ன... எந்த நடிகனாலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியுமா?
நடிப்பில் விஞ்சுவது என்றால் காட்சியமைப்பை வைத்தோ, பாத்திரப் படைப்பை வைத்தோ, கதையை வைத்தோ அல்ல. அது தற்காலிகமானது. ராதாவின் ரோல்களை செய்துவிட முடியும் அவர் போல முடியாவிட்டாலும் கூட. நடிகர் திலகத்தின் பாத்திரங்களை அவர் பாவங்களை எந்த நடிகனும் பாடமாக எடுத்துப் படிக்கலாமே தவிர, பார்த்து ரசித்துக் களிக்கலாமே ஒழிய, கர்ப்பகிரஹத்துக்குள் புகவே முடியாது. அப்புறம்தானே சாமியைப் பார்ப்பதற்கு?
ஒரு கட்டபொம்மனை, கப்பலோட்டிய தமிழனை, ஒரு ரங்கனை, ஒரு விக்கிரமனை தன் நடிப்பால் எம்.ஆர்.ராதா மிஞ்சியிருந்தால் நடிகர் திலகத்தை விட ராதா நல்ல நடிகர் என்று நானே ஒத்துக் கொள்வேன். ராதாவுடயது ஒரே பாணி. எல்லோரையும் எளிதாய்க் கவரக்கூடிய நகைச்சுவையுடன் கூடிய நையாண்டி பிளஸ் நக்கல் வில்லத்தனம். அதில் மட்டுமே அவர் சோபிக்க முடியும்.
ஆனால் நடிகர் திலகம் அப்படியல்ல. அது நடிப்பின் அட்சயப் பாத்திரம். எது வேண்டுமானாலும் அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கும். அள்ளுபவர்களுக்குத்தான் கை வலிக்குமே அன்றி அட்சயப் பாத்திரத்துக்கு அல்ல.
அதனால் எவரும் திலகத்தை மிஞ்சுவது என்ற பேச்சுக்கே அர்த்தமில்லை. மிஞ்சுவது என்றால் ஒரு படத்தில் கேரக்டரை வைத்து அல்ல. அந்த நடிகன் ஏற்ற அத்தனை கதாபாத்திரங்களையும் விஞ்சிய நடிப்பென்றால்தான் அந்த நடிகனை மிஞ்சிய நடிப்பு என்று நம் கூறலாம்.
இந்தப் பதிவை உங்கள் ஆருயிர் நண்பனின் கருத்தாக ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். கண்டிப்பாக நடிகர் திலகத்தின் கண்மூடித்தனமான அபிமானியாக இதை நான் பதிவிடவில்லை. அவர் ரசிகனாக நான் இல்லாமல் இருந்தால்கூட ஒரு சாதாரண ரசிகனாக இதே கருத்தைத்தான் வெளியிட்டிருப்பேன்.
ஒரு ஆர்வத்தில் எல்லோரும் சொல்வதுதான் நான் உட்பட. அதைத்தான் தாங்களும் இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த எனக்கு வாய்பளித்தமைக்கு நன்றி. (ஒருவேளை நாரதர் கலகமோ!) இது ஒரு ஆரோக்கிய வாதமே அன்றி விவாதம் அல்ல.
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான நீங்கள் இதை தவறாக நினைக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.
நன்றி கிருஷ்ணா சார்.
(ராதாவின் இன்னொரு பஞ்ச். 'லூஸ்' வசந்தியுடன் காரில் செல்லும் நடிகர் திலகத்தை அடியாட்களுடன் காரில் துரத்திச் செல்வார் ராதா. கார் வழியில் நின்று விடும். அப்போது,
ராதா: ஏன் வண்டி நிக்குது?
அடியாள்: கார் பஞ்சர் பாஸ்.
ராதா: கார் பஞ்சரா?! டயர் பஞ்சர்னு சொல்லு.
எப்படி? சூப்பரா இல்ல?)
Last edited by vasudevan31355; 29th October 2014 at 12:12 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
29th October 2014, 12:10 PM
#855
வாசு சார்
நடிகர் திலகத்தை பற்றிய நல்லதொரு அருமையான தொகுப்பு . உங்கள் கருத்துக்கு ஆட்சேபம் ஏதும் இருக்க முடியாது. நடிகர் திலகத்தின் படங்களில் உள்ள நல்ல அம்சமே அவர், தன படங்களில் உடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் நல்ல நடிப்பை தடுக்க மாட்டார்.
மூன்று கெட்டப்களில் வந்து - நாயகனை மிஞ்சும் விதத்தில் குணச்சித்திர நடிகர் எம். ஆர். ராதா பின்னியிருக்கிறார்
இந்த கருத்து கொஞ்சம் உள் வாங்கி பாருங்கள்.நாயகனை மிஞ்சும் நடிப்பு என்றால், அது சிவாஜியை மிஞ்சிய நடிப்பு என்று அர்த்தம் செய்து கொண்டோமானால் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை .
பலே பாண்டியா படத்தை எடுத்து கொண்டோமானால் யார் கதாநாயகன் ? கொஞ்சம் யோசியுங்கள்
பாடல்களை எடுத்து கொண்டோமானால் கண்ணதாசன் கதாநாயகன்
இசையை எடுத்து கொண்டோமானால் மெல்லிசை மன்னர்கள் கதாநாயகன்
கதை என்று ஒன்று பெரிதாக இல்லாமல் திரைகதை இயக்கம் செய்த பந்துலு கதாநாயகன்
மிக சிறந்த நகைச்சுவை படத்தின் இன்னொரு கதாநாயகன்
ஆக பல அம்சங்களில் சிறந்து விளங்கிய ஒரு படம்
நீங்களே சொல்லிவிட்டீர்கள்
ஒரு கேரக்டர் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் அந்த கேரக்டரில் நடிப்பவர் அந்தப் படத்தில் அவரைவிட பிரமாதமாக நடிப்பவர்களை விட நடிப்பில் விஞ்சி விட்டார் என்று பொத்தம் பொதுவாகச் சொல்வதுண்டு. அதனால் அவர் நடிப்பில் எல்லோரையும் விஞ்சியதாக ஆகி விட மாட்டார். அது அந்த சமயத்தில் அதாவது படம் பார்க்கும் அந்த மூன்று மணி நேரங்களில் அந்த கேரக்டருடன் ஒன்றி அதுவும் நகைச்சுவை பாத்திரம் என்றால் கேட்கவே வேண்டாம் அது ஏற்படுத்தும் தற்காலிக பாதிப்பை வைத்து அந்த கேரக்டரில் நடித்த நடிகர் இன்னொரு நடிகரை மிஞ்சி விட்டார் என்று சொல்வார்கள்.
படம் முடியும் போது நமக்கு கிடைக்கும் சில அனுபவங்களின் அடிப்படையில் சொல்லப்படும் தற்காலிக பாதிப்பு என்ற வார்த்தையின் வெளிபாடு தான் அது.
திரு சிவகுமார் (நடிகர்) அவர்களின் 1946-லிருந்து 75 வரை 'நடிகர் சிவகுமார் எழுதிய டைரி என்ற நூலைப் படித்தேன். (அல்லயன்ஸ் வெளியீடு).இந்த புத்தகத்தை நீங்களும் படித்து இருப்பீர்கள். நடிகர் திலகத்தை பற்றி மிக அழகாக விளக்கி உள்ளார் .
இந்த நேரத்தில் எனக்கு ஒன்று நினைவிற்கு வருகிறது வாசு
விடுதலை படம் முடிந்து வெளி வரும் போது கமல் ரசிகர்கள் சொன்ன வார்த்தைகள் 'கணேசன் தான் டாப் '
தேவர் மகன் படம் முடிந்து வெளி வரும் போது ரஜினி ரசிகர்கள் சொன்ன வார்த்தைகள் 'கணேசன் கலகிட்டான் இல்ல '
இதையும் நீங்கள் நடிகர் திலகம் அவர்களின் மிக சிறந்த ரசிகர் என்ற முறையில் நேர்மறை பொருளிலேயே எடுத்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
'மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் mischevious மன்மதன்' 
வாத விவாதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் நடிகர் திலகம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th October 2014, 12:15 PM
#856
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
'மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் mischevious மன்மதன்'
வாத விவாதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் நடிகர் திலகம்

இது... இது... கிருஷ்ணா சிங்கம்... என் தங்கம்.
-
29th October 2014, 12:22 PM
#857
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்!
வாதங்களும், அதற்கான விளக்கங்களும் ஒருவர் மனது ஒருவர் புண்படாமல் பண்பாடு காத்து நாகரிகமாக இதுமாதிரி புரிதல் உணர்வுடன் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம். முக்கியமாக நல்ல நட்பு பாதிக்கப்பட்டு விடவே கூடாது. நம் வாதப் பிரதிவாதங்கள் இவற்றுக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும். நல்ல புரிதலுக்கு நன்றி கிருஷ்ணா. தூள் கிளப்புங்கள். நான் செகண்ட் ஷிப்ட். ஆபீஸ் போய்விட்டு போன் பண்ணுகிறேன்.
கிருஷ்ணா சார்! நேற்று இரவு நடிகர் திலகம் என் கனவில் வந்து என்னிடம் சில நிமிடங்கள் அதம் புரிந்தார் தெரியுமோ. பிறகு சொல்கிறேன்.
Last edited by vasudevan31355; 29th October 2014 at 10:40 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
29th October 2014, 12:35 PM
#858

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்!
வாதங்களும், அதற்கான விளக்கங்களும் ஒருவர் மனது ஒருவர் புண்படாமல் பண்பாடு காத்து நாகரிகமாக இதுமாதிரி புரிதல் உணர்வுடன் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் கிருஷ்ணா சார் நம்முடைய விருப்பம். முக்கியமாக நல்ல நட்பு பாதிக்கப்பட்டு விடவே கூடாது. நம் வாதப் பிரதிவாதங்கள் இவற்றுக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும். நல்ல புரிதலுக்கு நன்றி கிருஷ்ணா. தூள் கிளப்புங்கள். நான் செகண்ட் ஷிப்ட். ஆபீஸ் போய்விட்டு போன் பண்ணுகிறேன்.
கிருஷ்ணா சார்! நேற்று இரவு நடிகர் திலகம் என் கனவில் வந்து என்னிடம் சில நிமிடங்கள் அதம் புரிந்தார் தெரியுமோ. பிறகு சொல்கிறேன்.
நிச்சயம் வாசு
காத்து இருக்கிறேன் படித்து ரசிக்க
-
29th October 2014, 01:58 PM
#859
வாலி பிறந்த நாள் -
ரகசிய போலீஸ் 115 படத்தில் வாலி எழுதிய கண்ணே கனியே என்ற பாடலில் நாயகியின் அழகு பற்றி வரும் வரிகள்
ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ
செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம் பாளை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன
-
29th October 2014, 02:37 PM
#860
வாலி பிறந்த நாள்- நன்றி பாடல் தொகுக்க உதவிய நண்பர் ராம் அவர்களுக்கு
பல்வேறு நடிகர்கள் வெவ்வேறு மொழிகளில் பாடிய தேச ஒற்றுமையை உணர்த்தும் பாரத விலாஸ் பாடல் : இந்திய நாடு என் வீடு .
எம்மதமும் சம்மதம்
தாய் மூகாம்பிகை : ஜனனி ஜனனி
முகம்மதுப்பின் துக்ளக் : அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை
வெள்ளை ரோஜா : தேவனின் கோயிலிலே
உறவில் மிக சிறந்த உறவு தாய் - கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
தேடி வந்த மாப்பிள்ளை : வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
மன்னன் : அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே
நியூ : காலையில் தினமும் கண் விழித்தால்
பிரபலங்களே பாடி நடித்த பாடல்கள்
நடிகர் திலகம் - போற்றிபாடடி பெண்ணே - தேவர் மகன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடி நடித்த அம்மா என்றால் அன்பு-அடிமைப்பெண்,
ரஜினி காந்த் பாடி நடித்த அடிக்குது குளிரு- மன்னன்,
கமல் பாடி நடித்த இஞ்சி இடுப்பழகி - தேவர் மகன்
சாகா வரம் பெற்ற தத்துவ பாடல் - கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்
நாயகி தன் தோழியரோடு பாடல் :
அன்று : பருவம் எனது பாடல் : ஆயிரத்தில் ஒருவன்
இன்று : அக்கடான்னு நாங்க உடை போட்டா : இந்தியன்
கடிதப்பாடல் :
அன்று : அன்புள்ள மான் விழியே -குழந்தையும் தெய்வமும்
இன்று : கண்மணி அன்புடன் நான் எழுதும் - குணா
கேலிப்பாடல் :
அன்று: என்ன வேகம் நில்லு - குழந்தையும் தெய்வமும்
இன்று - ஏ மாமா மாமா - மின்னலே
காதலியிடம்
அன்று : இந்த புன்னகை என்ன விலை -தெய்வத்தாய்
இன்று : என்ன விலை அழகே - காதலர் தினம்
பெண் வர்ணனைப் பாடல் :
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
(இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் தன காதலி விமலா எப்படி இருக்கிறாள் என்பதை பாடல் நாயகன் முருகன் வர்ணனை (பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் நடிகை மஞ்சுளாவிற்கு அப்படியே பொருந்தும் )
(மற்றும் உறவு முறை நடிகர்களின் வரிசையில்)
ஆழியிலே பிறவாத - பேசும் தெய்வம் (நடிகர் திலகம் )
பெண்ணல்ல பெண்ணல்ல - உழவன் (இளைய திலகம்)
அன்று : அவளுக்கும் தமிழ் - பஞ்சவர்ணக்கிளி (முத்துராமன்)
இன்று : ராஜா ராஜாதி -அக்னி நட்சத்திரம் (கார்த்திக்)
அன்று: உறவு என்றொரு சொல்லிருந்தால் - இதயத்தில் நீ (தேவிகா)
இன்று : அன்பே வா அருகிலே -கிளிப்பேச்சு கேட்கவா (கனகா )
அன்று- என்கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன் (சிவகுமார்)
இன்று- முன்பே வா -ஜில்லுனு ஒரு காதல் (சூர்யா) அலெக்ஸ் பாண்டியன்,பிரியாணி படத்திற்காக-கார்த்தி அவர்களுக்கு.
அன்று- ஜெயுச்சுட்டே கண்ணா நீ -கலியுகக்கண்ணன் (தேங்காய் ஸ்ரீனிவாசன்)
இன்று - குக்காத்து மனுஷா -நளதமயந்தி ,மற்றும் செல்லமே செல்லம் நீ தானடி (ஆல்பம்) (அவர் பேத்தி ஸ்ருதிகா ),
அன்று ஷோபா சந்திரசேகர் பாடிய பாடல் ஓடிப்பிடிச்சு விளையாட :இரு மலர்கள் படத்தின் மகராஜா ஒரு மகராணி
இன்று அவர் மகன் விஜய் பாடிய ஒ ப்யாரி- பூவே உனக்காக
கலைஞர் கருணாதி மகன் முக முத்துவிற்கு 'மூன்று தமிழ் ' - பிள்ளையோ பிள்ளை
பேரன் அருள்நிதி - 'மன்னாதி மன்னரு' வம்சம்
Last edited by gkrishna; 29th October 2014 at 02:46 PM.
gkrishna
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks